11 Jun 2011

நீங்களும் வலைப் பதிவர் ஆகலாமே!!!!


வலைப்பதிவுகள் என்பது நவீன ஊடகத்தின் ஒரு பதிப்பு ஆகும். வலைப்பதிவு ஆய்வாளர்களின் கருத்துப் படி வலைப்பதிவுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின், குழுமத்தின், நிறுவனத்தின் இணைய தளமாகும். தனி நபர் வலைப்பதிவுகள் என்பது, தனி நபர்  சிந்தனை கருத்துக்கள் அடங்கிய எழுத்துக்கள், கட்டுரைகள், படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள் உள்ளடங்கியது ஆகும்.  இணைய வசதியும் கணிணியும் உள்ள யாராலும் தாங்கள் எழுதியதை  இடையூறு இல்லாது வெளியிடவும்  உலகளாவிய அளவில் குறைந்த செலவில் மிக விரைவில் கருத்து பரிமாற்றத்திற்க்கும் உதவுகின்றது  என்பது இதன் சிறப்பாகும்.  திறந்த வெளி கருத்து பரிமாற்றம் ஒரு இனமாக அடையாளம் காண, காத்திரமான தொடர்பாடல் பேண என்று இதன் மாற்று கூடி கொண்டே போகின்றது.  பத்திரிக்கை நிறுவனத்தின் தலையீடு இல்லது தனி நபர் படைப்புகள் இணையம் வழியாக மக்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்களுக்கு வழி வகுக்கின்றது என்றால் மிகையாகாது.  தணிக்கை செய்யப்படாத இடையீட்டாளர்கள்  கட்டுபாடு அற்ற  செய்தி பெறப் படுகின்றது என்பதே இதன் பலவும் பலவீனவும்.

வலைப் பதிவுகள் என்றால் பொதுவாக தனிநபர் நாட்குறிபேடு போன்றது என்று இதன் தரத்தை குறைத்து மதிப்பிடப் பட்டாலும் வலைப்பதிவுகள் அதன் உள்ளடம் சார்ந்தும் அதன் எழுதும் நபர்கள் சார்ந்தும் பல வகை உண்டு. பொதுவாக வலைப்பதிவுகள் என்பது ஒரு தனிநபர் தன்  வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து எழுதுவது நாட்குறிப்பு வலைப்பதிவுகள் என்றும், தம்மை சார்ந்த அனுபவக் குறிப்பு  மட்டுமின்றி சமூக அக்கரையுடன் மற்று நபர்களின் சமூகத்தின் நலன் கருதியும் தங்கள் கருத்துக்களை பகிர எழுதும் வலைப்பதிவுகள் filter வகை என்றால்  நம்மை சாராத முழுக்க முழுக்க ஒரு கருத்து  அல்லது கோட்பாடு சார்ந்து பொது சமூகத்தின் வளர்ச்சிக்கு தகவல் பரி மாற்றத்திற்க்கு  என எழுதும் வலைப்பதிவுகள்  புத்தக வலைப்பதிவுகள் அதாவது note book வலைப்பதிவுகள்  என்று 3 வகை உண்டு. 

அரசியல், நாட்டு நடப்பு செய்திகள், தொழில்நுட்பம், கல்வி, இலக்கியம், பொழுது போக்கு அம்சம் கொண்ட  செய்திகள் என இவையின் உள்ளடக்கம் சார்ந்தும்;  கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள்,  குடும்ப தலைவிகள்  என எழுதுவர்கள் சார்ந்தும் வலைப்பதிவுகள் வகைப்படுத்தலாம்.   

1991 ல்,வலைப் பதிவுகள் ‘டிம் பேர்னர்’ என்பரால்  இணையத்திலிருந்து  கண்டு எடுக்கப் பட்டு வரிசைப்படுத்த பட்டது.   அன்றைய சூழலில் கணிணி-தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே வலைப் பதிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.   இன்றைய நவீன வலைப்பதிவுகளின் துவக்கம் ‘ஜெஸ்டின் ஹால்’என்ற அமெரிக்க  கல்லூரி மாணவனாலே 1994 ல் முன் வைக்கப்பட்டுள்ளது .  1999 ல் வெறும் 23 என்ற அளவில் இருந்த வலைப்பதிவுகள் 2009 ல் டெக்நோரடி என்ற தேடும் கருவியால் 133 மிலியன் வலைப்பதிவுகளாக உயர்ந்துள்ளது என  கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  பிளோகர் போன்ற கருவியின் வரவுக்கு பின்பு   துரிதமாகவும் எளிதாகவும் வலைப்பதிவுகள் துவங்க வகை செய்துள்ளது, மேலும் இதன் வளர்ச்சி கண்டடைந்துள்ளது.

வலைப்பதிவர்கள் சிந்தனை வளம் மிக்கவர்கள் ஆகவும் தங்களுக்கு சுற்றியுள்ள உலகை தெளிவாக உற்று நோக்கவும் அதை பகிரவும் வலைப்பதிவுகள்  உதவுகின்றது என்றால் அது பொய் ஆகாது.

 

உலக மொழிகளில் 66 நாடுகளில் இருந்து வலைப்பதிவுகள் பதிவு செய்து  கொண்டிருந்ந்தாலும் இவையில் தமிழ் வலைப்பதிவுகளின் இடம் இன்றிமையானது. தமிழ்மணம் என்ற திரட்டி வழியாக 8000 மேல் வலைப்பதிவுகள் கண்டு எடுத்து சேர்க்கப் பட்டுள்ளது.  உலகத் தமிழர்களுக்கு சிறப்பாக ஈழத் தமிழர்களுக்கு தங்களை ஒரு குழுவாக அடையாளம் காட்டவும் தங்களுக்குள் சிறப்பான கருத்துரையாடல் பேணவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றது. தமிழ்மணம் திரட்டியில் ஈழ வலைப்பதிவுகள் என்றே தனி பக்கம் உள்ளது.  4 வது ஈழப் போர் வேளையில் பத்திரிக்கைகளால் உண்மையான செய்தி மறுக்கப் பட்ட  போதும் ஈழ மக்களின் நோக்கம், உண்மைகள் மழுங்கலடிக்கப் பட்ட போதும் தங்கள் நிலைபாட்டை நிலைநாட்டவும் தங்கள் கருத்துக்க,ள் சோகங்கள் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவியது.

வலைப்பதிவுகள் என்பது கல்லூரி படிப்புகளிலும் ஒரு பகுதியாகவும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தபட்டது  மட்டும் அல்லாது பெரும் ஊடகங்களும் தகவல் பெறுதலுக்கும் பரிமாற்றத்திற்க்கு பதிவுகளை சிறந்த  தளமாக பயண்படுத்துகின்றனர்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகினாலும் 2004 துவங்கி தான் தமிழக தமிழர்களை  வந்தடைந்தது. இருப்பினும் தற்போதும் வலைப்பதிவுகள் பல நபர்களுக்கு  அறிமுகம் இல்லாது தான் உள்ளது.  ஒரு வலைப்பதிவராக சிறந்த எழுத்தாளராக அல்லது திறமையானவராக இருக்க வேண்டும் இல்லை, தாங்கள் கண்டவையே அனுபவித்தவயே உண்மையாக இதயபூர்வமாக கதைக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே போதுமானது.  எனக்கு தெரிந்த நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து தங்கள் அடையாளத்தை பதிய வேண்டும் என்று இப் பதிவை பகிருகின்றேன். நீங்களும் நாளை வலைப்பதிவரே!!
 
நீங்கள் blogger.com என்றும் உள்நுழையலாம். அல்லது gmail கணக்கு வழியாக போய் more என்றதில் சொடுக்கினால் வரிசையாக சேவைகள் வரும் அதில் even more என்பதை சொடுக்கினால் இந்த பக்கத்தில் வந்து விடுவீர்கள்.



பிளோகர்(blogger) என்ற குறியீடை சொடுக்கவும்.


You please click on ‘Get Started’


Fill the following column. கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை  நிரப்ப வேண்டும்! After finished click on  the ‘continue’ button



You come to this page! உங்கள் வலைப்பதிவுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் பெயரை குறிப்பிடவும்!

You come to this page, choose the template whichever you like. உங்கள் பதிவின் உருவத்தை தேர்வு செய்யலாம்.


Now you come to climax. Then you  click on ‘start blogging’




‘start blogging’. என்று சொடுக்கும் போது எழுத வேண்டிய கட்டம்/பெட்டி வருகின்றது.

You can now write!!!! நம் ஆக்கத்தை பதிவு செய்து விட்டு பப்லிஷ் என்றதில் சொடுக்க நம் பதிவு வெளியிடப்படுகின்றது.

காண்க பதிவு(view post) என்பதை சொடுக்குவது வழியாக உங்கள் பதிவை கண்டு பேரானந்தம் அடைவீர்கள்!
ஆகா…………………………….உங்கள் பதிவை உருவாக்கி விட்டீர்களா. 




கலக்குங்கள்.வாழ்த்துக்கள்!!!

7 comments:

  1. அருமையான பதிவு.
    நீங்கள் பதிவர் சந்திப்பில் இதே விஷயத்தில் அருமையாக பேசினீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் . பதிவு பெருசா போனா ரெண்டு பதிவா பிரிச்சு போடுங்க

    ReplyDelete
  3. இன்றுதான் வருகிறேன் முதல் முறையாக, இனி தொடருகிறேன் பல பதிவுகளையும் சேர்த்து

    ReplyDelete
  4. I am jeyaraj a viscomer mam your writings are good and against the society with well performance.
    my blog with ad-sense visit...www.easyadvertising.hpage.com

    ReplyDelete