14 Jul 2012

வகுப்பு 9 துணைப்பாடம்-மாமரம்

கதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு  இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக்கத்தில் இருக்கும் மாமர செடிக்கு பாதி தண்ணீரை ஊற்றி விட்டு மீதி தண்ணீரை குடித்து விட்டு இறந்து விட்டாராம்.

" உடலெ பள்ளி வாசலுக்குக் கொண்டுபோயி, குளிப்பாட்டி, புதுத்துணியெல்லாம் உடுத்தி, அடக்கம் பண்ணினோம். பெரியவரோட பபியில ஆறுநூபாய் இருந்திச்சு. நானும் அஸ்மாவும் ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு மிட்டாய் வாங்கி பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் குடுத்தோம். பின்னாடி நான் அஸ்மாவெ கல்யாணம் பண்ணிகிட்டேன்..........

அப்புறம் அந்த மரத்திற்க்கு கதையில் வரும் பெண் பாத்திரம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றது. ஒரு கட்டத்தில் மரத்தை பிடுங்கி சாக்கு பையில் தன் அறை மூலையில் 4-5 நாட்கள் வைத்து விட்டு தோட்டத்தில் நட்டு வளர்க்கின்றனர்.


அந்த வீட்டிற்க்கு ஒரு விருந்தாளி வந்துள்ளார். அவர் கிளம்பும் போது வீட்டிலுள்ள 16 வயது மகன்"உங்க சம்சாரத்துக்கும் குழந்தைகளுக்கும் குடுக்க சொன்னாரு அப்பா."

இன்னும் கதைகள் உண்டு. இந்த கதை அதன் கதாப்பாத்திரம், தமிழ் பயன்படுத்து அழகு, கலாச்சார கோர்வை, நடைமுறை தமிழுக்கும் எழுத்து தமிழுக்குமுள்ள வேற்பாடுகள் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களை விமர்சிப்பது போல் பாடப்புத்தகங்களை யாரும் விசாரிக்க போவது இல்லை என விளாசி தள்ளியுள்ளனர்.

இந்த கதைகளுக்கு பதிலாக ஒரு திரைவிமர்சனம்  எழுத சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

கடற்பயணம்-பக்கம் 64
ஒரே இடங்கள் பெயர்கள் கொண்ட விவரிப்பு. தமிழகத்தின் தற்காலைய துறைமுகங்களின்  நிலை பற்றியில்லை. வரலாறு தெரிவது நல்லதே அதற்க்கு என அப்பன் கட்டி வைத்த அரண்மனையை பார்த்தாலே பசி ஆறுமா? குலசேகரப்பட்டிணம் போன்ற துறைமுகங்கள் இன்றைய நிலை, மக்கள் வாழ்வு பற்றிய எந்த புரிதலும் இல்லை.

பாடமுடிவில்

கடல்சார் பயில்வோர்களுக்கு பயிற்ச்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளதாக முடித்துள்ளனர்.

அடுத்து அப்படியே 95 ஆம் பக்கம் வந்தால் " மொழிப்பற்றும் உடையவர் உணவு விடுதி, மருந்துக்கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறையிருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு" ...................

மொழி வழமையை வளர்ப்பது விடுத்து மொழி வெறி ஊட்டும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்!

உங்கள் கருத்துக்களை இட்டு செல்லுங்கள் உங்கள் மனநிலையும் அறிய ஆவலாக உள்ளேன். 

இன்னும் கதைப்போம்.

தமிழக தமிழ் மொழி பாடப்புத்தகம் 

தமிழக அரசு மலையாள மொழி புத்தகம்
 யார் உண்மையாக தமிழ் மொழி வளர்க்கின்றனர் என்று வாசித்து நாம் கருத்துரையாட வேண்டும்.
கேரளா அரசு பள்ளி தமிழ் புத்தகம் 1
தமிழ் மொழி -கேரளா அரசு பள்ளி பாடப்புத்தகம்-2
மலையாள மொழி -1





0 Comments:

Post a Comment