31 May 2011

ஆண் பாவம் பொல்லாதது!!!


ஆண்கள் என்றாலே ஆணாதிக்கத்தின் முகமுத்திரை, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள், எதை பற்றியும் பயம் இல்லாதவர்கள் என்ற கருத்து உண்டு.  ஆனால் உண்மை அதுவல்ல. பல வீடுகளில் ஆண்களின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது.  இதிலும் 45 வயதிற்க்கு மேல் இளைஞர் அடையாளம் மறையவும் முதுமை எட்டி பார்க்கும் ஆண்களின் நிலை படு பரிதாபமே. ஒரு பக்கம் குடும்ப பொறுப்பு அவர்கள் கழுத்தை நெரிக்க மறுபக்கம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு தராத சூழலில் வாழவும், சாகவும் இயலாது  வாழும் பல ஆண்களை காண நேரிடும் போது வருத்தமே மிஞ்சுகின்றது. அம்மா-பாசம், சொந்தங்கள் என  தன்னை சுற்றி பலர் இருந்த சூழலில் இருந்ந்து ஆண்கள் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்ற சிறு வட்டத்தில் வந்து சேரும் நேரம் அவர்கள் வயது 50 வயதையும் நெருங்கி விடுகின்றது.  குழந்தைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட சூழலில் ‘பிள்ளை பூச்சியாக’ இருந்த மனைவியும் பூதமாக மாற பல ஆண்கள் எங்கு ஓடலாம் என தத்தளிக்கின்றனர்.


பெண்கள் பயந்த குணம் படைத்தவர்கள் என்று எடை போட, வெளிப் புறமாக பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பினும் பிறவியிலயே ஆண்களை விட எதையும் தாங்கும் துணிவான மன-தைரியமுள்ள பெண்கள்; இன்னும் மத்திய வயதை கடக்கும் வேளையில் குழந்தைகளும் தலைக்கு மேல் வளர்ந்து விட துணிவு அசூர வளர்ச்சி கொள்கின்ற போது ஆண்களோ தனிமை, மரணம், வாழ்க்கை போராட்டங்கள் கண்டு அதீதமாக பயப்படுவாதாக சில ஆராய்ச்சியாளர்கள்  கண்டு பிடித்துள்ளனர்.  மேலும் வயது கூடும் தோறும் பெண்களின் தாய்மையும் சேர்ந்து வளர ஆண்களோ அப்பா என்ற உணர்வில்(father hood) குறைவு படுவதாகவே கண்டு பிடித்துள்ளனர்.

பேருந்து பயணங்களில் தாத்தா பாட்டிகள் பல பொழுதும் பக்கம் பக்கம் இருக்கை வேண்டும் என்றும் சண்டையிடுவதை மதுரை-கம்பம் பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டுள்ளேன். நமக்கு சிரிப்பை வரவைத்தால் கூட அவர்கள் மனதளவில் கொள்ளும் பேரானந்தம் அளவிட முடியாததே!!  ஆனால் பல பிள்ளைகள் தாங்கள் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தங்கள் குழந்தைகளை பராமரிக்க என தாத்தாவை ஒரு வீட்டிலும் பாட்டிக்கு இன்னோரு மகன் வீட்டிலும் அடைக்கலம் கொடுப்பார்கள். இன்னும் சில வீடுகளிலோ கணவர்கள் தங்கள் நல்ல வயதில் சம்பாதிக்கும் பணத்தை சேகரித்து வைக்காது வயதான காலத்திலும் இன்னும் பணம் சம்பாதித்து கொண்டு வா என்று விரட்டி விடும் அவலவும் உண்டு.   எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் தன் 60 வயதிலும் ஒரு முதியவர் தான் கட்டிய வீட்டில் இருந்து கொண்டே தன் மகனுக்கு சாப்பாடுக்கு பணம் கொடுத்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப் படுகின்றார். இதற்க்கு துணை போவதும் அவருடைய மனைவி தான்.

சில வீடுகளிலோ ஆண்கள் உணர்வே அற்ற ஜடம் என்றும் எண்ணுவது உண்டு.  சில  நண்பர்களிடம் நான் கதைக்கும் போது மாமா மாமியிடமும் போனை கொடுங்கோ கதைக்க வேண்டும் என்று கூறினால் அவ கெடக்காம்மா ஏதோ கட்டி  பிள்ளைகளும் உள்ளது ஆணவம் பிடித்தவா என்று நொந்து கொள்வார்கள்.  கணவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்பது, ஒன்றாக உணவு  எடுப்பது,  ஒன்றாக நடை பயணம் செல்வது  என்று தங்கள் பாசத்தை பெருக்க வேண்டும். ஆனால் பல வீடுகளில் எலியும் பூனையும் போன்ற உறவே நிலவும். பார்வையாலெ மிரட்டுவது, கேலி செய்வது என்று ஆண்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து விடுவர் மனைவிகள்.   இதனாலே பல ஆண்கள் ஒரு குப்பி பிராந்தியை பச்சை தண்ணீர் போல் குடித்து விட்டு மதி மயக்கத்தில் தங்கள் நாட்களை கடத்தி செல்கின்றனர்.  

ஆணாதிக்கம் என்று நாம் கதைக்கும் அளவுக்கு பெண்கள் கொள்ளும் பெண்ணாதிக்கத்தை பற்றி நாம் சிந்திக்க, கண்டிக்க மறந்து விடுகின்றோம். இன்றைய பெண்களும் வேலைக்கு போய் தன்நிறைவு அடைந்த நிலையில் கணவர்கள் அனுமதி பெற்ற வேலைக்காரர்களாகவும், பாதுகாவலர்களாகவும், தங்கள் குழந்தைகளின் அப்பா என்ற பதவி மட்டுமே கொடுக்கப் படுகின்றது.   எங்கள் பக்கத்து வீடு கட்டி கொண்டிருந்த போது அங்கு காவலுக்கு என 70 வயது தக்க தாத்தாவை அமர்த்தியிருந்தனர். அவர் பெறும் ஊதியம் 4000 ரூபாய் பாட்டி கைக்கு தாத்தா கைக்கு வரும் முன்னே கிடைக்கும் வகையில் ஏற்பாடாக்கி வேலைக்கு அனுப்பியிருந்தனர்.  தாத்தா கீழை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ரகம்.  அவர் வேலை பார்த்தாலும் கூட அவருடைய மாடு, ஆடு, பேரபிள்ளைகள் வீட்டு கவலையிலே இருந்தார். ஒவ்வொரு விடுமுறைக்கு செல்லும் போது இனி வரமாட்டேன் அம்மா பாட்டி போக வேண்டாம் என்று சொல்லி விடுவாள் என்று செல்வார் ஆனால் போன வேகத்திலே சுவரில் அடித்த பந்து போல் ஒரு பை அரிசியுடன் வந்து விடுவார்.  அந்த முதியவரின் கவலையை மகன்களுடன் சேர்ந்து மனைவி திட்டுவதாகவே இருந்தது.

பல பெண்கள் வயது கடந்த கணவர்கள் கொண்டு இனி என்ன தேவை என்று வார்த்தைகளாலும் செயலாலும் மதிப்பது இல்லை. ஆண் பிள்ளைகள்  உள்ள அம்மாக்களின் செயல் சொல்லவே வேண்டாம்.   இந்த குணம் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு இல்லாது பெண்களால் முதிர் வயது கணவர்கள் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  உணர்வு பூர்வமாக ஒரு உறவை பேணாது கடவுள் பக்தி, பிள்ளைகள் பாசம், பேரபிள்ளை பாசம் என்ற சில முகமூடிகள் அணிந்து கொண்டு பழைய பாத்திரம் போல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர் சில பெண்கள்.  சில பண நடமாட்டம் உள்ள ஆண்கள் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து இன்னும் சில சிக்கல்களில் மாட்டி  தங்கள் மரியாதையும் இழந்து வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
இன்னும் சில கடவுள் பக்தை பெண்களின் மனநிலை இன்னும் கொடுமையானது. அவர்கள் கண்ணில் கணவன் பேய் போல் தான் தெரிவார்.  இதில் ‘கணவன் கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லும் ஹிந்து மதமோ ‘யேசு நாதர் சபைக்கு தலை என்பது போல் மனைவிக்கு கணவர் தலையாக இருக்கட்டும்’ என்ற அறிவுறுத்தும் கிருஸ்தவ சமய பெண்களும் ஒருபோலவே உள்ளனர்.  பல வீடுகளில்  வயது கடந்த ஆண்களை அவர் மனைவி மட்டுமல்ல அந்த வீட்டு பேரபிள்ளைகள் எதிர்வீட்டு சோமாரி-பேமாரி என எல்லாரும் கிழவர் என்று அழைப்பதே நடக்கின்றது.

ஒரு பெரும் பணக்காரர் உறவினர் வீடு சென்ற போது அவர்கள் வீட்டு ‘பொமேரியன் நாய்க்கு’  இருக்கும் செல்லம் அவர் கணவருக்கு கொடுப்பதாகவே தெரியவில்லை.   நாய்க்கு பேன்-செள்ளு  பார்த்து விட்டு கொஞ்சும் அந்த அம்மா; கணவருக்கு நாய்க்கு என்பது போல் சாப்பாட்டை  மேசையில் மூடி வைத்து விட்டு பக்கத்து வீட்டு மாமியுடன் கதையடிக்க சென்று விடுவார். 

சமீபத்தில் ஒரு பெரியவர் 70 வயது கடந்து மரித்த போது வீடியோ படம் எடுத்து பல பாதிரியர்களில் பிரார்த்தனைகளுடன் சிறப்பாக அடக்கம் செய்து அந்த வீட்டு நபர்கள் கண்ணீரும் கம்பலுமாக துக்கம் கொண்டாடினர்.  அந்த முதியவர் பெரும் பணக்காரர் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தில் ஒரு சட்டம் படிக்காத நீதியரசராகவே இருந்தார்.   பல சண்டைகளுக்கு தீர்ப்பு வழங்கினார். ஆனால் அவருக்கு 65 வயது நெருங்க மனைவியிடம் கரண்டி அடி வாங்குவதும் மருமகளிடம் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவதும் என துண்டாடப்பட்டவர் கடைசியாக அவர் செய்யும் தொழில் எல்லாம் அவர் மகன்களின் கட்டுபாடில் கொண்டு வரப்பட்டு;  நீதிபதி நாற்காலியில் இருந்தும் வலுகட்டாயமாக கீழை தள்ளப் பட்டு கடைசி நாட்களில் மனநிலை  மருத்துவமனையில் காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப் பட்டார்.   அவர் இறந்த பிறகு அவரை புகழ்ந்து, கண்ணீர் விட்ட பிள்ளைகள் அவர் உயிருடன் இருந்த போது அவரிடம் பரிவுடன், அன்புடன் பேசினார்களா என்று தெரியவில்லை!

 சமீபத்தில் என் நெருங்கிய உறவுகாரர்கள் வீட்டில் சென்றிருந்தேன். அந்த வீட்டு பெரியவர் 20 வருடம் முன்பு 4-5 வேலைகாரர்கள் சகிதம் கடை, நிலம் போன்றவற்றுக்கு முதலாளியாக இருந்து இன்று மகனிடம் எல்லா பொறுப்புகளும் கொடுத்த நிலையில் அவர்  பேரிலுள்ள சொச்சம் வங்கியிலுள்ள பணத்தையும் மகனிடம் கொடுக்க சொல்லி தன் மனைவியிடமே திட்டு பட்டு உயிர் வாழ்கின்றார். ஒரு காலத்தில் கணவரிடம் பிடிக்குள் இருந்த மனைவிகளால் எப்படியாக இவ்விதம் நடந்து கொள்ள இயல்கின்றது என்பதே புரியாத புதிர்!

நெல்லையில் பத்திரிக்கையாளர் சங்கம் ஒரு புகைப்படம் கண்காட்சி நடத்தியது, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் அறிவித்திருந்தனர்.   நாங்கள் பல மைல்கள் பயணம் செய்து படம் பிடித்து வந்தோம். எங்கள் உடன் படித்த மாணவி அவருடைய பக்கத்து வீட்டு முதியவர் தன் மனைவியை குளிப்பிப்பதை படம் பிடித்து வந்திருந்தார்.  இந்த படத்தில் என்ன உள்ளது,  பொழைப்பத்த தாத்தா என்று எண்ணி கொண்டேன் என் மனதில்.  அத்தோழியிடம் ரகசியமாக கேட்டேன் இந்த போட்டோ செட்டப்பா என்று.  அவர் கூறினார் இந்த காட்சி 4 வருடமாக காண்பதாகவும் பாட்டி குளிக்க சோப்பல் கொண்டவர் என்றும் தாத்தா 2 நாட்களுக்கு ஒரு முறை சுள்ளி கம்பு சேகரித்து வெண்ணி வைத்து நடக்க இயலாத பாட்டியை தூக்கி வந்து குளிப்பிப்பதாகவும் பாட்டி முதியவரை திட்டி கொண்டே குளிப்பதாகவும் கூறினார்.

500 அதிகமான புகைப்படங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் பார்வையாளர்களை சிறப்பாக முதியவர்களை கவர்ந்த புகைப்படம் அதுவாகவே இருந்தது.  சிலர் அந்த புகைப்படம் பக்கம் நின்று தொட்டு பார்த்து உண்மை தானா என்று உறுதி படுத்திகொண்டனர் சிலரோ அப்படம் விட்டு நகராது நோக்கி கொண்டே நின்றனர்.  மேடையில் பேசிய தலைவர் (முதியவர்) அன்புக்கு எடுத்து காட்டாக அப்படத்தை எடுத்து கூறினார்.

மனிதன் நேசிக்கவும் நேசிக்கபடுவதற்க்கும் வயதோ  நிலையோ வரம்பல்ல.  அவன் எவ்வயதிலும் நேசிக்கப் பட விரும்புகின்றான் சிறப்பாக மனைவியிடம் தள்ளாத வயதிலும் அன்பு, பாசம் எதிர்பார்க்கின்றான் என புலன்பட்டது.  பல பெண்கள் கணக்கு பார்த்து பழிவாங்கும் காலமாகாவே பார்க்கின்றனர் முதுமையை.  அவருடைய கூடாத பருவ வயது கள்ள காதல், தன் அம்மாவுடன் சேர்ந்து தன்னை துண்புறுத்திய நாட்களுக்கான தண்டனை காலமாக எடுத்து செல்வதும் வேதனையை.   வெறுப்பு, புறக்கணிக்கல், ஏளனம் என்ற தீயால் தங்கள் கணவர்களை சுட்டு எரிக்க நினைத்தால் ஒரு போதும் ஆண் பாவத்தில் இருந்து தப்பிக்கல் ஆகாது என்று உணர வேண்டும்.  புல் போன்று சடுதியில் காயும் இவ்வாழ்வில்  அன்பு, காதல், நேசம் பாசம் மட்டுமே என்றும் வாழ்வது என்பதையும் மறக்கல் ஆகாது!!!!

30 May 2011

தமிழனை இளிச்சவாயனாக்கும் தமிழக ஊடகம்!


சமீப நாட்களாக இணையத்துடன் சங்கமித்துள்ளதால் செய்தி தாள், வார இதழ் இணையம் வழி பெறப்படுவதால் பத்திரிக்கைகள் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பதை மறந்திருந்தேன்.  சுயபுராணமற்ற கருத்தாக்கமுள்ள பல கட்டுரைகள் மற்றும் செய்திகள் இணையம் வழி தேடி கண்டுபிடிக்க இயல்வதால் வலையே சரணம் என்று சமீப நாட்களாக போய் கொண்டிருந்தது என் வாசிப்பு உலகம்.

கடந்த நாளில் ஆனந்த விகடன் என்ற பத்திர்க்கை வாங்கும் சூழலுக்கு தள்ள பட்டேன். ஒரே பத்திரிக்கை அலுப்பை தரும் என்பதால் தொடர்ந்து ஒரே பத்திக்கை வாசிக்கும் வழக்கம் இல்லாதிருந்தது எனக்கு.     ‘சண்டே இந்தியன்’ போன்ற பத்திரிக்கை செய்திகள் மேட்டு குடி மக்களுக்கு என ஆகிய போது ஜூனியர் விகடன், நக்கீரன் போன்றவை  கொலை கற்பழிப்பு  புறம்-கூறுதல் என தன் வாசகர்களை இட்டு சென்ற போது; ‘இந்திய டுடே’ போன்ற பத்திரிக்கைகள் சாரமற்ற அரசியல் விவாதித்த போது, குமுதம் குங்குமம் போன்றவையோ  சினிமா செய்திகளாகவே வழங்கியது ஆனந்த விகடன் போன்றவை கொஞ்சம் துணிவுள்ள, சிறப்பாக ஆளும் வர்கத்தை கேள்வி கேட்கும் செய்தி தருகின்றது என கண்ட பொது ஆனந்த விகடன் பரவாயில்லை என்ற தோன்றல் அதுடன் ஒரு ஈர்ப்பு உருவாக காரணமானது.

இந்த வாரம் ஆனந்த விகடன் ஒரேடியாக தன் சுய புராணம் பாடுவதை கண்டபோது ஆனந்த விகடன் மேல் இருந்த பிரியவும் வெயிலை கண்ட பனி போல் உருகுவதாக உணர்ந்தேன்.  15 ரூபாய்க்கு வாங்கி 15 மணி நேரம் வாசிக்க தகுந்த செய்திகள்   பெற இயலவில்லை என்பதே என் வருத்தம்! வரட்சியான குளறுபடியான எழுத்து நடை ஆழமற்ற அர்த்தமற்ற செய்திகள் பத்திர்க்கை நேர்த்தியற்ற வார்த்தை பிரயோகம் தற்பெருமை கொண்ட கட்டுரைகள் என அணி வகுத்து இருந்தது.

உதாரணமாக ஒரு அரசியல் கட்டுரையின் தலைப்பு இப்படியாக இருந்தது “டீக் கடைக்காரர் நீதி அமைச்சர் மாடு மேய்த்தவர் கால் நடை அமைச்சர்”. டீக் கடை வைத்திருப்பவர் எந்த விதத்தில் குறைந்தவர் பல பேருக்கு வேலை தருகின்றார்;  மேலும் மாடு மேய்த்தவர் என்ற கட்டுரையிலுள்ள அமைச்சர் அந்த கால பியுசி படித்தவர் அவர் விவசாய தொழில் செய்பவராம்.  சாதாரண மக்களின் அடையாளப்படுத்தல் தான் பத்திரிக்கையுடையதுமா? அடுத்தவர்களை அவர்கள் செய்யும் தொழில், ஊதியம் சார்ந்து குறைவாக இடைபோடும் இழிவான குணம் நம் இந்திய தமிழர்களிடம் மட்டும் முள்ள அற்ப குணம் ஆகும். பத்திரிக்கை எழுத்து வழியாகவும் இதையையா போதிக்கின்றது பத்திரிக்கைகள்!!  ரோமில் பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூறினார் வெளிநாட்டில் கழிவறை கழுபவர்களும், பொரியாளரும் மனிதர்கள் என்ற நிலையில் ஒரே மதிப்பே பெறுகின்றனராம்.  மனிதரை மனிதராக பார்க்கும் பண்பு நம்மவர்களுக்கு மிகவும் குறைவே.   மனிதனை விட அவன் பார்க்கும் தொழில் வருமானமே கண்ணில் தெரிவதாக நாம் உணர்ந்தது உண்டு பல இடங்களில்.   தமிழக சூழலில் அரசு ஊழியர்கள் அழுக்கு படாத  சட்டையணியும் அதிகாரிகள்  தவிர்த்து மற்றவர்களை இளக்காரமாக பார்ப்பதும் பேசுவதும் சகஜமே. இதை தான் பத்திரிக்கைகளும் போதிக்கின்றதா?  மாடு என்று அழைப்பது கூட இந்திய கலாச்சாரம் என்ற நிலையில் சரியானதா ‘பசு’ என்று  அழைத்து கோமாதாவாக வணங்கும் மக்கள் கொண்ட நாட்டில் அதை பராமரிப்பவரை இந்த அளவு இளக்காரமாக வர்ணித்து புகழத் தான் வேண்டுமா?

 பத்திரிக்கையை வாங்கி  வாசிப்பவர்கள் அதை புகழ வேண்டும் பத்திரிக்கை தன் பத்திரிக்கையை பற்றி தன் எழுத்தால் புகழ்ந்தால் அதன் அர்த்தம் என்ன ?, தங்கள் தரத்தில் தங்களுக்கே சந்தேகம் வந்து விட்டது என்பது தானே. இது ஆனந்த விகடன் மட்டுமல்ல ‘இளைய தலைமுறை’ போன்ற பத்திரிக்கைகளுக்கும் இதே நோய் உண்டு தான்.  தாங்கள் மட்டுமே சரியான பத்திரிக்கை நடத்துவதாக பீற்றி கொள்வார்கள்.  ஆனால் உண்மையில் மக்கள் நலன் கொண்டு வரும் கட்டுரைகள் மிகவும் குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

பக்கங்களை புரட்டியால் சினிமா துணுக்குகள் சினிமா செய்திகள் தான் அதிக இடங்களை ஆக்கிரமித்திருக்கும்(17 பக்கம்). அடுத்தது விளம்பர பக்கங்கள் 16 பக்கங்களில் இடம் பிடிக்கின்றது.  மக்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அரசியல் செய்திகள் வெறும் 10 பக்கங்கள் அதிலும் 4 பக்கம் செய்தி கனி மொழியில் கண்ணீர் கதை!( பாதிப்படைந்த இந்திய மக்களின் கதையல்ல) கற்பனை கதைகளுக்கு 14 பக்கங்களுக்கு தேவைப்பட்ட போது பொது அறிவு செய்தி கள் வெறும் 10 பக்கங்கள்.

படங்களை எடுத்து கொண்டால்   சினிமா கலைஞர்கள் படங்கள்  32 ஆக இருந்த போது அரசியல் வாதிகள் 23 படங்களில் இடம் பிடிக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் படங்கள் தபால் தலை அளவே காண இயன்றது.  சினிம பிரபலங்கள் அரசியல் வாதிகளின் சிலரின் படம் தான் முழு  மற்றும் அரை அளவில் காட்சி தந்தது.  அன்னா ஹஜாரா என்ற சமூக புரட்சியாளரை பற்றியுள்ள கட்டுரைக்கு கூட அவரின் படம் கிடைக்காது காந்தி தாத்தாவின் படமே இட்டுள்ளனர்.

தொலைகாட்சி பக்கம் போய்விடலாம் என்றால் அங்கு பொருட்களின் விளம்பரம், சில சாமியார்களின் அறிமுகம், ஆட்டம் பாட்டு என்றே போய் கொண்டிருக்கின்றது.  

மக்களுக்கு ஊடகம் என்ற கருவி வழியாக செய்திகள் கொணரபட்டு சிந்தனை வளம் முள்ளவர்களாக மாற்றம் பெற வேண்டி இருக்கும்  போது யாருடையோ தேவைக்கான செய்திகளை விசு போன்ற பஞ்சாயத்து  - நாட்டாமைகளின் வழியாக மக்கள் மனதில் புகட்ட முற்படுகின்றனர்.  பகுந்து ஆராய்தல் , கலந்துரையாடல் என்பதை விடுத்து விசுவின் ஞானோபதேசம் மக்களுக்கு நேரடியாக கொடுக்கின்றனர்.   ஒரு பெண் சொல்கின்றார் வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி விசு ஏதோ நாட்டாமை போல் வேலை நாட்டில் கொட்டி கிடக்கின்றது, செய்ய தான் ஆளில்லை வேலை இல்லாதவர்களை என்னை பார்க்க சொல்லுங்கள் நான் வாங்கி கொடுக்கின்றேன் ஆனால் கிடைத்த வேலையில் கேள்வி கேட்காது சேர்ந்து வேலை செய்ய வேண்டுமாம்!!!  

விசுவின் பேச்சு பல பொழுதும் நம் சகிப்பு தன்மையை சோதிப்பது போல் மட்டுமல்லாது அவரை மேதாவி என்று காட்டி கொள்வது போலவே உள்ளது.  பங்குபெறுபவர்களின்  கருத்தை வெளி கொண்டுவராது, அவற்றை ‘காற்றில் பறக்கும் தூசி’ போல் கருதி புரக்கணிப்பது மட்டுமல்லாது அவரின் நியாங்களை நிலைநாட்டவே விரும்புவார்.  அவருக்கு பலபொழுதும் கிரீடம் வைக்காத பேரரசர் என்ற நினைப்பு உண்டு.  அவரின் உடல் மொழி வாய்மொழி  கூட  சுதந்திரமான கருத்துரயாடலை தகர்த்து எறியும் ஹிட்லர் மொழி போன்றே உள்ளது.   வரும் நாட்களில் அவர் வீசி கொண்டிருக்கும் துண்டுக்கு பதிலாக கத்தி , துப்பாக்கி கொண்டு வந்து மக்களை மிரட்டும் காலங்கள் உண்டு  என்பதை மறக்கலாகாது.

சரி, திரைப்படம் பார்த்தாவது காயம் பட்ட மனதை தேற்றி கொள்ளலாம் என்றால் ‘ராம்’ படம் ஓடி கொண்டிருக்கின்றது.  அதில் ஒரு ஆங்கிலபள்ளி ஆசிரியை அவர் மகனை ‘நீ கடவுள் பிள்ளையடா’ என்று சொல்லி வளர்க்கின்றார்.  குந்தி தேவி ‘சூரியனை பார்த்து கர்ணன் வந்தான் என்று சொன்னது போல்’. ஹிந்து சாமியார் சிவப்பு குங்குமம் தர்மம் என பிதற்றி ஹிந்து மதத்தையை கொல்லா கொலை செய்கின்றனர்.  கதை முடிவில்  மிடுக்கான போலிஸ் அதிகாரியை மாணவன் குருவியை சுடும் போல் கொன்று விடுகின்றானாம்!!

இப்படியாக ஊடம் தமிழர்களை இன்னும் புரிந்து செயல்படாது அவர்களை முட்டாள் ஆக்குவதாகவே தெரிகின்றது.  தமிழக பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு  பின்புலனை துறந்து, தேடுதல் அற்ற வெத்து வேட்டாக இருப்பது மட்டுமல்லாது மக்களையும் அர்த்தமற்ற நிலையில் தள்ளுகின்றனர். வலைப்பதிவுகள் மற்றும் இணையம் வழியாக வரும் எழுத்துக்கள் இவைகளை கண்டாவது ஊடகம் தன்னை திருத்த முயலாவிடில் வரும் நாட்களில் மக்கள் ஊடகத்தை என்று என்றைக்கும் வெறுக்கும் காலம் சமீபத்தில் வரும் என்று மறக்கல் ஆகாது!!!!

19 May 2011

திரும்பி பார்க்கையில்………மே - 19

 14 வருடம் முன்பு இதே நாளில் பட்டு சேலை - நகையுடன் அன்றைய நாள் கதாநாயகியாக,  உலகிலே அதிக மகிழ்ச்சி கொண்ட பெண்ணாக  திளைத்தார் இந்த ஜோசபின்.      1 1/2 வருடம் முன்பே பெற்றோரால் நிச்சயிக்கப் பட்டது என்றிருந்தாலும் அது காதலாக பரிணமித்திருந்தது அப்போது!   கன்னம் சிவந்த  சிரிப்புடன் நின்ற என்னை அவர் சகோதரி அளவாக சிரிக்க பணிந்தார் ஆனாலும் துள்ளி வந்த சிரிப்பு ஓயவில்லை என் முகத்தில்.  


தமிழ் சினிமாவில் போன்று இருப்பதல்ல திருமண வாழ்கை என்ற குறைந்தபட்ச அறிவு இருந்திருந்தாலும் கூட என்னை மூழ்கடிக்கும்,   இரவெல்லாம் அழுது மயங்க வைக்கும்  துயரம் வர உள்ளது  என்று நான் அறிந்திருக்க வில்லை.  வலது கால் வைத்து என்னவர் வீட்டுக்குள் நுழைந்தேனோ இல்லையோ 6 மாதத்திற்க்குள் பணம் என்ற பிரச்சனையால் வெளியில் தூக்கி எறியப்பட்டேன்.   அப்பாவிடம்  பொருள் வேண்டாம், எங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமாக பொருள் உள்ளது என்று என்னவர் பெற்றோர் கூறிய போது பொருள் தான் வேண்டாம் பணமல்ல என்று என் அப்பா புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்தது போல் காட்டி கொள்ளவில்லையா என்று தெரியவில்லை, ஆனால் ஆரவாரமாக தேங்காய், பழம் மாற்றி சம்பந்தம் ஆனவர்கள் திருமணத்தன்று கீரியும் பாம்புமாக உறுமி கொண்டு நின்றனர்.  ஆனால் இதயம் நிறைந்த அன்புடன் நாங்கள் இணைய துடித்து கொண்டிருந்தோம்.  இரண்டு குடும்பத்திலும்  மறுபடியும் வசந்தகாலம் விரியும் என்ற நம்பிக்கையில் சேர்ந்த நாங்கள்; எப்போது பிரியலாம் என்று நேரம் தேடியதாக மாறினது எங்கள் மண வாழ்க்கை.  வாழ்க்கையில் தெளிந்த மேகத்தை விட இடி மின்னலுடன் மேகமூட்டமான சூழலாகவே இருந்தது பல நாட்கள்.  அந்த நாட்களில் தான் மிக்சி , அரைகல் விலை என்னவென்றும் அவைக்கும் மகிழ்ச்சியான  திருமணத்தை தீருமானிப்பதில்  பங்கு உண்டு என தெரிந்தது.  காதல் கணவர் சட்டினியில் தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தேன் என்பதற்க்கு கோபித்த போது தான் திருமண வாழ்க்கைக்கு அப்பழுக்கற்ற அன்பும் காதலும் மட்டும் போதாது கொஞ்சம் சமையலும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றம் புரிந்தது.

திருமணம் முடிந்தவுடனே எங்களுடன் இருக்கின்றாயா  அல்லது தனியாக செல்கின்றாயா என்ற போது கூட்டத்துடன் சேர்ந்து  இருப்பதே நலம் என்று எண்ணிய எனக்கு மாமியார் சொன்ன வார்த்தை “நாங்கள் உன் அப்பா பணத்திற்காக தான் உன்னை கட்டியுள்ளோம்” சிந்திக்க வைத்தது மட்டுமல்ல சிங்க கூட்டில் கிடைப்பதை விட தனிமையிலும் சுகம் உண்டு என்று தெரியவைத்தது.   என்னவர் வீட்டில் நான் ஒரு தனி மனிதையாக ஒதுக்கப் படுவதையும் குடிக்கும் காப்பியில் இருந்து கிடக்கும் மெத்தை வரை எனக்கு என்ற ஒரு தனி நீதி உண்டு என்ற போது திருமணம் வெறும் நிகழ்வாக மாறிவிட்டது  எனக்கு.

ஒரு மாலைப் பொழுது குடும்ப சம்மேளனத்தில் என் மாமனார் “இந்த திருமணத்தால் எனக்கு என்ன லாபம்?”, என்று கேள்வி கேட்ட போது தான் முதல் முதலாக இந்த திருமணம் கொண்டு எனக்கு என்ன லாபம் என்று சிந்தனை கொள்ள ஆரம்பித்தேன்.  என்னவருடன் ஊர் சுற்றலாம் என்ற நினைப்பில் இருந்த எனக்கு, கிடைத்த முதல் செய்தி என்னவர்  திருமண காணொளி எடுத்த கணக்கில் அவர் அப்பாவிடம் இருந்து வாங்கிய 6 ஆயிரம் ரூபாய் கடம் தீர்த்த பின்பு தான் பேருந்து பயணச் சீட்டு எடுக்க அனுமதி உண்டு என்பது தான்!!

அப்பா அடுப்பு வாங்கி தரவில்லை என்பதால் முதல் முதலாக குழல் பிடித்து அடுப்பு ஊதி பத்த வைத்து இருமி கொண்டிருந்ததும், அப்பா மெத்தை வாங்கி கொடுக்கவில்லை என்ற கோபத்தில் அவர்கள் வீட்டு பஞ்சு மெத்தை என்னவருக்கு கூட கொடுக்க மறுக்கப் பட்ட போது நான் குளிரில்லாது தூங்க அத்தான் சாக்குகளால் மெத்தை உருவாக்கியதும் அதை புலனாய்வு அதிகாரி போல் கண்டு பிடித்த என் அம்மா ‘நானா நீயா’‘ என்று சண்டையிட்டு எரியும் தீயில் எண்ணை விட்டு  அது கொளுந்து விட்டு எரிந்து;  அவர்கள் வீட்டை விட்டு  துரத்தி,தல்  6 மாதத்திற்க்குள் அகதியாகவும் அனாதையாகவும், அனாமத்தாகவும் உருமாற்றப்பட்ட போது தான் திருமணம் எவ்வளவு சிக்கலானது என்ற புரிதல் வந்த போது வாழ்க்கையே அர்த்த சூனியமாகப் பட்டது.


திருமணம் என்ற  பந்தத்தால் பிறந்த வீட்டில் என்  உரிமை  பறிக்க பட்டது மட்டுமல்ல புகுந்த வீட்டில் உரிமைக்காக போராடினால் வாழக் கூட வழியற்று போவேன் என்று அறிய வந்த போது என் மனம் எல்லாரையும் எப்படி பழி வாங்குவது என்று துடித்து கொண்டிப்பதும் எனக்கே தெரிந்தது.  தூக்கு போட்டு செத்தால் நாக்கு தள்ளி கோரமாக இருக்கும் என்றும்  மண்ணெண்ணையை ஊற்றினால் மாமியாருடன் என்னவரும் களி திண்ண வேண்டும் என்றும் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் கோர்ட்டு படி ஏறினால் அப்பா மானம் போய் செத்து விடுவார்  என்றும் கண்ட போது தான் எலிப்பொறியில் அகப்பட்ட பெருச்சாளியா, வேடன் வலையில் விழுந்த புறாவா அல்லது புலியின் முன் விழுந்த மான் தானா என்று தெரியாது புலம்பி தவித்தேன்.

கடவுளிடம் அதீத  பக்தையான  ஆன அம்மா சொன்னார் தாத்தா செய்த பாவத்தின் பலன் தான் என் வழியாக விடிந்தது  என்றும் அப்பாவோ விதியின் சதியென்றும் சொன்ன போது என்னை நான் முதல் முதலாக தேட ஆரம்பித்தேன்.  பல மணி நேரம் பைபிள் படித்தேன் கதை புத்தகங்கள் என் ஆகாரமாயின.

அந்த வருடம் எங்கள் மகனும் பிறந்தான்.  மகனின் சுறு சுறுப்பான வளர்ச்சி வாடிய என்னையும் தளிர செய்தது .  பொறுப்புள்ள அம்மா ஆகி கொண்டே இருந்தேன் பல பிடிவாதங்கள் மகனுக்காக விட்டு கொடுத்தேன்.  காதல் தீயை விட அன்பு தீ தான் அப்போது எனக்கு என்னவரிடம் பற்றி பிடிக்க உதவியது. எங்களை இணைக்கும் கயிறாக பல பொழுதும் எங்கள் மகன் உருமாறினார்.  சில பொழுது தீர்க்க முடியாத பல சண்டைகளுக்கும் அவனே தீர்வாகினான் நாங்களும் மறக்க வேண்டியதை மறக்க துணிந்தோம் அதனால் பிரிதல் விட புரிதல் எங்களை தேடி வந்தது.

போட்டி போட்டு கொண்டு அறிவுரை நல்கிய  -அவருடைய பெற்றோர், சம்பளம் கிடைக்காது இருந்த  போது கண் மூடி பால் குடிக்கும் பூனையாகவே இருந்து பார்த்து கொண்டு இருந்தனர் .  ஒரு வங்கி பணிக்கு நான் தேர்வாகிய போது அதை பொறுப்பாக பெற்று தர என் பெற்றோரோ அவர் பெற்றோரோ முன் வரவில்லை.   அன்று தான் நாங்கள் புரிந்து கொண்டோம் பெற்றோர் பாசம் கூட பல பொழுது வேஷம் ஆகிவிடக் கூடும்  என்று.

இருவர் வீட்டு எதிர்ப்பையும் மிஞ்சி கேரளாவில் இருந்து தமிழகம் தூத்துகுடி வந்து குடியேறினோம். அழகான நாட்கள் தொடங்கி விட்டது என்று ஆயிரம் கனவுகளுடன் முதல் மகன் துணைக்கு  அடுத்தவருக்கும்  வரவேற்ப்பு கொடுத்த மறு மாதமமே அத்தான் வேலை போய் வீடு வந்து சேர்ந்தார்.  பின்பு அப்பா கொடுத்த நகை கொஞ்சம் நாள் சோறூட்டியது, வீட்டு வாடகையும்  கொடுக்க செய்தது.  தூத்துக்குடி அழகான கடல் கொண்ட முத்தான ஊர் என்றால் கூட போதிய சம்பளம் இல்லாது  அங்கு வாழ்வது பெரும் சுமையாகவே இருந்தது.  7 வருடம் முன்பு, ஒரு லாரியை பிடித்து வீட்டிலுள்ள கட்டில் அலமாரையுடன் நெல்லை பட்டணம் வந்து சேர்ந்தோம்.  வாடகை வீடு வாழ்க்கை நரகமாக தென்பட்டபோது   கொஞ்சம் மிதி பட்டாவது மாமியாரிடமே வாழலாம் என்று முடிவெடுத்து கைகுழந்தையுடன் சென்ற போது உங்களால் மாதம் எந்த அளவு பணம் தர இயலும் என்று கேட்டு விட்டு, எங்களுக்கு தங்கவே இங்கு இடம் பத்தாது, வேண்டுமென்றால் எதிர்வீட்டில் வாடகைக்கு இருந்து கொள் இரவு வந்து நடு ஹாளில் படுத்து கொள் என்று சொல்லப் பட்டது எங்களுக்கு. 

அழுது கலங்கிய கண்ணுடன் உடைந்த மனதுடன் வந்து வீட்டில் கட்டளையில் வைத்துள்ள குடத்தை எடுத்து அதன் உள்ளில் பொட்டலமாக கட்டி வைத்திருந்த நகையை எடுத்து என்னவ்ரிடம் கொடுத்து நகையை வீடாக மாற்றி தாருங்கள் என்று பிடிவாதமாக கேட்டேன். அவரோ நகையில்லாது இருந்தால் உன் வீட்டு விசேஷங்களுக்கு கூட அழைக்க மாட்டார்கள் என்ற போது எனக்கு வசிக்க மட்டுமல்ல, வாழ ஒரு வீடு இருந்தே ஆக வேண்டும் என்று மட்டும் பட்டது.  வீடு முகவரி மட்டுமல்ல தன்மானம், நம்பிக்கை, அமைதி எல்லாமே அதில் தான் அடங்கி இருந்தது. 

 ஒரு நாள் என்னவர் வந்து கல்லூரியில் சென்று படிக்கின்றாயா என்று வினவினார் தபாலில் என்று நினைத்தே தலையாட்டினேன். ஆனால் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு என்னையும்  பல்கலைகழகம் அனுப்பி அழகு பார்த்தார்.

பல நாட்கள் காலையிலும் மாலையிலும் 1 மைல் தூரம் நடந்து சென்று பேருந்து பிடித்து, அந்த பேருந்தில் இருந்து அடுத்த பேருந்தை பிடித்து 1 மணி நேரம் பயணம் செய்து தங்க மெடலுடன் ஜெயித்த பின்பு தான் என் ஆன்மா அடங்கியது.   வாழ்க்கையை காய்ந்த இலையாக நோக்கிய எனக்கு என் வாழ்வில் உள்ள தளிர் இலையை காட்டி தந்ததும் , என்னை மட்டும் நோக்கி நோக்கி அழுது புரண்ட என்னை அடுத்தவர்களையும் நோக்க செய்ததும்  நேற்றைக்கும் நாளைக்கும் இல்லாது இன்று, இந்த நாளுக்கு என்று வாழ இட்டு சென்றது கல்வி ஞானம் மட்டுமல்ல நல்ல நட்புகளும் தான்!

இன்றும் வழியெல்லாம் ரோஜா புஷ்பங்கள் விரிந்து கிடக்கவில்லை  . இப்போதும் என்னவருடன் கட்டி புரண்டு சண்டையிடுவது உண்டு ஆனால் அடுத்த கணம் கட்டிபிடித்து அவரிடம் அடங்கி போவதும்  சிலபோது அவரையும் அடக்க துணிவு நல்குகின்றது.  வாழ்க்கையை ரசனையுடன்  நோக்கவும் சம்பவங்களை தெளிவாக பார்க்க  கற்று தருகின்றது அனுபவங்கள்.
 
14 வருடங்கள் திரும்பி பார்க்கும் போது  என் பொறுமையற்ற குணத்தால், சகிப்பு தன்மை இல்லாததால், முன்கோபத்தால் பலவற்றை இழந்து முட்டாள் ஆனேன். ஆனால் ஒன்றை தவிற அதுதான்  என்னவரை இறுக்க பற்றி கொண்டு  பிரியாது வாழ்ந்த ஒரே புத்திசாலித்தனம்!  இந்த முடிவே  இந்த பதிவை எழுத கூட எனக்கு  வாய்ப்பு நல்கியது.





17 May 2011

தேர்வுகள் தோல்விக்கு அல்ல!!!


+2 தேர்வு முடிவு அன்று, பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன்.   ஓர் மத்திய வயதை எட்டிய பெண் பேருந்தில் முன் இருக்கையில் ஒட்டி இருந்து கொண்டு பரபரப்பாக அலை பேசியில் தனக்கு தெரிந்த குழந்தைகளின் தேர்வு முடிவைப் பற்றி வினவி கொண்டிருந்தார்.  அவர் முகம் போர்க் களத்தில் “வாழ்வா சாவா” என்று நிற்க்கும் படைவீரருடன் ஒத்து இருந்தது.  ஒன்று இரண்டு பேருடைய  அல்ல தனக்கு தெரிந்த பலருடைய தேர்வு முடிவு பற்றியும் கேட்டு அறிந்து  கொண்டிருந்தார்.   என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் பெண் 1050 க்கு மேல் எடுத்து விடுவாள் என்றும் ” மருத்துவம் தான் எடுக்க சொல்லியுள்ளதாகவும், கட் ஆஃப்  மார்க்கு 97, இருந்தால் தான் விரும்பிய மருத்துவ கல்லூரிக்கு செல்ல இயலும் இல்லா விடில் பயோடெக்நோலஜி எடுக்க பணிந்துள்ளதாக    நண்பியிடம் தன் கடைசி தீர்ப்பை வெளியிட்டு கொண்டிருந்தார்.  இன்னும் பரபரப்பு விட்டு அகலவில்லை முதல் வரிசையில் இருக்கும் பெண்ணுக்கு!!  அவருடைய ஆர்வக் கோளாறு எண்ணி மனதில் எரிச்சல் பட்டு கொண்டே பயணம் தொடரும் போது என் நிறுத்தம் வந்து விட்டது.

எங்கள் பள்ளி தேர்வு முடிவு நாட்கள் மனதில் ஓடியது,  தேர்வு முடிவு நாட்கள் மட்டுமல்ல அந்த வருடமே ஆபத்து ஆனது தான். உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள் பக்கத்து வீட்டுகாரார்கள் என எல்லோர் கண்ணிலும் நாம் தான் தெரிவோம்.  பார்க்கும் போது எல்லாம் படிப்பு எப்படி செல்கின்றது, என்ன மதிப்பெண் எடுத்து விடுவாய், வாழ்க்கையே இதில் தான்  என அன்பான, ஆக்கபூர்வமான, கேலியான என பலவித அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.  பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவு என்பதில் தன்மானம் சார்ந்த சில நோக்கங்கள் எதிர்பார்ப்புகளும் உண்டு என்று மறுக்க இயலாது.

என்னுடைய பள்ளி படிப்பு, அரசு பள்ளியில் தான், மாணவர்கள் எண்ணிக்கை 100 க்கு மேல் அதில்  10 மாணவர்கள் மட்டுமே ஜெயிப்பவர்கள் என்று அடையாளப்படுத்தி படிக்க வைப்பது உண்டு. அதிலும் முதல்வர்  லெக்ஷ்மி குட்டியம்மா  நாவு கருநாக்கு என்பதால் அவர் வாயில் விழுந்தால் அந்த வருடம் சோகா தான் என்று பயந்து நடுங்கியே அவரை கண்டு நாங்கள் பதுங்கி ஒதுங்கி ஓடுவோம்.  அதையும் தாண்டி சில மாணவர்களை அவர் அழைத்து “நீ குணம் பிடிக்கில்லடா” என்று வாழ்த்தியதால் தேர்வு எழுதாதே பள்ளி விட்ட மாணவர்களும் உண்டு.  

எங்கள் பள்ளியில் தரமான ஒரு மாணவியாக இருந்தாலும், ப்ரீ டிகிரிக்கு கல்லூரி சென்ற போது வகுப்பில் 40 மாணவிகளில் நான் கடைசி பெஞ்சு மாணவியாக தள்ளப்பட்டேன்.  கேரளாவின் கல்வியின் தொட்டில் கோட்டயம்! உடன் படித்த மாணவிகளின் பெற்றோர் உயர் பதவியில் உள்ளோர், அல்லது வெளிநாட்டு உள்நாட்டு தொழில் அதிபர்களின் வாரிசுகள் என்று கல்வி பணம், பதவி உள்ள பெற்றோரின் வாரிசுகள் எங்களுடன் படித்தனர்.  முட்டாள் பெஞ்சில் இருந்து படித்து கொடும் நினைவுகள் கொண்ட நாட்கள் இருப்பினும் அன்பான பண்பான பேராசிரியர்களால் மீண்டு வந்தோம்.

தேர்வு மதிப்பெண் மட்டுமே வாழ்வின் வெற்றியை நிர்ணயித்து விட இயலுமா.  என் பள்ளியில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவி மேல்படிப்பில் திணறிய போது தற்கொலைக்கு முயன்றதாக கேள்விப் பட்டுள்ளேன்.  அதே போல் முதல் மாணவனாக தேற்வாகிய என் ஊர் நண்பர் பல போராட்டம் கடந்து தான் தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளார்.   பல பொழுதும் மாணவர்கள் தேற்வு முடிவு என்ற பெயரிம் கொடிய மன அழுத்ததிற்க்கு பலியாக்கப் படுகின்றனர்.  ஒரு 11 வகுப்பு மாணவி பேருந்து   பயணத்தின் போது அறிமுகம் ஆனார்.  காலையில் 8 மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகும் என்றும் திரும்பி இரவு 7 மணிக்கு தான் வர  இயலும் என்றும், 11 வகுப்பு பாடத்துடன் தாங்கள் வரும் வருடம் படிக்க வேண்டிய 12 வகுப்பு பாடவும் கற்று கொள்ள வேண்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விதமான அதீத வேலைப்பழு  பெண் குழந்தைகள் என்ற நிலையில் உடல் மன நலம் சார்ந்து பாதிப்படைவதையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.  பல மாணாக்கள் நல்ல சாப்பாடு நிம்மதியான தூக்கம் மறுதலிக்கப்பட்டு கடும் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  பயணநேரவும் கொடியதே, கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து உள்ளது போல் பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதியும்   கிடைப்பது இல்லை.  காலை 7 மணிக்கு துவங்கிய போராட்டம் முடிவு பெற இரவு வீடு வந்தாக வேண்டும்.  சில குழந்தைகளுக்கு வீட்டிலும் கொடிய பொழுதாகத் தான் இருக்கும்.  இதில் படிக்காத பெற்றோரை விட படித்த  பட்டதாரிகளான பெற்றோரின் நடவடிக்கை இன்னும் அராஜகமானது!  தங்களால் பெற இயலாது போய் விட்டது, எல்லாம் தங்கள் பிள்ளைகள் வழியாக பெறவேண்டும் என்ற பேராசையில்  தங்கள் குழந்தைகளை பூட்டியிட்ட அறையில் படிக்க செய்வது,  விரட்டி விரட்டி நாலு பேர் அறியும் வண்ணம் அடிப்பது, திட்டுவது என்பது பெற்றோரின் “அக்கரை” என்ற பெயரில் நிகழும் துயரங்கள் எண்ணில் அடங்காதவை!!

கல்வியால் குழந்தைகள் சூழலுக்கு தகுந்தும் எதிர்மறையான சூழலிலும் வாழத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே மிகவும் தேவையானது. மெட்ரிக்குலேஷன் மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் சூழலுக்கு தகுந்து மாறவும் துணிவாக காரியங்களை கையாளவும் தெரிந்தவர்கள்   (emotional intelligent) என்று சில ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் சமூக அக்கரை, போராட்ட குணம் இவர்களிடம் அதிகம் உள்ளதாகவே காணப்பட்டுள்ளது.

குழந்தைகள் தேற்வு வெற்றி மட்டுமே, அவர்கள் வாழ்க்கையின் வெற்றியை நிற்ணயிப்பது இல்லை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களின் உந்துதல் கொண்டு மட்டுமே தேற்வில் ஜெயிக்கும் பல குழந்தைகள், பிற்கால வாழ்வில் போராடி ஜெயிக்க வேண்டிய சூழலில் கோட்டை விட்டு  விடுகின்றனர்.  அதுவாக நடப்பதும் நடக்க வைப்பதும் நிறைய வித்தியாசம் உள்ளது.   பல ஆசிரியர் படித்தவர்கள் வீடுகளில் பிள்ளைகள் வெற்றி என்பது அவர்கள் மதிப்பை நிர்ணயிக்கும்  அளவு கோல் ஆவதால் தேவையற்ற மன அழுத்ததை கொடுத்து குழந்தைகளை தற்கொலை, மற்றும்  மன அழுத்த நோய்க்கு தள்ளுகின்றனர்.   பல குழந்தைகள் படிப்பதை தேற்வில் எழுதும் போது நினைவில் வராது பதட்ட சூழலுக்கு தள்ளப் படுவதும் உண்டு.  சில வீடுகளில் தேர்வில் மதிப்பெண் வாங்கும் குழந்தைக்கு அதிக மதிப்பும் இடமும் தருவது உண்டு. நாலு உறவினர்கள் கூடும் இடத்தில் தன் பிள்ளைகள் என்று பார்க்காது கேலி பேசுவதும் நடந்து வருகின்றது.

எங்கள் வகுப்பில் என் சக மாணவன் ஒருவன் ஒழுங்கீனத்தின் உச்சத்தில் இருந்தான். பெண்களை விரட்டி காதலிப்பது பணியாதவர்கள் பெயரை கெடுப்பது என்று திளைத்து வந்த அவனால்; 10 வகுப்பில் ஜெயிக்க மட்டுமே முடிந்தது.  இன்னொரு தோழனோ எல்லா நன்மைகளில் பதிப்பாக இருந்தான் நேரத்துக்கு வகுப்புக்கு வருவது உடன் படிக்கும் மாணவிகளை மதித்து உதவுவது என்று. நல்ல மதிபெண்களுடன் கல்லூரியிலும் சேர்ந்து படித்தான்.  10 வருடம் பின்பு என்  பிறந்த ஊருக்கு நான் சென்ற போது எனக்கு  அறியக் கிடைத்தது அந்த முதல் மாணவன் காவல் அதிகாரியாக கேரளா அரசு இலாகவில்  பணிபுரிவதும், முன்மாதிரியாக திகழ்ந்த என் வகுப்பு தோழன் எங்கள் ஊரில் எல்லோரின் தூக்கம் கெடுத்தும் மிகப் பெரிய  கொள்ளைகாரனாக மாறியுள்ளான் என்பதுமே.  

என் வகுப்பு  சில தோழர்களை காணும்  போது நான் ஆச்சரியப்படுவது உண்டு வகுப்பு அறையில்  ஆசிரியரின் செல்ல பிள்ளைகளாக இருந்த பலர் வீட்டில் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை என்றும், சிலர் வாழவே வழியற்று தற்கொலை செய்து கொண்டும் உலகையே விட்டு சென்ற போது  எல்லோராலும் கேலி பேசப்பட்ட சில தோழர்கள் மகிழ்ச்சியான தன்னம்பிக்கையான வாழ்க்கை சூழலில் வாழ்கின்றனர்.

என் வகுப்பு தோழியை ஒரு பந்தயக் குதிரையாக அவர்கள் பெற்றோர் வளர்த்தனர்.   அவருடைய நட்பு, ஆசைகள் எல்லாவற்றுக்கும் தடையிட்டனர்.   அவர்கள் விரும்பியது போலவே அவர் ஓர் உயர் வேலையுடன் அமெரிக்காவில வசிக்கின்றார்.   ஆனால் அவர்கள் பெற்றோரை அவர் கண்டு கொள்வதில்லை என்ற துயரில் உள்ளார்களாம்.

வீட்டில் வரும் ஒவ்வொரு விருந்தினர் கேள்வியும் பையன் /பிள்ளை படிப்பு எப்படி போகின்றது என்பதாகும். மேலும் தேற்வு நெருங்கும் வேளையில் உபதேசம், தேர்வு நாட்களில் கூட தேர்வு அறைக்குள் ஊடகத்துடன் கலெக்டர்கள் புகிர்வதும் பறக்கும் படையின் பதற வைக்கும் பணியும் வருந்தக்க தக்கதே. வெற்றியை அதீத ஆர்பாட்டமாக கொண்டாடுவதும் தோற்றவர்களை கேலியாக நோக்குவதுடன் உதாசீனப்படுத்துவதும் அவர்கள் வாழ்க்கையை அழிக்கவே உதவும்.  கல்வித் துறைகூட 8 வகுப்பு வரை முகாந்தரம் இல்லாது ஜெயிக்க வைத்து விட்டு 10 அல்லது +2 ஈவு-இரக்கம் இன்றி மாணவர்களை தோற்க்க வைப்பதும்  வெற்றி எப்படியும் பெற்றாக வேண்டும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் போட்டி சூழலில் தள்ளுவதும் கண்டிக்க தக்கதே!!  

7 May 2011

மாணவர்களுக்கு வேதனை தரும் தமிழ்மொழி !!!!



8ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் என் பார்வையில் கடந்து சென்றது.  பல இலக்கிய பாடங்கள் ஆசிரியர் -மாணவர் உரையாடல்கள் பாணியில் அமைத்துள்ளனர்.  இது ஒரு வித அலுப்பையே தருகின்றது.  அம்மா –குழந்தை,  அப்பா- மகன் உரையாடுவது, நண்பர்களுக்குள் உரையாடுவது என இன்னும் சுவாரசியம் கலந்து உள்படுத்தியிருக்கலாம்.  மாணவர், ஐயா ஐயா என்று கதறி காலில் விழுகின்றது ஏதோ ஒரு நெருடலாகவே உள்ளது.  தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு நகல் பெறுக்கி வேலையில் ஒதுக்கீடு உண்டு என்பதற்க்கு இணங்க “ஆமா சாமி” இனத்தை  உருவாக்கும் நோக்கமா என்றும் தெரியவில்லை. பல ஊர்களில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் டில்லி(Central board), உலகத்தர (international schools) பள்ளிகளாக மாறி கொண்டிருக்கும் நிலையில், சிறப்பாக அரசு உயர் அதிக்காரிகள், பணக்காரர்கள் குழந்தைகளுக்கு இப்பள்ளிகளுக்கு மாறும் சூழலில் சமசீர் பள்ளி பாடத் திட்டம் திட்டமிடப்பட்டே  கொண்டு வரப்பட்டுள்ளதா?

நாங்கள் எஸ்டேட்டில் வாழ்ந்த சூழலில் மேல் அதிகாரிகளை தொழிலாளர்கள்,  மட்டுமல்ல அதிகாரிகள் தங்களுக்குள் ஐயா என்று அழைப்பதிலும் கேட்பதிலும் இன்பம் கண்டிருந்தனர்.  அவர்கள் மனைவி, மக்கள் கூட ஐயா என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதிகார வாஞ்சையுடன் வாழவும் பழகினர்.  ஐயாக்கள் மனைவிகளும் அம்மாக்களாகவும், அவர்களின் தொட்டிலில் ஆடும் குழந்தைகள் கூட ஐயா பிள்ளை என்றே அழைக்க பட்டனர்.  இதன் துவக்கம் பிரிடீஷ் அதிகாரிகள்  தேயிலை தோட்டத்தை ஆட்சி செய்வதில் இருந்து வந்தது என்று சொல்லப் படுவது உண்டு!


பின்பு கல்வி, நாகரிகம் எங்கள் பகுதியை வந்தடைய துவங்கிய போது ஐயா என்று அழைப்பது தன்மானத்திற்க்கு வேட்டு வைப்பதாக கருதியதால் ஒரு தீர்மானத்துடன் சார் (sir) என்று மாற்றி கொண்டனர்; சிலர் பிரத்தியேகமாக அழைக்காது மொட்டையாக அழைக்கவும் கற்று கொண்டனர்.  என்னுடைய ஒரு உறவினர் தமிழகத்தில் அரசு அதிகாரியாக பணிபுரிகின்றார் அவருடைய மேல் அதிகாரியை சக ஊழியர்கள் “ஐயா’ என்றே அழைக்க வேண்டுமாம்.  மேல் நாடுகளில் மாணவர்கள் திரு. என்று சேர்த்து பெயர் சொல்லி அழைக்கும் போது இந்திய மாணவர்களின் மன நிலைமையும் அதற்க்கு எதிர்மறையாக வளர்ப்பதால் உலகச் சந்தையில் தரம் தாழ்ந்த இடம் வழங்கப் பட வாய்ப்புக்கள் நிறையவே உண்டு என்று மறக்கல் ஆகாது!.

 மலையாளிகளுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் வாங்க போங்க என்று அவர்களை பவ்வியமாக அழைப்பது தான்!! ஆனால் அவர்கள் நம்மவர்களை ஒருமையில் அழைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.  தமிழர்களுக்கு அடிமை மனோபாவம் காலா காலம் தொட்டு இரத்தத்தில் ஊறிய பண்பே; எங்கும் அடங்கி போக ஒத்து கொள்வான் இவனை மட்டம் தட்டியே பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலான்மையை நிலைகாட்டி கொண்டு இவனை நடத்தி செல்வார்கள் என்று மறுக்க இயலவில்லை. தமிழன் வேற்று மொழியாரை புகழும் அளவுக்கு நம்மில் ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள, அங்கிகரிக்க தயங்குவார்கள்.

தமிழனுக்கு இரட்டை வாழ்க்கை முறை,கலாச்சாரம், பேச்சு, மொழிப் பற்று, அரசியல் என்பதில் பாடுபாடு இல்லாது அவன் அறியாதே அவனை பின் தொடந்து வருகின்றது.  தமிழன் மொழிபற்று என்று காட்டி கொண்டாலும் ஆங்கிலத்திலும் தங்கிலிஷிலும் கதைத்து தன்னை அறிவாளி என்று  காட்டி கொள்ளும் ஆற்வம் இவனை விட வேறொருவனுக்கும் இருப்பதில்லை.  ஈழத் தமிழர்கள் மறு நாடுகளில் குடிபெயர்ந்திருந்தாலும் தங்களுக்குள் நடைபெறும் தொடர்பாடலுக்கு, ஏன் வெட்டி பேச்சுக்கு கூட தமிழ் மொழியவே பயன்படுத்த  விரும்புவர்.   ஆனால் தமிழகத் தமிழன் அவன் தலைநகரம் சென்னையில் கூட தமிழ் பயன்படுத்த நடுங்குவான், வெட்கப்படுவான். ஒரு விதமான தன்மான மற்ற பொய் மரியாதை கொடுக்கின்றான் மட்டுமல்ல பெறவும் விரும்புகின்றான் என்பதே இதன் காரணம்!!   எல்லா நாடுகளிலும் சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், நோர்வே, கனடா, ஆஸ்தேரிலியா போன்றவற்றில் மட்டுமல்ல ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிலும் அவரவர் தாய் மொழியில் தொடர்பாடல் பேணும் போது தமிழகத்தில் ஆங்கிலம் பேச்சு மொழியாக அறிவு சார்ந்த மொழியாக மாற்றம் பெற்று வருகின்றது என்பது தான் உண்மையிலும் உண்மை!!   சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும் போது வெளிநாட்டு காள்சென்றருகளில் வேலை செய்யும் நபர்கள் உச்ச ஸ்தாயியில் ஆங்கிலத்தில் கதைத்து தங்கள் அறிவை பறைசாற்றி கொண்டு செல்வதை காணலாம்.                                                                                                                                                                                                 அமெரிக்காவில் உணவகம் வைத்துள்ள ஒரு தோழர் கூறுகையில் தமிழக பெற்றோர்கள் தும்முவது கூட ஆங்கிலத்தில் என்று கருதலாக இருப்பார்களாம் பொது இடங்களில்; இவர்கள் வெத்து பந்தாவை வைத்தே தமிழகத் தமிழர்கள் என்று கண்டு பிடித்து விடுவாராம்.   சமீபத்தில் ஒரு அமெரிக்க உறவினரை சந்திக்க நேர்ந்தது.  அவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்து 10 வருடத்திற்க்குள் தான் இருக்க வேண்டும் இருப்பினும் அவர்கள் 12 வயது  மகன் கஷ்டப் பட்டு மாமா என்று உச்சரித்தான். அவர் நெருங்கின உறவினர்கள் அம்மா பாட்டியிடம் கூட உடல் மொழியால் தான் கதைத்து கொண்டிருந்தான். அக்குழந்தையின் பார்வை எங்கள் கேரளாவில், தமிழர்களை மலையாளிகள் நோக்கும் ஒருவித அருவருப்பு, எகத்தாளம் நிறைந்து இருந்தது.  இந்த நிலையில் நம் தமிழக பள்ளியில் தமிழை அழகான பேச்சு மொழியாக கற்பிக்காது வெறியாகவும் அரசியல் நோக்குடன் கற்று கொடுப்பது எவ்விதம் பலன் தரும் என்றே கேட்க தோன்றுகின்றது.


 மரியாதை என்பது மனதில் இருந்து வர வேண்டும், வார்த்தைகளில் மட்டும் ஆகாது.  என் சமீப கல்லூரி நாட்களில், நான் அறிந்த ஒரு இளம் பெண் பிறந்த நாள் அன்று ஆசிரியர்கள் காலில் விழுந்து  ஆசிர்வாதம் பெறுவார் ஆசிரியரிடன் கோபம் வந்துவிட்டால் கீழ்த்தரமாக ஒருமையில் தான் அவரை திட்டுவார் .

நான் என் நண்பர்களுடன் கதைக்கும் போது சார், சார் என்று விளிப்பது உண்டு. இந்த வழக்கம் பெரிய குளம் கல்லூரியில் படிக்கும் போது தான் என்னுடன் ஒட்டி கொண்டது.  எங்கள் கேரளா சூழலில் இப்படியான ஊள கும்பிடும் இடும் சூழல் இருந்தது கிடையாது.   நான் தமிழகத்தில் பெரிய குளம் கல்லூரியில் சேர்ந்த போது என் பெயர், ஊர் பெயர் என்ன என்று ஒரு பெண் பேராசிரியரால் கேட்கப் பட்டது.  பதில் அளிக்கயில் பேராசிரியை, என்னை கடலையை சட்டியில் போட்டு வறுப்பது போன்று சொற்களால் வறுத்து எடுத்து விட்டார்.   நீ எந்த ஊர், ஓ கேரளாகாரியா,  நினைத்தேன் மரியாதை இல்லாது பேசுகின்றாய் என்று  நிறுத்தம் இல்லா பேருந்து போல் போய் கொண்டே இருந்தது அவருடைய கோபம்.  ஒரு கட்டத்தில் என் கண்ணீரை கண்ட போது தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டு எனக்கு மன்னிப்பு தர முன் வந்தார்.  பின்பு என்ன சொன்னாலும் கேட்டாலும் “எஸ் மேம், ஆமாங்க  மேம், இல்லை மேம்” என்று என் பதில் தர பழகி கொண்டேன்.  தற்போது நண்பர்களுடன் கதைக்கும் போது 'நாய் வாலு நிமிராது' என்பது போல் “சார், சார்” என்று என்னால் சொல்லப் படும் போது அவர்கள் கேலி செய்வது உண்டு. அவர்கள் நாடு வழக்கம் பற்றி சொல்லி தருவர்,  தென் தமிழகத்தில் தான் இந்த நோவு அதிகம் என்று கருதிய போது தமிழக பாடப் புத்தகமே போதிப்பது இது தான் என்பது வருந்த தக்கது.ஆனால் பெண்களை பொம்பளை என்றும் வயதானவர்களை கிழவி என்றும் மிக சாதாரணமாக பொது இடங்களில் அழைப்பதும் அதை கேட்டு கேலியாக சிரிப்பதும் தமிழகத்தில் தான் காண இயலும்.  ஒரு வித நாடக தன்மை தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் வாழ்க்கையிலும் உண்டு .  புத்தகத் தமிழுக்கும் பேச்சு தமிழுக்கும் எந்த சம்பந்தவும் இருப்பது இல்லை.  ஆனால் மலையாள மொழியில் இந்த பாகுபாடு காணல் மிகக் குறைவே, மொழியை சாதாரணமாக போதை வெறி கொண்டு அல்லாது பயன்படுத்துவர் !  அவர்கள் மொழியை எந்த அளவு நேசிப்பார்களோ அதே போல் அடுத்தவர் மொழியை பற்றி அறியவும் அவர்களுக்கு ஆசை, ஆவல் உண்டு. பொது இடங்களில் அவர்கள் மொழியில் கதைக்க வெட்கப் படுவது இல்லை.


நான் கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது என் அறை தோழிகள் தமிழ் எழுத்து வார்த்தைகள் என்னிடம் எழுதி ஆற்வமுடன் கற்று கொண்டனர். ஆனால் தமிழகம் பெரியகுளம் வந்த போது மலையாள மொழி மூக்கில் பேசுவது என்று கேலி பேசிக் கொண்டு; தமிழ் மட்டும் தான் உலகிலே சிறந்த மொழி என்ற எண்ணம் கொண்டு ஒரு வார்த்தை கூட கற்று கொள்ள விரும்பவில்லை நம்மவர்களால்.   இந்த மன நிலையால் மற்றவர்களிடம் பழகுவது வேலை பார்ப்பது எல்லாமே அடுத்தவர்கள் தலைமையில்  தள்ளபடும் சூழலுக்கு ஆளாகுன்றனர் தமிழர்கள்!!   



“ஆகுபெயர்” என்ற பகுதியில் 17 தடவை “ஐயா” என்ற வார்த்தை இரு பக்கத்திற்க்குள் வருகின்றது.  கண் திறந்தது என்ற ஒரு பாடம் அதில் கவிதா எழையாம் அவர் அம்மா சொல்வதாக சில வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளது அவை “பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியுமா, உடுப்பதோ கந்தலாடை…….. எதற்க்கு ஐயா படிப்பு என்ற சொல்லாடல்கள் நாடக தன்மை கொடுக்குமே தவிர மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்க்க, சிந்தனை வளம் வளர்க்க உதவாது. மேலும் அரசு அளிக்கு இலவச புத்த்கங்கள், உடுப்பு பற்றிய தம்பட்டம் மாணவர்களின் நல்ல பண்புகளை அழிக்கும் என்பதில் ஐயமில்லை.  மேலும் உண்மையற்ற கிராம விவரணங்கள் நம்பக தன்மையை குறைப்பதுடன் ; அரசியல் வாதிகள் நினைப்பது போல், சினிமா கதைகளில் காண்பது போல் அல்ல இன்றுள்ள கிராம நிலை என்று உணர இயலும்.  கந்தை உடுத்தால் கூட தன்மானத்துடன் வாழ்கின்றனர் கிராம மக்கள். மேலும் குழுவாக உறவினர்களுடன்  வாழ்வதால் அவர்கள் ஆற்றல் தன்னம்பிக்கை மிகுதியானதே.   சொல்ல போனால் நகர்புற மக்கள் தான் தங்கள் வேலை, சம்பளம், சாப்பாடு தொலைகாட்சி என்று அடுக்கு மாடி வீடுகளில் கூண்டு கிளிகளாக வாழ்கின்றனர் .


தமிழர் வானியல் என்ற பாடத்தில் திருக்குரல் பெருமை சேர்த்துள்ளனர்.  திகட்ட திகட்ட சாப்பிடால் வாந்தி வருவது போல் எங்கும் எதிலும் திருக்குரல் என்று நுட்பமாக ஏதோ ஒரு காரணத்திற்காக மாணவர்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு வடிவமைத்துள்ளனர்.  அதில் வரும் பல பாடப் பகுதிகளும் சுவாரசியம் அற்று மாணவர்களை மூச்சடைக்க வைப்பதாகவே தோன்றுகின்றது.

அடுத்தது தமிழர்கள், தமிழ் மொழி என மாணவர்களை கிணற்று தவளையாக வலம் வர பலவந்தப் படுத்துவதாகவும் உள்ளது.  தமிழ்மட்டும் தான் சிறந்தது தமிழ் மட்டுமே உண்மையான மொழி  என்ற தற்-பெருமை ஆபத்தானது மட்டுமல்ல வன்முறையும் கூட!!  நம் கலாச்சாரங்கள் மட்டுமே சிறந்தது என்றால் மற்றவையை பற்றிய நம் அறிவு, தேடுதல் என்ன என்றும் அறிய வேண்டியுள்ளது.

கவிதைகள் கூட 4 வரி கவிதைகள், முழுமையற்ற கட்டுரைகள், நிறைய பொய் மூட நம்பிக்கைகள் என சிந்தனையை அறிவை வளர்க்க, பகுந்தாய்வு திறன் கொடுக்காத வகையில்  எழுதப் பட்டதாகவே உள்ளது.  உதாரணமாக ராமாயணத்தில் புஷ்பக விமானம் உண்டாம் அதனால் தமிழர்கள் அன்றே வானூர்தி பயன்படுத்தியிருந்தனராம்.  ராமாயணம் ஒரு கட்டு கதை சைவ மதத்தை அழிக்க எழுதப் பட்டது என்று உண்மை நிலை உள்ள போது; இவ்விதம் குழந்தைகள் மனதில் பொய்யை திணிப்பதால் என்ன பயன்? என்னதான் நியாயம்?   தமிழ் மொழியை சில நோக்கங்கள் சில குறிக்கோளுடன் தமிழக கல்வித் துறை கற்பழிப்பது மட்டுமல்லாது கொலையும் செய்ய துணிந்துள்ளது என்பதே வருந்த தக்கது.

1823-74ல் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் பாடல் ஒன்று வாடிய பயிரை……………… இந்த காலத்தின் துயர் கொண்ட கவிதைகள் கட்டுரைகள் என்று ஒன்றுமில்லை.  பல பாடங்கள் ஒரு 13 வயது மாணவனை மனதில் கொண்டு தயாரித்தது போல் தெரியவில்லை. இக்கால மாணவர்கள் வாழும் சூழல் அவர்கள் மனநிலை, கற்பனை வளம்  ஒன்றும் கணக்கில் எடுக்காதை இப்புத்த்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது. . வாடிய பயர் கடந்து பாக்கட் தண்ணீர் மணல் கொள்ளை, சுகாதாரம் மற்ற சுற்றுப் புறம் என்று எங்கோ போய் கொண்டு இருக்கின்றது தற்போதய சூழல்.

இதைவிட 1000 மடங்கு அருமையான எழுத்துக்கள் பதிவு உலகில் உலவுகின்றது என்பது உலகறியும் ஆனால் கல்வித் துறையல்ல.   தற்கால எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெய மோகன் , நாஞ்சில் நாடன், ராம கிருஷ்ணன் போன்றோரின் கதைகள், ஈழத்து கதைகள் கவிதைகள் தற்கால கவிஞர்களின் கதைகள் சேர்த்திருக்கலாம்.  ஒரு நண்பர் கல்வித் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் 2435 புத்தகங்கள் வாசித்துள்ளவர், நான் அறிவேன்.   இவரை போன்றோரின் எழுத்துக்கள் மாணவர்கள் மத்தியில் சென்று அடையும் போது தான் தமிழ் மொழி மேல் காதல், பற்று கொண்டு படிக்கும் காலம் வரும் !!!!

3 May 2011

நேர்முகத்தில் காணும் கொடிய முகங்கள்!!!


நேர்முகத் தேற்வு எப்போதும் சங்கோஜத்தோடும் ஒரு வித ஐயத்தோடும் என்னால் நோக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நேர்முகம் நிகழும் போதும் அடுத்த முறை இந்நிகழ்ச்சிக்கு இனி வரப் போவதில்லை என்ற உறுதியுடனே வெளியேறி வருகின்றேன். அணியும் உடையில் இருந்து, செயல் எல்லாம் அளக்கப்படும் மேடை.! இந்திய மரபு அனுசரித்து 6 மீ சேலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் என்னையும் அழைத்துள்ள என்னவருடைய அன்றய பயணம் ½ டண் மூட்டையை சுமந்தது சென்றது போல் இருந்திருக்கும். பானல் என்ற பெயரில் 5 -6 பேர் வரிசையாக இருந்து கேள்வி எழுப்புவதை நினைத்தாலே குளிரூட்ட அறையில் இருந்தால் கூட நான் வியர்த்து நடுங்கி தவிப்பது உண்டு. என் நண்பர்கள் உங்களுக்கு என்ன எளிதாக ஜெயித்து விடுவீர்கள் என்று வாழ்த்துவார்கள். என்னை மதிப்பிட போகின்றார்கள் என்று அறியும் போதே வரும் வார்த்தை தொண்டையில் இருந்து வாய் பக்கம் வர தயங்குகின்றது. நெருங்கிய நட்பு வட்டத்தில் நான் கலகலப்பான நபராக இருந்தால் கூட ஒரு புது கூட்டத்தில் பூனை போல் அவதானித்து கொண்டு பம்மியிருக்கவே எனக்கு எப்போதும் பிடித்தாக இருந்துள்ளது.


சில நேர்முகத் தேற்வுகள் வழமைக்கும் மீறி சுவராசியமாக மாறுவதும் உண்டு. நேர்முக தேற்வுக்கு  சென்ற இடத்தில் முதல் முதலாக ஆங்கிலத்தில் பாடம் எடுத்த அனுபவவும் உண்டு. சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வு போல் நெல்லையில் இல்லை. இங்கு ஒரு வித இறுக்கம் இரு பக்கவும் நிகழும். ஒரு முறை நேற்முகம் கண்டவர் என் பெயரின் அர்த்தம் கேட்டார். அது ஒரு எதிர்பாராத கேள்வியாக இருந்தால் கூட பெயரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால் மகிழ்ச்சியாக விவரித்தேன்.




நாகர்கோயிலில் ஒரு நேர்முகம் சென்ற போது உட்கார ஒரு நாற்காலி கூட தரவில்லை. கணவருடன் தான் பேசுவோம் என்று கூறினர். என் சாற்றிதழ் நோக்காது என்னவரிடம் உள்ள பணத்துக்கு தான் மதிப்பு என்பது பின்பு புரிந்தத போது அந்த வேலை மேல் எனக்கு இருந்த மதிப்பு அற்று போனது!!.


இன்றும் அது போல் தான் ஒரு நேர்முகத்துக்கு வந்து சேர்ந்தேன். பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். வர வேண்டிய சிறப்பு தேற்வாளர்களுக்கு என காத்திருந்தனர்.  அலுவலகத்தில் விசாரித்த போது நான் இன்னும் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததால் நாற்காலி தேடி என் கால்கள் போயன. பெண்கள் அவர்களுக்கு ஒன்றும் அவர்கள் கை பைக்கும் என இடம் பிடித்து இருந்ததால் ஒரு ஓரமாக ஒரு இளைஞர் பக்கம் 5 நாற்காலி தள்ளி இடம் பிடித்தேன். பெண்கள் பக்கம் இடம் கிடைக்காததில் மகிழ்ச்சியும் தான் அவர்கள் படபடப்பு என்னையும் பற்றி கொள்ள கூடாது என்று கருதலாக இருப்பது உண்டு. ஆனால் ஓரந்தில் குந்தியிருந்த நபர் நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் தன் இருப்பை பற்றி தன் நண்பர்களுடன் அலைபேசியூடாகவும் குறும் செய்தி வழியாகவும்  உரையாடி கொண்டிருந்தார் என்பது பின்பு தான் புலன்பட்டது.

கொஞ்சம் நேரத்தில் அவர் நண்பன் வியர்வை நெடியுடன் வந்து, நெல்லையில் அப்படி பார்க்க ஒன்று மில்லை ஆலயம் அல்லது அறிவியல் மையம் சென்று வரலாம் என்று நெல்லையின் இல்லாமையை பற்றி சாடி கொண்டிருந்தார். அந்த கொடிய நெடியோ, திருநெல்வேலி வெயிலோ அல்லது நேர்முகம் எண்ணிய கலக்கமோ நான் தலைவலியால் சுழன்று கொண்டிருந்தேன் அப்போது! “இதோ பதில் வந்து விட்டது” என்ற குறும் செய்தி ஒலி என் தலைவலியை இன்னும் கூட்டியது. அவர் காதலி இப்போது இணைப்பில் வந்து விட்டார் போலும். கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். அவரும் விலாவரியாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். பல போது கொஞ்சியும் பின்பு மிஞ்சியும் பேசுவது அவர் காதலியிடம் தான் என்று உறுதி செய்தேன். இந்த கலவரத்திற்க்கு அந்த பெண்கள் பக்கமே இருந்திருக்கலாம் என்று எட்டி பார்த்த போது அங்கு காலி இருக்கைகள் ஒன்றும் தென்படவில்லை. கொஞ்சம் நேரத்தில் தோழன் வந்தவுடன் இடத்தை காலி செய்து என் தலை வலி மட்டுபடுத்த உதவினார் அந்த இளைஞன்.




என் துறை சார்ந்த இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். எனக்கு அவரிடம் கதைக்க கனக்க ஆசை தான்! ஆனால் எனக்கு ஒரு நேற்முகம் வைத்து. உள்ள தைரியத்திலும் மண் அள்ளி போட்டு விட கூடாது என்பதால் சிரிப்புடன் என் இருக்கையில் பற்றி கொண்டு இருந்து விட்டேன். நேற்முகத்துக்கான சிறப்பு அழைப்பு மணி ஒலித்து விட்டது. என்னை அழைத்து அலுவலகத்துக்குள் போருக்கு தயாராகும் போர்ப் படை வீரர் போல் உட்கார வைத்திருந்தனர்.  திடீர் என்று ஓடி வந்து அந்த பெண் "மேடம் நீங்கள் ஜோசபின் தானே, உங்களுக்கு வகுப்பு எடுத்தலில் முன் அனுபவம் உண்டா?" என்று பதட்டத்துடன் வினவினார் என் எதிராளி பெண். அது இல்லை என்பது தான் என்னுடைய பதட்டமே. நான் வெளியில் காட்டி கொள்ளாது ஆமாம் சிறிய காலம் என்று மொழிந்து நீங்கள் எந்த கல்லூரியில் பணி புரிகின்றீர்கள் என்றேன். அவர் கூறிய கல்லூரியில் எங்கள் துறையை சேர்ந்த ஒரு தம்பதி இருப்பது எனக்கு தெரியும். இருப்பினும் வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என எண்ணி மிதமான சிரிப்புடன் அமைதியாக நின்று கொண்டேன். அவர் என்னை விட்ட பாடில்லை உங்களை எங்கள் கல்லூரியில் வேலை பார்ப்பவருக்கு தெரியுமாமே உங்களுக்கு அவர்களை தெரியுமா எந்த வருடம் முடித்தீர்கள் என்று புலனாய்வுத் துறை போன்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எத்தனை பேர் வேலைக்கு தேவை என்பது தெரியாது அவருக்கு ஏற்கனவே வேலை உள்ளது, இருந்தும் அவரும் முகம் சிவந்து என்னையும் நீல நிறம் ஆக்குகின்றார். இதே போல் பலர் தங்கள் போட்டி, வெற்றி வெறியால் கொள்ளும் பதட்டம் அவர்களை மட்டும் அடையாது பக்கத்தில் இருப்பவர்களையும் பதட்டத்தில் தள்ளுவது உண்டு!



1998 ல் ஒரு தனியார் ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் 4 பெண்களில் ஒருவராக நானும் வலியை தாங்கி என் முதல் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றேன். அதில் என் வலப்பக்கம் ஒரு பெண் இளம் பெண்; மிகவும் இக்கட்டான சூழலில் அனுமதிக்கப் பட்டிருந்தார் மாப்பிள்ளை உயர்பதவியிலுள்ள கறுப்பு தமிழன் அவருக்கு வெளுத்த பெண் வேண்டும் என்றது வாழ்க்கை லட்சியம் என்பதால்; 18 வயது நிரம்பாத சிவப்பு நிறம் கொண்ட அழகான சிறு மலையாளப் பெண்ணை மணம் முடித்து ஆஸ்பத்திரியில் அனுமத்திருந்தார். அவர் பக்கத்தில் திடகாத்திரமான மலையாள பெண்குட்டி, பக்கத்தில் வேறு யாரோ 2 பெண்கள் இரண்டாவது பிரசவத்திற்க்கு என . எங்கள் 3 பேருக்கும் முதல் பிரசவ அம்மாக்கள் என்பதால் தனி கவனிப்பு இருந்தது எங்களுக்கு. ஒவ்வொரு முறை செவிலியர் பரிசோதனை கழிந்து செல்லும் போது இப்பெண் ஒரு வித பதட்டம் பொறாமையுடன் உங்களுக்கு நோவு வந்து விட்டதா என்று விசாரித்து கொண்டே இருப்பார். நானோ 3 நாட்களுக்கு முன்பே அனுமதிக்கப் பட்டு ஊசி இட நரம்புகள் இல்லாத அளவுக்கு மருத்துவ சேவை வாங்கி கொண்டிருக்கின்றேன். சிறுத்தை படம் நாயகன் போல் 'வலியிலும் சிரிப்பு உதடுகளில் மறையாது இருக்க வேண்டும் ' என்ற எண்ணத்தில் முகம் வாடாது கருத்தாக இருக்கும் என்னிடம் இப்பெண்ணின் கேள்வி பதட்டத்தை கொடுக்க ஆரம்பித்தது. இப்படியாக தங்களை மட்டும் நோக்காது பக்கத்தில் இருப்பவர்களையும் இரத்த கொதிப்புக்கு அழைத்து செல்லும் இரத்ததின் இரத்ததமான இந்த உடன் பிறவா எங்கள் இனத்தை பற்றி என்ன சொல்ல ?