6 Apr 2012

பெரிய வியாழன்!

பெரிய வியாழன் பிரார்த்தனை மாலை 6 மணிக்கு ஆரம்பம் ஆகி விடும்.  அன்று தான் கிருஸ்து நாதரை பிலாத்து விசாரித்து மரண தண்டனை வழங்கிய நாள்!  யேசு தனது கடைசி விருந்தை தன் சீடர்களுடன் உண்டு தன் சீடர்களின் பெரிய வியாழன் ஜெபம்! காலை கழுகி முத்தமிட்டு 'தலைவராக இருக்க விரும்புகின்றவன் தன் சீடர்களுக்கு பணியாளனாக இருக்க வேண்டும்' என்ற குடியரசு தத்துவத்தை போதித்த தருணம்.  இன்றைய திருப்பலியில் தான் பாதிரியார் தேர்ந்தெடுத்த 12 ஊர் மக்கள்(யேசுவின் சீடர்கள் 12 என்பதால்) கால்களை கழுவும் நிகழ்வும் நடை பெறும்.

விருந்து முடிந்ததும் யேசு நாதர் பிரார்த்தனைக்கு செல்வார். அன்று தன் சீடர்களிடம் இன்று என்னுடன் ஒரு மணி நேரம் விழித்து இருந்து ஜெபிக்க இயலாதா? என்று கேள்வி எழுப்பியிருப்பார்.  இதை நினைவு கூர்வதுடன் உலக கிருஸ்தவர்கள் இன்று நடு இரவு 12 மணி வரை தூங்காது விழித்து இருந்து ஜெபிக்க பணியப்பட்டிருப்பர்.   இந்த ஜெப வேளை முடியும் தருவாயில்  யூதாஸ் முத்தமிட்டு காட்டி கொடுப்பதாகவும் யேசுவை யூத மதவாதிகளின் தூண்டுதால் பிடிக்கப்பட்டு ரோம அதிகாரிகளால் தூக்கிலேற்ற துக்க வெள்ளி அன்று கொண்டு செல்லப்படுவார் என்று நம்பப்படுகின்றது. பெரிய வியாழன் நிகழ்வு!



 எனக்கு தூக்கம் என்பது உரிமை சொத்து.  முதல் வரிசையில் இருந்தாலும் தூக்கம் கண்ணை சுற்றி வரும், தூங்கியும் விழுந்துள்ளேன்.  என் மலையாள தோழிகள் தூக்கத்தை களைய என்பதற்க்காவே கோயிலை சுற்றி நடந்து கொண்டிருப்பர்.  ஆனால் அது தெய்வ குற்றம், ஒழுக்ககேடு என்று அம்மா சொல்லியுள்ளதால் அம்மாவுக்கு பயந்து நான் தூங்கி தூங்கி விழிக்கும் போது ஜெபித்து கொள்வேன்.  

அன்று இரவு உணவு இனிப்பு சுவை கலந்த கலவையுடன் புளிப்பில்லாத அப்பவும் கிடைக்கும்.  நான் ஆலய பாடல் குழுவில் இருந்ததால் குழுவுடன் சேர்ந்து உண்பதாகவே இருந்தது. இருந்தாலும் அம்மாவும் வீட்டில் செய்து தந்துள்ளார்கள்.  இதை வட்டை அப்பம் என்றே அழைப்பது.  புளிக்காத பச்சை அரிசி மாவை இட்லி மாவு பதத்திற்க்கு ஆட்டி கொஞ்சம் ஈஸ்டு, சீனி கலந்து  ஒரு எண்ணை தடவிய தட்டில் ஊற்றி; சுவைக்கு கிஸ் மிஸ், முந்திரி பருப்பு தூவி இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.


மலபார் கிருஸ்தவர்கள் வீட்டில் ஒரு வீட்டில் செய்யும் வட்டை அப்பத்தைவட்டை அப்பம் செய்யும் முறை! பக்கத்து வீட்டிற்க்கு கொடுத்து பகுத்து உண்டனர். 

0 Comments:

Post a Comment