26 Aug 2012

உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!

ஒரு  இன்று கூடும் உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் பங்குபெறும்   சக தோழர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். பெண்கள் கருத்துக்களை மழுங்கலிடும் வேளையில் ஒரு வலைப்பதிவராக வலைபதிவு வழியாக என் கருத்துக்களை எண்ணங்களை பகிர்வது ஊடாக எழுத்தாளர் என்ற அங்கீகாரம், உலகளவில் சிறந்த நட்புகள், கருத்துக்கள், உதவிகள் கிடைத்தன என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

90 களில் அமெரிக்க கல்லூரி மாணவனால் உருவாக்கப்பட்ட வலைப்பதிவுகள் இந்தியாவில் செயலாற்ற 2004 ஆகின. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தொடர்ச்சியாக மற்றும் கணிணியின் பெருகிய பயண்பாட்டாலும், இன்றைய  இளம் தலைமுறை தகவல் பெற இணையம் நாடுவதாலும் வலைப்பதிவின் சிறப்பும் தேவையும் ஓங்குகின்றது. கடந்த மூன்று-நாலு வருட காலமாக தமிழ் வலைப்பதிவுகள் அதன் உச்ச நிலையை நெருங்கி வருவதை காணலாம்.  

தனி நபர் தளங்களான வலைப்பதிவுகள் உலகரங்கில், சிறப்பாக ஊடக சுதந்திரம் அற்ற அரேபிய நாடுகளில் கருத்து பரிமாற்றம் மற்றும் அரசியல் புரட்சிக்கு  நடுநாயகமாக விளங்கியதை நாம் கண்டு உணர்ந்தோம்.  சில  வலைப்பதிவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல பதிவர்கள் போலிஸ் அச்சுத்துறுத்தலுக்கு உள்ளாகி நாடு விட்டே குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், சிலர் நாடுகடத்தப்பட்டனர். பல வலைப்பதிவர்கள் காவலர்களால் சிறைப்படுத்த பட்டுள்ளனர். இதையும் மீறி பல வலைப்பதிவர்களை சிறந்த எழுத்தாளர்களாக வாசிப்பாளர்களின் உதவி பெற்ற பயணிகளாக , ஊடகவியாளனுக்கு இணையான சில போது அதையும் மீறின அங்கீகாரம் பெருமை கிடைக்கபெற்றனர்

இராக் போன்ற போர் சூழலுள்ள நாடுகளில்  ஊடகத்தை விட நம்பகதன்மையான செய்திகள் பெற ம்க்கள் வலைப்பதிவுகளையே நாடுகின்றனர். பல போதும் உண்மையான செய்திகள், மக்களை சென்றடைய அரசியல், உலக சந்தை  எனும் பல காரணங்களால் தடுக்கப்படும் போது வலைப்பதிவுகள் தகவல்கள் பெற ஒரு சிறந்த கருவியாக மாறுகின்றது.  இலங்கையில் நடந்த போர் நாட்களிலும் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கும் உரிமை மறுக்கப்பட்டு  இரும்பு திரை இட்டு முடக்கப்பட்ட  போது சாதாரண மக்களால் தகவல்கள் உலக பார்வைக்கு எட்டியது. பத்திரிக்கையாளர்களால் கிடைக்க பெறாத செய்திகள், தகவல்கள் கூட வலைப்பதிவர்களால் பெறப்பட்டது.  ஒரு மாற்று ஊடகமாகவே செயல்படுகின்றது என்றால் மறுக்க இயலாது.  இன்றும் ஈழ தமிழகர்கள் நிலை பற்றி பல பொய்கள் பரவி வரும் சூழலில் ஒரு சில வலைப்பதிவர்களாலே வெளி உலகிற்க்கு நிஜ நிலை தெரிகின்றது.சஞ்சயன் ஈழத் தமிழர்! 
மேலும் உலகு எங்கும் வசிக்கும் தமிழர்களை மொழியால் இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டு வருகின்றது.



தமிழ் வலைப்பதிவுகளை உற்று நோக்கினும் ஊடகத்தில் காணப்படாத அரசியல் கட்டுரைகள் கலையரசன், கலை இலக்கியம் பற்றி சிறந்த பக்கங்கள்,  உடல்  ஆரோக்கியம், சமூகம், விவாதத்திற்க்கு தயங்கும் பாலியல் பிரச்சனைகள், என பல தளங்களில் வலைப்பதிவுகள் ஊடாக சிறப்பாக இயங்குகின்றது.  தனி நபர்களால் எழுதப்பட்ட தின ஏடுகளின் பயன்பாடு  மறைய துவங்கிய நாட்களில் வந்த வலைப்பதிவுகள் ஒவ்வொரு மனிதனின் வரலாறையும் பதிந்து கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து தகவல் உருவாகவும் வெளிவரவும் தளங்கள் அமைத்து கொடுக்கின்றது .

இன்றைய நிலையில் அரசியல் சமூகச் சூழலில் தமிழ் வலைப்பதிவுகளில் தேவை அதிகமாகி கொண்டு வருகின்றதையும் காணலாம். அரசு மக்களை விட்டு விலகி லஞ்சம், ஊழல் என தன் விருப்பதிற்க்கு ஆட்சி செய்ய முயல்வதும், பத்திரிக்கைத் துறையும் கை-வாய் கட்டி அடிமைகளாக மாறி  விட்ட நிலையில் அந்தந்த மாவட்ட பஞ்சாயத்து சமூக பிரச்சனைகளை வெளி கொண்டு வர வலைப்பதிவர்கள் முன்வர வேண்டும். காலத்தின் தேவை கண்டு சினிமா பொழுதுபோக்கு என்று மட்டுமில்லாது எல்லா நிலைகளிலும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு எழுத முன் வர வேண்டும்.

  ஜூனியர் விகடன், இந்தியா டுடே போன்ற வெகுஜன ஊடகங்களும் வலைப்பதிவர்களை உற்சாகப்படுத்த முன் வந்துள்ளது பாராட்டுதலுக்குறியதே மேலும் தங்களுக்குதேவையான செய்தியையும் வலைப்பதிவு வழியாகவே சேகரிக்கின்றனர்.

வலைப்பதிவு உலகமும் தான் சார்ந்த கருத்துக்கள் அரசியலில் நின்றுகொண்டு சண்டை இடுவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் பகிரும் தளமாக உயர வேண்டும்.

பல பதிவர்கள் தனி நபர் தாக்குதலில் மூழ்குவதும் சில சுயலாபத்திற்க்கு என செயல்படுவதும், சில வலைப்பதிவர்களோ பின்னூட்டம் மற்றும் தங்கள் பதிவுகளால் அடுத்த  வலைப்பதிவர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் வகையில் நடந்து கொள்வதும் தவிர்க்க வேண்டிய ஒன்றே!
 

தனி நபர்கள் கருத்துக்கள் என்ற நிலையில் எல்லோராலும் எல்லோர் கருத்தையும் அதே போல் அங்கீகரிக்க இயலாவிடிலும் மனித நேயம் கொண்டு பின்னூட்டம் இடவும் கருத்துரையாடலுக்கு வழிவகுக்கவும் முன்வர வேண்டும். நம் கருத்துக்கள் போலவே மற்றவர்கள் கருத்தக்குளையும் செவிமடுத்து  மோசமான மொழிகளால் பின்னூட்டம் இடாது கன்னியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதும் அவசியமே.


நட்பு வட்டத்தை பெருக்க, மேலும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை கடந்து வெறும் "எழுத்தர்கள்" அல்லாது எழுத்தால் ஆளுபவர்களாக வலைப்பதிவர்கள் உயர வேண்டும். 

வலைப்பதிவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால் சில வலைப்பதிவு குழுமங்கள் சில சட்ட திட்டங்களை வகுத்து கொண்டு மற்று பல வலைப்பதிவர்களை தனிமைப்படுத்த விளையுவது வருந்த தக்கதே. மாற்று கருத்துக்களையும் வரவேற்க வேண்டும், மதிக்க வேண்டும்.

வலைப்பதிவர்கள் என்ற உறவை கொச்சைப்படுத்தும் படியாக வலைப்பதிவுகள் வெளியிடுவதும் தவிற்க வேண்டும்.

ஆங்கிலத்தில் போன்று பன்முகத் தன்மை கொண்ட வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஈழ வலைப்பதிவுகள் போன்று நம் மொழியை கலாச்சாரத்தை ஆக்கபூர்வமாக பதியும் வலைப்பதிவுகள் உருவாக வேண்டும்.
 

 வலைப்பதிவர் ஒருவருக்கு அரசாலோ சட்டத்தாலோ பிரச்சனை வரும் போது குழுவாக பாதுகாக்கவும் உதவ முன்வர வேண்டியதும் இது போன்ற மாநாடுகளும் கூட்டமைப்புகளுமே. 

பல வலைப்பதிவர் சந்திப்புகள் நண்பர்கள் சந்திப்பை கடந்து அடுத்த நிலைக்கு வருவதில்லை.  வலைப்பதிவு கூட்டமைப்பை கூட தனி நபர் நலனுக்கு தங்கள் அடையாளம் சாந்த நலனுக்கு ஏற்படுத்தி மறைகின்றனர்.  பொது நலம் கருதி எல்லோருக்கும் முக்கியவத்துவம் கொடுத்து ஒரு குழுவாக வளர  வேண்டியது மிகவும் அவசியம்.

 சிலர் மதம் சம்பந்தமாக எழுதக்கூடாது....இன்ன பல விதிமுறைகள் விதித்து சிந்தனையை மழுக்குவது ஒரு வளர்ந்த பண்பான சமூகத்திற்க்கு அழகல்ல! இப்படியான ஒரு சூழலிலை ஏற்படுத்தியால் வெகுஜன ஊடகம் போன்று சாரமற்று போகவே காரணமாகும். வலைப்பதின் பலமே விரும்புவதை விரும்பும் படி எழுதுவதாகும். தனி நபர் சுதந்திரம் ஒழுக்கமே ஓங்கி நிற்க வேண்டும். அல்லாது பாடசாலை போலுள்ள சட்ட திட்டங்கள் அல்ல!

தமிழ் வலைபதிவுகள் அனைத்தும் திரட்டும் படியான ஒரு பொது திரட்டி உருவாக வேண்டும்.

சிறந்த வலைப்பதிவர்கள், வயதில் மூத்த வலைப்பதிவர்களை பெருமைப்படுத்தவும் அவர்களுடைய அனுபவ அறிவுகள் பெறவும் முன் வரவேண்டும்.

வலைப்பதிவுகள் இன்று பல்கலைகழக படிப்பின் பாகமாகவும், ஆராய்ச்சியின் தளமாகவும் உள்ளது.  ஆகையால் வலைப்பதிவர் என்ற நிலையில் பெருமைப்பட்டு கொண்டு ஒரு சமூக பார்வையோடு முன் நடப்பதே வரும் காலங்களில் இதன் வளர்ச்சிக்கு உதவும். 

பள்ளி நாட்கள் என்பதால் வலைப்பதிவர் கூட்டமைப்பில் பங்குபெற இயலாவிடிலும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். இதற்க்கு முன் கை எடுத்த நல்லுள்ளங்களுக்கு வாழ்த்து கூறி அடுத்த நிகழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற  நினைவுடன் விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் தோழமைகளே!


22 Aug 2012

முதல் புத்தகம்- நான் தேடும் வெளிச்சங்கள்!

வலைப்பதிவராக வந்தது என் மதிபிற்குரிய பேராசிரியர் கோபால ரவிந்திரன்http://blogs.widescreenjournal.org/?author=5 அவர்கள் கொடுத்த செயலாக்க- தேற்வின் பகுதியாகவே இருந்தது. என் எழுத்துக்கு முதல்ச்சுழி இட்ட என் பேராசிரியருக்கு, என் முதல் வணக்கங்கள். எழுத்தை ஆக்கபூர்வமாக தொடர வேண்டும் என்று பணிந்தவர். முதலில் ஆங்கில மொழியில் வலைப்பதிவு எழுதி வந்தேன். என் ஆங்கில பதிவை ஒருவர் ஆய்வில் மாதிரியாக பயண்படுத்தினார் என்று கேள்விப்பட்டது சிரிப்பாகவும்  ஏன் பெருமையாகவும் இருந்தது. பின்பு ஈழவலைப்பதிவுகள் என் ஆய்வின் பகுதியான போது எனக்கும் என் கேரளத் தமிழிலும் எழுத ஆர்வம் வந்தது. அவ்வகையில் துவங்கப்பட்டதே "ஜோஸபின் கதைக்கிறேன்" என்ற என்னுடைய வலைப்பதிவு.

முதன் முதலில் என் வலைப்பதிவை புத்தகமாக வெளியிட சஞ்சயன் அண்ணன் உற்சாகப்படுத்தினார். இடைப்பட்ட காலத்தில் கிடைத்த கல்லூரி விரிவுரையாளர் வேலையில் லயித்து விட்டதால்  புத்தக வேலைக்கு தேவையான நேரவும் கிடைக்கவில்லை.  பின்பு ஸ்ரீ அண்ணா (கங்கைமகன்) ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல் புத்தகத்திற்கு தலைப்பும் தந்து  இவ்வருடம் தன்னுடைய  புத்தகம் வெளியிடும் போது  என்னுடைய சிறுகதை தொகுப்பும் வர வேண்டும் என கண்டிப்புடன் கட்டளை இட்டார். முதலில் இது என்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்த போதும் ஸ்ரீஅண்ணாவின் தொடர் வழிகாட்டுதலில், உற்சாகப்படுத்துதலில்; கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்ட நான் சிறுகதை பக்கம் என் பார்வையை திருப்பினேன்.



கதைகள் எழுத ஆரம்பித்த போது தான் கட்டுரையில் கிடைக்காத சில சுதந்திரம் சிறுகதையில் கண்டு கொண்டேன், அதுவும்  பிடித்து போனது. என் நீண்ட கால மௌனத்தின் திறப்பாக இச்சிறுகதை தொகுப்பு வரவுள்ளது. நான் சமூகத்தில் கண்ட சில கதாபாத்திரங்களை சமூக அக்கறையுடன் அப்படியே பிரதிபலிக்க வைக்க துணிந்துள்ளேன். தேடுதலில் விரும்பமுள்ள நான், இப்புத்தகம் வழியாக ஒரு தேடுதலையும் அதன் விடைகளையையும் வாசகர்களிடமே இட்டு சென்றுள்ளேன். ஒரு சிறுபிள்ளையின் முதல் அடி போல் தத்தி தத்தி வந்தாலும்  மலையாளவும் தமிழும் கூடி இரண்டர கலந்த என் கலாச்சார-சமூக பார்வையின் கலவையான இந்த நூல்  சில சுவாரசியங்கள், சில நெருடல்கள், சில மகிழ்ச்சிகள் தந்து செல்லும் என்பதில் மறுசிந்தனை இல்லை!

எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள், பேராசிரியர்களை எண்ணி பார்க்கின்றேன். கல்வி கற்க வயது தடயல்ல என்று உற்சாகப்படுத்தி என் ஆய்விலும் வழி நடத்திய எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறை தலைவர் பேரா. பெ. கோவிந்த ராஜ் அவர்களுக்கு என்  நன்றி வணக்கங்கள் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.  உங்கள் பேச்சை விட உங்கள் எழுத்து சிறப்பு என்று எப்போதும் உற்சாகப்படுத்துபவர்.என் வலைப்பதிவை பற்றி எப்போதும் விசாரிப்பவர்.






என்னுடைய 30 களில் மறுபடியும் தபால் வழியாகவாது படிக்க வேண்டும் என ஆவலுடன் இருந்த என்னை  தன் குழந்தையை போல் கூட்டி சென்று கல்லூரி வகுப்பறையில் இருத்தியவர், ஒரு போதும் என்னை குற்றம் சுமத்தாது என்னை நானாக அணைத்து சுமந்து செல்லும் என் அன்பு கணவருக்கு அன்பு கலந்த நன்றிகள். . 


 எனக்காக தங்கள் பல அருமையான நேரங்களை விட்டு தந்து எனக்கு ஆக்கவும் ஊக்கவுமாக இருக்கும் என் அன்பு பாசமிகு குழந்தைகள் சாம் ஜோயேல் ஜெரோம், ஆபேலை  நினைத்து பார்க்கின்றேன்.

இனி எழவே இயலாது என்று நான் வீழ்ந்து துவண்ட போது  என்னை தூக்கி விட்டு ஆறுதலாகவும் வழிகாட்டுதலுமாக இருந்த என் நட்புகள் என் வாழ்கையில் கிடைத்த பாக்கியமே . இன்று என் எழுத்தை புத்தகமாக காண போகின்றேன் என்றால் ஆக்கபூர்வமான கருத்துக்களால் உற்சாக மூட்டியவர்கள் என் பாசமிகு நண்பர்களே. தற்மசங்கடமான நிலையில் நான் நின்ற போது எக்காரணம் கொண்டும் என் பெயர் வெளியில் தெரியக்கூடாது என கட்டளை இட்டு புத்தக வெளியீட்டுக்கு ஆகும் செலவை தாயுள்ளத்துடன் ஏற்ற வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிக்கும் அவருடைய அன்பு கணவருக்கும் என் நன்றி வணக்கங்கள்.  உங்கள் எழுத்தை புத்தகமாக காண்பது "ஒரு தாய் தான் பிரசிவிக்கும்  குழந்தையை காண்பது போல் ஜோஸ்பின்", என கூறி இன்றும் வழி நடத்தும் முகம் காணாத நட்பு, பாச உறவுகள் உண்டு எனில் அதுவே உண்மை!

 அணிந்துரை தந்தருளிய இடதுமுன்னணி சிந்தகரும் சிந்தனையாளருமான அண்ணன் குமரகுருபரன் அவர்களுக்கு என் பணிவான  மகிழ்ச்சி நன்றிகள்.  எழுத்து வாசிப்பு வழியாக நட்பாகி எல்லா பதிவுகளையும் ஆழமாக வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தருபவர் அண்ணன் குமரகுருபரன். கதைகள் யாவையும் ஒரு நண்பராக மட்டுமல்லாது விமர்சகரின் மனம் கொண்டு பகுந்தாய்ந்து தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்..

பதிப்பாசியர் அணிந்துரை என் எழுத்துக்கு இன்னும் வலு சேர்க்கின்றது. என் எழுத்தை புத்தகமாக வெளியிட தேர்ந்து எடுத்ததுடன் முதல் புத்தகம் என்பதால் தேவைக்கதிகமான மனகலக்கத்துடன் அணுகிய போதும் பொறுமையாக வழிநடத்திய பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பகம்  தகிதா,  கவித்துவமான அட்டைப்படம் தயாரித்து தந்த  கலைஞர் அனந்த பத்மநாபன், மற்றும் இந்த புத்தக வெளியீட்டு வேலை அணியறையில் நிற்ப்பவர்கள் யாவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் !

நான்தேடும் வெளிச்சங்கள்' - பதிப்புரை

'ஜோஸபின் கதைக்கிறேன்' என்னும் வலைப்பூவின் மூலம் உலகத்தமிழர்களோடு நல்ல கருத்துக்களை உரையாடி தமிழோடு உறவாடிவரும் அருமை படைப்பாளர் ஜோஸபின் பாபா அவர்களின் 'நான் தேடும் வெளிச்சங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் தகிதா பெருமையடைகிறது.என் தோழமைகளின் தோழமையாக இருந்து எம்மோடும் தோழமைக் கொண்ட ஜோஸபின் அவர்களின் கிடைத்தற்கரிய அனுபவங்களை அவர்களின் இணையப்பக்கங்களிலிருந்து உங்களின் இதயப்பக்கங்களுக்கு கொண்டுவருவதற்காகவே பக்கம் பக்கமாக இத்தொகுப்பை வெளியிட்டு உங்களின் பக்கம் கொண்டுவந்திருக்கிறோம்.

'தமஸோமா ஜோதிர் கமயா' என்று வேதம் சொல்வதற்கேற்ப, ஒளிரும் எழுத்தின் துணைகொண்டு தன் நெடுவழிப் பயணங்களுக்கான வெளிச்சங்களை தானே மிளிரவிட்டிருக்கிறார்.இவர் கொளுத்திப் போட்டிருக்கும் வெளிச்சங்கள் படிக்கும் வாசகர்களான உங்களின் மனங்களிலும் விடியல்களை உருவாக்கும்.'நல்ல சொல் இருட்டை வெளிச்சப்படுத்தும்' என்று புவியரசு சொன்னது நிதர்சனமானது என்பதை இதைப் படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்.

நிசங்களைக் கொண்டு கதையாடுவதும் புனைவுகளைக் கொண்டு கதையாடுவதும் படைப்பிலக்கியத்தில் நிகழும் ஒன்றுதான். என்றாலும் நிசம் எது? புனைவு எது? என்று பிரித்தறியாத அளவிற்கு கதை செய்திருப்பது இவரின் படைப்பாற்றலுக்கும், சமூக அக்கறைக்கும், மனத் துணிவிற்கும், எழுத்து தர்மத்திற்கும் சாட்சியங்களாக விளங்குகின்றன .ஆனந்தத்தின் கண்ணீரையும் அழுகையின் கண்ணீரையும் ஒரு நல்ல படைப்பாளி தன் எழுத்தில் வழியவிடுகிறான் என்பதற்கு ஜோஸபின் அவர்களின் கதைகள் கொண்டு உணரமுடிகிறது.நேற்றின் காயங்களுக்கும் இன்றின் வலிகளுக்கும் தன் எழுத்துகளைக் கொண்டு மருத்துவம் பார்க்கும் மகத்துவம் ஜோஸபின் அவர்களுடையது.

கடந்து போனவர்களை ,காயம் செய்தவர்களை, கண்ணீர் தந்தவர்களை, மனதில் நிற்பவர்களை, அன்பு கூர்ந்தவர்களை என்று இப்படி பலரையும் இந்தக் கதைகளுக்குள் இயல்பாய் உலவவிட்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் நல்ல ஆசிரியராக காலம் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.காலத்தின் கதைகளாக 'நான் தேடும் வெளிச்சங்கள்' இங்கு உதயமாகி இருக்கின்றன. இப்படியும், அப்படியும், ஏன் எப்படியுமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இவரின் கதைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

கதைகள் பெரும்பாலும் கதை சொல்லும். இவரது கதைகளோ வாழ்க்கையைச் சொல்லுகின்றன.பல மொழிகளின் பல பிரதேசங்களின் கலவை மனுசியாக திகழும் ஜோஸபின் அவர்களின் படைப்பின் ஊடே தென் திராவிட மொழிகளின் அனைத்து கூறுகளையும் அழகாய் தரிசிக்க முடிகிறது. இவரின் அரிதாரம் பூசாத எதார்த்தத்தின் கதைகள் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமானவைகலாக இருக்கும் .

முள்ளும் மலருமாய் முகிழ்த்துக் கிடக்கின்ற அனுபவங்கள் கதைகளாகும் போது வாசிப்பில் ஒரு பரவசம் இருக்கும். அந்த பரவசத்தைத் இத்தொகுப்பில் உணரலாம் .இவைகள் வலிகளா ? இல்லை வசந்தங்களா? எவை என்று நீங்களே இந்த வெளிச்சங்களில் நீராடி சொல்லுங்கள்.அனுபவங்களால் கறை படித்தவர்கள் இவரின் வெளிச்சங்களில் குளித்தால் நிச்சயம் புனிதப்படுவீர்கள்.ஜோஸபின் அவர்களின் படைப்பின் தேடல்களோடு நமது வாசிப்பின் தேடல்களையும் தொடருவோம்.

அருமை ஜோஸபின், நீங்கள் இன்னும் நிறைய கதைக்க வேண்டும். நீங்கள் நிறைய கதைப்பதற்கான கதையும் தமிழும் உங்களிடம் நிரம்பவே இருக்கின்றன.உங்கள் வெளிச்சங்களின் அலை நீளம் பெரிது.கதைவிளக்கு ஏந்தும் காரிகையாய் வலம் வாருங்கள்.வாழ்க வளமுடன் .வெல்க தமிழுடன்.

 
புத்தக வெளியீட்டுக்கு மலேஷியாவில் இருந்து வரவிருக்கும் அன்பு தோழி புனிதா வெள்ளைச்சாமி, என் வளர்ச்சியில் அக்கறை கொண்டு விசாரிக்கும் அன்பு தோழர்கள் பத்திரிக்கையாளர் குமரேசன் ஆசாக் ஐயா, Dr. பழனிச்சாமி அவர்கள், பண்பான நண்பர்கள் கவிஞர் மயூர ரத்தினசாமி,  பாட்ரிக், ராஜேஷ் தீனா, அண்ணன் ஜான் துரை, சுபி அக்காள், தோழி ஜமுனாநதி, கிருஷ்னம்மா கிருஷ், பத்மன் அண்ணா, எழுத்தாளர் தாமிரா அவர்களே, நெல்லை நண்பர் முனீஷ் குமார், என் வெற்றியில் மகிழும்  ராம்ஜி யாகூ, என் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அருமையான பல புத்த்கங்கள் அனுப்பி தந்து வாசிக்க பணிந்து "என் பாச மகள்" என அழைக்கும் அன்பு அப்பா ரத்னவேல் ஐயா, கவிஞர் யாழி கிரீதர், எழுத்தாளர் நேசமித்தரன், தோழி ஹன்சா காஷ்ய, மதுரைவாசி பிரகாஷ், சீனா ஐயா, நண்பர் "அவர்கள் உண்மைகள்", இலங்கை தம்பி சிவசுதன் மற்றும் வலைப்பதிவர் நண்பர்கள் யாவரையும் அன்புடன் நன்றியுடன் நினைத்து பார்க்கின்றேன்.  என்னை நானாக உருவாக்க உதவிய என் நண்பர்கள் இடம் பற்றாக்குறையால் பெயர்கள் எழுதிவிடவில்லை என்றாலும் என் நெஞ்சத்தில் அச்சாக பதிக்கப்பட்டுள்ளீர். நன்றி நன்றி மகிழ்ச்சிகள்.


பின் அட்டைக்கு என அணிந்துரை தந்து உற்சாகப்படுத்திய  என் சகோரர் சங்ககால எழுத்தில் பிரசித்தவும் 6 புத்தகங்கள் வெளியிட்டுள்ளவரும் உலக மொழிகளில் சிறந்து விளங்கும்  உடன்பிறவா சகோதரரும் தோழருமான கங்கைமகனுக்கு என் நன்றி வணக்கங்கள்!



Srikandarajah கங்கைமகன்
நிலைக்கண்ணாடி!

நாம் வாழும் சமூகம் பலவற்றைச் சந்தித்திருக்கிறது. சிலவற்றைச் சிந்தித்திருக்கிறது. ஆனால் உண்மைகளை இருளுக்குள் தள்ளித் தன்னை மேம்படுத்திக் கொண்டதும் இந்தச் சமூகம்தான். உலகத்தின் பார்வையில் எல்லோருமே ஒவ்வொரு எழுத்தாசிரியர்கள்தான். ஆனால் ஒரு சிலரே தங்களை முழுமையாக இணைத்து வெற்றியும் காண்கின்றார்கள். அந்த வகையில் இந்தக் கதாசிரியரின் கன்னி முயற்சி போற்றுதற்குரியது. தான் எழுத்தாளராக இருப்பதைவிட உலக நூல்நிலையத்தின் மாணவியாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்பதை அடிக்கடி சொல்லித் தன்னை மேம்படுத்திக் கொள்வார் . இருளும் வெளிச்சமும் நாணயத்தின் இரு பக்கபங்கள் போன்றவை. வெளிச்சத்தில் அவர் நடந்துவநத பாதைகளை இருளுக்குள் மூட மனமின்றித் தேடிப் பார்த்தபோது தோன்றிய உண்மைச் சம்பவங்களைத் தனது "நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தொகுப்பு நூலின் கருப்பொருளாக அமைந்துள்ளார். தன்னைச் சமூகம் எப்படிப் பார்க்கின்றது என்பதைவிட தான் சமூகத்தை எவ்வாறு நோக்கினார் என்பதையும் தனது பல அனுபவங்களையும் தன் ஆழுமைக்கு எட்டியவரை இலவகுவாக வாசகர்களுக்கு விளங்ககக்கூடிய வகையில் பதிவு செய்திருக்கின்றார் இந்தநூல் அவரது முதலாவது படைப்பு என்பதால் தான் வாசகர்களிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்களே நிறைய இருக்கும் என்று கருதுவதாக அடிக்கடி கூறுவார். அதனால் அனனத்து வாசகர்களின் வரவுகளையும் ஒரு அரண்மனைப் பிரவேசமாகவே நான் எதிர்பார்க்கிறேன். அவரது எழுத்துக்களைக் கூர்மையாக்கும் பொறுப்புக்களை ஆசிரியரின் வாசகர்களிடமே பணிவாக ஒப்படைக்கின்றேன்.
மேலும் பல அரிய நூல்களை இவ்வுலகிற்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி விடைபெறுகிறேன் .

அன்புடன்
கங்கைமகன்
சுவிற்சர்லாந்து.
 

எழுத்திலும் மருத்துவத்திலும் திறம்பட விளங்கும் இலங்கை சிறந்த வலைப்பதிவரான சகோதரர் டொக்டர் முருகானந்தம் தன்னுடைய வேலைமத்தியிலும் எனக்கென நேரம் தந்து அணிந்துரை எழுதி தந்தைமைக்கு  என் நன்றி மகிழ்ச்சிகள் சமர்ப்பிக்கின்றேன்.

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
  • ஹாய் நலமா?
    இணையம் கூடாக அறிமுகமான அன்புச் சகோதரி ஜோசப்பின் பாபா அவர்கள், சிறுகதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவரது சிறுகதைகளை மட்டுமின்றி பல கட்டுரைகளையும் அனுபவக் குறிப்புகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன், இரசித்து மகிழ்கிறேன், பயன் பெறுகிறேன். அவரது படைப்புகளில் அடிநாதமாக எப்பொழுதும் இழையோடிக் கொண்டிருக்கும் சத்திய உணர்வுதான் என் ஈடுபாட்டிற்குக் காரணமாகும். தனக்குச் சரியானது என்பவற்றை துணிவோடு, தெளிவாக, பூசி மழுப்பலின்றிச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்குவதில்லை.

    தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை கூர்ந்து நோக்கி அங்குதான் பெற்ற அனுபவங்களை அழகாகச் சொல்வது அவரது சிறப்பு. போலி அலங்காரங்களால் வாசகனை மருள வைக்காத எளிய நடை, யதார்த்தமான சம்பவங்கள், அதற்குள் இழையோடும் மனித நேயம் ஆகியவை எப்பொழுதும் என்னைக் கவர்ந்திருக்கின்றன.

    தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அபலைப் பெண்கள் போன்றோர் மீதான பரிவும் அக்கறையும் படைப்புகளுக்கு சமூக வலுச் சேர்க்கின்றன. இலங்கைத் தமிழர்கள் அவலங்கள் நீங்கி இயல்பான வாழ்வு வாழ வேண்டும் என்பதில் உள்ள உண்மையான அக்கறை நெகிழ வைக்கிறது.

    துணைப் பேராசிரியர், படைப்பாளி என்பவற்றிக்கு அப்பால் புகைப்படக் கலை, வீட்டுத் தோட்டம், சங்கீதம், சினிமா எனச் சகோதரியின் பல்துறை ஈடுபாடுகளும் புலமையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

    இணையமும் முகப்புத்தகமும் போதையைப் போன்றவை என்பார்கள். ஆனால் சகோதரி ஜோசப்பின் பாபா போன்ற இனிய உறுவுகளைத் தந்ததும் அதுதான் என்பதால் அவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டியுள்ளது.

    இனிய இல்லறப் பயணம் வாய்த்தது போல இனிய செழுமையான இலக்கியப் பயணமும் தொடர வாழ்த்துகிறேன்.

    எம்.கே.முருகானந்தன்
    குடும்ப மருத்துவர்
    கொழும்பு.
    21.08.2012.


பட்டாம் பூச்சிக் கூண்டு போன்ற என் மௌனத்தை உடைத்து அதைப் புத்தகமாக வெளியிட ஊன்று கோலாக இருந்து உற்சாகப் படுத்திய என் தோழர் என் உடன்பிறவாச் சகோதரர் பாசமிகு சிறி அண்ணாவிற்கும்;  என் தாய் வழி பாட்டி மரியாகம்மா அவர்களுக்கும்,  மேலும் இப்புத்தகம் வெளியிட ஊக்கவும் ஆ
க்கவுமாக இருந்து உற்சாகப்படுத்திய  லண்டனில் வசி
க்கும் தாயுள்ளம் கொண்ட சகோதரிக்
கும் அவர்களுடைய கணவருக்கும்,  இப்புத்தகம்  சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.



ம்.  

21 Aug 2012

தேயிலை தோட்டக் கதை தேநீர்- டி. செல்வராஜ்

டானியேல் செல்வராஜ் அவர்களுடைய தேநீர் என்ற புத்தகம் ஒரு வாரமாக  ஊணும் உறக்கவும் அற்று என்னை வாசிப்பில் ஆழ்த்தியது. 1978 வெளி வந்த இப்புத்தகத்தின் மறுபதிப்பாகும் 2006ல்  வெளியாகியுள்ளது.

தேயிலை தோட்டங்கள் என்னுடன் நேரடி தொடர்பு இல்லாவிடிலும்  தேயிலை தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக, கங்காணியாக, வாச்சராக கண்டக்டராக பணிபுரிந்து மறைந்த பல உறவினர்களை நினைவு படுத்திய புத்தகம் இது.  இந்த புத்தகம் வாசித்து முடித்த  போது 80 வயதுகளில் இருக்கும் என் பாட்டியை  சந்தித்து பேசவேண்டும் பாட்டியிடம் காது கொடுக்காமல் விட்ட கதையை கேட்க வேண்டும் என ஆவல் கொள்ள செய்தது. பல மனிதர்களுடைய  புரக்கணிக்கப்பட்ட கதையை சொல்லும் புத்தகமாகவே எனக்கு பட்டது இது.

கதாசிரியர் நம்மை நீலமலைக்கு அழைத்து செல்கின்றார். முக்கிய கதாபாத்திரம் ஆறுமுக கங்காணியை அறிமுகப்படுத்துகின்றார்.  கதாசிரியரின் பாட்டனார் பெயரும் ஆறுமுகம், அவரும்  கங்காணியாக இருந்துள்ளார் என்று அறிந்த வேளையில் இருந்து இந்த புத்தகம் நாவலா அல்லது வாழ்கை சரிதமா என கேட்க தோன்றுகின்றது. அந்த அளவுக்கு இதிலுள்ள கதாபாத்திரங்கள் நம்முடன் உயிர்ப்புடன் பயணிக்கின்றனர்.
 மகன் செல்லய்யா,  மாரியம்மா  என்ற மனைவியுடன்  'கங்காணி' வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்றாலும் சிறப்பாக செல்கின்றது.  மலங்காடுகளுக்கு வர மனிதர்கள் பயப்பட்ட வேளையில் கங்காணிகள் தங்கள் தந்திரம், நுணுக்கங்களால் தமிழகம் சென்று மனிதர்களை கூலிகளாக அழைத்து/பிடித்து வருகின்றனர். இவர்கள் ஓடி விடக்கூடாத வண்ணம் எஸ்டேட் நிர்வாகம் இவர்களை அடிமைகளாக நடத்துகின்றது.  வெள்ளையர்களின் குதிரைகளை பூட்டும் லேயம் என்ற பொருட்படும் லயங்களில் ஆடுமாடுகளை போன்று அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர்.  மலேறிய போன்ற நோய்களால் பல மனிதர்கள் மாண்டு போவதும் சகஜமாக உள்ளது தேயிலை தோட்டங்களில்.  பூச்சி என்ற கதாபாத்திரம் தன் மனைவி மகன்களை மலேறியாவுக்கு பலி கொடுத்த நிலையில் எஸ்டேட்டில் கூலியாகவே வாழ்வதையும் இக்கதையில் காண்கின்றோம். இந்நிலையில் தான் ஆறுமுகவும் பல வித தந்திர உபாதிகளுடன் தன் கங்காணி வேலையை சிறப்பாக செய்கின்றார்.   யாரையும் நேராக எதிர்க்கவொ விரோதிக்கவோ  விளையாது அவர் வேலையில் மட்டும் மும்முரமாக இருந்து ஒரு குழு தொழிலாளிகளை வழிநடத்தி செல்கின்றார்.  கூலி தொழிலாளர்களின் திருமணம் கூட கங்காணியாலே நிர்ணயிக்கப்படுகின்றது. ஆறுமுகம் கங்காணி குழுவிலுள்ள பதாளை மகள் மாடத்தி ஒருவனை காதலித்து கற்பமாக இருக்கின்றாள் என தெரிந்தும் அவள் பெற்றொரை வசப்படுத்தி தன் கணக்கிலுள்ள ஐயாக்குட்டிக்கு திருணம் செய்து வைக்கின்றார்.

ஆறுமுகம்  முதல் மனைவி கோமதி  வெள்ளை அதிகாரியால் கற்பழிக்கப்பட்டு இறந்தவர். தங்களை கோமதி பேய் பிடித்து விடுமோ என பயந்த பெண்கள்   பூசை செய்கின்றனர்.  தன்னை கற்பழித்த வெள்ளைக்காரத் துரையை ஏன் பேய் பிடிக்கவில்லை என்பதற்க்கு "சத்தியத்திற்க்கு  கட்டுப்பட்டது பேய்கள், கடல் கடந்து வந்தவனை ஒன்றும் செய்யாது என்று விளக்குவது வழியாக  வாசிப்பவர்களை சிந்திக்கவும் வைக்கின்றார்.

ஆறுமுக கங்காணி மனைவி மாரியம்மாள் நல்லதொரு பெண் கதாபாத்திரமாக மிளிர்வதும் பெண்ணுக்குரிய எல்லா பொறுமை, தலைமை பண்பு, ஈர நெஞ்சம் இருந்தும் கணவர் உயர்வை கண்டது போல் அவர் தாழ்வையும் முடிவையும் கண்டு வாழ்வின் அதாளபாதாளத்தில் வீழ்கின்றார். .பெண்மையில் இயலாமை, நிரந்தரமற்ற தன்மை விளக்குகின்றார் இக்கதாபாத்திரம் வழியாக.  தன் மகனின் குழந்தையை மடியில் போட்டு கொஞ்ச வேண்டுமென்ற ஆசையும் செல்லையாவின் காதலியால் பறி போகின்றது.


கங்காணியின் ஒரே மகன் செல்லய்யா.  கங்காணி மகன் என்ற அந்தஸ்தில் வாழ்ந்து அனுபவித்து, விடலைப்பருவத்தின் சேட்டைகளும் புரிந்து வேலை என வரும் போது எஸ்டேட் தேயிலை தொழில்சாலையில் அதிகாரியாகுவதும், பின்பு வெள்ளை அதிகாரியால் காரணம் இல்லாது விரட்டப்பட்டு; விதி வசத்தால் கட்சி தலைவர் ஆகுகின்றார்.  தந்தையின் துயர் நிலையை கண்டு மனம் நொந்த வேளையில்   வேலை தேடி தமிழகம் வந்து அரசு வேலை பெற்று  ஒரு வழியாக  காதலியை கைபிடித்தால்;  தாலி கட்ட  அனுமதித்த காதலி தேயிலை தோட்டம்  விட்டு செல்லாய்யாவுடன் வர விரும்பாததும்  துக்க கதாபாத்திரமாகவே நம்மை விட்டு மறையுகின்றார் !

 அடுத்த பிரதான கதாபாத்திரம்  நாடார் இனத்தை சேர்ந்த வேத சிரோன்மணி கண்டக்டர் ஆகும். இந்த ஆள் செய்யும் மூக்கத்தனத்திற்க்கும் அழிச்சாட்டியங்களுக்கும்  குறைவே இல்லை. தான் எடுத்த வாளாலே வீழ்கின்றான் என்பது போல்  இவருடைய செயலே இவருக்கு ஆபத்தாக  முடிகின்றது.  பூனைபோல் சுற்றி வந்த அம்முக்குட்டி என்ற வைப்பாட்டி கூட   எஸ்டேட் மானேஜருக்கு வைப்பாட்டியாகியவுடன் கண்டக்டரை நாய் போல்  விரட்டி விடுகின்றாள்.  எவ்வளவுக்கு எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினாரோ அந்த அளவுக்கு மலையாள அதிகாரிகளால் மதிக்காது, வேலையில் இருந்து விடுதலையாகும் தருவாயில் தன் மனைவிக்கும் உண்மையாக இருக்கவில்லை, தன்னால் உருப்படியாக ஒன்றும் சம்பாதிக்கவும் இயலவில்லை தன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே  இழந்ததை எண்ணி வருந்திய நிலையில்,  10ஆம் வகுப்பில் 3 தரம் தோற்ற  மகனுக்கும் எஸ்டேட்டில் வேலை கிடைக்காமல் போக    தன் வயோதிகத்தில் சொந்த ஊர் நாகர்கோயில் வந்தடைகின்றார்.

ஜான் என்ற மலையாளி பந்தகோஸ்த் கணக்கர். அந்த மனிதன் கடவுளை மட்டும் நினைத்து கொண்டு சுத்த ஆத்துமாவாக, ஏன் கேணையாக தெரிகின்றார்  கதையின் முற் பகுதியில்! ஆனால் வேதசிரோன் மணியை பயந்து அவருக்கு கேடயம் தயார் செய்தே கொடும் வில்லனாக மாறுகின்றான் பின்பகுதியில். தன் வேலையை காப்பாற்றி கொள்ள குறுக்கு வழியை கண்டு கொண்ட ஜாண் என்ற யேசுவின் பரம பக்தன், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களை துன்புறுத்துவதையே தன் லட்சியம் என மாறுகின்றான். மதபக்தி எந்த அளவு ஆட்கொண்டதோ அந்த அளவு இனமொழி வெறியும் ஆட்கொள்ள தொழிலாளர்களை  கருணையற்று துன்படுத்துகின்றான் .  அதிகாரம் கிடைக்கும்  தோறும்  நல்லதில் இருந்து தீமைக்கு செல்வதும்,  மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு எஸ்டேடுகள் கேரளாவுக்கு தாரைவார்த்த போது மலையாள நரித்தனமும் சேர்ந்து கொள்ள  கடவுளை அழைத்து கொண்டே மனித நேயமற்று நடந்து கொள்வதையும் இயல்பாக சித்திரிகரித்துள்ளார் கதாசிரியர்.

 வேலம்மை என்ற மறத்தி பெண் கேடு கெட்ட கணவன் தாலி கட்டினதால் இன்னொருவனுடன்(ராபட்சன் என்ற ஆங்கில அதிகாரி) வாழ வேண்டி வந்தவள்.  குடிகார கணவனால் வேசி-குடிகாரியாகி   வெள்ளைக்கார  அதிகாரி, தனக்கு பிறந்த மகளையும் தனக்கே அனுபவிக்க தரும் படியாக சொன்ன போது வெகுண்டெழுந்து தன் மகளை காப்பாற்ற எல்லா சுகங்களையும் விட்டெறிந்து  முதலில் தமிழத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த  நிலைக்கே தள்ளப்படுகின்றாள். அவளுடைய மகளான ருக்மிணி  கூலிதொழிலாளியாக பண்புள்ள பெண்ணாக, வீரமுள்ள விவேகமுள்ள பெண்ணாக பல இடங்களில் ஒளிர்கின்றாள். பள்ளியே காணாதவர்கள் மத்தியில் எட்டாம் வகுப்பு படித்த ருக்குமணி நவீன பெண் பார்வையாகவும் கதாசிரியர் கொண்டு செல்கின்றார்.தன் தாயை போல் அல்லாது  சுயநலம் கொண்டு தொழிலாளர்களை விட்டு வர மனம் இல்லாது,   தனக்கு தாலி கட்டிய ஆறுமுகம் கங்காணி மகன் செல்லையாவையே நினைத்து வாழ முடிவெடுக்கின்றார்.

வேலைக்காக பெண்டாட்டியை விட்டு பிழைக்கும் மேஸ்திரி செல்லைப்பா மூப்பன், எசக்கி என்ற மோசமான பெண்,  பெண் லம்பாடியான மரியப்பன் என்ற கங்காணி, பொறுப்பற்று குழந்தகளை மட்டும் பெற்று போடும்  பாதளை நிராதரவான அவன் மனைவி, பூச்சி என்ற முற்போக்குவாதி, வயதான செல்லையா வாச்சாரும் பாலியல் நோயால் பேய் பிடித்துள்ள பேச்சி என்ற இளம் மனைவி, ஒரே அறைக்குள் 3 குடும்பம் அதை வெறும் சாக்கால் மறைகட்டி வாழும் சூழலில் மனைவியை அருகில் தூங்க வைத்து கொண்டே கள்ள தொடர்புக்கு முயலும்-பேய் வைத்தியம் பார்ப்பது போல் பேச்சியை கடத்தி கொண்டு போக நினைக்கும் மரம்வெட்டி வேலாண்டி, விபத்துக்க்கு பலியாகி அநாதையான பிணமாக விடப்பட்ட  பெண் என எல்லா கதாபாத்திரங்களும்  உயிருடன் உலவுகின்றனர்.

அடிமைகள் வாழ்விலும் சுதந்திரத்தில் காற்றை வீச வந்த  துணிச்சலான அனந்தன் நம்பியார், வேலாயுதம் போன்ற கதாபாத்திரங்கள், கூலிகளாக இருந்தும் வீரமாக செயல்படும் இளைஞர்கள் என தேத்தண்ணீர் குடிக்கும் உற்சாகத்துடன் தேயிலைக்காடுகள் வழியாக நாம் ஒரு பயணம் மேற்கொண்டு வரலாம்.

கேரளா தமிழகம் என இரண்டாக பிரிக்கப்பட்ட போது அங்கு வேலை செய்த தமிழ் மனிதர்கள் வாழ்க்கை எவ்வாறு சீரளிக்கப்பட்டது என்றும் இதுவே தருணம் என்று தமிழகர்களை மலையாள நிர்வாகிகளின் உதவி கொண்டு கூட்டாக விரட்ட முயன்ற போது அங்குள்ள இன்னும் சில மனிதநேயம் கொண்ட மலையாளிகளின் மனநிலையை ஒரு மலையாளியின்  உரையாடல் ஊடாக விளக்குகின்றார் கதாசிரியர் இப்படியாக; "மலையாளிகளிடமும் எனக்கும் விருப்பவும் இல்லை தமிழர்களிடம் விரோதவுமில்லை " என்று ஒரு மலையாளி சொல்வது வழியாக.

நீலமலை எஸ்டேட்டில் ஒரு பெண் தேயிலை உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் அறுபட்டு மாண்டு விடுகின்றாள். இத்துடன் கதை சூடுபிடிக்கின்றது.  அவளை புதைக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுப்பதுடன் வேலை முடிந்து மாலை வந்த பின்பு அடக்கம் செய்ய சொல்லி வற்புறுத்துகின்றது. இங்கு தான் நிர்வாகம் எதிர்பாராத விதத்தில் கூலி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பிணத்தை அடக்க தூக்கி செல்கின்றனர். ஆனால் வெள்ளக்கார அதிகாரி குதிரையில் வந்து தடுக்க செல்லைய்யா குரல் கொடுக்கின்றான்.  பின்பு நடந்த களேபாரத்தில் வெள்ளைக்காரன் குதிரையுடன் விழுந்து விடுகின்றான். அவமானப்பட்ட வெள்ளக்காரன் செல்லைய்யாவை கொல்ல சதி செய்கின்றான். செல்லையா தன் உயிர் காப்பாற்றி கொள்ள கட்சியில் சேர வேண்டி வருகின்றது. வஞ்சம் தீர்க்க என கூலிகள் பல விதத்தில் துன்பபடுத்தப்படுகின்றனர் துர்குணம் கொண்ட அதிகாரிகளால். ஆறுமுக கங்காணி வாழ்கையில் இச்சம்பவம் பெரும் எதிர்மறையான விளைவை உண்டாக்குகின்றது.


இதற்க்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து விட வெள்ளையர்கள் இருந்த இடத்தில் மலையாள அதிகாரிகள் வருகின்றனர். அவர்கள் மலையாள கணக்கப்பிள்ளை போன்ற கீழ்நிலை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழகர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்கின்றனர். இத்தருணத்தில் கங்காணி ஆட்சி சட்டத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு  சூப்பர்வைசறுகளை நியமிக்கின்றனர்.  ஒரே நாளில் வேலை, பதவி இழந்த கங்காணி ஆறுமுகம் மனம் பேதலித்து போகின்றது. ஒரே நாளில் தாங்கள் குடி இருந்த  வீட்டிலிருந்தும் விரட்டப்பட உடல்-மனச் சோர்வுடன் தமிழகம் வந்து சேருகின்றார்!   தமிழக காலநிலையும் சேராது, வாழ பொதுமான வாழ்வாதரவும் இல்லாத நிலையில் ஒரு நாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கின்றார்.

 தொழிலாளர்களோ, வெள்ளையர்கள் படை இருந்த இடத்தில்  இந்திய அரசு சிப்பாய்களால் பெரிதும் விரட்டப்படுகின்றனர். செங்கொடி உயர்ந்ததுடன் அவர்களில் வாழ்வில் ஒளி வர ஆரம்பித்துள்ளதாக கதாசிரியர்  சுதந்திர காலகட்டத்துடன்  முடித்துள்ளார்.

 
செல்லையா காதலி தாலி கட்டிய கணவருடன் வராது இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சொல்வதும் அதிகாரி வசிக்கும் பங்களா முகப்பை காட்டி மாற்றம் இல்லாது இருப்பதாக சொல்லுவதுடன் கதை முடிகின்றது.செல்லையாவும் கனத்த இதயத்துடன் விடைபெறுகின்றார்.
  • இந்த முடிவு எனக்கு நெருடல் தருகின்றது. புது வசதிகளுடன் மாற்றப்பட்ட லயன்சை காட்டி கதையை முடித்திருக்கலாம். பங்களாக்கள் முகப்பு மாறவேண்டும் என்பது அழியவேண்டும் என்ற பொருளா? தன் இரு கண் போனாலும் மாற்றான் ஒரு கண் போகட்டும் என்ற சிந்தனை இதில் உண்டோ என்று அச்சம் கொள்ள செய்கின்றது.
  • கதாசிரியர் மலையாள மொழியில் நிறைய கதைத்துள்ளார். மலையாளம் தெரியாதவர்களுக்கு வாசித்து புரிந்து கொள்ள சிக்கல் இருந்திருக்குமோ என சந்தேகிக்கின்றேன்.
  • ருக்குமணியை செல்லையாவுடன் சேர்க்காது கதாசிரியர் விடுவதால்  தேவையற்ற மனபாரத்தை வாசகர்களுக்கு தருகின்றார்.
  • தேயிலை காட்டை ஏன் தேயிலை வயல் என குறிப்பிடுகின்றார் என்ற கேள்வியும் துளிர் விடுகின்றது.
  • செங்கொடி ஏறியதுடன் தொழிலாளர்கள் சுமை நீங்கிவிட்டதா? என்ற கேள்வியும் எழாது இல்லை1

இந்த புத்தகம் ஊடாக ஒரு கதையை வாசித்ததை விட ஒரு வரலாற்றை சில மனிதர்கள் வாழ்கையூடாக  கடந்து சென்றது போல் இருந்தது. மனிதர்கள் வெறும் செம்மரியாடுகள் போன்று செல்லப்பட, கூலிகள் என்றழைக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்து சென்ற   பாதைகள் இந்தளவு கொடியதாக இருந்ததா?  இன்று அவர்கள் நிலை பல மடங்கு முன்னேறி இருந்தாலும் கூலிகள் தொழிலாளர்களாக மாறினாலும்,   கங்காணித்தனம் அழிக்கப்பட்டாலும் இன்றும் அரசியல் கட்சிகள்  இன்னும் வேறு பலர் அவ்விடங்களை தக்க வைத்து கொண்டும், கொடிய விலங்கு போன்று பிடித்திருப்பதை பற்றி புதிய வரலாறே எழுதி விடலாம்.

கதைகள் கற்பனைகளையும் கடந்து வரலாற்றை சொல்லி வைத்து சென்ற இந்நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இது போல் நம் சுற்றும் நாம் காணும் தொழிலாளர்கள் வாழ்கையும் பதிய வேண்டும் என்றே ஆவல்.


தேயிலை வயல்
கெட்ட வார்த்தைகள்

15 Aug 2012

உண்மை உங்களை சுதந்திரமாக்கும்!



நள்ளிரவில் கிடைத்த  சுதந்திரம் தினம் கொண்டாட என் மகன்  தயாராகி விட்டான்.  பள்ளி நாட்களில் சுதந்திர தினத்திற்க்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளது போல் தான் உள்ளது. இன்றைய தினம் போல், ஆங்கில பள்ளிகள் அன்றும் சுதந்திர தினம் கொண்டாடியது இல்லை. ஆனால் எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கொடி பிடித்து பாரத மாதாகி ஜெய்....வந்தேமாதரம் என கத்தி சென்றது இன்று நினைக்கும் போது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது.  தங்கள் ஜாதி, மதம் , இனம் கடந்து  தங்கள் நாட்டை பற்றி சிந்திப்பது மகிழ்ச்சி தரும்.

இன்று சிலர் சுதந்திர தினம் கொண்டாட்டம் வீண் என்று சொல்வதில்  சில அர்த்தங்கள் இருப்பினும், கொண்டாட்டம் என்ற நிலையை கடந்து நம் முன்னோர்கள் கொள்கைப் பிடிப்பு, அவர்கள் போராட்டம், லட்சியம், சுதந்திரத்தின் மேலுள்ள வேட்கை, அடிமைத்தனத்திலிருந்துள்ள விடுதலை, உண்மையான சுதந்திரம் பற்றி  தெரிந்து கொள்ளும், கருத்துக்கள் பரிமாறும், கற்று கொள்ளும் நாளாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

நாம் இன்று கொண்டாடும் சுதந்திர தினம் நாள் அன்று பாகிஸ்தான் -இந்தியா பிரிவினையால்  பல்லாயிரம் இந்து -இஸ்லாம் மக்கள் இறந்த நாள் என்ற வகையில் சுதந்திர தினம் வருந்ததக்க நாள் தான். அதே போல் சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை, கல்லாமை, அறியாமை ஒழியவில்லை. அன்றைய நிலை விட மிக கொடிய நிலையில் தான் மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.  பணம் , பதவி, அதிகாரம், பொருளாசை, பொறாமை போன்ற தீய குணங்களின் அடிமைகளாகவே உள்ளனர் பெரும்வாரியான மக்களும்,  தலைவர்களும். அசாம் மக்களுக்கு இன்று சுதந்திர தினம் மகிழ்ச்சியான நாட்களாக தான் இருக்குமா என்ன?

 ஆனால் தான் நினைத்ததை மட்டும் சுதந்திரமாக எடுத்து கொண்டு அடுத்தவர்களின் சுதந்திரத்தை பற்றி எண்ணாது செயலாற்ற இயல்கின்றது என்றால் இந்தியாவில்  மட்டுமே முடியும். இது தான் சுதந்திரமா? உண்மையான சுதந்திரம் என்ன என்று  தெரியாதே சுதந்திரம் கொண்டாடுகின்றோம் என்பதே துயர். ஆசிரியர் சுதந்திரம் என்ற பெயரில் மாணவனை அடிமையாக நடத்துவதும், அரசு அதிகாரம் படைத்தோர் இல்லாதவர்களை கண்டு அடிமையாக நினைப்பதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாக அடிமைகளாக நடத்துவதும், இதே பெற்றொர் வயதான நிலையில் பிள்ளைகளால் அடிமையாக நடத்தப்படுவதும்  சுதந்திரத்தின் அல்லது அடிமை நிலையின் வெளிப்பாடா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

நம் நாட்டிலுள்ள பெரும் சிக்கலே சுதந்திரம் என்றால் என்ன சுதந்திரம் எந்த அளவு எடுத்து கொள்ளலாம் என்ற புரிதலின் தவறே.  இன்று வெளிநாடுகளில் வசிப்பவர் என்றால் நமக்கு தெரியும் நினைத்த சத்ததில் நினைத்த நேரம் பாட்டு கேட்க இயலாது, நினைத்த் இடத்தில் துப்பவோ பொது இடத்தை கழிப்பிடமாக பயண்படுத்தவோ, துப்பக்கூட முடியாது. ஆனால் நம் நாட்டு சுதந்திரம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுக்ன்றது என்றால் பேருந்தில் இருந்து ரோட்டில் போவோர் மேல் துப்புகின்றனர்.  ஒரு மனிதன் வண்ணார்பேட்டையில் புலம்பி கொண்டு செல்கின்றார்.  எனக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளது, இதுவரை என்னை யாரும் அடித்தது கிடையாது. காரணம் இல்லாது அந்த பொலிஸ்க்காரர் என்னை அடிக்கின்றார், எங்கு புகார் கொடுப்பது?  இது தான் நம் நாட்டு  சுதந்திரமா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்கள் பெயரை கெடுக்கும் விதம் எழுதுவது பேசுவது சுதந்திரமா?, மனைவியை பொது இடத்தில் வைத்து அடிப்பதும், கணவனையும் கணவன் குடும்பத்தவரையும் பொலிஸில் அனுப்புவது சுதந்திரமா?  ஒருவர் இருப்பை இன்ன்ருவர் பறிப்பது சுதந்திரமா?  சுதந்திர தினம் மேலுள்ள வெறுப்பால் சுதந்திரத்திற்க்கு என பாடுபட்டவர்களை கேவலாமக சித்தரிகரித்து பேசுவது சுதந்திரமா? இப்படி பல கேள்விகள் கேட்டு கொண்டே போகலாம்.

பைபிளில் ஒரு கூற்று உண்டு; "உண்மை உங்களை சுதந்திரமாக்கும்'.  ஆம்! உண்மையாக இருப்பது வழியாக நாம் உண்மையான சுதந்திரம் அடைய முடியும். நம் பாரதத்தில் பொய்மை பரப்பவும் உண்மையை உடைக்கவும் தான் சுதந்திரம் பயன்படுத்த படுகின்றது என்பது உண்மையாகும் போது, உண்மை தோற்க்கும் போது  சுதந்திரம் செத்து விடுகின்றது. 


சுதந்திரமாக சிந்திக்கின்றோம் எங்கள் உரிமையில் தலையிடக்கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையாகவும் இருக்க வேண்டும். நம் தலைமுறையை உண்மை பக்கம் திருப்பி  உண்மை சுதந்திரத்தை மீட்டு சுதந்திரமாக சுதந்திர தினம் கொண்டாடுவோம்.

12 Aug 2012

பெய்த நூல்! போ மணிவண்ணன்

பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்களுடைய எழுத்தில் தகிதா பதிப்பகத்தால் வெளிவந்த 'பெய்த நூல்' என்ற புத்தகம்  பற்றிய  என் கருத்தை   பகிர்வதை பெருமையாக எண்ணுகின்றேன்.

 தமிழில் கட்டுரை கதைகள் வசப்படும் அளவுக்கு கவிதைகள் எனக்கு  புரிந்து கொள்ள கடினம் என்பதால் கவிதைகளை கண்டு தூர விலகி ஓடுபவளே. ஆனால் என்னை போன்றவர்களையும்  புரிய வைக்கும் எளிய  மொழி நடையில் தன் கவிதைகளை படைத்துள்ளார்.

என்னுரையில் துவங்கி தன்னுடைய எளிய மனித நேயமான குண நலன்களை வெளிப்படுத்துகின்றார். தன்னுடைய ஒவ்வொரு  வளர்ச்சியையும்  வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும்  எளிமையாக பகிர்ந்துள்ளார்.  வாழ்கை என்னும் வட்டத்தில் பல துயர்கள், தோல்விகள்  கண்டு  துவண்டவர்களுக்கு தாழ்வுணர்ச்சியில் இருந்து மீண்டு வரவும்,  புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து என்பது மட்டுமல்ல தங்களாலும் முன்னேற இயலும் என்ற ஊன்று சக்தியாகவும் பேராசிரியருடைய கவிதைகள் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தமிழ் மொழி படிப்பவர்களாலும்  தங்கள் வாழ்கையை சிறந்த இடத்தை நோக்கி நகர்த்தி செல்ல இயலும் எனவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

முதல் கவிதையூடாக   போர் களத்தில் பொலிந்து போன ஈழக் குழந்தைகளை நினைத்து  துவங்கியுள்ளார். 'தீராநதி' என்ற கவிதை வழியாக தன்னுடைய  தீராத துயர் வேளையில் கூட அடுத்தவர்கள் அதனால் பாதிக்கக்கூடாது என்பதில் இருக்கும் சக மனித நேயம் விளங்குகின்றது.

வாழ்கைக்கு தேவையான நுணுக்கங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறம் சார்ந்த பண்புகள் பற்றி பல கவிதைகள் வந்து செல்கின்றன.  உலகுக்கு தேவையான அமைதியை பற்றியும், சுதந்திர உணர்வு, சமூக  மாற்றம் என மனிதர்கள் புரிந்து செயலாற்றி வெற்றி கொண்டு வாழ வேண்டிய பல அரிய கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன.





மரியாதைப் பெற யாருடைய முகமனையும் 
எதிர்பார்க்காதே 
உன்னை நீயே  வணங்கி கொள்" 

விவைத்து அவைத்து உங்ளை எவைப்கள் அவர்கள் தான். பக்கம்-82

போன்ற சுயமரியாதை கருத்துக்கள் ஓங்கி உள்ளது.

சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் கண்ட தார்மீக ரோஷத்தால், தமிழ் மொழி படும் பாடு கண்டு, பள்ளி சிறார்களின் கல்வி முறையை கண்டு, மரம் வெட்டுதல் போன்ற தீய செயல்களை கண்டு,  இயற்கை மேல் கொண்ட பரிவால் பல கவிதைகள் மனதை நெருடம் விதம் வரைந்துள்ளார்.

காலையில் விரிந்து மாலையில் வாடும் பூவின் நிலையை கூட எண்ணி மனம் வருந்துகின்றார். பாலுக்கு என பசுவை வதைக்கும் மனிதர்கள், தண்ணீரை  வியாபாரமாக்கும் சமூகச்சுழல், வாடகை வீடு, புண் பிடித்த இந்திய தேசத்தின் சுதந்திர விழா, வறும, யாரும் அக்கரை கொள்ளாத தெரு நாய் என பலருடைய பார்வைகள் செல்லாத இடங்களில் கேள்வி கேட்கும், வருந்தும்   குரலாகவே ஒலிக்கின்றது பேராசிரியரின் பல கவிதைகள்.

சமூகம் சிந்தனை மட்டுமல்லாது  தான் சார்ந்த நிகழ்வுகளையும் ஒரு சுய சரிதை போல் பதிந்து சென்றுள்ளார். தன்னுடைய தொடர்வண்டிப் பயண அனுபவங்கள், பேருந்தில் வீறிட்டு அழுத குழந்தையின் குரல், தன் கனவுகள், காதல் உணர்வுகள், தன் குழந்தையுடனான பொழுதுகள் என சொந்த வாழ்கையும் தொட்டு செல்கின்றது பல கவிதைகள் .

போற்றப்பட வேண்டிய பெண்கள் நிலையை கண்டு துயர் கொண்டு  தன் ஆழமாக சிந்தனையால்   "என்றிலிருந்து மனுஷி'(பக்கம் 63 ) என்ற கவிதையினூடாக சமூகத்திற்க்கு நினைவுப் படுத்துகின்றார். இன்னும் ஒரு படி மேல் போய் ' ஒரு குடும்பத்தின் ஜவுளி' என்ற கவிதை வழியாக துணி என்ற பொருளை சில துல்லிய அர்த்தங்கள் கொண்ட  வரிகளின் துணை கொண்டு சிந்தித்திராத பல அரிய கருத்துக்களையும் விட்டு சென்றுள்ளார்.

'பெய்த நூல்' என்ற தலைப்பில்  ( பகக்ம் 54 ) இடம் பெற்றுள்ள கவிதை பள்ளிச் செல்லும் ஏழை மாணவிகளின் அவர்கள் அணிந்துள்ள கிழிந்த ஆடைகள், போராட்டமான பேருந்து பயணத்தையும்,  அவர்களுடைய துயர் மிகு வாழ்கையையும் கண் முன் கொண்டு வந்துள்ளார். பெய்த நூல் என்பது கிழிந்த நூல் என அடையாளப்படுத்த பட்ட வார்த்தை தலைப்பாக வந்த போது பெய்த நூல்- புத்தகங்களின்  மழையாக கருத்துக்களின் சரங்களாகவே விளங்குகின்றது.

புத்தக அட்டைப்படம்  சிறப்பாக இன்னும் பல பொருட்களை எறிந்து செல்கின்றது.  சமூக அவலங்களை கண்டு நொந்து உருகிய கவிஞரின் கலங்கிய  மனக்கலவரம் கொண்ட மேகம், ஆறுதலுக்கென தான் வாசித்த  புத்தகங்களின் குவியல், அதின் மேல் தெரியும் தெளிந்த மேகம்.  கல்வியால் ஞானத்தால் தெளிவு உண்டு, பொற் காலம் உண்டு என உணர்த்துகின்றாரோ கல்வியாளரான கவிஞர்.
 வாழ்த்துக்கள். உங்கள் பார்வையில் சமூகத்தை பார்க்க  தங்கள் அடுத்த புத்தகத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.  வாழ்த்துக்கள் வணக்கங்கள்!!!!!

10 Aug 2012

அம்மா என்ற தோழி!


ஒரு வங்கி வாசலில்  நின்று கொண்டிருந்தேன்.அங்குள்ள  படிகளில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அம்மா-மகள் கண்ணில் பட்டார்கள். அம்மாவுக்கு 27லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். ளோ 10 வயது குட்டி பெண்!

அம்மாவின் நான்கு விரல்களை தனது  நான்கு விரல்களுக்கு உள்ளாபின்னி கொள்கின்றாள்.  பின்பு பெருவிலை இருபக்வும் த்து கொண்டு சில வார்த்தைகளை பாட்டு போன்று உருவிடுகின்றாள். பாட்டின் முடிவில் இவள் விரல்களை விடிவிக்க முயல்கின்றாள்!  அம்மா சிறை பிடிக்க முயற்சிக்கின்றார். அம்மா முதலில் தோற்று கொண்டிருந்தாலும்  சில பொழுது சிறை பிடித்து விட்டு நான் ஜெயித்து விட்டேன் என சிரிக்கின்றார். மகள் ஜெயிக்கும் போது அம்மாவிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று ஆற்பரிக்கின்றாள். இப்படி விளையாட்டு போய் கொண்டிருக்கின்றது. அம்மா சிரித்து கொண்டு ஒரு குழந்தையாகவே மாறி விட்டார். அம்மாவும் குழந்தையும் தோழிளாதன் சுற்றும் முற்றும் றந்து விளையாடி கொண்டிருந்து  பார்க்கவே இன்பமாக இருந்தது.
பின்பு தன் கை முட்டால் தன் அம்மாவின் உள்ளம் கையை நீட்ட சொல்லி பலம் கொண்டு இடிக்கின்றாள். அம்மா கையை பின்னால் இழுத்து கொண்டதும் இந்த விளையாட்டில் அம்மா ஜெயித்து விடுவார் . இப்படியாக   விளையாட்டு சலிக்காது போய் கொண்டே இருந்தது. மகளின் கெக்கல் விட்ட சிரிப்புக்கும் அம்மாவின் வெட்கம் கொண்புன்முறுவல் சிரிப்பும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கப் படியாகவும்  இருந்தது. இந்த விளையாட்டு ஊடாக அம்மா மகள் உறவு இன்னும் பலப்படுகின்றது. வாழ்கையில் தோல்வியும் ஜெயவும் ஒரே போல் எடுத்து கொள்ள பழக்கப்படுகின்றாள். தொடர்ந்து ஜெயிக்க போராடுகின்றாள் மகள்.

குழந்தைளுடன் குழந்தையாவிளையாடி கிழும் ங்கள் த்தை நினைவிற்க்கு வந்தார். தேயிலை தோட்டத்தில்  அதிகாரியாக இருந்த  மாமா இடும் டவுருடன்  அத்தை நரியாகவும் நாங்கள் கோழியெனவும்  விளையாடுவோம்.  மாமா வந்ததும் வீட்டில் அமைதி நிலவி விடும். அவர்கள் வசித்திருந்த வீடு எஸ்டேட் நிர்வாத்தால் கொடுக்கப்பட்டிருந்தால் லை உச்சியில்  டுகாட்டில் 7-8 அறைகள் கொண்ட விசாலமான வீடாக இருந்தது . வில் விவிமாவண்டு த்துது,  ரி ளையிடுதை கேட்லாம். அந்த வீட்டில் ஒரு பேய் அறை கூட உண்டு. பேய் போன்று முகத்தை வைத்து கொண்டு பேய் கதை சொல்வார் அத்தை.  அத்தைக்கு இண்டு கள்கள்.  ஒருவள் டித்து கொண்டே இருப்பாள் இன்னொருவள் கொறித்து கொண்டே இருபாள். ங்கள் வீடு பட்த்தில் என்தால் ரோட்டில் வண்டிகள் போகும் த்தம் மட்டுமே கேட்டு ளர்ந்த எங்ளுக்கு வித்தியாமாக இருந்து அத்தை வீடு திங்கள்கிழமை வீட்டுப் பாடம் செய்யாது பள்ளிக்கு செல்வதற்கு  அம்மாவிடம் வெளக்குமார், செருப்பு அடி வாங்கும் வரை விடுமுறை நாட்கள் கொண்டாட்ட நாட்களாக தான் இருந்தது.


இன்று நகர் புற அம்மாக்கள்  லிப்ஸ்டிக் இட்ட சிவந்த உதடுகள் , அசத்தலான மாடன் உடை அணிகலங்கள், அரைகுறை ஆங்கில பேச்சு , சிரிப்பை மறந்த முகம் என ஒரு நாடகத்னம்  அடையாளமாகி விட்ட நிலையில் தங்கள் பெற்ற குழந்தைகளிடமும் இயல்பாக இருக்க தவறுகின்றனர்.

அம்மாக்கள் அளந்து பேச குழந்தைகள் ங்கள் குழந்தைப்ருத்தை வர்கள் அவர்ளாரும் நாட்ளை இழந்து கொண்டிருக்கின்னர்.  குழந்தைகள் னி உகை புரிந்து கொள்ளாபெற்றோர்கள், குழந்தைளை தியார்க்கின்றோம் என்று னி அறைகள் அமைத்து கொடுத்து ங்ளுக்கும் ங்கள் குழந்தைளுக்குமான இடைவெளியை பெரிதாக்கி கொண்டிருக்கின்னர். இதில் டிப்றிவற்பெற்றோர்ளை விட  டித்பெரிவேலையில் இருக்கும் பெற்றோர்களாலே   குழந்தைகளின் ஆளுமை அடிபட்டு போகின்றது.  தங்களை முன் நிறுத்தி, தங்கள் பெருமை பிரஸ்தாபங்களை காட்டி, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். பெற்றோர்-குழந்தைளுக்காருமையாருங்ளை தொலைகாட்சியும்ரித்து விடுகின்து.

பக்த்து வீட்டிலுள்சின்பெண்ணை னிக்கின்றேன். அளிடம் பேதொலைகாட்சியில் மூழ்கி இருக்கும் அம்மாவுக்கும் நேமில்லை, வள் ஆச்சிக்கும் நேமில்லை. அந்நேரம் அவள் னிப்பாரற்று தெருவில் விளையாடுகின்றாள். அளும் விடியும் முன் ஒவ்வொரு வீடாடி கொண்டிருக்கின்றாள். ளை அதே கிழ்ச்சியாநிலையில் வீட்டில் இருப்வர்ளால் வைத்து கொள்தெரிவில்லை. ங்கள் தொலைகாட்சி நேரம் முடிந்தும் ங்கள் சுத்தை றந்து அக்குழந்தையை குற்றம் சுமர்த்தி அடித்து இழுத்து செல்கின்னர்.

ரு குழந்தை தன் பள்ளி விடுமுறை நாட்ளில் சொன்னாள், வீடு போடிக்கின்து.... ஏன்? என்றேன். வீட்டில் விளையாயாருமில்லை என்றாள். ஆச்சியுடன் விளையாவேண்டிது தானே என்றேன்,
ஆச்சியால் வேமாடக்க இலாது என்றாள் ருத்துடன்.
பள்ளி அடுத்வாரம் திறக்குமே பள்ளிக்கு சென்றாள் போடிக்காது என்றேன்.
ளோ இல்லை இல்லை அங்கு டி டி என்று னக்கு லை லி ருதாசொன்னாள்.  

இன்னும் சில அம்மாக்கள் வீட்டில்  சிரியைளாமாறி அக்குழந்தைக்கு கொடுக்வேண்டினிதாபிமான அடிப்டை ரிமைளை கூறிக்கின்னர்.  என் தோழி சொல்கின்றார் அவள் 2ஆம் குப்பு ளை காலை 5 ணிக்கு எழுப்பி டிப்பிக்கிறாராம். இவு 11 ணி ரை டிப்புக்கின்றாராம். இதுவெல்லாம் என் தோழிக்கு தன் மாமியாருடன் மையல் கட்டில் வேலை செய்யாதிருக்க உலாம் பிள்ளை ளர்ச்சிக்கு உவாது. 

மித்தில் வீடுளில் ஆண் குழந்தைளுக்கு னி னிப்பும் பெண் குழந்தைளுக்கு இன்னொரு னிப்பும் உண்டு. இன்னும் சிவீடுளில் பெண் குழந்தைளுக்கு செல்லம் என்பெரில் அவர்ளின் ளுமை குணம் சாந்ர்ச்சியை பற்றி கண்டு கொள்தில்லை.  வீடுளில் ங்கள் குழந்தைளை அடுத்வர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் ங்க அனுதிக்கின்னர்.  

பேருந்தில் கல்லூரிளில் மற்றும் ங்ளை கவனிகின்ரா என்போதையில் பெண் குழந்தைகள் டந்து கொள்கின்னர். இது வர்கள் வீட்டில் கிடைக்கானிப்புளை மூத்தில் தேடி சென்று  இன்னும் பிரச்னையில் விமட்டுமே வும்.  இன்னும் அன்பாக, தோழமையாக,  கவனமாக நம் பெண் குழந்தைகளை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். அப்படி வளர்க்கப்படும் ஒரு குழந்தையால் தன் பெற்றோரை ஏமாற்றவோ இந்த உலகத்தால் ஏமாற்றப்படவோ லாது.