23 Oct 2012

சிவ சுதன், இலங்கை-புத்தக விமர்சனம்

Suthan Sivasuthan

ஜோஸ் அக்கா !.....

உங்கள் படைப்பான '' நான் தேடும் வெளிச்சங்கள் '' வாசிக்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது . படித்து முடித்ததும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வந்த திருப்தி ஏற்படுகிறது .

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,

1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .

அதே நேரம் எனது பெயரையும் உங்கள் புத்தகத்தில் பதியச் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா . சிரமங்களைப் பாராது எனக்குப் புத்தம் கிடைக்கச் செய்தீர்கள் .வர இருக்கும் ஆக்கங்கள் பலரது மனங்களைப் போய்ச் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இறைவனின் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உங்களுக்குக் கிட்டட்டும் அக்கா.............
— with J P Josephine Baba.

0 Comments:

Post a Comment