28 Jun 2011

ஒரு வடக்கன் வீர காதா! மலையாள திரைப் படம்


22 ருடங்களுக்கு முன்பு கண்ட மலையாளத் திரைப்படம் மறுபடியும் காண ஆவல் நமக்கு தான் இணைய நண்பர் உள்ளாரே.  1989 ல்  மிகவும் பேசப்பட்ட படம் இது.  நடிப்பு, திரைக்கதை, கலை இயக்கம், உடை அலங்காராம் என இந்திய அரசின்  நாலு விருதுகளை தட்டி சென்றது “ஒரு வடக்கன் வீர காதா” என்ற திரைப்படம். கதாசிரியர், துரோகியான சந்து என்ற வரலாற்று கதாபாத்திரத்தை நல்லவனாக காட்டுவது வழியாக வரலாற்றை திரித்து விட்டார் என்று கண்டனம் செய்யப் பட்டாலும் மக்களால் பெரும் அளவில் கவரப்பட்டு 250 நாட்கள் கேரளாவில் ஓடியது இந்த படம்!  மேலும் கேரளா அரசின் சிறந்த பாடகருக்கான பரிசு சித்திராவுக்கும் , நடிப்புக்கு மம்மூட்டி, கீதா, திரைக்கதை வாசுதேவன் நாயர் என 6 விருதுகளை வென்றது.


வரலாறு
 “வடக்கன் பாட்டுகள்” 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேகவர்கள் என்ற மக்களை பற்றிய வாய்-வழி மொழி நாட்டுப் புற பாடல்களை தழுவி எடுக்கப் பட்டதே இப்படம். கேரளா போர் வரலாறில் சேகவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சேகவர்கள்  என்பவர்கள் நாட்டை ஆளும் மன்னர்களுக்கு படைசேவகர்களை உருவாக்கி கொடுப்பவர்கள். மேலும் இரு குறும்நில மன்னர்களுக்கு இடையிலான தீர்க்க இயலாத சண்டையில் நம் ஊரில் நடக்கு கோழி சண்டை போல் மனிதர்களான சேகவர்கள் பயன்படுத்தி   வெற்றி தோல்வி நிர்ணயம் செய்ய இவர்கள் ஒருவரின் மரணம் துணை செய்யும். இவர்கள் பற்றி சங்ககாலத்தில் துவங்கியே சொல்லப்பட்டது என்றும் கேரளா, இலங்கை, தமிழகம் சில இடங்களளில் வாழ்ந்து வந்ததாகவும் வரலாறு சொல்கின்றது.  இவர்கள் வழி தோன்றல்களே சேர ராஜாக்கள் பரம்பரையினர் என்றும் இவர்கள் அடையாளம் கூட வில்லு என்பதும் வில்லவர்கள் என்று நம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. பின்பு பிராமணர்கள், மற்றும் திருவிதாம் கூர் ராஜாக்களின் வருகையுடன் இவர்களை சோவர்கள் என்று தரம் தாழ்த்தியதுடன் மட்டுமல்லாது  கேரளாவின் தீண்டதக்க ஜாதி என்றும் பனையேறும், கள்ளு தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.  இவர்கள் தற்போது ஈழவர்கள்  என்ற சமூதாயமாக கேரளாவில் வசித்து வருகின்றனர்.




கதைத் தளம்
இப்படத்திற்க்கு கதைத் தளமாக உள்ளது  வடக்கு கேரளாவில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற களரி பயிற்று ஆசிரியர்  கண்ணப்ப சேகவர் என்பரும்  அவருடைய மகன்கள் ஆன ஆரோமல் சேகவர், உண்ணி கண்ணனும் உண்ணியார்ச்சா என்ற  ஒரே மகளும், அவருடைய மகன் ஆரோமல் உண்ணி போன்றவர்களின் கதை ஆகும். வீரத்திற்க்கு அழகிற்க்கு பெயர்கொண்ட  உண்ணியார்ச்சையை திருமணம் முடிக்க இயலவில்லை என்ற கோபத்தால் கண்ணப்பரின் சகோதரி மகன் ‘சதியன் சந்து’ என்று அழைக்கப்பட்ட சந்துவால் ஆரோமல் சேகவர் கொலை செய்யப்பட்டார் என்றும் உண்ணியார்ச்சையின் மகன் வளர்ந்து தன் மாமாவை கொன்றவரை கொன்று பழி தீர்த்தான் என்றுமே வரலாற்று கதை!   தமிழகத்தில் துரோகத்திற்க்கு மறுபதிவாக எட்டப்பனை காட்டியது போல் சந்துவை சதியன்/துரோகி என்று முத்திரை குத்தி வைத்திருந்து கேரளா இலக்கியம் வரலாறு!  சிறு குழைந்தை விளையாட்டில் கூட ஏமாற்றிய நண்பனே ‘சதியன் சந்து’ என்று அழைத்து கேலி செய்வது உண்டு.



உண்ணியார்ச்சா என்பவள் வீரத்தின் பெண்மையின் அடையாளமாகவும் ஆரோமல் சேகவர் வீரத்தின் அடையாளமாகவும் போன்றப் பட்ட கதையை யாரும் நினைத்து பார்க்க இயலாத திசையில் எல்லாவராலும் வெறுக்கப் பட்ட சந்துவின் பார்வையில் உற்று நோக்குவதே “ஒரு வடக்கன் வீரகாதா” என்ற படத்தின் சிறப்பு.

இதே கதை தளத்தில் 1961 ல் உண்ணியார்ச்சா, 1989 ல் ஒரு வடக்கன் வீர காதா, 2002 ல் புத்தூரன் வீடு என்று மூன்று படங்கள் வந்திருந்தாலும் “ஒரு வடக்கன் வீர காதா” போன்று மக்கள் மனதில் பதிந்த படம் வேறு இல்லை.  துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்பாகவும் பரிதாபமாகவும் பார்க்க இந்த படம் வழி வகுத்தது.

தி. ஹரிஹரன் இயக்கத்தில் வந்த இந்த படம் சரித்தித்திர கதைகளை சாதாரண மக்களாலும் மாத்தி யோசிக்கவும் வைத்தது.  ரவி பாம்பே  என்ற இசையமைப்பாளரின் பாடல்கள் படத்திற்க்கு இன்னும் வலு சேர்த்தது. ஆண்கள்  பெண்களுக்கான உடை சிகை அலங்காரம் எடுத்து சொல்ல வைத்தது இப்படத்தில். http://www.youtube.com/watch?v=AVmnlQsorxc பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது கலையாகவும் காவியமாகவும் படைத்துள்ளனர்.

படத்தின் கதை
சந்து என்ற குழந்தை பெற்றோர் இருவரும் தவறிவிட்ட நிலையில்  தன் 5 வது வயதில் தன் தாய் மாமா வீட்டிற்க்கு அனாதையாக வந்து சேருகின்றான். அவன் மாமாவால் பாசமாக வளர்க்கப் பட்டாலும் ஏழ்மை, அனாதை என்ற நிலையில் தன்னுடைய மாமா மகன் ஆரோமல் சேகவரால் பெரிதும் கேலி பேச்சுக்கும் இளக்காரத்திற்க்கு உள்ளாக்க படுகின்றான் .  சேகவரின் மகள் உண்ணியார்ச்சையை பாலிய திருமணத்தால் தனக்கே என்று நம்பி கொண்டிருந்த சந்துவுக்கு , ஆரோமல் சேகவரின் வசதி படைத்தவர் நண்பன் குஞ்சு ராமனுக்கு திருமணம் முடித்து வைக்கின்றனர்.  உண்ணியார்ச்சையும் வசதி வாய்ப்பான வாழ்க்கையில் பற்று கொண்டு தன் காதலை உதறி தள்ளி விட்டு பணக்காரருக்கு மனைவி ஆக முடிவு செய்கின்றாள்.  வசதியான வாழ்க்கையாக இருப்பினும்  தன் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில்  பணக்கார கணவர் இல்லை என்று தெரிந்ததும் சந்துவை பின் வாசல் வழி தன் படுக்கை அறைக்கு அழைக்கின்றாள் வீரப் பெண் உண்ணியார்ச்சா!  கணவரால் பிடிக்கப் பட்ட உண்ணியார்ச்சா சுயநலமாக தன் மானத்தை கருதி சந்துவே தன்னை தேடி வந்ததாக பொய் பட்டம் கொடுத்து தன்னை காப்பாற்றி கொள்கின்றாள். பெண் பித்தனாக சித்திரிகரிக்கப் பட்ட சந்து அங்கிருந்து மன உளைச்சலுடன் வெளியேறுகின்றான்.http://www.youtube.com/watch?v=MvOqvpslXvM&feature=related

மனம் உடைந்த சந்து தான் விரும்பிய பெண் தான் கிடைக்க வில்லை தன்னை விரும்பிய பெண்ணையாவது மணக்கலாம் என்று பெண் கேட்க சென்றால் அப்பெண் ஆரோமலுக்கு மனைவி என்று முடிவு செய்யப்படுவது தெரிகின்றது.

இனி தன் சொந்த நிலையில் தன் தகப்பனார் வீட்டில் வாழலாம் என முடிவு எடுத்த சூழலில் புதிய ஆசானிடம் வித்தை கற்க செல்கின்றார். அங்கு ஆசானின் மகள் சந்துவின் எல்லா விடயங்கள் தெரிந்தும் அவரை முழு அன்போடு காதல் செய்கின்றார்.

இப்போது தான் கதையின் உச்சகட்டம் நெருங்குகின்றது இரு குறுநில மன்னர்களுக்கு வழக்கு முடிக்க இரு சேவகர்கள் சண்டை இட வேண்டிய சூழலில் ஒரு பக்கம் மச்சுனன் ஆன ஆரோமல் சேகவரும் மறுபக்கம் தன் குருவும் என்று இருக்கையில் தான் ஆரோமலுடன் செல்ல விரும்பா விடிலும் தன் மாமாவின் விருப்பத்திற்க்கு இணங்க, மேலும் உண்ணியார்ச்சாவின் மேல் கொண்டுள்ள பற்றால் “ஜெயித்து வந்தால் சந்துவுடன் தான் மனைவியாக வருகின்றேன்” என உண்ணியார்ச்சா கதைத்ததை நம்பி ஆரோமலுடன் துணைக்கு செல்கின்றார்.

தன் குரு போர்க்களத்தில் ஆரோமலின் நியாயமற்ற போர் யுக்தியால் வீழ்த்தப் பட்டு கொல்லப்படுகின்றார்.   தன் மச்சுனன் ஆரோமல் சேகவரோ போர் களத்தில் சரியல்லாத வாளை கொடுத்து ஏமாற்றி விட்டாய் என்று சண்டையிட அந்த சண்டையில் சேகவர் தவறுதலாக நிலைவிளக்கு மேல் விழுந்து கொல்லப் பட கொலைகுற்றம் சந்து மேல் விழுகின்றது.

வாள் சரியல்லாது போக கொல்லனுக்கு தன் குருவின் மகள் தான் காசு கொடுத்தாள் என்று அறிந்து அவளை தண்டிக்க தேடி வர அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாள்.

குருவின் மருமகளை மனைவியாக ஏற்று  ஒரு சேகவராக பற்றுக்கள் அற்று  வாழ்ந்து வரும் வேளையில் உண்ணியார்ச்சா தன் மகனையும் ஆரோமலின் மகனையும் சந்துவிடம் பழிக்கு பழி கேட்டு அனுப்பி விடுகின்றார். உண்ணியார்ச்சாவின் மகன் என்னிடம் போரிடு நானா நீயா என்று பார்ப்போம் என சொல்ல உண்ணியார்ச்சா மகன் என்று தெரிந்த மறுகணமே அவள் பேரிலுள்ள காதலால் உருகி “எனக்கு பிறக்காத மகன் நீ என்னிடம் தோற்க்க வேண்டாம் என்று சந்து தற்கொலை செய்து கொள்கின்றார்.

குருவின் மகள் ஒரு காட்சியில் சந்துவிடம் கேட்பார் “உண்ணியார்ச்சா தொடப்பம் வைத்து எத்தனை முறை அடித்து விரட்டினாலும் நீ அவளிடம்  மயங்கி கிடைக்கின்றாயே என்று”  அந்த மயக்க நிலையே சந்து என்ற நல்ல மனிதனை அழித்தது.  அவள் பெயரிலுள்ள அன்பின் தூய காதலின் பெயரால் தன்னை பலமுறை ஏமாற்றியவளாக இருந்தும் அவளை நம்பி அவள்  பின் வாசல் வழி அவள் வீட்டிற்க்கு செல்வதும்  இன்னொருவனுக்கு குழந்தை பெற போகும் அவளை அவள் விரும்பம்  தன்னை மணக்க என்று அறிந்ததும் மனைவியாக ஏற்று கொள்ள துடிப்பதும், தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்கள் மனநிலை புரிந்து கொள்ள இயலாது போவதும் வியர்ப்பு என்றாலும் காதலுக்கு கண் மட்டுமல்ல மூளையும் இல்லை என்று நிரூபித்து தன் வாழ்க்கையில் பெரும் துயரை உண்ணியார்ச்சா என்ற பெண்ணால் சந்தித்து தன் முடிவையும் தானே தேடி காதலுக்கு மரியாதை தருகின்றார்.

உண்ணியார்ச்சா என்ற கதாபாத்திரம் வழியாக பெண்கள் பூ போல் மென்மையானவள் மட்டுமல்ல  பணம், காமம், அந்தஸ்து, தங்கள் சுய லாபத்திற்க்கு, பழிவாங்கும் வெறிக்காய் ஆண்களை பகடை காய்களாக நகர்த்தும் யுக்திகளையும் பல இடங்களில் காட்சி மொழி வழியாக கோடிட்டு காட்டுகின்றனர் இப்படத்தில். மேலும் ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் முடிவதும் பெண்ணில் நின்றே என்று வலியுறுத்துகின்றனர் இப்படத்தில். அழகாக தோன்றும்    பெண்மையிலும் ஒரு சாத்தான் உண்டு என சொல்லப் படும் இப்படம் பார்த்து ரசிக்கப் பட வேண்டிய கற்று கொள்ள வேண்டிய படமே. கேரளாவில் உள்ள புன்னத்தூர் கோட்டையில் இதன் படம் பிடிப்பு நடந்துள்ளது என்பதும் ஒரு சிறப்பே.http://en.wikipedia.org/wiki/Punnathurkotta  22 வருடம் பின்னிட்ட போதும் சுவாரசியம், காதல், சண்டை காட்சிகள் என பரபரப்பு விடாது நம்மை காண தூண்டும் படம் இது!!http://mooshikan.com/component/content/article/68-watch-malayalam-old-hit-movies-online-download-/2050-oru-vadakkan-veeragatha-1989?start=2

26 Jun 2011

செட்டிநாடு கோழி- மிளகு குழம்பு


இன்று கோழி குழம்பு செய்வோமா!   சில வீடுகளில் பள்ளி சீருடை போல் ஒரே போன்று குழம்பு வைப்பது வழக்கமாக உள்ளது. இன்று கொஞ்சம் வித்தியாசமான விதத்தில் வைப்போம். சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து உண்ண   மிகவும் சுவையான கோழி குழம்பு இது.

தேவையான பொருட்கள்:
1.கோழிக் கறி    : ¾ கி.லோ
2.பெரிய வெங்காயம்  : 3 எண்ணம்
3.பச்சை மிளகாய்     : 2
4.தக்காளி  :2
      (2,3,4 மிகவும் சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்)
5. மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்
6. குருமிளகு பொடித்து வைத்து கொள்ளவும்
7. வெள்ளப்பூடும் இஞ்சியும் அரைத்து வைத்து கொள்ளவும்
8. கொத்த மல்லி      : சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
9. கறிவேப்பிலை


முதன் முதலாக அடிப்பக்கம் கட்டியான பாத்திரம் அடுப்பில் வைய்யுங்கள். அடுப்பை பற்ற வைத்த விட்டு சமையல் எண்ணை விடுங்கள்.
கடுகு இட்டு பொரிந்து வந்தவுடன் ஒரு நுள் சிறு ஜீரகம் சேருங்கள்.
அடுத்ததாக  பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இனி பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்
அரைத்து வைத்துள்ள வெள்ளப்பூடும் இஞ்சியும் சேர்த்து வதக்கவும்
இனி மஞ்சள் பொடி வெங்காயத்தில் படாது எண்ணையில் சேர்த்து வதக்க வேண்டும்

அடுத்ததாக தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி 10 நிமிடம் நன்றாக வதங்க நேரம் கொடுங்கள்
இனி மல்லி, மிளகாய் தூள்கள் சேர்த்து கோழிக் கறியும் சேர்த்து நன்றாக வேக அனுமதியுங்கள்.
கறிவேப்பிலையை முழுதாக போடாது கைவைத்து பிய்த்து போட வேண்டும். அதுவே ருசிக்கு உதவும்.

இனி பொடித்து  வைத்துள்ள குருமிளகு சேர்த்து அலங்கரித்த மல்லி இலையும் சேர்த்து அழகாக ருசித்து சாப்பிடுங்கள்.

23 Jun 2011

வலைப்பதிவர் சங்கமம்- என்ன நடந்தது?


முதல் சுற்றில் பெயரும் தங்கள் வலைப்பதிவின் பெயரும் அறிமுகப்படுத்தினர் மறு சுற்றில் ஏன் எப்படி பதிவுலகத்தில் புகுந்தோம், தாங்கள் பெறும் அனுபவங்கள் எவ்வகையானது என்ற கேள்விக்கு விடை காண்வதாக இருந்தது.
 தமிழ்மணம் வலைப்பதிவில் முதல் வரிசையிலுள்ள சி.பி செந்தில் குமார், தான் எப்படியாக முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றார் என்பதும், அவர் பதிவு உலகத்தை ஒரு போட்டியை நோக்கி நகத்துவதகவும் தெரிந்தது.  பலா பட்டறை சங்கரோ வலைப்பதிவுகளில் ஆக்க பூர்வமான நம் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு இட்டு செல்லும் தளமாகவும்  காத்திரமான பதிவுகள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  இன்னும் சில பதிவர்கள் தங்கள் வேலையின் நெருக்கத்தால் வாழ்க்கையில் சுவாரசியம் அற்று போகாது நட்பு, தொடர்பாடல் பேணவே வலைத்தளம் என்று வலியுறுத்தி முடித்தனர். வேளான்மைத்துறையில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவரும் முதல் தமிழ் வலைப்பதிவரான டொக்டர் P. கந்தசாமி மற்றவர்களின் இடையூறு இல்லாது  தங்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும் சுதந்திரமகவும் பதிய தகுந்த தளமே வலைப்பதிவு என்றும்  விவரித்தார்.  ஐயா N.ரத்தின வேல் அவர்கள் தங்கள் காணும் விடயங்களை சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை பகிர துணை புரிகின்றது என தெளிவுபடுத்தினார்.  வெடிவாள் சகதேவன் ஐயா கூறுகையில் தங்கள் ஓய்வு வயதில் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் கருத்துரையாடல்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலர் வலைப்பதிவர்களாக வலம் வர வேண்டும் என்ற தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.  தங்க சிவம் போன்றோர் அரசு அதிகாரியாக இருப்பதால் தங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் சமூகத்துடன் பங்கிட வலைப்பதிவுகள் என்பது நல்லதொரு வடிகால் என்று உரைத்தார்.  மதுரை மணிகண்டன் நான் ஒரு சின்ன சிறு வலைப்பதிவர் என்று அடையாளப்படுத்தி கொண்டாலும் அவருடைய எழுத்தின் வீரியம், மதுரை தமிழின்  அழகு எழுத்து நடை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிட்ட வில்லை என்றே உணர்ந்தேன்.  என் நிலை பாடான வலைப்பதிவுகள் என்பது சமூக்க மாற்றத்திற்க்கு பயன்பட வேண்டும் என்றும் சிறப்பாக பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை தாங்கள் காணும் உலகத்தை தாங்கள் வாழ்வில் கண்ட இழப்பை பகிர்வது வழியாக ஒரு சுவாரசியாமான உலகில் புகுந்து விட துணை புரிகின்றது என்பதை பகிர்ந்தேன். சில வலைப்பதிவர்கள் மாற்று கருத்து கொண்ட வலைப்பதிவுகள் விரும்பவில்லை என்பதும் வலைப்பதிவுகள் என்பது வெறும் பொழுது போக்கு  தான் என்ற கருத்துக்கள் என்னால் ஏற்று கொள்ள கடினமாக தான் இருந்தது.இளம் வலைப்பதிவர்களான தமிழ்வாசி, கோமாளி செல்வா, ஜெயந்து, ஜாஹிர்ஜுசைன், நாய்குட்டி கருவாளி ராமன் போன்றோர் இளம் புயலாக வலம் வந்தனர்.
  
பின்பு அரும் சுவையான உணவு குழுப்படம் எடுத்து கொண்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது. ஒரு பார்சல் அல்வா, கடலை மிட்டாய் காரம் கடலை, இன்னும் பால்கோவா போன்ற ஒரு இனிப்பு பார்சலில் தந்து வழி அனுப்பினர். இவை அனைத்தும் இலவசமாக பெறப்பட்டதும் அங்கத்தினர் ஒரு குழுவாக இணைந்த சாற்றோ இல்லாது பிரிந்ததும் வருத்தமாக இருந்தது.  வந்திருந்தவர்களின்  வலைப்பதிவுகளின் அறிமுகம் முழுமையாக பெற இயலாது இருந்ததும் மேலும் அவர்களுடைய தொடர்பு மின்னஞ்சல் முகவரி கிடைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றியது.

எனக்கு தெரிந்திருந்த வலைப்பதிவர்கள் ஆனால் அறிமுகம் இல்லாத நாறும் பூ, போகன் போன்றோரை சந்திக்க இயலவில்லையே என்ற கவலை மனதில் இருந்தது அடுத்த வலைப்பதிவர் சங்கமத்தில் சந்திக்கலாம் என்று மனதை தேற்றி கொண்டேன்.

இருப்பினும் பதிவர் சந்திப்பால் என்ன பலன், இது எதற்காக, யாருக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகள் நம் சுதந்திரத்தை பறிக்கின்றதா என்ற கேள்வி என் மனதை கிளர ஆரம்பித்து விட்டது.  அடுத்த பதிவில் அதை பற்றியே  கதைக்க வேண்டும்!!! 

நெல்லை வலைப்பதிவர் சங்கமம்


நெல்லையில் வெள்ளி கிழமை (17-06-11)அன்று நெல்லை பதிவர் சந்திப்பு நடை பெற்றது. பதிவர் சந்திப்பு என்பதை பற்றி சென்னை பதிவர்கள்,  இலங்கை தமிழர்கள், வெளிநாட்டு  தமிழர்கள்  மத்தியில்  என பதிவுகள் வழியாக அறிந்திருந்தாலும் அது போல் ஒரு கூட்டம் நெல்லையில் நடைபெறுகின்றது அதில் பங்குபெறுகின்றேன் என்பது புதுமையான மகிழ்ச்சியான  அனுபவமாகவே இருந்தது.  இதுவே நெல்லையில் நடக்கும் முதல் கூட்டம் என்றும் அறிந்திருந்தேன்.  உண்மை சொன்னால்  பெரிதும் எதிர்பார்த்து இருந்த நாள் தான் இது!  நாம் எழுத்து வடிவில் காணும் மனிதர்களை நேரில்  காண, கதைக்க அவர்கள் நேரடி கருத்துக்கள் பெற  முடிந்தது என்பது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாகவே இருந்தது.  இதற்க்கு ஒழுங்கு செய்த திரு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களையும் திருமதி கவுசல்யா மற்றும் அவர்கள் நண்பர்களும்  பாராட்டுதலுக்கு உரியவர்களே. இத்தருணத்தில் என் பதிவு வழியாக அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்படுள்ளேன்.

என்னுடைய வாசிப்பு தளம் ஈழ தமிழர்களின் எழுத்துக்களாக இருந்ததால் இவர்கள் எழுத்து எனக்கு பெரிதும் பரிசயம் இல்லாவிடிலும் சில குறிப்பிட்ட பதிவர்கள் சிறப்பாக சி.பி செந்தில் குமார், பனித்துளி சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா, தம்பி மதுரை மணிகண்டன் போன்றவர்களின் எழுத்து வழியாக சென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

10 மணிக்கு கூட்டம் என்று தெரிந்தும் 10.30 க்கு தான் வேண்டுமென்றே தாமதமாக சென்றேன்.  ஏன் என்றால் பல கூட்டங்களில் போய் கொசு விரட்டி கொண்டு இருந்த அனுபவம் எனக்கிருந்தது.  மேலும் முகம் தெரியாத நபர்கள் தெரியாத இடம் தேடி செல்கின்றேன் என்ற அச்சமும் உண்டு தான்!

என்னவர்,  ஜானகிராம் ஹோட்டலின் வாசலில் விட்டு விட்டு ஒரு சிறு நமட்டு சிரிப்புடன் 6 வது மாடியில் கூட்டம்  லிப்டில் தனியாக சென்று விடுவேயா என்று வினவினார்.   எனக்கும் ஒரு தயக்கம் தான் இருப்பினும் விட்டு கொடுத்து நம் பயத்தை காட்டி விடக்கூடாது என்று எண்ணி   நான் போய் விடுகின்றேன் முடிந்ததும் தொலைபேசியில் தெரிவிக்கின்றேன் என்று கூறி விட்டு வீர நடையாக  சென்று விட்டேன்.  பொது இடங்களிலுள்ள   லிப்டு, பல்பொருள் அங்காடியிலுள்ள எஸ்கலேட்டர் இவை எல்லாம் பயம் தரக்கூடியவை தான் எனக்கு!  சாரை சாரையாக நெடுகையும் குறுகையுமாக வாகனங்கள் போகும் ரோடு கூட பயம் தான் ஆனால் ரோடு தாண்ட இப்போது வல்லுனர் ஆகி விட்டேன்.   அதிலும் கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்து ரோடில் குறுகே தாண்டுவது இன்னும் பாதுகாப்பு . ரோடில்  வருபர்கள்(ஆட்டோ தவிற்த்து) ஐயோ பாவம் என்று வழி விட்டு செல்ல வாய்ப்புகள் உண்டு!!

அப்படி தான் அந்த லிப்டுக்குள்ளும் காலெடுத்து வைத்தேன்.  தமிழ் படத்தில் போன்று ஒரே ஒரு நபர் மட்டுமே கையில் பிளாஸ்க்குடன் என்னை கேள்வி குறியால் கொஞ்சம் முறைத்து பார்த்து  கொண்டு 3 வது மாடிக்குள்ள பொத்தானை அமுத்தினார். அவர் இறங்க போகும் போது என்னை நோக்கினார்; நான் 6 வது மாடி என்றேன் அவரும் பாவம் ஏதோ பேக்கு போல என்று தோன்றியதோ என்னவோ 6 வது பட்டனை அமர்த்தி விட்டு அதுவாகவே கதகு திறந்து விடும் என்று கூறி வெளியில் சென்றார். மனுசா ஒரு உதவி செய்தீர்கள் என இப்படி கதைக்கலாமா; கதைகை உடைத்து கொண்டு போக மாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு சிறு புன்முறுவலுடன் அப்பிராணியாக நின்று கொண்டேன்.   லிப்டு நின்று விட்டது வெளியில் வந்த போது அது ஒரு மொட்டை மாடி அழகாக சாப்பாடு மேஜைகள் இடப்பட்டிருந்தது குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்  கண்ணை கவரும் செடிகள் அதன் ஒரு கோடியில்  ஒரு கண்ணாடி கதவு கொண்ட பெரிய அறை.

கதகை தள்ளி திறந்து உள்ளெ சென்றேன் என்னை கேள்வி குறியாக நோக்கினர் நான் தான் “சிஐடி போலிஸ் ஜோஸபின்” என்று சொல்லும் கம்பீரமாக ‘நான் வலைப்பதிவர் ஜோஸபின்’ என்றேன். உங்களை தான் தேடி கொண்டிருந்தோம் என்று பலமான வரவேற்ப்பு கிடைத்தது.  ஒரு கரம் என்னை அன்பாக அழைத்து சென்று  ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டேன்.

 நல்ல சூழல் எங்கும் சிரித்த் முகங்கள்! பொதுவாக நெல்லையில் விசேஷ கூட்டங்களுக்கு சென்றால் சிரிப்பு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.    வீடு தேடி வந்து பத்திரிக்கை தந்து அழைப்பவர்கள் கூட அவர்கள் கூறிய மண்டம் முன்  நாம் சென்றடையும் போது அன்று தான் அறிமுகம் ஆவது போல் விரிந்த கண்களுடன் கேள்வியே புருவமாக கொண்டு இருகிய முகத்துடன் காட்சி தருவார்கள். இங்கு எல்லாம் மாறுபட்டு இருந்தது .  எல்லோரும் சிரிப்பாலும் பேச்சாலும் தாம் பல வருடங்களக அறிமுகமானவர்கள் போல் அன்பாக தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தனர். 

என் கண்கள் முகநூலில் புகைப்படம் கண்டு, ஏற்கெனவே மின் அஞ்சல் வலைப்பதிவு வழியாக  அறிமுகமுள்ள ரத்தின வேல் ஐயாவை தேடியது அதே நேரம் அவர்களும் என்னை அடையாளம் கண்டு விட்டார்.  அவர் மனைவி உமா அம்மையாருடன் வந்திருந்தார் மிகவும் அன்பாக என்னிடம் கதைத்தார்.   ஒரு முறை என் புகைப்படுத்தில் கருத்து வெளியிட்ட போது “ எனக்கு 3 ஆண் குழந்தைகள் உண்டு உன்னை என் மூத்த மகளாக நினைக்கின்றேன் அம்மா “ என்றிருந்தார் அவர் கண்களிலும் அந்த பாசம் கரை புரண்டோடியது.  அவர் மனைவி அவரை ஒரு குழந்தையை போல் கவனித்து கொண்டு அமைதியாக எல்லாம் அவதானித்து கொண்டு அவர் தோழியாக அருகில் இருந்திருந்தார். ஐயா அவர்கள், அவருடைய ஊர் வீசேஷமான இனிப்பு பண்டம்   பால் கோவா எனக்கென கொண்டு வந்து தந்தபோது இன்ப அதிற்ச்சியாகவும் இருந்தது.

அன்றே முதல் முதலாக கண்டுள்ள கவிதை எழுத்தாளர் கல்பனாவின் நட்பு பல வருடம் கண்டு பழகிய இனிமையான தோழியோடு ஒத்திருந்ததும் ஆச்சரியத்தை கொடுத்தது.  அவர் தமிழக வலைப்பதிவுகளுடன் மிகவும் அறிமுக ஆகியவர் என்பதால் அவர் அங்கு வீற்றிருக்கும் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி தந்து கொண்டு இருந்தார்.  சௌதியில் இருந்து வந்து பங்கு பெற்ற ஜாகிர் ஹுசைன், நாகர்கோவில் இருந்து வந்த வெறும் பையன் ஜெயந்து, நண்பர் தங்க சிவம் மற்றும் சேலத்தில் இருந்து வந்திருந்த ரசிகன், தூத்துகுடி SVS, நாகர்கோயிலில் இருந்து வந்த நண்பர் மனோ, கோவில்பட்டியில் இருந்து விஜயம் செய்த நண்பர் பாபு போன்றோர் மிகவும் அன்பாக- நட்பாக பழகியது மிகவும் ஆனந்தமாக இருந்தது.  தமிழக வலையுலகத்தின்  ஹீரோக்களாக வலம் வரும் சி.பி செந்தில் குமார், பனித் துளி சங்கர், அமைதியே உன் பெயர் தான் தண்ரோரா என்று சொல்லும் வலைப்பதிவர் தண்டோரா, இளம் வலைப்பதிவர்கள் தமிழ்வாசி பிரகாஷ், கழுகு வலைப்பதிவின் கோமாளி செல்வா, வம்பை விலைக்கு வாங்காத மதுரை மணிகண்டன் இவர்கள் எல்லோருடனும் பதிவர்கள் என்று ஒரே குடையின் கீழ் அணி திரண்டதில் பெருமையாகவும் இருந்தது. அதிலும் எழுத்தாளர் சி. பி செந்தில் சிரித்து கொண்டே  தன் நகைச்சுவை கொண்ட பேச்சாற்றலால் எல்லோரின் கவனைத்தையும் தன்பால் கவர்ந்து கொண்டே இருந்தார்.  பனித் துளி அவர்கள் தான்பேசுவதை விட அடுத்தவர்கள் பேசுவதையே அவதானித்து கொண்டிருப்பதில் ஆர்வம் இருப்பதாக தெரிந்தது.                                                                                            இனி என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

11 Jun 2011

நீங்களும் வலைப் பதிவர் ஆகலாமே!!!!


வலைப்பதிவுகள் என்பது நவீன ஊடகத்தின் ஒரு பதிப்பு ஆகும். வலைப்பதிவு ஆய்வாளர்களின் கருத்துப் படி வலைப்பதிவுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின், குழுமத்தின், நிறுவனத்தின் இணைய தளமாகும். தனி நபர் வலைப்பதிவுகள் என்பது, தனி நபர்  சிந்தனை கருத்துக்கள் அடங்கிய எழுத்துக்கள், கட்டுரைகள், படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள் உள்ளடங்கியது ஆகும்.  இணைய வசதியும் கணிணியும் உள்ள யாராலும் தாங்கள் எழுதியதை  இடையூறு இல்லாது வெளியிடவும்  உலகளாவிய அளவில் குறைந்த செலவில் மிக விரைவில் கருத்து பரிமாற்றத்திற்க்கும் உதவுகின்றது  என்பது இதன் சிறப்பாகும்.  திறந்த வெளி கருத்து பரிமாற்றம் ஒரு இனமாக அடையாளம் காண, காத்திரமான தொடர்பாடல் பேண என்று இதன் மாற்று கூடி கொண்டே போகின்றது.  பத்திரிக்கை நிறுவனத்தின் தலையீடு இல்லது தனி நபர் படைப்புகள் இணையம் வழியாக மக்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்களுக்கு வழி வகுக்கின்றது என்றால் மிகையாகாது.  தணிக்கை செய்யப்படாத இடையீட்டாளர்கள்  கட்டுபாடு அற்ற  செய்தி பெறப் படுகின்றது என்பதே இதன் பலவும் பலவீனவும்.

வலைப் பதிவுகள் என்றால் பொதுவாக தனிநபர் நாட்குறிபேடு போன்றது என்று இதன் தரத்தை குறைத்து மதிப்பிடப் பட்டாலும் வலைப்பதிவுகள் அதன் உள்ளடம் சார்ந்தும் அதன் எழுதும் நபர்கள் சார்ந்தும் பல வகை உண்டு. பொதுவாக வலைப்பதிவுகள் என்பது ஒரு தனிநபர் தன்  வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து எழுதுவது நாட்குறிப்பு வலைப்பதிவுகள் என்றும், தம்மை சார்ந்த அனுபவக் குறிப்பு  மட்டுமின்றி சமூக அக்கரையுடன் மற்று நபர்களின் சமூகத்தின் நலன் கருதியும் தங்கள் கருத்துக்களை பகிர எழுதும் வலைப்பதிவுகள் filter வகை என்றால்  நம்மை சாராத முழுக்க முழுக்க ஒரு கருத்து  அல்லது கோட்பாடு சார்ந்து பொது சமூகத்தின் வளர்ச்சிக்கு தகவல் பரி மாற்றத்திற்க்கு  என எழுதும் வலைப்பதிவுகள்  புத்தக வலைப்பதிவுகள் அதாவது note book வலைப்பதிவுகள்  என்று 3 வகை உண்டு. 

அரசியல், நாட்டு நடப்பு செய்திகள், தொழில்நுட்பம், கல்வி, இலக்கியம், பொழுது போக்கு அம்சம் கொண்ட  செய்திகள் என இவையின் உள்ளடக்கம் சார்ந்தும்;  கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள்,  குடும்ப தலைவிகள்  என எழுதுவர்கள் சார்ந்தும் வலைப்பதிவுகள் வகைப்படுத்தலாம்.   

1991 ல்,வலைப் பதிவுகள் ‘டிம் பேர்னர்’ என்பரால்  இணையத்திலிருந்து  கண்டு எடுக்கப் பட்டு வரிசைப்படுத்த பட்டது.   அன்றைய சூழலில் கணிணி-தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே வலைப் பதிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.   இன்றைய நவீன வலைப்பதிவுகளின் துவக்கம் ‘ஜெஸ்டின் ஹால்’என்ற அமெரிக்க  கல்லூரி மாணவனாலே 1994 ல் முன் வைக்கப்பட்டுள்ளது .  1999 ல் வெறும் 23 என்ற அளவில் இருந்த வலைப்பதிவுகள் 2009 ல் டெக்நோரடி என்ற தேடும் கருவியால் 133 மிலியன் வலைப்பதிவுகளாக உயர்ந்துள்ளது என  கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  பிளோகர் போன்ற கருவியின் வரவுக்கு பின்பு   துரிதமாகவும் எளிதாகவும் வலைப்பதிவுகள் துவங்க வகை செய்துள்ளது, மேலும் இதன் வளர்ச்சி கண்டடைந்துள்ளது.

வலைப்பதிவர்கள் சிந்தனை வளம் மிக்கவர்கள் ஆகவும் தங்களுக்கு சுற்றியுள்ள உலகை தெளிவாக உற்று நோக்கவும் அதை பகிரவும் வலைப்பதிவுகள்  உதவுகின்றது என்றால் அது பொய் ஆகாது.

 

உலக மொழிகளில் 66 நாடுகளில் இருந்து வலைப்பதிவுகள் பதிவு செய்து  கொண்டிருந்ந்தாலும் இவையில் தமிழ் வலைப்பதிவுகளின் இடம் இன்றிமையானது. தமிழ்மணம் என்ற திரட்டி வழியாக 8000 மேல் வலைப்பதிவுகள் கண்டு எடுத்து சேர்க்கப் பட்டுள்ளது.  உலகத் தமிழர்களுக்கு சிறப்பாக ஈழத் தமிழர்களுக்கு தங்களை ஒரு குழுவாக அடையாளம் காட்டவும் தங்களுக்குள் சிறப்பான கருத்துரையாடல் பேணவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றது. தமிழ்மணம் திரட்டியில் ஈழ வலைப்பதிவுகள் என்றே தனி பக்கம் உள்ளது.  4 வது ஈழப் போர் வேளையில் பத்திரிக்கைகளால் உண்மையான செய்தி மறுக்கப் பட்ட  போதும் ஈழ மக்களின் நோக்கம், உண்மைகள் மழுங்கலடிக்கப் பட்ட போதும் தங்கள் நிலைபாட்டை நிலைநாட்டவும் தங்கள் கருத்துக்க,ள் சோகங்கள் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவியது.

வலைப்பதிவுகள் என்பது கல்லூரி படிப்புகளிலும் ஒரு பகுதியாகவும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தபட்டது  மட்டும் அல்லாது பெரும் ஊடகங்களும் தகவல் பெறுதலுக்கும் பரிமாற்றத்திற்க்கு பதிவுகளை சிறந்த  தளமாக பயண்படுத்துகின்றனர்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகினாலும் 2004 துவங்கி தான் தமிழக தமிழர்களை  வந்தடைந்தது. இருப்பினும் தற்போதும் வலைப்பதிவுகள் பல நபர்களுக்கு  அறிமுகம் இல்லாது தான் உள்ளது.  ஒரு வலைப்பதிவராக சிறந்த எழுத்தாளராக அல்லது திறமையானவராக இருக்க வேண்டும் இல்லை, தாங்கள் கண்டவையே அனுபவித்தவயே உண்மையாக இதயபூர்வமாக கதைக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே போதுமானது.  எனக்கு தெரிந்த நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து தங்கள் அடையாளத்தை பதிய வேண்டும் என்று இப் பதிவை பகிருகின்றேன். நீங்களும் நாளை வலைப்பதிவரே!!
 
நீங்கள் blogger.com என்றும் உள்நுழையலாம். அல்லது gmail கணக்கு வழியாக போய் more என்றதில் சொடுக்கினால் வரிசையாக சேவைகள் வரும் அதில் even more என்பதை சொடுக்கினால் இந்த பக்கத்தில் வந்து விடுவீர்கள்.



பிளோகர்(blogger) என்ற குறியீடை சொடுக்கவும்.


You please click on ‘Get Started’


Fill the following column. கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை  நிரப்ப வேண்டும்! After finished click on  the ‘continue’ button



You come to this page! உங்கள் வலைப்பதிவுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் பெயரை குறிப்பிடவும்!

You come to this page, choose the template whichever you like. உங்கள் பதிவின் உருவத்தை தேர்வு செய்யலாம்.


Now you come to climax. Then you  click on ‘start blogging’




‘start blogging’. என்று சொடுக்கும் போது எழுத வேண்டிய கட்டம்/பெட்டி வருகின்றது.

You can now write!!!! நம் ஆக்கத்தை பதிவு செய்து விட்டு பப்லிஷ் என்றதில் சொடுக்க நம் பதிவு வெளியிடப்படுகின்றது.

காண்க பதிவு(view post) என்பதை சொடுக்குவது வழியாக உங்கள் பதிவை கண்டு பேரானந்தம் அடைவீர்கள்!
ஆகா…………………………….உங்கள் பதிவை உருவாக்கி விட்டீர்களா. 




கலக்குங்கள்.வாழ்த்துக்கள்!!!

6 Jun 2011

தொலைந்த இணையமும் வேட்டையாடிய நினைவுகளும்!


  
கடந்த சில நாட்கள் இணையம் இல்லாத சூழல். ஒரு பக்கம் நல்லதே  என்று எண்ணினாலும் அப்பாவுக்கு, தன் கவலையெல்லாம் மறக்க செய்த பிராந்தி குப்பி  என்பது போல்  இணையம் எனக்கு போதையாகியதோ என்றும் நம்ப வைத்தது என் நிலை. 

                                                                                                                                     நண்பகளை காணாது கதைக்காது இருந்தது சொல்லி கொள்ள இயலாத துன்பம் தந்தது மட்டுமல்ல இனம் தெரியாத ஒரு துயர் கூடவே ஒட்டிகொண்டதாகவும் உணரப்பட்டேன்.   ஒரு சூனியமான நிலையில் பயணிப்பது போன்று உணர்ந்த போது தான் இவை தரும் துயரம் அளவற்றது என்று புரிந்தது.


பல ஆக்க பூர்வமான வேலைகள் செய்து முடிக்க இணையம் தடையாக இருந்தது என்றால் அது பொய்யாகாது.    பல நாட்களில் நேரத்தோடு எடுக்க வேண்டிய உணவை மறக்க செய்தது,  நிம்மதியான தூக்கத்தை கெடுத்தது. இணையத்துடனே சங்கமித்து நடுநிசி பேய் போல் இணையத்துடன் பயணித்ததால் அதிகாலைகளும் குருவிகல் தரும் ஒலியும் தெரியாதே என்னை விட்டு மறைந்தது.                                                                                                                                                            நாம் நேசிக்கவும் நம்மை நேசிக்கவும் உறவுகள் உண்டு என்பது இன்பமானதும்  தன்னம்பிக்கை தருவதாகவும் இருந்தது.  தனிமையில் ஒரு அறையில் கணிணி முன் இருக்கும் போதும் ஒரு கூட்டத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டு  மகிழ்ச்சியான நொடிகளாக இருந்தது. சில பொழுது சில கதைப்புகள் கருத்துரையாடல்கள் நினைத்து நான் தன்னை தானே சிரித்து மாட்டி கொண்டதும் உண்டு.                                                                                                                          


ஆனால் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க உதவியது.  இக்கட்டான வேளையில் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் சில பொழுது தெளிவு கிடைக்காத பிரச்சனைகளுக்கு தெளிவு பெறவும் உதவியது .  உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருபோதும் சந்திக்க இயலாதவர்களிடம் நட்பில் இணை பிரியா உறவை பேணுவதும் மகிழ்ச்சியை தந்தது.  புதிய அறிவை நாம் பெறவும் நம் கருத்துரையாடல் சிந்தனைகளை பகரவும் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. 

ஆனால் இணையம் இல்லாத பொழுதுகள் மாதங்களாக செய்து முடிக்க இயலாத பல வேலைகளை முடிக்க நேரம் தந்தது என்றால் அதுவே மெய்.  செடிக்கு தேவையான அளவு தண்ணீர் நேரத்திற்க்கு, நிதானமாக ஊற்றவும், கருகிய இலைகள் தூத்து துப்புரவாக்கவும், தேவையான உரம் இட்டு அதன் அருகில் நின்று ரசித்து பார்த்து கதைக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.  2 மாதம் முன்பே தறையிறக்கி வைத்திருந்த பிபிசி வரலாறு காணொளி காணவும் நேரம் கிடைத்தது.  அடுக்களை பாத்திரங்கள்  நேரா நேரம் கழுகி அடுக்கவும்,   வாசிக்க நேரம் கிடைக்காது;   2 மாதம் முன்பு வாங்கி வைத்திருந்த இரண்டு நாவல்கள், புத்தகங்கள் வாசிக்கவும்  நேரம் கிடைத்தது.

எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது. மறந்து போன உறவினர்கள் வீடு போய் நலம் விசாரிக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.

இருப்பினும் நேற்று மறுபடியும் இணைய இணைப்பு பெற்று  என் நண்பர்களிடம் கதைத்த பின்பு தான் போன ஜீவன் திரும்ப பெற்றது போல் உணர்ந்தேன்.  எப்படியாகிலும் இணையம் என் இணையற்ற நண்பர் தான் . இந்த பதிவு என் உயிரினும் மேலான  நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சமர்ப்பணம்!  

3 Jun 2011

காதல்........................மோதலா?



Add caption
காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது.   யாரிடன், ஏன், எப்போது  வருகின்றது என்பதற்க்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!  காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு, காதலை காமத்துடன் இணைத்து  கதைப்பவர்களும் உண்டு, காதல் என்பதே ‘இல்லை’ என்று சொல்பவர்களும் இல்லாதில்லை.  ஆனால் காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர இயலாததாக இருக்கின்றது என்பது மட்டுமல்ல நிலையற்றதாக இருக்கின்றது என்பதும் இதன் தனி அம்சமே.

காதலால் பல சாம்ராஜியங்கள் அழிந்தன, பலவை உருவாகியது, பல யுத்தங்கள், இலக்கியங்கள் காதலால் வந்தன. நெப்போளியன் ஜோசபினுடன் என்று காதலில் தோற்றாரோ அன்றே அவருடைய சாம்ராஜியவும் அழிந்தது, அதே போல் ஒரு தமிழ் பெண்ணின் காதலே ஈழத் துயரின் தொடக்கம் ஆகியது. காதலால் தாஜ்மஹால் என்ற அழியாத அடையாளத்தை உருவாக்கினார் ஆனால் அதே காதல் அவரை பட்டிணி இட்டு சாகவும் வழி வகுத்தது,  பைபிளில் பொல்லாத காதலால் கொலைகாரனாகிய தாவிதையும் அவன் கண்ணீர் வாழ்க்கையும்  காணலாம்.  

ஒரு நபர் இன்னொருவரை விரும்புவதற்க்கும் நேசிப்பதற்க்கும் அவர் மேல் கொண்டுள்ள மதிப்பு  உயர்ந்த எண்ணமாக இருக்கலாம் ஆனால் அதுவே காதல் என்று முடிவுக்கு வர இயலாதது.  காதல் அதையும் கடந்த உணர்வுபூர்வமான ஒரு நிலையாகும்.  நாம் ஒருவரை விரும்ப, நம் விருப்ப- வெறுப்பு, சமூக சூழல், மனநிலை, ஆளுமை,   உயிரியல்-இராசயண மாற்றங்களும் காரணமே.  தன்மை கொண்டு நோக்கும் போது காதலுக்கு ஒரு நிலையான தன்மை இல்லாதது என்று தெரியும் போது அன்பு ஒன்றே என்றென்க்கும் அழியாததும் முடிவில்லாததுமாக இருக்கின்றது என்பது பலருடைய கருத்தாகவும் விளங்குகின்றது.

காதலுக்கு முதல் சுழி இடுவதும், அதே போல் காதல் தோல்வியால் துவண்டு விழுவதும் ஆண்களே.    தன் தாயை ஆண் பெண் இரு பாலர் இரண்டு விதத்தில் பார்க்கின்றனர்.  வளர்ந்த பெண் அம்மாவை தன்னை போல் ஒரு சக மனுஷியாக பார்க்க துவங்கும் போது ஆண்களுக்கு அம்மா என்பது அன்பையும்  பாசத்தையும் சேர்த்து தந்து தன் உணர்வவோடு கலந்த உயர்ந்த உறவாக காண்கின்றனர்.  வளர்ந்து விட்ட நிலையில் புதிய ஒரு பெண்ணை தன் வாழ்க்கையில் சந்திக்கும் போது அதே அன்பையும் பாசத்தையும் தன் காதலியிடம்/மனைவியிடம் பெற துடிப்பதாக காணலாம்.  ஒரு நேர்காணலில் நடிகர் கமல் ஹாசன் தன்  காதல் வாழ்க்கையின் தோல்விக்கு காரணமாக காதலியில் தன் அம்மாவின் பாசத்தை காண்பதே என்று குறிப்பிட்டார்.  சில முரட்டு கணவர்களை   பெண்கள் தாய்மை அன்பில் தன் பக்கம் ஈர்ப்பதின் காரணம் கூட இதுவே.

ஒரு முறை விஜய் தொலைகாட்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அம்மா என்பவர், தன் அன்புக்கு பணிவிடைக்கு கணக்கு பார்ப்பதில்லை மனைவிகளின் அன்போ பிரதிபலன் பார்த்தே  இருக்கின்றது ஒரு கணவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. ஆண்கள் மனதில் உறைந்து கிடக்கு அம்மா என்ற அழியாத உறவை, அன்பின் பிம்பத்தை; மனைவி/காதலி என்ற கண்ணாடி வழியாக பார்க்க துடிக்கின்றனர்.

காதல் ஒரு வகையில் ஆண்களின் பலவீனமே!  காதல் தோல்வி என்பது (நேரம் போக்கு, விளையாட்டாக காதலை காண்பவர்களை தவிர்த்து) கள்ளம் கபடமற்ற ஆழமான   உணர்வுக்கு அடிமையானவர்களுக்கு பெரும் துயரே!  அவர்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றும் காரணியாக பல பொழுதும் அவர்கள் உயிரை குடிக்கும் ஏன் சில பொழுது தத்துவ ஞானியாக மாற்ற கூடியதாகவும் காதல் மாறுகின்றது.  பெண்களை போல் காதல் தீயில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ள இயலாது ஆண்களே எரிந்து சாம்பலாகின்றனர்.

காதல் பிறப்பது/ துவங்வது எங்கு ஆகினும், சென்று சேர வேண்டியது நிச்சயமாக திருமணத்தில் தான் இருக்க வேண்டும்.  திருமணம் என்பது   அங்கிகாரம் மட்டுமல்ல வெவ்வேறு இரு நபர்கள் பரிபூர்ணமாக தங்களை ஏற்று கொண்டு தங்கள் இதயத்தால் இணையும் போது காதல் தெய்வீக தன்மை அடைகின்றது.  ஏற்று கொள்வது என்பது இருவரும் பலத்தையும் பலவீனத்தையும்; நன்மையும் அவர்களிலுள்ள தின்மை யும்  ஏற்று கொள்ளுகின்றனர் என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பல பொழுதும் திருமணங்கள் என்பது காதலின் மூடு விழா கொண்டாடும் நிகழ்வாக  பரிணமிக்கின்றது என்பதே உண்மை.  காதலால்  மறையப்பட்ட பல நல்லதும் கெட்டதும் ஆன விடயங்கள் திருமணம் ஆன பின்பு தெளிவாக விளங்குவதும்,  திருமணம் என்பது தங்களை மாறி மாறி குற்றம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும், ஆளவும்-அடக்கவும்  நிபந்தனையற்ற அனுமதி சீட்டாக மாறிய போது காதல் கசந்து  திருமணம் என்பது அர்த்தமற்ற ஒரு சடங்காக மாறுகின்றது.  நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிதல், அங்கிகாரம் என உயர் பண்புகள் இருக்க வேண்டிய இடத்தில் சந்தேகம், சண்டை சச்சரவுகள் என போர் தொடுக்கும் தளமாக மாறுகின்றது திருமணம்!!   கல்யாணத்தில் காதல் ஒளிந்து கொள்ள உறவுகள் கசந்து உணர்வு பூர்வமான ஒன்றிப்பு இல்லாது வெறும் உடல் கூடலாக மாறி காதலின் வெப்பமோ, ஆவேசமோ அற்ற உயிரற்ற வாழ்க்கையாகி மாறுகின்றது திருமண வாழ்க்கை.  

சமூக சூழல் காரணமாக பல பொழுதும் திருமணத்தின் பின்பு காதலை வெளிப்படுத்த இரு நபர்களும் முயற்ச்சி எடுப்பது இல்லை.  ‘இனி எனக்கு தான்’ என்ற அதீத தற்காப்பு நிலையும் புகுந்து விட ஆண்மை, ஆணவம், ஆளுமை, எல்லாம் ஒன்று சேர காதல் கசந்து திருமண பந்தம்  கேலிக்குரியதாக மாறுகின்றது.  பல ஆண்கள் திருமணம் பின்பு மனைவிக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்வதில்லை.  இந்த நிலையை உரமிட என்றே பெண் பித்தன், பெண்டாட்டி தாசன் என்ற கேலி பேச்சும் ஒன்று சேர காதலை வெளிப்படுத்தாது காதல் வாழ்வுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர்.

காதல் என்பது உடல் சார்ந்த உறவு என்பதை விட  அன்பின் பிரதிபலிப்பாக, உணர்வுள்ள உறவாகவும்,  தன்னை முழுமையாக அங்கிகரிக்கும், அளவற்ற அன்பு செலுத்தும் உறவு என எதிர் பார்த்திருக்கும் பெண்களுக்கு திருமணம் என்பது உப்பு சப்பற்ற அடிமை வாழ்க்கை என்ற உணர்வு தலை தூக்க விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல துணிகின்றனர்.

பல காதல் மனைவிகளுக்கு பற்றி கொள்ளும் சந்தேகம் என்ற நோயும் சேர்ந்து ஆட வாழ்க்கையே அவதாளமாகிஅபஸ்வரம் ஆகி மாறுகின்றது சில வீடுகளில்.  பல மனைவிகள் காதல் கணவர்களை தங்கள் வாழ்நாள் அடிமை என்றும் தன்னிடம் போல் மற்றவர்களிடமும் காதலில் விழுந்து விடுவாரோ என்ற பயத்தினாலே இவர்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்தாது அழித்து விடுகின்றனர்.  இதனால் பல ஆண்கள் காதலில் கண்டவரல்ல தன் மனைவி இப்போது என்று தெரிய வரும் போது வாழ்க்கையில்  இருந்து ஓடி ஒளிக்கவும், சிலரோ தற்கொலை முடிவை தேடுவதும் இன்னும் பலரோ தத்துவ ஞானிகளாக மாறி “காதல் என்பது அங்கிகரிக்கப் படாத தெய்வீகம் திருமணம் என்பது அங்கிகரிக்கப் பட்ட விபசாரம்” என்ற முடிவை எட்டுகின்றனர்.



இயற்க்கையால் ஒரு போது சந்திக்கயிராத இரு துருவங்களான வித்தியாசமான ஆசாபாசங்கள் கொண்டு படைக்கப்பட்ட ஆண் பெண் இருவரும்; காதல் என்ற ஒரே உணர்வால் ஒரே கோட்டில் பயணித்து ஒரே புள்ளியில் சேர்ந்து  திருமணம் என்ற பந்ததால் ஒன்றாகி அதே நிலையில் நிலைத்து ஒன்றாய் இருப்பது தீராத தூய வெள்ளப் பெருக்கு போன்ற காதலால் மட்டுமே!!!



நேசம் மரணத்தை போல் வலியது;
அதின் தழல் அக்கினி தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கின்றது.
 திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்திற்க்காகக் கொடுத்தாலும், அது அசட்டை பண்ணப்படும்.
                                                                                உன்னதப் பாட்டு(8:6)




                                      For love is as strong as death,
Its burns like blazing fire,
Like a mighty flame.
Many waters cannot quench love
Rivers cannot wash it away.
If one were to give all the wealth of his house for love,
It would be utterly scorned.
                               Song of Songs(8:6)-Holy Bible.