20 Sept 2011

கேரளா மீன் கறி/குழம்பு ரெடி!!(Fish Curry)


மீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும்.  சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது உண்டு.  சிறுவகை மீன்கள் தான் குழம்புக்கு அதீத ருசியை தருவதாக உள்ளது.  ஆட்டிறச்சி கிலோ 400 ரூபாய் கோழி கிலோ 140 ரூபாய் என்ற விலை ஆகி விட்ட நிலையில், தற்போது மீன் தான் எப்போதும் எந்நிலையிலும் வாங்க தகுந்த உணவாக பல தரப்பட்ட மக்களுக்கு உள்ளது.  கேரளத்துகாரர்கள் தேங்காய் சேர்க்காது மீன் குழம்பு வைக்கவே விரும்புகின்றனர்.  இருப்பினும் தேங்காய் சேர்த்தும் மீன் கறி வைப்பது உண்டு. கேரளாவில் கடும் சிவப்பு நிறத்துடன் மீன் கறி விரும்பும் போது சில தமிழக பகுதியில் சிவப்பில் பச்சை கலந்த நிறத்துலுள்ள மீன் கறியை சுவைத்து உண்ணுகின்றனர்.  பொதுவாக நாகர்கோயில் கன்னியாகுமாரி, தூத்துகுடி பகுதியில் வைக்கும் மீன் கறியே மிகவும் சுவையானது. மீன் வகைகளிலும் உவரி கடல் மீனுக்கு சிறப்பான இடம் சுவை உண்டு.  

விளைமீன் இன்று கறிவைக்க வாங்குவோம். விளைமீனுக்கு முள்ளும் செதலும் அதிகமாக உண்டு எனிலும் கறிக்கும் பொரிக்கவும் சுவையான வகை மீன் இதுவே. தற்போது மீன் கடைகளில் சுத்தப்படுத்தி தருவதால் மீன் கறிவைக்க அதிகம் சிரமமும் இல்லை!

வாங்க, இனி சமையல் அறையில் வேலையை பார்த்து கொண்டே கதைப்போம்.
மீனை நன்றாக ஓடும் தண்ணீரில் கழுகவும்.
மீன் கறிக்கு மீனின் தலை பக்கம் தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சின்ன உள்ளி (வெங்காயம்)தேவையான அளவு உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
தேங்காய் ஒரு கப்பு துருவி கருகாது வறுத்து மைய்போல் அரைத்து எடுத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
ஒரு தக்காளி சிறிது வாளம் புளிகரசல். கேரளாவில் புளிகரசிலுக்கு பதிலாக குடம் புளி சேர்ப்பார்கள்.4 பச்சை மிளகாய்.தேவையான அளவு உப்பு . (மீன் கறிக்கு உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்க்க வேண்டிவரும்.)
தேவையான மசால் பொருட்கள்:
மிளகாய் தூள் 1தேக்கரண்டி
மல்லி தூள் 2 கரண்டி
மஞ்சள் தூள் மிகவும் சிறிய அளவு. ¼ கரண்டிக்கும் குறைவாக
கடுகும், ஜீரகம்,வெந்தயம் எண்ணைய் சேர்க்காது வறுத்த தூளாகியது  ¼ கரண்டி, 
அல்லது

மீன் குழம்பு பொடி என்றே இப்போது கடைகளில் கிடைக்கின்றது. ஈஸ்டேன் மீன் மஸாலா என்றால் கேரளா கறி நிறத்துடன் கிடைக்கும்.  ஆச்சி மஸாலா தென் தமிழக உவரி, நாசரேத் மீன் கறி சுவைக்கு ஒத்துபடி  கிடைக்கின்றது.  4 கரண்டி போதுமானது.



மீன் கறி மண் பாத்திரத்தில் வைத்தால் சுவை இன்னும் சிறப்பாக அமையும்.
மீன் சட்டியை அடுப்பில் வைக்க பலரும் பயப்படுவது உண்டு. மீன் சட்டி வாங்கியதுன்  சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி சிறு சூடில் கொதிக்க வைத்து 1 வாரம் பழக்கினால் சண்டை போட்டு உடைக்கும் வரை சட்டி உடையாது இருக்கும்!
சமையல் வேலையை ஆரம்பித்து விடுவோமா?
முதலில் சட்டியில் தேங்காய் அரைத்து வைத்த கரசல், பொடிகள் , தக்காளி, புளி கரசல் சேர்த்து மீன் துண்டுகளும் அத்துடன் இட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கறி வத்தி மசாலா சேர்ந்து வந்ததும்; வேறு ஒரு  சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
பின்பு தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய் ஊற்றி சூடாகியதும் கடுகு இடவும்.
கடுகு கரியாது பொரிந்த்தும் வெட்டி வைத்துள்ள வெங்காயம் அரைத்து வைத்துள்ள இஞ்சி+வெள்ளப்பூடு விழுதும் குறுகை கீறிய பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதங்கியதும் கொதித்த  மீன் குழம்பில் கொட்டி மூடி வைத்தவுடன் அடுப்பையும் அணைத்து விடுங்கள்.

 ½ மணி நேரம் கழிந்து இதமான சூட்டில் சாதம் சப்பாத்தி, தோசை அல்லது பண், இடியாப்பத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடித்து விடலாம்.



16 Sept 2011

Tirunelveli Kudankulam- கூடங்குளம் அணு உலை!





பாசமிகு என் சகோதர சகோதரிகளே அணு உலையை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகின்றேன். இதில் மனித நலம் அல்லாது எந்த சுயநலமோ அரசியல் சார்போ இல்லை. நான் பகிரும் தகவல்களை குறித்து கருத்துரையாட, விருப்பம் தெரிவிக்க  மட்டுமல்ல  தகவலில் தவறுகள் உண்டு எனிலும் தெரிவிக்க எல்லா உரிமையும்,பதிவை வாசிக்கும், புரிந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன். http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html

















































































11 Sept 2011

பூவே பொலி பூவே பொலி பூவே..........ஓணம்!!!




நம் பக்கத்து மாநிலம் கேரளா சகோதர்கள்  நேற்று ஓணம் கொண்டாடி முடித்துள்ளனர்.  20-22 வருட முன்புள்ள என் ஓணம் நினைவுகளும் இன்று என்ற போல் என் இதயத்தில்   உள்ளது.  ஓணம் என்பது எங்களுக்கு காலாண்டு விடுமுறை நாட்களாக  இருப்பதே கூடுதல் மகிழ்ச்சி.  ஓணத்தை சிறப்பாக எல்லா கேரளத்தவர்களும் இந்து, கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என் பாகு பாடு இல்லாது கொண்டாடுவதில் காத்திரமான முனைப்பில் இருப்பார்கள்.  எங்கள் வண்டிபெரியார்  பஞ்சாயத்தில் கைபந்து, நாட்டுப் புற பாடல்கள் பேச்சு போட்டி என  பல கலை-விளையாட்டு போட்டிகள்கள் நடைபெறுவது உண்டு.  அதில் சாப்பாட்டு போட்டி தான் மறக்க இயலாதது.

 http://www.youtube.com/watch?v=37JH7aAp6csஎங்கள் கொண்டாட்டங்கள் நாங்கள் செல்லும் ஆலயத்தை தழுவியே இருந்துள்ளது.   எங்கள் ஆலய பாதிரியார் ஒரு ஆங்கில இந்தியரான ஜோசப் டி அல்மெய்டா குழைந்தைகளின் விளையாட்டை உற்சாகப்படுத்துபவராக இருந்தார்.  ஆலயத்தில் பாடல் குழு இளைஞர்களே விழாவை நடத்தி செல்வர்.  எங்களை கவர்ந்த உயரமான ஊஞ்சலில் ஆடுவதற்க்கே ஓணம் வருகைக்காக காத்திருப்போம்.  எங்கள் மடம் கன்னியாஸ்திரிகள் வருவது வரை  நியாயமான மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடினோம்.  பின்பு கன்னியாஸ்திரிகள் கொண்டு வந்த மலையாளம்- தமிழ் பாகு பாடு ஓணம் மகிழ்ச்சியை கெடுத்தது என்பது மட்டுமல்ல விழாக்கள் மேல் ஈடுபாடு அற்றதாக்கியது.  

ஓணம் நாள் திருவாதிரக்களி http://www.youtube.com/watch?v=hQJaePC5w0I&feature=related என்ற கேரளா நடன போட்டி வைப்பது உண்டு.  நாங்களே பாட்டு அமைத்து நடனம் ஆடும் நிகழ்வுகள் சுவாரசியமானது.   யாரும் பயன்படுத்தாத பாடல் வேண்டுமென்று மலையாள கதை புத்தகங்களிலுள்ள  வரிகள்  சேர்த்து கலவை-மறுகலவை பாடல்களுடன் நடனத்தில் பங்கு பெற்றால் மார்க்கு இடுபவர்கள் ஆள் பார்த்து மார்க்கு போட்டனர் என்று பெரிய சண்டையும் நிகழ்வது உண்டு.   ஒரு முறை என் தம்பியார் மகாபலியாக நடித்த நிகழ்வுகள் மனதில் மறையாது உள்ளது. 

இனி ஓணம் கதைக்குள் சென்று விடுவோம்……ஓணம் சார்ந்து ஒரு அழகான சுவாரசியமான கதை உண்டு. 10 ஆயிரம் வருடம் முன்பு பிரக்லாதனின் பேரன் மஹாபலி என்ற ஒரு திராவிட(அசுரன்)அரசர் கேரளா நாட்டை ஆட்சி செய்துள்ளார்.  அவர் நல்லாட்சியில் மக்களுக்கு துன்பம் இல்லை, துக்கம் இல்லை நோய்-தரித்திரம் இல்லாது; மக்கள் பணக்காரன் ஏழை என்ற  இல்லாது ஜாதி மதம் பேதமில்லாது எல்லோரும் சுகமாக வாழ்ந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=QzR3DfNvA24&feature=related சுகமாய் வாழும் மக்கள் தம்மை நினைப்பது இல்லையே என்று தேவர்களின் தலைவர் இந்திரனுக்கும் அவர் கைப்படிகளுக்கும் பொறாமை வந்து விட்டது .  ஒரு முடிவுடன் மேலுலகத்தில் சென்று விஷ்ணுவை சந்தித்தனர்.  நீங்கல் தான் தீர்வு தர வேண்டும் மகாபலி எங்களுக்கு நிகராக வர்ந்து விட்டதால் மக்கள் எங்களை மதிப்பதில்லை என்று கதறினர். 

மனம் உருகிய விஷ்ணு குள்ளையான பிராமணன் (வாமனன்) வேடம் தரித்து பூமிக்கு வருகை புரிந்துள்ளார் .  மகாபலியை கண்டு  3 மிதியடி மண் வேண்டும் என்று கேட்க மகாபலியும் சூழ்ச்சி புரியாது எடுத்து கொள்ள அனுமதிப்பார்.  வாமனன் ஆகாயம் முட்டும் வளர்ந்து ஒரே மிதியால்  பூமியும் அடுத்த மிதியில் வானவும் கைய்யகப்படுத்தி விட்டு மூன்றாவது கால் மிதிப்பது எங்கே என்று கேட்பார் மகாபலியும் மனமுகர்ந்து பணிவுடன் தன் தலையை காட்டுவார்.  விஷ்ணுவும் மூன்றாவது மிதியில் மஹாபலியில் தலையில் கால் வைத்து பூமிக்கு அடியில் தள்ளி விடுவார். மகாபலி தன் கடைசி ஆசையாக உங்கள் திருவுருவம் காட்ட வேண்டும் என்று கேட்க வாமன்னும் தன் அருமை பக்தனுக்கு  தான் விஷ்ணு என்பதை வெளிப்படுத்துவார்.   மகாபலி தான் தன் மண்ணையும் மக்களையும்  நாட்டையும் விட்டு போகும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் விஷ்ணுவை பழிக்காது தன் மக்களை சந்திக்க ஒரு நாள்  அனுமதி கேட்பார்.  பாதாகவாடத்தின்  காவல்காரனாக பதவி பெற்ற மகாபலி தன் மக்களை சந்திக்க வரும் நாளே ந்த பொன்னாளான ஓணம் திருநாள்.  பலவித உணவு, விளையாட்டுகளுடன் கேரளா மக்கள் ங்கள் மன்னரே வரவேற்ப்பதாகும் ஓணம் பண்டிகை! 

ஓணம் 10 நாட்களாக கொண்டாடுகின்றனர்.  கற்கடகம் முடிந்து செழிப்பான சிங்ம்(ஆடி , ஆவணி) மாதத்தில் வரும் திருவிழா என்பதால் விளைவெடுப்பின் நாளாகவும் கொண்டாடுகின்றனர்.  ஓணம் நாட்கள் பூக்களின் காலம் ஆகும் என்பதும் மற்றொரு சிறப்பே.

 அத்தப்பூவால்  (நம்ம ஊர் கோலம் அல்லது ரங்கோலிக்கு பல வித வர்ணங்களில் பொடி பயன்படுத்துவதற்க்கு பதில் பல வண்ணம் பூக்களால்)  வீட்டின் முற்றத்தை அலங்கரிப்பதுடன் தங்கள் அன்பான மன்னரை வரவேற்க்க மக்கள் தயாராகிவிடுகின்றனர்.  வீட்டின் முன்பு விஷ்ணு-மாவேலியின் உருவ பொம்மையை( திருக்காரயப்பான் ) வைக்கின்றனர்.   அத்தப்பூவில் முதல் நாள் மஞ்சள் வர்ண பூக்கள் மட்டுமே பயண்படுத்துகின்றனர்.  இரண்டாவது நாள் சித்திரை அன்று தான் மன்னர் வருகின்றார். அன்று வீடு சுத்தப்படுத்தி மன்னரை வரவேற்க்க காத்திருக்கின்றனர், ஆலய தரிசனவும் செய்கின்றனர் இன்னும் 2 வர்ணங்களிலுள்ள  பூக்களும் சேர்த்து கொள்கின்னர்.   மூன்றாவது நாள் சோதி அன்று 4-5 வர்ணங்களில் பூக்கள் இடுவதுடன் அத்தப்பூ பெரிதாகி கொண்டே போகின்றது.  அன்று சந்தைக்கு சென்று புது பொருடகள் வாங்குவதில் மகிழ்ச்சி காண்கின்றனர். 4 வது நாள் விசாகம் அன்று தங்கள் விளை பொருட்களை சந்தைய்ப்படுத்துகின்னர்.  http://www.youtube.com/watch?v=rj9ftDKxUU0&feature=relmfu 5 வது நாளில் வள்ளம் களி என்ற படகு போட்டி நடைபெறுகின்றது. 6 வது நாள் தங்கள் வீடு விட்டு வெளிநாடுகளில் மற்றும் வசிப்பவர்களும் தங்கள் சொந்த வீடு வந்து சேர்கின்னர்.   

7-வது மற்றும் 9-வது நாள் ஓண சத்யா என்றழைக்கப்படும் விருந்து கொடுக்கப்படுகின்து அன்று புலிக்களி/கடுவாகளி விளையாட்டும் நடைபெறுகின்து.  ஓணம் அன்று கொடுக்கப்படும் விருந்து அலாதி ருசியான சைவ சாப்பாடு ஆகும். மலையாளிகளிடையில் ஒரு பழமொழி உண்டு காணம் விற்றும் ஓணம் உண்ணனம்அதாவது நிலைத்தை விற்றாவது ஓணம் அன்று சாப்பிட வேண்டியது அவசியம் என்பதே.  அந்தளவு ஓணம் விருந்துக்கு பிரதம இடம் கொடுக்கின்றனர்.  ஓணம் சாப்பாட்டிற்க்கு கேரளா அரிசி சாப்பாடு என்பது மாறின போது ஆந்திராவில் இருந்துள்ள பொன்னி அரிசியும் சாப்பாட்டிற்க்கு சேர்க்க ஆரம்பித்து  விட்டனர்.  முதல் சுற்றில் சாம்பார், ருப்பு கூட்டு, நெய்யுடன் பப்படவும்(அப்பளம்) சேர்த்து விருந்து ஆரம்பமாகின்றது.  கேரளா சாம்பார் தேங்காய் சேர்த்து நிறைய காய்கறிகள் பயன்படுத்தி செய்வதாகும்.  அத்துடன் எல்லா காய்கறிகளும் சேர்த்த அவியல், அதற்க்கு துணை சேர்ப்பது போல் கூட்டு கறி இதில் பயறு வகைகள் சேர்த்திருப்பார்கள்.  அத்துடன் புடலங்கா போன்ற காய்கறியில் செய்யும் ஓலன்,   புளிக்காத தைரும் தடியங்காயும்(கும்பளங்க) சேர்த்து வைக்கும் காலன், கடைசியாக ரசம் வந்து சேருகின்றது. அருகில் கூட்டாக 4 உப்பேரி வகைகள் நேந்திராக்காயில் செய்வது அத்துடன் நாட்டு  வாழைக்காயால் செய்யும் வெல்லம் சேர்த்த இனிப்பு  சிப்ஸ்,  இஞ்சி புளி தீயல், ஊறுகாயுடன் கேரள மண்ணின் தனி தன்மையுடன் ருசியான  விருந்து படைக்கின்றனர். புதுகோடியுடன் வாழை இலையில் உண்ண வேண்டும் என்பதே ஆசாரம்!

 8வது நாள் ஓணத்தப்பன் என்ற சிலையை அத்தப்பூவில் நடுவில் நிறுவுகின்னர்.  9 வது நாள் தான் படு ஆற்ப்பாட்டமாக ஓணம் விருந்துடன் பண்டிகை ஆசரிக்கப்படுகின்து.  10 வது நாள் அதாவது இரண்டாம் ஓணம் அன்று  வாமனன் உருவத்தில் வந்த விஷ்ணு மகாபலியை பூமிக்கடியில் தாழ்த்திய நாள். அன்றே மகாபலி மக்களிடம் விடை பெற்று செல்கின்றார். அன்று ஆலயங்களில் வழிப்பாடு நடைபெறுகின்து.  கேரளாவில் கொச்சின் பக்கம் ஒரு ஆலயவும், வாமன்மூர்த்திக்கு என தமிழகத்தில் கன்னியாகுமாரி சுசீந்தரத்தில் மற்றொரு ஆலயவும் உண்டு.  சென்னையில் மஹாபலிபுரவும் மாவேலி என்ற இம்மன்னம் பேர் கொண்டே உள்ளது என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.   4வது ஓணம் அன்று இன்று மகாபலியின் உருவ பொம்மையை சமீப நீர் நிலைகளில் கரைக்கின்றனர்.  இன்றே புலி வேடத்தில் ஆடும் நடனம் சிரப்புற நடை பெறுகின்றது.  ஓணம் நாட்களில் கலாச்சார நிகழ்வுகள்  திருவாதிரைக்களி, மோகினியாட்டம், கதைகளி போன்ற கேரளா நடனங்களும், விளையாட்டுகள் முழு வீச்சில் நடை பெறும் காலமாகும்.

(நேற்றைய முன் தினம் ஓணம் நாள் பதிவிட திட்டமிட்டிருந்த பதிவு சில மென்பொருள் பிரச்சனையால் பதிய இயலவில்லை.  இன்று நார்வேயிலுள்ள பத்மன் அண்ணாவின் உதவி கொண்டு பதிவை பதிய இயன்றதில் மகிழ்கின்றேன். அண்ணனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!)