25 Sept 2012

திலகன் என்ற கலைஞனின் மரணம் !


 


திலகன் மலையாளத்திரையுலகில் எடுத்து சொல்லக்கூடிய அறிய நடிகர்.  நாடகத்தில் இருந்து சினிமாவுக்குள் பிரவேசித்தவர்.  தன் இயல்பான, ஆளுமையான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார்கள் மிளிர திலகன் நடித்த பல படங்கள் காரணமாகின.  அன்பான அப்பா, பொல்லாத தகப்பன், கண்டிப்பான  அப்பா என பல கதாபாத்திரங்களில் இழகி சேர்ந்து நடித்தவர்.
 கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் அய்ரூர் என்ற இடத்தில் பிறந்த சுரேந்திர நாத் திலகன் கேரளா எஸ்டேட்டில் வேலை செய்த ஒரு அதிகாரியின் கேசவன் -தேவயானி தம்பதிகளின்  6 மகனாவார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள்  உண்டு. பல விருதுகளுடன் பத்மஸ்ரீ விருதும் பெற்ற நடிகர் ஆவார்.


ஆனால் தன் வயது முதிர் காலத்தில் தனக்கு பிடித்த நடிப்புடன் வாழ வேண்டும் ஆசை கொண்டிருந்தவருக்கு பேரிடியாக வந்தது மலையாள திரை உலக இயக்கம் "அம்மா" வின் சில நடைவடிக்கைகள் .  ஒரு நல்ல நடிகனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை தட்டி பறித்தது தயாரிப்பாளர்களிடம் திலகனுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என சட்டமிட்டது. அவர் சொல்லாத சில வார்த்தைகள் குற்றசாட்டுகளாக  கூறி வெளியேற்றியது.  இவருடன் பல படங்களில் நடித்த நெடுமுடி வேணு என்ற நடிகரே பல கோள்மூட்டல்களுக்கு காரணமாகி திலகனுடைய  சமநிலையை தகர்த்தனர்.  ஒரு கட்டத்தில்  போற்றுதல்குரிய நடிகரை அழ வைத்தனர்  சூப்பர் ஸ்டாருகளான மம்மூட்டி மோகன்லால் போன்றோர்.


இவர் மட்டுமல்ல கேப்டன் ராஜு, காமடி நடிகர் மாள அரவிந்தன், காலம் சென்ற கொச்சின் ஹனீபா போன்றோரும் இதே போல் துன்புறுத்த பட்டனர். கொச்சின் ஹனீபா மனைவி தன் கணவர் இறப்புக்கு பின்பு மம்மூட்டியை குற்றம் சாட்டியிருந்தார். மற்று நடிகர்கள் அமைதிகாத்து  தாங்களாக எரிந்து தீர்ந்த போது திலகன் தன் கருத்துக்களால் பத்திரிக்கையாளர் உதவியுடன் போராடினார். இயக்கம் கலைஞர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விடுத்து அச்சுறுத்தல் கொடுத்து கட்டுப்படுத்தி அழித்ததில் திலகனும் பலியானார்.

கருத்து சுதந்திரம், ஈர மனதினர் என நாம் எண்ணும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் மம்மூட்டி மோகன்லால் போன்றோர் தமிழ் சினிமாவில் சிலதில் நடித்த பின்பு  அராஜகத்துடன் மலையாள சினிமா உலகு போங்கையும் மாற்றினர். இதில் சிரிப்பு நடிகர் 'இன்னசென்ற்' என்பவரில் கோமாளித்தனமான வில்லத்தனமான பங்கும் நிறையவே உண்டு.  பிரத்வி ராஜ் போன்ற சில இளம் நடிகர் போர் கொடி தூக்கினாலும் ஒன்றும் எடுபடவில்லை. மக்கள் பின் துணை திலகனுடன் இருந்ததால் அடக்கி வாசித்தனர் ஆனால் மறை முகமாக எல்லா தீங்கும் செய்தனர். திலகன் வார்தைகள்!


இந்த அராஜகமான ஆளுமை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் மலிந்து விட்டது. திரை உலகு என்றதும் எளிதில் வெளிச்சத்திற்க்கு வருகின்றது அவ்வளவே. நாம் காணும் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏன் மதக்கூடாரங்கள் என இந்தியர்கள் சிறப்பாக தென் இந்தியர்கள் கூடும் இடம் குப்பை குளங்கள் தான். சமீபத்தில் கண்ட மலேஷியா தோழியும் இதைத் தான் சொன்னார், சீனா முதலாளியிடம் சீனாக்காரர்களுடம் வேலை பார்க்கலாம், தென் இந்தியர்கள் இருக்கும் இடமே கோள் மூட்டலும் கால் வாரலும் கொண்டு நிறைந்தே இருக்குமாம்.


2 comments:

  1. சீனா முதலாளியிடம் சீனாக்காரர்களிடம் வேலை பார்க்கலாம், தென் இந்தியர்கள் இருக்கும் இடமே கோள் மூட்டலும் கால் வாரலும் கொண்டு நிறைந்தே இருக்குமாம்.// உண்மைதான்

    ReplyDelete
  2. Baba, Nadigar Thilaganai pattri ariya pala karuthukalayum unmaygalayum ungal ezuthinmulam arinden. mikka magizchi. Ungalidam innum avarai pattri ethirparthen.
    Nandri Baba.
    Karunakaran
    Chennai

    ReplyDelete