13 Feb 2011

பள்ளிகூடங்களும் மாணவர்கள் வாழ்கையும்!


7 வகுப்பு என்பது மகிழ்ச்சியான மட்டுமல்ல என் வாழ்கையை நிர்ணயித்த வருடமானது!  ஒவ்வொரு வருடமும் தலைவி பதவி என்னை தேடி வந்தது. காரணம் ஒரே வகுப்பின் 100க்கு மேல் மாணவர்கள் படிப்பதால் வகுப்பு தலைவர் பதவி என்பது ஒரு ஆசிரியர் ஒத்தே மிகவும் தேவையானதும் இன்றிமையாதகாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் இருந்தது. மேஜையில் ஒரு கம்பால் அடித்து ஒரு ஹால் மாணவர்களை அமைதியாக இருத்த பழக்கப்பட்டேன்.  எப்போதும்  ‘மாதிரியாக’,  ஒரு கண் பார்வைக்குள் இருப்பதால் மற்று மாணவர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பறி போனது இருப்பினும் கிடைக்கும் அங்கிகாரம்,  பொறுப்பு ஏற்க்கும் சூழல் என்னை வளர்த்து கொள்ள பலவிதத்தில் உதவியது அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது.. என் வகுப்பு தோழர்களின்  மார்க்கு அவர்கள் நலன், குறைவு கண்டுபிடிப்பதில் ஒரு பங்கு இருந்து கொண்டே இருந்தது. நம்மை சுற்றி ஒரு ஆதரவு பட்டாளம் இருப்பது போலவே எதிரி கூட்டமும்  சேர்ந்து கொண்டே தான் இருந்தது.  100 மாணவர்கள் இருப்பினும் 10 பேரை எல்லா பாடத்திற்க்கும் ஜெயிப்பவராக இருந்துள்ளோம் எங்கள் வகுப்பில்!  அவர்கள் நேரத்திற்க்கு பள்ளி வந்து  சேருவதே ஒரு போராட்டமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை சூழல் எதிற்மறையாக இருந்தாலும் வேலை வாய்ப்புக்கள் அவர்களை சுற்றி எப்போதும்  இருந்ததாலும் போட்டி போட்டு படிக்கும் சூழலுக்கு தள்ளப்படவில்லை.  மட்டுமல்ல அதை எண்ணி கவலை கொள்ளும் போல் ஒருவரும் இருக்கவில்லை.  என் வகுப்பு தோழி என எங்கள் பள்ளி ஆசிரியரின் மகள் மோன்சி, ஒரு மாட்டு வியாபாரியின் மகள் ஷீபா, ஓட்டத்தில் விருது வாங்கும் சாலி , அன்னம்மா டீச்சரின் மகள் அனி, தேயிலை எஸ்டேட் ஊழியரின் மகள் வினிதா, தொழிலாளர்களின் மகளான பிந்து, ரஜனி என ஒரு பெரிய பட்டாளம் இருந்தோம்.  இதில் மோன்ஸிக்கு என்னிடம் ஒரு பொறாமை இளக்கார  மனோபாவமாகவே இருந்தாள். அவள் அம்மாவும் என் அம்மாவை காணும் போது “நிங்களே கண்டால் தமிழர் என்னே பறயத்தில்லா, விர்த்தியில்லாத துணியும் நாற்றம் பிடிச்ச தலை முடியுமல்லே தமிழர்” என முகத்தை பார்த்தே கதைப்பார். மோன்ஸிக்கு அவள் அம்மாவை அவ்வளவாக பிடிப்பதில்லை. அவளின் கருத்துக்கள் அவளுடைய கம்னிஸ்டு வாத்தியார் அப்பா ஒத்தே இருந்தது. அவர் அப்பா கூட எங்களுக்கு கணித பாடம் எடுத்தாலும் எனக்கு ஆங்கிலம் கத்து கொடுக்கும் ஷம்சுதின் சார்  வழிகாட்டி, ஜிகெ புத்தகம் என அவர் ஊர் கோட்டயத்தில் இருந்து வாங்கி தருவதில் கொஞ்சம் எரிச்சல் கொண்டே இருந்தார். ஷம்சுதின் சார் இஸ்லாம் என்பதால் தொழுகைக்கு தண்ணீர் எடுத்து கொடுப்பது என் பணியாக இருந்தது. மலை மேல் பள்ளி யிருந்தாலும் தேயிலை தோட்டத்தில் தண்ணீர் எங்கு இருக்கும் என எங்களுக்கு அத்து பிடியாக இருந்தது.  தொழிலாளர் பிள்ளைகள் அன்புக்கு கட்டுப்படுவதால் அவர்கள் உதவி ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பதில் எளிதாகவே இருந்தது.
எங்களுக்கு தினம் காலையில் வேலை இருக்கும்.  எங்கள் பள்ளி வராந்தாவில் தான் தொழிலாளர்களின் மாடுகள் தூயில் கொள்ளும் இடம்! காலையில் சென்றவுடன் சாணியை சுத்தம் செய்யும் வேலை எங்களை சார்ந்தே இருக்கும். எப்போதும் தண்ணிர் எடுத்து கொடுக்கும் பணியை நான் செய்து வருவதை கண்ட ஹரிகரன் சர் “எடி ஒரு திவஸம் நின்னே சாணம் வாரிப்பிம்” என கலாயிப்பார். நான் டவுணில் வசிப்பதால் சாணி மணம் கொஞ்சம் அன்னியமாகவே இருந்தது. ஆனால்  என் எஸ்டேட் தோழிகள் “ஞங்கள் தூத்தோளாம்” என விளக்கு மாரை பிடிங்கி கொள்வர். நானும் “ஞான் செய்யாம்” என படம் காட்டியே காலத்தை தள்ளி வந்தேன்.
அவ்வருடம் பள்ளி தலைவி ஆகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் எதிராளி நிர்மலை ஒரு ஓட்டுக்கு தோற்கடித்து நான் தலைவியானேன்.    (நிர்மல் பட்டப்படிப்பு முடித்த வருடம் இதய நோயால் இறந்து விட்டான்)    ஸ்பீக்கர் பதவி தமிழ் மாணவனுக்கு (பெயர் மறந்து விட்டது) கிடைத்து.  அவனுக்கு வர வர என்னிடம் ஒரு ‘அதீத’ பாசம்.   ஒரு கடிதம் கொடுத்து விடட்டுமா என அவன் நண்பியிடம் கேட்டு விட்டிருந்தான்.  நானும் “ஆ பட்டியோடு போகான் பற” என பதில் சொல்லி அனுப்பினேன். அவன் நண்பர்கள் எப்படிடா ஒரு மலையாளம் மீடியம்காரி நம்மை பட்டி(நாய்) ன்னு கூப்பிடுவது என அவனை உசுப்பி விட்டு "அவ எங்களை பட்டி ன்னு கூப்பிட்டா" என மட்டும் சொல்லி விட்டான் வாத்தியாரிடம்!. ஜோர்ஜ் ஜோண் சார் என்னை அழைத்து மேரி குஞ்ஞே ஆண்குட்டிகளை அங்கனை விளிக்கருது, தமிழ், மலையாளம் என்னு வழக்கு வரும் என அறிவுரை கூறினார். பத்து முடியும் போதும் அவனிடம் ஒரு கடுப்பு எனக்கு இருந்து கொண்டே  தான் இருந்தது.
நாங்கள் பள்ளிக்கு செல்வதும் வருவதும் தேயிலை தோட்டம் ஊடையுள்ள வழியாகவே இருந்தது.  படைசூழ பள்ளிக்கு சென்று வருவது தான் வழக்கம். இதில் பாதுகாப்பு, பந்தா எல்லாமே அடங்கி இருந்தது. ஒரு முறை எங்கள் தோழி செல்லும் பேருந்து வந்து விட்டது அவள் நிறுத்தம் வரும் முன். நாங்கள் கூட்டமாக சேர்ந்து குரல் எழுப்பி கொண்டே மலையில் இருந்து தாவி ஓடி வந்தோம். பேருந்துகாரனும் மாணவர்கள் ஸ்ரைக் போல் என எண்ணி பேருந்தை நிற்த்தினார். எங்களுக்கு போரில் வென்ற திருப்தி. அவளை பேருந்து ‘கிளியும் ஓட்டுனரும்’ சேர்ந்து கலாயித்தது வேறு கதை. (பேருந்தில் மணியடிப்பவரை எங்கள் ஊரில் கிளி என்று அழைப்போம்)
உயர்நிலை பள்ளி மாணவர்கள் எங்கள் வழியே தான் அவர்கள் பள்ளிக்கு செல்வர். அதில் புத்தக பை கொண்டு வராது கையில் ஸ்டைலாக புத்தகம் கொண்டு வரும் 4- 5 மாணவர்களுக்கு எதிரில் நடந்து  வரும் எங்கள் பள்ளி மாணவிகளை கட்டி பிடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். மாணவிகள் அலறியடித்து ஓடுவதை காண அவனுகளுக்கு ஒரு ஆனந்தம். ஒரு நாள் எங்கள்  குழுவை குறிவைத்து  வந்தாங்க. நாங்க ஏற்கனவே கருதி வைத்திருந்த பின்னை(ஊக்கு) வைத்து கீச்சி விட்டு விட்டோம். அவனுகள் பயந்து ஓடி போய் விட்டான்கள்.  ஆனால் எங்கள் பள்ளி மாணவர்கள் ராஷேஸ்,சபீர் போன்றோர் எங்கள் ஆசிரியர்களின் இச்சம்பவத்தை பற்றி சொல்லியுள்ளனர். மாணவர்  தலைவியாக இருந்தும் எங்களிடம் ஏன் முறையிடவில்லை என கடுந்து கொண்டனர். இருப்பினும் எங்கள் வீரத்தை சில ஆசிரியர்கள் பாராட்டாதும் இருக்கவில்லை.  எங்கள் ஆசிரியர்கள் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை லக்ஷ்மி குட்டியிடம் தெரிவித்துள்ளர். அம்மாணவர்கள் அவர்கள் தான் எங்களை ‘காம்பஸ்’ எடுத்து குத்த வந்தார்கள் என கதைத்துள்ளனர்.
அம்மாணவர்களுக்கு சூரல் வைத்து இரண்டு அடியை கொடுத்து திருத்தியிருக்கலாம் அதை விடுத்து 10 நாள் சஸ்பென்ஷன் என கலவரமாக்கிவிட்டனர் உயர்கல்வி ஆசிரியர்கள். அதில் ஒருவன் ஆ தமிழச்சியா இதினு காரணம் அவளை ஞான் கெட்டி(திருமணம் செய்து) அவளுடை புறம் பொளிக்கும் என வீறாப்பு பேசி நடந்துள்ளான்.
பின்பு 7 வகுப்பு முடிந்து  உயர்நிலை பள்ளிக்கு சென்ற போது லக்ஷ்மி குட்டி அம்மா ஏதோ கத்தியெடுத்து குத்த சென்றது போல் என்னிடம்  கேள்வி கேட்டார். நான் 10  முடியும் வரையிலும் நான் அவருக்கு நோட்ட புள்ளியாகவே இருந்தேன். போதாத குறைக்கு அவர் மகன், அவன் தெரு பொறுக்கி   நண்பர்களிடம்  எனக்கு ‘காம்பஸ் ஜோசபின்’ என்ற பெயர் நிலைக்க செய்தான்.

3 comments:

  1. உங்கள் நினைவுகள் அருமையாக இருந்தது. ஆனால் மலையாள வாடை
    அதிகம் அதனால் திரும்ப திரும்ப வாசிக்க வேண்டியுள்ளது,
    கொஞ்சம் மலையாள சொற்களை குறைத்து எழுதி இருக்கலாம்,
    இதுஎனது அபிப்பிராயம்

    ReplyDelete