4 Feb 2011

இளைஞர்கள் தற்கொலையும் காதலும்……………..


ஒவ்வொரு 4 மணி துளிகளிலும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தேசிய குற்றம் அறிக்கை சொல்கின்றது. இதில் 69 % பேர் 15- 40 வயதிற்க்கு மத்தியிலுள்ள இளைஞசர்களே. கடந்த வருடம் தற்கொலையால் 1 லட்சத்து, 27 ஆயிரத்து 151 பேர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.  இதில் தென் இந்தியாவே சேர்ந்த கேரளா, தமிழக, கர்னாடக ஆந்திராவே சேர்ந்தவர்கள்    வருடத்திற்க்கு  50 ஆயிரத்திற்க்கு மேல் சாகின்றனர். மேலும் 32% பேர், கல்வியறிவில் முந்தியுள்ள கேரளத்தவர்களே! இன்னும் ஆச்சரியமான விஷயம் கல்வியறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலை எண்ணிக்கை 2 % மட்டுமே !

பலபோதும் தற்கொலைக்கு, காதலும் அதை தொடர்ந்த சில பிரச்சைனைகளும் காரணமாகி விடுகின்றது.  சமீப காலமாக இளைஞர்கள் பார்த்தவுடன் காதல் என பல பிரச்சனைகளுக்கு ஆளாகுன்றனர்.

காதல் வருவது சினிமாவில் காட்டுவது போல வினோதமாகவே உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளின் சித்திக்கு வந்த  தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுத்துள்ளாள். பேசும் நபரின் சத்தம் இனிமையாகவும் பெயர் ‘அஜித்’ என்று இருந்ததாலும் காதல் வந்து விட்டதாம்.

9 வருடம் முன்பு அப்போது தான் “காதலுக்கு மரியாதை’ படம் வந்த நேரம். அப்படத்தின் கதாநாயகன் போலவே தன் காதலனும் இருப்பான் என எண்ணி வசதி வாய்ப்பான வீட்டில் பிறந்து வளர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி படிப்பு பெற்ற ஒரு பெண் தன் வீட்டின் பணியாளர்கள் போல் இருந்தவர்களின் பையனுடன் வந்து விட்டாள்.  பையனின் அக்கா சந்தனம் இட்டு அம்மா குங்குமம் வைத்து வாழ்த்தி; வீட்டிலுள்ள எல்லோர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பெண்ணை கடத்தி வர சென்றுள்ளான் அவன்! இதை காதல் என்பதை விட திட்டமிட்ட பெண் கடத்தல் என்றே கூற இயலும்.

சாதி ஒழிப்பு கூட்டத்தில் ஒருவர் இவ்வாறாக பேசினார். அவர் முதுகலை பட்டத்திற்க்கு சேர்ந்ததே உயர் ஜாதி பெண்ணை காதல் புரிந்து மணக்க வேண்டும் என்றாம். அவ்வாறே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் புரிந்துள்ளார் என்றும் பெருமையுடன் கூறினார். இதில் கொள்கை இருந்தாலும் காதல் இருப்பதாகவும் தெரியவில்லை.

அதே போல் சமீபத்தில் அறிமுகமான ஒரு கல்லூரி மாணவி உயர் அரசு பதவியில் இருப்பவரின் மகள். 18  வயது வந்த உடனே பக்கத்துவிட்டு பையனின் பெற்றோர் உதவியுடன் ரஜிஸ்தர் திருமணம் புரிந்து கொண்டு பெற்றோர் வீட்டிலிருந்தே முதுகலை பட்டமும் பெற்று விட்டாள். எடுத்த தீருமானம் சரி தானா என்று இன்று கலங்கினாலும் தப்பி வர இயலாது  மனக்குழப்பத்தில் உள்ளார்.

மனித வாழ்வில் இனிமையான இளைமைப் பருவம் கூட இவர்களை பொறுத்தவரை பாரமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 3 வருடமாக இளம் மாணவர்களுடன் பயணிப்பது அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. பலர் கர்ண குண்டலம் என்பது போல் அலை பேசியுடனே வாழ்ந்து வருகின்றனர். ஒரே நாளில் 100 க்கு மேல் SMS, அலைபேசி கதைப்பு என நாட்களை கடத்தி செல்கின்றனர். என் பயணம் 1 மணி நேரம் என்பதால் பல பொழுதும்  அவர்கள் பேசுவதை ஒட்டு  கேட்க பட்டேன்!. முதலில் சிரித்து பேசி பின்பு போடா நாயே என்று அன்பு மழை பொழிந்து பின்பு சண்டையிட்டு கண்ணீர் வடித்து பல்கலைகழகம் வந்து சேர்வார்கள். ஒரு மணிநேரம் தொடர்ந்து அலைபேசி வழியாக கதைப்பவர்களும் உண்டு. அவர்கள் குடும்பம் அவர்கள் குணம் ,பின் புலன் என எல்லாமே ஒரு பயணத்தில் அடுத்து, இருப்பது வழியாகவே தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு சேவை செய்ய என்றே நண்பர்களும் உண்டு. பல வேளைகளில் ஓட்டுனர் தன் கவனத்தை  இவர்கள் பேச்சில் திருப்பி நமட்டு சிரிப்பில் வருவதை கண்டுள்ளேன்.  சுயமரியாதை, மதிப்பு என்பது இனி வரும் காலங்களில் பொருட்களுக்கு மட்டுமே என்றும் தோன்றாது இருந்தது இல்லை.

இதே இளைஞர்களிடம் எங்கள்  பயிற்ச்சி பத்திரிக்கை செய்திக்கு என வினா எழுப்பினால்  பதில் சொல்லாது  நழுவி விடுவார்கள். பார்க்க பெரிய அறிவாளிகளாக காட்டி கொண்டாலும் ஆழமான கருத்தாக்கம் சிந்தனை வளம் இருப்பது இல்லை; வளர்க்க முயல்வதும் இல்லை  என்றே உணர இயலும். ஒரு விதமான பந்தா கொண்டே காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.. எப்போதும் ஒலி எழுப்பிகளாகவே இருந்து வருகின்றனர்.

காதலை ஒரு உண்மையான நோக்கில் இன்று பல இளைஞர்கள் அணுகவது இல்லை என்பதே உண்மை. காதலிக்கும் போதே உடை, பொருட்கள் என வாங்கி கொள்ள பல பெண்கள் தயாராக உள்ளனர். பல  பெற்றோர்கள் கூட இதை பொருள் ஈட்டும் வாய்ப்பாக எடுத்து கொள்கின்றனர்.

ஊடகம் கூட காதல், பெண் ஆண் உறவுக்கு அசாதாரணமான பல அர்த்தங்களை கற்பித்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. படிக்கும் போதுள்ள காதல் ஏதோ இன்றிமயையாதது போன்று தோற்றம் உருவாக்குகின்றனர். படிக்கும் தருவாயில் காதல் விட நட்பே  நன்மை பயிற்க்கின்றது என்பதை மறந்து போகின்றனர் பல பொழுதும்.


 எங்கள் ஒரு பேராசிரியர், சில மாணவி மாணவர்களை  உடை நடையை கவனித்து கலாயிப்பார்.  வாய்ப்பு கிட்டிய போது அவரிடம் ஒரு கேள்வி வைத்தோம். உங்களுக்கு பள்ளி, கல்லூரி காதல் வந்துள்ளதா என. அவரின் வார்த்தை ரொம்ப  சிந்திக்கவே வைத்தது.  படிப்பு, பண தட்டுபாடு மத்தியில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்  என்ற சூழலில் இருந்ததால் படித்து ஒரு வேலை,  நல்ல வாழ்க்கை என்று மட்டுமே இருந்ததால் காதலுக்கு என நேரம் இல்லாது இருந்தது என கூறினார். இப்போது  மாணவர்கள் பெரும் பகுதி நேரம் ஆக்கபூர்வமான செயலுக்கு என்பதை விட வெட்டி பேச்சு, பார்ட்டி என செலவிடுகின்றனர். 

மேலும்  முன் நாட்கள் போல் பெற்றோர்களுடனும் ஒரு உணர்வு பூர்வமான உறவு பேணுவதும் குறைந்துள்ளது. சமூக சூழல் காரணமாக வசதி வாய்ப்பாக வாழ வேண்டிய சூழலில்;  ஆசையில் பெற்றோர் இருவரும் வேலை என அதி காலையில் ஓட துவங்கி இரவு தான் பல வீடுகளில் வந்து சேருகின்றனர்.  பிள்ளைகளுக்கு தன் உணர்வுகளை பகிந்து கொள்ள வெளி உலகம் தேடுகின்றனர்.  இதன் தாக்கம் அவர்கள் வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுகின்றது. ஒரு போதும் தீர்வு காண இயலாத வண்ணம் பிரச்சனைகளின் சங்கிலி தொடரில் அவர்கள் மாட்டி கொள்கின்றார்கள்.

இருப்பினும் எவ்வாறாக தங்களை அபாயப்படுத்தி கொள்ளாது தப்பித்து வாழ்வது என்று அவர்களே  வழி காண முன் வர வேண்டும். இளைமைப் பருவத்தை கொண்டாட்டங்களுடன், மனதை பண் படுத்தி வாழ்க்கையை வளமாக்க பயன்படும் காலம். அல்லாது உணர்வுகள், ஆசைகளின் அடிமை நாட்கள் அல்ல!!





1 comment: