எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது.
எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .
எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .
மேலும் ஆண்கள் சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல் இருக்கவில்லை. பெண்களும் ஆண்களை போன்றே பல பொழுதும் அவர்களை விட ஊதியம் பெறும் நபராகவே இருந்தனர். வீட்டு சண்டையில் கூட தன்னை அடிக்கும் ஆண்களுக்கு மறு கன்னத்தை காட்டாது, அடிக்கும் கணவனின் மறு கன்னத்தை பதம் பார்க்கும் பெண்களும் இருந்தனர். கள்ள காதலிலும் பொது உடமை கொள்கையை பின்பற்றும் சுதந்திரமும் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் பெண்களை விற்று பெண் வியாபாரம் செய்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியிலுள்ள பெண்களை தங்கள் பொது உடமையாகவே நோக்கினர் என்பதும் ஒரு சொல்லப்படாத உண்மையாக இருந்தது.
`சில கேரள தமிழ் தொழிலாளரகளான ஆண்கள், தங்கள் ஊர் சென்று திரும்பும்போது ஒரு புது பெண்ணுடன் அதாவது அடுத்தவன் மனைவியையும் கொண்டு வந்து விடுவதும் உண்டு. கேரளா உடை, நடை, பாவனை கண்டு பல பெண்கள் தங்கள் வீடு வசதி மட்டுமல்ல மூன்றும் நாலு குழந்தைகளை கூட விட்டு விட்டு கையில் கிடைத்த நகை நட்டுடன் வந்து விடுவார்கள்.
எங்கள் வீட்டிற்கு பெயின்டு அடித்த, காலை இழுத்து இழுத்து நடக்கும் கந்தன் நினைவிற்கு வருகின்றார். அவர் அடுக்களை பெட்டியின் கதவில் வரைந்த ஒரு சித்திரம், ஓடும் நதியும் அதன் கரையில் முயல் காரட்
தின்பதும், இருவர் அதன் கரையில் இருந்து மீன் பிடிப்பதும் ஒரு பெண் புல்லு
கட்டுடன் அவ்வழியாக நடந்து போய் கொண்டிருப்பது போலவும் பல கோடுகளை அங்கும் இங்குமாக இட்டு சேர்த்து வரைந்த படம் இன்றும் நினைவில் நிற்கிறது.
அவருக்கு ஒரு மனைவியும் ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மனைவி எப்போதும் இஞ்சி தின்ற குரங்கை போன்ற முகத்துடன் இருந்தாலும், நல்ல வேலை செய்யும் உழைப்பாளி மட்டுமல்ல அழகான பெண்மணியும் கூட! கந்தன் வேலைக்கு போகாது டிமிக்கி கொடுப்பதற்கு சண்டையிட்டு கொள்வதும் கண்ட மேனிக்கு திட்டுவதும் அக்காவின் சகஜமான குணம். ஒரு முறை கந்தன் தன் மனைவியிடம் பெயின்ட் அடிக்க என கம்பத்திற்கு சென்று விட்டார். அக்காவும் பெரிதாக ஒன்றும் நினைக்க வில்லை. வேலை முடிந்தவுடன் பணத்துடன் வருவார் என்று ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் காத்திருந்தார்.
ஒரு நாள் பொங்கலுக்கு வந்த ஐய்யப்பன், புது பெண்டாட்டி, இரண்டு பெண் குழந்தைகளுடன் பொங்கல் படியுடன் பம்மி பம்மி தன் வீடு வந்து சேர்ந்தார். அதிற்சியடைந்த மனைவி ஐயப்பனிடம் அதன்பின் பேசவே இல்லை, மட்டுமல்ல முகத்தில் கூட முழிக்கவே இல்லை. ஆனால் அக்குழந்தைகளை தன் குழந்தைகள் போன்று ஏற்று கொண்டார் எல்லா விடுமுறைக்கும் கம்பத்தில் இருந்து எஸ்டேட் வந்து விடுமுறை நாட்களை கழிக்கவும் அனுமதித்தார். இதுவும் ஒரு விந்தையான உண்மையாக தான் இருந்தது .
அதே போல் தான் “சூத்திரம் போன சுப்பன்”னின் தம்பி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்கு வந்து திருப்பிய போது, மூன்று குழந்தைகளின் தாயையும் தள்ளி கொண்டு வந்து விட்டான். நகை எல்லாம் விற்று தீர்ந்ததும், தேங்கி இருந்த காதலும் நீர்ந்து போனது. தன் தம்பி வீட்டிற்கு வந்த சுப்பன்; வாடி வதங்கிப் போன இப்பெண்ணின் நிலையை கண்டு கலங்கி, “கவலைப்படாதே என் தம்பி உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என கவலைப்படாதே என்னுடன் வா, உனக்கு நான் வேலை வாங்கி தாரேன்” என சுப்பன் தான் வேலை பார்த்த எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து; தன் வீட்டு வராந்தாவில் தங்க இடம் கொடுத்து வேலையும் வாங்கி தந்துள்ளான்.
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து சென்றுள்ளான். உச்ச கட்ட அன்பில் தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள்.
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து சென்றுள்ளான். உச்ச கட்ட அன்பில் தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள்.
உயிர் வலியில் துடித்த சுப்பனோ, தன் சூத்திரத்தையும் எடுத்து கொண்டு ஓட்டமாக வந்து காவலர்களிடம் கொடுத்து விட்டு மயங்கி விழுந்து விட்டான். பின்னால் நடந்து வந்த அப்பெண் போலிஸிடம் நடந்தவற்றை மிக தெளிவாக கூறியுள்ளாள். அதிற்சியில் உறைந்து போன மலையாள போலிஸ், சுப்பனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி நான்கு மணி நேரத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சேர்த்துள்ளனர்.
பல பெண்கள் அப்பெண்ணின் செயலை பாராட்டினாலும் ‘சூத்திரம் போன சுப்பன்’ என்ற பத்திரிக்கை செய்தி பல மலையாளிகள் கேலிக்கு தமிழர்களை கொண்டு சென்றது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுப்பன் இனி வருவானா வரமாட்டானா என்ற விவாதவும் விட்டபாடில்லை . ஆனால் சுப்பன் 2-3 மாதம் பின்பு உயிர் அங்கு இல்லை என கண்டுபிடிக்க நான் உதவியாக இருந்தேன் என பெருமையாக கூறி, தான் மருத்துவ உலகிற்கு ஆற்றிய சேவையை சொல்லி மலையாளி டாக்டர்ஸ் தன்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் என பூரிப்புடன் வந்து சேர்ந்தான்.