5 Dec 2012

இணைய உலகத்தில் நான்!!


இன்றும் கணினி பயண்படுத்தாத, பயண்படுத்த தயங்கும்,  இணையம் பக்கம் வர பயப்படும், அனுமதி மறுக்கப்படும்  பெண்கள்; குறிப்பாக மிகவும் படித்த பெண்கள் உண்டு என அறிந்த போது ஆச்சரியவும் கொஞ்சம் அனுதாபவும்  இருந்தது.  கணினியுடனான என்னுடைய அனுபவ அலைகளும் மனதில் கடந்து சென்றதை பகிர விரும்புகின்றேன்.

 கடந்த 4 வருடமாக என் நேரத்தை  இணைய உலகத்தில் சுற்றி வருவதில் கொஞ்சம் அதிகமாகவே செலவிடுகின்றேன். 10 வது வகுப்பு முடிந்து தட்டச்சு வகுப்புக்கு போய் கொண்டிருந்த எல்லா மாணவர்களும் கம்யூட்டர் வகுப்புக்கு மாறி போகத் துவங்கிய காலம் நானும் கம்யூட்டர் வகுப்பில் சேர்ந்தேன். 1999 துவக்கத்தில் எங்கள் பகுதியில் கணினி வகுப்பில்  MS –Dos மட்டுமே   கற்று கொள்ள முடிந்தது. தலையும் காலும் புரியாத மொழியாக இருந்தது.  என்றிருந்தாலும் வாத்தியார் சொல்லியதை நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து தேர்வு எழுதிய நாட்கள் அது.  கம்யூட்டர் தொட்டு படிக்க அனுமதி கிடையாது.   தூரத்தில் இருக்கும் கணினியை நோக்கி அதன் சிறப்பு, துரிதமான   பணி எல்லாம் கற்று தந்தனர்.  அன்றைய நாட்களில் கம்யூட்டரின் விலை 60 ஆயிரத்திற்க்கு மேல் இருந்தது. இதை பராமரிக்கவும் செலவு செய்தனர்;  குளிர்ரூட்டப்பட்ட அறையில் செருப்பு அணியாது மட்டுமே அதன் அருகின் செல்ல அனுமதித்தனர்.

கல்லூரி படிப்பு நேரம் “கோபாள்” என்ற வணிகம் சார்ந்த ஒரு கம்யூட்டர் வகுப்பு இருந்தது.   கம்யூட்டர் பார்க்காமலே அந்த கணினி பாடம் படித்து எழுதி தேற்வானோம்.   கல்லூரியில் இருந்தது  4 கம்யூட்டர். அதையும் ஒரு கண்ணாடி அறைக்குள் வைத்துருந்தனர்.   பராமரிக்கும் மேலாளருக்கு மட்டும் தான் அதை தொடவோ கிட்ட இருந்து பார்க்கவோ அனுமதி இருந்தது.  
திருமணம் முடிந்த பின்பு  ஸ்வெட்டர் பின்னல்  படிக்கும் நேரத்தை குறைத்து கொண்டு  கம்யூட்டர் கற்க சென்று வந்தேன்.   அப்போது எங்கள் குடியிருப்பு  டவுணில் இருந்து 7 கி.மீ தள்ளி ஒரு வனப்பகுதியில் இருந்தாலும்,   கம்யூட்டர் கொண்ட ஆற்வ மிகுதியால் தினம் கூட்ட நெரிசலில் பயணித்து கற்று தேற்ந்தேன்.    ஒரு கோப்பை தந்து தட்டச்சு செய்து திரையில் கண்ட போது மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.

என்னவர் தனது வேலை நிமித்தமாக கம்யூட்டருடன் அசுர வேகத்தில் பயணத்து கொண்டிருதார்.    ஆனால் எனக்கு 2004 கடைசியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது தான்  கம்யூட்டருடன் மறுபடியும்    நட்பு உருவாக  ஆரம்பித்தது.  முதலில் வணிக கடிதம், பின்பு தரவுகள் பராமரிப்பதற்கு என excel லிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. கம்யூட்டர் கல்வி கூடத்தில் கற்றதை விட பல மடங்கு அதிகமாக வேலை வழியாக கற்று கொண்டேன்.   அப்போது தான் எங்கள் நிறுவனத்தில் டாடா கம்பனியின் பிரத்தியேக மென் பொருள் கொண்ட பாக்கேஜ் பயண்படுத்தி தரவுகள் சேகரிப்பது மட்டுமல்ல தேவையான தகவல்களை  நொடி பொழுதில் எடுக்கவும் பயிற்சி தரப்பட்டது.   எங்கள் வீட்டில்  கம்யூட்டர் வாங்கப்பட்ட போது என்னவர் அலுவலக பணி, எங்கள் குழந்தைகள் விளையாட்டுக்கு என கம்யூட்டரை பங்கிட்ட போது எனக்கு கம்யூட்டர் பல பொழுதும் கிடைக்காமலே ஆகியது.  அப்பா, பிள்ளைகள் போட்டி போட்டு ஒன்றாக இருந்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடிய போது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என பிள்ளைகள் கேலி செய்வார்கள்.   அவர்கள் வீட்டில் இல்லாத போது தான் நான் கம்யூட்டரை தொடக்கூட முடிந்தது.   

இணைய பயண்பாடு பெண்களுக்கு நல்லதா தீயதா?...............அடுத்த பதிவில்!

2 comments:

  1. படித்தேன் .ஆனால் addict ஆகிவிடாதீர்கள் .அது ஒரு விஷம் .அதை மருந்து மாதிரி தான் பயன்படுத்திக்கணும் -எஸ்.எஸ்.மணி

    ReplyDelete
  2. Mam, Nalla ezuthi irukinga matrum nallavum solliukinga unga kadanthakala computer kathayai. athodu oru suspensayum vachirikinga ungaloda adutha pathivin thalipula. Vazthukkal
    karunkaran, chennai

    ReplyDelete