14 Jun 2012

தள ஓடு- Weathering Tiles

களிமண்ணில் இருந்து சுட்டு எடுப்பது என்ற அர்த்தத்தில் வரும் பிரஞ்சு மொழி வார்த்தையில் இருந்து உருவானது ஆகும் டைல்ஸ்-ஓடு என்ற வார்த்தை!  அதன் பயன்பாடு கணக்கில் கொண்டு பல  வகையில் பிரிக்கலாம். ஓடுகளின் பயன்பாடு இன்று நேற்று துவங்கியது அல்ல. பி.ஸி 650 வருடங்களுக்கு முன்பே அப்போளா போன்ற கிரீஸ் கோவில்களில் ஓடுகள் பயண்படுத்திய சாற்றுகள் உள்ளன. சாக்கு மற்றும்  மரங்களை மேல்கூரையாக பயண்படுத்தி ஆதி மனிதர்கள்   தற்காப்பு கருதி ஓட்டு பயண்பாட்டுக்கு மாறினர். 

பணச் சிக்கனம் மட்டுமல்ல கடும் குளிரிலும் வெயிலிலும் மனிதர்கள் தாக்கப்படாது இருக்க உதவியது  என்றால் மிகையாகாது.  சிங்கள அரசர்களின் காலத்தில் தான் வழுவழுப்பான ஓடுகள் பிரபலமாகியதாகவும் அனுராதபுர கோயில்களில் இவை காணலாம் என்றும் வரலாறு சொல்கின்றது.  சூரியனின் கடும் சூட்டை உள்வாங்காது சிதறிவிடுவதே இதன் சிறப்பாகும். அதே போல் கடும் கூளிரிலும் இதமான காலநிலையில் வீட்டை வைப்பதிலும் ஓடுகளின் முக்கிய பங்கு உண்டு.

நெல்லையில், களிமண் பொருட்கள் சட்டி, பானை, ஓடுகளுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் கூனியூர்.

களிமண்ணை ஒரு அறையில் இட்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு இயந்திரத்தில் கொட்டுகின்றனர். இயந்திர உதவி கொண்டு மறுபடியும் பக்குவமாக பிசையபட்டு அடுத்த  இயந்திரத்தில் வந்து சேர ஒரு குறிப்பிட்ட அளவில்  சதுரமாக வெட்டி  நல்ல வெளிச்சம் வரும் அறைக்குள் வெயில் படாது நிழலில் காய வைக்கின்றனர். பின்பு காய்ந்த ஓட்டை சூளையில்(அடுப்பில்) வைத்து சுட்டு எடுக்க அழகிய ஓடு தயார் ஆகி விடுகின்றது. தரம் அனுசரித்து ஒரு ஓடுக்கு 8 ரூபாய் விலையில் இருந்து கிடைக்கப்படுன்றது.  வீட்டு மேல் தளத்தை அலங்கரிக்க தள ஓடு இன்றிமையாதது.



கிராம மக்கள் தங்கள் ஊர் நிலபுலன்களை விட்டு  அன்னிய தேசத்திலும் ஊரிலும் அல்லல் படாமல் இருக்க இந்த மாதிரியான உள்ளூர் வேலைகள் உற்சாகப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். 


தொழிலாளிகள் கிடைக்காது முதலாளி சிரமப்பட தகுந்த ஊதியம் இல்லை என்று தொழிலாளியும் சொந்த ஊர் வேலையை விடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும் ஓடு சூளைக்கு  அரசினிடம் பெற வேண்டிய பிரத்தியேக அனுமதிக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால்  1000 ரூபாயாக வலுகட்டாயமாக பிடுங்கப்படுகின்றது.

வருடத்திக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பல மக்கள் கள்ள வேலையில் ஊதியம் பெற; உழைத்து மட்டுமே வாழுவேன் என்று பிடிவாதமாக உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு செல்லும் கிராம சூழலில் தற்போது தொழிலாளிகளின் பற்றாக்குறையும் பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. 

தொழில் செய்ய இயலாத முதலாளிகளும் நல்ல விலைக்கும் தங்கள்  இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விட்டு விட  உள்ளூர் வேலை வாய்ப்பு என்பது எட்டா கனியாக மாறுகின்றது.  இதன் தொடர்ச்சியாக கிராமங்களில் வறுமை, குற்றம், எல்லாம் பெருகி வேலை இன்மையான சூழலும் உருவாகுகின்றது. இதை எல்லாம் மனதில் கொண்டு முதலாளியும்  தொழிலாளியும் ஒரே போல் தங்களை போல் மற்றவர்கள்  மேல் கரிசனை கொண்டு  கிராம சமூகத்தின் சிறந்த வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும். வேலைக்கு சம்பளம் கிடைக்காது  போது போராடுவது போலவே வேலை செய்யாது  ஊதியம் பெறும் இழிவு நிலையில் இருந்தும் மக்களை காப்பாற்ற கம்யூனிஸ்ட் போன்ற இடதுசாரி கட்சிகள் முன் வரவேண்டும்.
உள்ளூர் தொழிலாளியும் முதலாளியேயும் சண்டையிட வைத்து தங்கள் மக்களை  பன்னாட்டு முதலாளிக்கும்  விற்று; மக்களை நகர சூழலுக்கு தள்ளி வாழ்கையை நரகமாக்க கூடாது என்பது மட்டுமே நமது ஆவல்.




1 comment:

  1. ந. பத்மநாதன் · Subscribed · Leader at Pathman hypnoterapi · 3,196 subscribersJune 14, 2012 9:35 pm

    உள்ளூர் தொழிலாளியும் முதலாளியேயும் சண்டையிட வைத்து தங்கள் மக்களை பன்னாட்டு முதலாளிக்கும் விற்று; மக்களை நகர சூழலுக்கு தள்ளி வாழ்கையை நரகமாக்க கூடாது என்பது மட்டுமே நமது ஆவல்// ஆம் எனது விருப்பமும் அதுவே...

    ReplyDelete