நாளை உலக தொழிலாளர்களால் மே-தினம் கொண்டாடப்படுகின்றது. உலக தலைவர்கள், பாட்டாளி, கம்யூனிஸ்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள் என வாழ்த்து மழையாக தான் இருக்கும்!. ஆனால் உண்மையில் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கவனிக்கதக்கது.
ரஷியாவில் சார் மன்னர்களில் கொடுமைக்கு விடிவாக தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடுதலையான நாளை, மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அதை உழைப்பாளிகள் உள்ள எல்லா நாட்டு மக்களின் விடுதலையாக எண்ணி கொண்டாடி வருகின்றனர்.
1957 ல் தொழிலாளர் நல அமைச்சரகம், இந்தியாவில் மேற்கொள்ளும் 45 தொழில்களை மட்டும் அட்டவணைப்படுத்தி ஒரு ஊதியம் நிர்ணயித்தது . ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான 2700 கலோரி உணவு, உடுத்த 72 கஜம் துணி, வசிக்கும் வீட்டிற்கான வாடகை செலவை உட்ப்படுத்தி ஒரு மனிதனுக்கான தினம் கூலியாக நிர்ணயம் செய்தது. 1997 ல் குழந்தைகள் கல்வி கட்டணம், மருத்துவ செலவையும் சேர்த்து 35 ரூபா ஆகவும், 2011 ல் 115ரூ-222.35 ரூபாய் என உயர்த்தியது. இவை அனைத்தும் நிரந்தர அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரித்தானது மட்டுமே. ஆனால் இந்த அமைப்பில் இல்லாத நிரந்தரமற்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை யாரும் கணக்கில் கொள்ளாத தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டம் 14, 19, 21, 23, 24 (பாகம் 111) கொடுக்கப்பட்டுள்ள எந்த சட்ட பாதுகாப்பும் பெறாது பெரும்வாரியான தொழிலாளிகள் உள்ளனர். ஒரே வேலைக்கு ஒரே ஊதியம், தரமான வாழ்க்கை, வலுக்கட்டாயமாக வேலை வாங்காதிருப்பல், என எல்லா சட்டவும் சட்ட புத்தகத்தின் பக்கங்கள் தவிற உழைப்பவர்கள் வாழ்க்கையை தொட்டு பார்க்காத வெத்து சட்டங்கள் ஆகவே நிலை கொள்கின்றது.
தமிழகத்திலுள்ள 1685 நூல் தொழில்சாலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை எடுத்து கொண்டால் 80% பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் வேலையில் சேர தரகர்களுகு 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. இவர்களுக்கு என உருவாக்கப்பட்ட சுமங்கலி திட்டங்களிலும் பெண்கள் நலனை விட ஊழலை மலிந்து கிடக்கின்றது என்று நாம் அறிந்ததே.
வரும் வைப்பு கால நிதி, பணி நிரந்தரம், தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாதுகாப்பு என எந்த தொழிலாளி நல திட்டங்களும் இவர்களுக்கு வாய்ப்பதில்லை. தொழில் இடங்களில் சுகாதாரமான குடி தண்ணீர், உணவு, கழிவறை வசதி அற்று தினம் 12 மணிநேரத்திற்க்கு மேல் வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
குழந்தைகள் நிலை இன்னும் பரிதாபத்திற்க்குறியது. 11.28 மிலியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர். வேலை இடத்தில் 21 % பேர் பாலியலாக துன்புறுகின்றனர், 50 % பேர் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய தள்ளபடுகின்றனர் என கணக்குகள் தெளிவாக்குகின்றது.
ஊர்விட்டு ஊர் வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பல வித அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். சமூக விரோதிகளால் மனைவி குழந்தைகளை இழக்கின்றனர். குறைந்த பட்சம் மனிதராக கூட மதிக்காது அவர்கள் வாழ்க்கை மிகவும் வருந்த தக்க நிலையில் உள்ளது.
ஊர்விட்டு ஊர் வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பல வித அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். சமூக விரோதிகளால் மனைவி குழந்தைகளை இழக்கின்றனர். குறைந்த பட்சம் மனிதராக கூட மதிக்காது அவர்கள் வாழ்க்கை மிகவும் வருந்த தக்க நிலையில் உள்ளது.
நிரந்தர தொழிலாளர்களும் தங்கள் நலனில் அக்கறை எடுத்து கொள்வது போல் தங்கள் சமூகமான ஒப்பந்த தொழிலாளர்களை பற்றி அக்கரை எடுத்து கொள்வதில்லை. தொழில்சாலை உணவகங்களில் கூட நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை உணவு கிடைக்காது பட்டிணியாகவே வேலை செய்கின்றனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் பிரட்சனை என்ற உடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பற்றி வரிந்து
கட்டி எழுதும் ஊடகவும் பெட்ரோல் பங்கில், கடைகளில் வேலை செய்யும்
தொழிலாளர்களே வசதியாக மறந்து விடுகின்றனர். கொத்தனரார் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சுமடு தூக்கும் தொழிலாளரகள் என இவர்கள் துயரை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் விடை காணாது இன்றும் மோசமான நிலையிலே உள்ளனர் என்பதே கசக்கும் உணமை.
இவர்கள் கல்வியறிவு அற்றிருப்பதாலே இவ்வகையான வாழ்க்கை சூழலில் மாட்டி கொண்டார்கள் என்றால் படித்த மனிதர்களும் உலகபொருளாதார சந்தையில் வெள்ளை காலர் அணிந்த ஏமாற்றப்படும் தொழிலாளர் சமூகமாகவே வளர்ந்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்களாகவே பணியில் அமர்ந்த்துகின்றனர். வேலை நிரந்தரம் அல்ல என்று மட்டுமல்ல உற்பத்தி பொருளாகவே மட்டும் கண் நோக்கி மனிதர்கள் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகின்றது. நூல் ஆலை பெண்களுக்கு என்பது போல் இளம் பெண்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். கிடைக்கும் ஊதியத்திற்க்கும் ஒப்பந்தம் ஆகும் தொகைக்கும் வேற்பட்டதாகவே உள்ளது.