29 Jan 2011

சூத்திரம் போன சுப்பன்!


எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது. 


எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .

மேலும் ஆண்கள்  சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல் இருக்கவில்லை. பெண்களும் ஆண்களை போன்றே பல பொழுதும் அவர்களை விட ஊதியம் பெறும் நபராகவே இருந்தனர். வீட்டு சண்டையில் கூட தன்னை அடிக்கும் ஆண்களுக்கு மறு கன்னத்தை காட்டாது, அடிக்கும் கணவனின் மறு கன்னத்தை பதம் பார்க்கும் பெண்களும் இருந்தனர். கள்ள காதலிலும் பொது உடமை கொள்கையை பின்பற்றும் சுதந்திரமும் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் பெண்களை விற்று பெண் வியாபாரம் செய்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியிலுள்ள பெண்களை தங்கள் பொது உடமையாகவே  நோக்கினர் என்பதும் ஒரு சொல்லப்படாத உண்மையாக இருந்தது.


                            `சில கேரள தமிழ் தொழிலாளரகளான ஆண்கள், தங்கள் ஊர் சென்று திரும்பும்போது ஒரு புது பெண்ணுடன் அதாவது அடுத்தவன் மனைவியையும் கொண்டு வந்து விடுவதும்  உண்டு.  கேரளா உடை, நடை, பாவனை கண்டு பல பெண்கள் தங்கள் வீடு வசதி மட்டுமல்ல மூன்றும் நாலு குழந்தைகளை கூட விட்டு விட்டு கையில் கிடைத்த நகை நட்டுடன் வந்து விடுவார்கள்.

                            எங்கள் வீட்டிற்கு பெயின்டு அடித்த, காலை இழுத்து இழுத்து நடக்கும் கந்தன் நினைவிற்கு வருகின்றார்.  அவர் அடுக்களை பெட்டியின் கதவில் வரைந்த ஒரு சித்திரம், ஓடும் நதியும் அதன் கரையில் முயல் காரட் தின்பதும், இருவர் அதன் கரையில் இருந்து மீன் பிடிப்பதும் ஒரு பெண் புல்லு கட்டுடன் அவ்வழியாக நடந்து போய் கொண்டிருப்பது போலவும் பல கோடுகளை அங்கும் இங்குமாக இட்டு சேர்த்து வரைந்த  படம்  இன்றும் நினைவில் நிற்கிறது.  

                    அவருக்கு ஒரு மனைவியும் ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மனைவி எப்போதும் இஞ்சி தின்ற குரங்கை போன்ற முகத்துடன்  இருந்தாலும், நல்ல வேலை செய்யும் உழைப்பாளி மட்டுமல்ல அழகான பெண்மணியும் கூட! கந்தன் வேலைக்கு போகாது டிமிக்கி கொடுப்பதற்கு  சண்டையிட்டு கொள்வதும் கண்ட மேனிக்கு திட்டுவதும் அக்காவின் சகஜமான குணம்.  ஒரு முறை கந்தன் தன் மனைவியிடம் பெயின்ட் அடிக்க என கம்பத்திற்கு சென்று விட்டார்.  அக்காவும் பெரிதாக ஒன்றும் நினைக்க வில்லை. வேலை முடிந்தவுடன் பணத்துடன் வருவார் என்று ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் காத்திருந்தார். 

                            ஒரு நாள் பொங்கலுக்கு  வந்த ஐய்யப்பன், புது பெண்டாட்டி, இரண்டு பெண் குழந்தைகளுடன் பொங்கல் படியுடன் பம்மி பம்மி தன் வீடு வந்து சேர்ந்தார். அதிற்சியடைந்த மனைவி   ஐயப்பனிடம்  அதன்பின் பேசவே இல்லை,  மட்டுமல்ல முகத்தில் கூட முழிக்கவே இல்லை. ஆனால் அக்குழந்தைகளை தன் குழந்தைகள் போன்று ஏற்று கொண்டார்  எல்லா விடுமுறைக்கும் கம்பத்தில் இருந்து எஸ்டேட் வந்து விடுமுறை நாட்களை கழிக்கவும் அனுமதித்தார்.  இதுவும் ஒரு விந்தையான உண்மையாக தான் இருந்தது .
  

                  அதே போல் தான் “சூத்திரம் போன சுப்பன்”னின்  தம்பி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்கு வந்து திருப்பிய போது, மூன்று குழந்தைகளின் தாயையும் தள்ளி கொண்டு வந்து விட்டான்.  நகை எல்லாம் விற்று தீர்ந்ததும், தேங்கி இருந்த காதலும் நீர்ந்து போனது.  தன் தம்பி வீட்டிற்கு வந்த சுப்பன்; வாடி வதங்கிப் போன  இப்பெண்ணின் நிலையை கண்டு கலங்கி, “கவலைப்படாதே என் தம்பி உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என கவலைப்படாதே என்னுடன் வா, உனக்கு நான் வேலை வாங்கி தாரேன்” என சுப்பன் தான் வேலை பார்த்த எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து; தன்  வீட்டு  வராந்தாவில் தங்க இடம் கொடுத்து வேலையும் வாங்கி தந்துள்ளான்.  

                         

   
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து  சென்றுள்ளான்.  உச்ச கட்ட அன்பில்  தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என  அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என  ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள். 


                உயிர் வலியில் துடித்த சுப்பனோ, தன் சூத்திரத்தையும் எடுத்து கொண்டு ஓட்டமாக வந்து காவலர்களிடம் கொடுத்து விட்டு மயங்கி விழுந்து விட்டான். பின்னால் நடந்து வந்த அப்பெண் போலிஸிடம் நடந்தவற்றை மிக தெளிவாக கூறியுள்ளாள். அதிற்சியில் உறைந்து போன மலையாள போலிஸ், சுப்பனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி நான்கு மணி நேரத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சேர்த்துள்ளனர்.

                      பல பெண்கள் அப்பெண்ணின் செயலை பாராட்டினாலும் ‘சூத்திரம் போன சுப்பன்’  என்ற பத்திரிக்கை செய்தி பல மலையாளிகள் கேலிக்கு தமிழர்களை கொண்டு சென்றது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுப்பன் இனி வருவானா வரமாட்டானா என்ற விவாதவும் விட்டபாடில்லை . ஆனால் சுப்பன் 2-3 மாதம் பின்பு உயிர் அங்கு இல்லை என கண்டுபிடிக்க நான் உதவியாக இருந்தேன் என பெருமையாக கூறி, தான் மருத்துவ உலகிற்கு ஆற்றிய சேவையை சொல்லி மலையாளி டாக்டர்ஸ் தன்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் என பூரிப்புடன் வந்து சேர்ந்தான்.


                ஆண்-பெண் மத்தியில் ஒரு பயமிருக்கும் என பேச பட்டாலும், அதன் பின்பும்  காதல் கொள்ளாமலும் இருக்கவில்லை, காதல் கொண்டு ஓடி போகாதும் இருக்க வில்லை எம்மக்கள். அப்படி இருந்தால் பூமி நின்று விடாதா என்ன?

26 Jan 2011

மலையாளத் திரைப்படம் - நீலத் தாமரை



இன்று “நீலத் தாமரை”  என்ற மலையாளப்படம் காணும் வாய்ப்பு கிட்டியது. லால் ஜோசின் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் திரைக்கதையில் 1976-80 காலகட்டத்திய தளத்தில் கதை அழகாக சென்றது. கேரளத்தவரின்  பழைமையான வீடு, அவர்கள் கோயில்(அம்பலம்), கோயில் குளம் , காயல் என பார்க்க பரவசம் ஊட்டும் இடமாக தேர்வு செய்து படம் பிடித்திருந்தனர். மைனா படம் நாயகி இரண்டு காட்சிகளில்  வந்து போனார்.
படம் தளம், கதை விருவிருப்பாக மட்டுமல்ல அமைதியாக செல்கின்றது. கதாபாத்திர தேற்வு, கதாபத்திரங்களின் உடை நடையிலுள்ள நளினம், சுத்தம் மலையாள கலாச்சாரத்தின் எடுத்துகாட்டாக உள்ளது.   சமீப காலமாக மலையாளப் படங்களும் நம் தமிழ் மற்றும் ஹிந்தி படத்தை பார்த்து அதன் தனி தன்மை இழந்து இருந்தது.  இப்படம் அதற்க்கு மாறாக 90 களில் பார்த்த மலையாளப் படத்தை நினைவு கூற செய்தது
படம் இப்படியாக தொடங்குகின்றது. அந்த வீட்டு வயோதிக தாயாரை பார்க்க அவருடைய இறந்த மகனுடைய மனைவி, அவருடைய பழைய வீட்டு பணிப்பெண்ணும் (மகனுடைய காதலி) வருகின்றனர். மகனுடைய பழைய மனைவியும் வேலைக்காரியும் ஒருவருக்கொருவர் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.  வேலைக்காரியின் பழைய நினைவுகளோடு கதை செல்ல துவங்குகின்றது.
ஒரு  பழைமை வாய்ந்த பணக்கார வீட்டிற்க்கு ஒரு வண்ணார் குலத்தை சேர்ந்த பெண் வேலைக்கு வருகின்றாள். பொறுப்பாக ஒவ்வொரு வேலையும் செய்கின்றாள். அவ்வீட்டு மகன் வக்கீல் படிப்பு முடிந்து வீட்டிற்க்கு வருகிறான்.  பெண்ணை பார்த்த உடனே அவளை ஆள் கொண்டு விட  வேண்டும் என துடிக்கின்றான். அவளுக்கும் அவன் மேல் ஒரு அதீத காதல் தான். அவளுக்கு அவனிடம் சரணகதி ஆகி விடுவதா வேண்டாமா என இரு மனத்தில் உள்ளார். கோயில் குளத்தில் அதிசயமான ஒரு நீலக்கலர் தாமரை உள்ளது .அது  உண்மையான பக்தியுடன் பக்தர்கள்  பிரார்த்தனை பண்ணினால் பூக்கின்றது.  அவளை தினம் அழைக்கும் வீட்டு யஜமானியின் மகனின் ஆசைக்கு போகவா வேண்டாமா என அறிய பிரார்த்தனை செய்கின்றாள். நீலத் தாமரையும் பூக்கின்றது.(?) அவனுடம் போய் உறவு வைத்து கொள்கின்றாள் பணிபெண்ணும்!. கதாநாயகனோ பெண்ணை வெறும் மாம்ச-பிண்டமாக பார்ப்பவனாக இருக்கின்றான். அவன் படிக்கும் பொழுதே பழகிய பணக்கார மற்றும் அவன் சமுதாய பெண்ணை மணந்த பிறகும் வேலைகாரியிடம்  வலுகட்டாயமாக உறவை பேணுகின்றான். அவன் மனைவி இவர்கள் உறவை கண்டு பிடித்து விடுகின்றாள்.  அம்மா தான் வெறும் டம்மி அம்மாவாக உள்ளார்! மகன், துணி துவைப்பது, காலில் அடிபட்டவுடன் எண்ணை தேய்த்து விடுவது, மகனுக்கு விருப்பமான உணவு பரிமாறுவது என சிறு வயது பணியாள் பெண்ணை எல்லை இல்லாது அனுமதிக்கின்றார். எல்லாம் சோம்பல் செய்யும் வேலைதானோ!
பின்பு வேலைக்காரி அவள் முறை மாப்பிளையை மணந்து, தன்  பெண்ணையும் டாக்டருக்கு படிப்பித்து வாழ்க்கையில் ஒரு நல் நிலையில் வந்து விடுகிறார். இங்கோ கதாநாயகன்  சிறுவயதிலே இறந்து போய் விடுகின்றான் அவன் மனைவி அவனுடைய மகளை தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு வேறு ஒருவரை மணம் முடித்து இரு குழந்தைகளுடன் வாழ்கின்றார்.

பல இடங்களில் படத்தின் கதையில் ஓட்டையுள்ளதை காணமுடிந்தது. காமிரா கையாளுபவர் எவ்வளவு தான் தன் ஒளிப்பதிப்பால் கதையிலுள்ள குறையை  களைய நினைத்தாலும் அங்கங்கு கதையிலுள்ள பொய் முடிச்சு தெரியத்தான் செய்கின்றது. வேலைக்காரிகள் ஏமாறுவதும் யஜமானர்களின் பணக்காரத்தனம் எல்லாம் அதே போல் காட்டியிருந்தாலும் கடைசி காட்சியில் அநியாயத்திற்க்கு வீட்டு யஜமான பாட்டியை நல்லவராக காட்டுவதும் வேலைக்காரி இன்று டாக்டர் மற்றும் ஆசிரியர்  ஆகிய குழந்தைகளின் அம்மாவாக இருப்பினும் தன்னை ஏமாற்றிய கதாநாயகனிடம் கோபம் கொள்ளாதிருப்பதும் யஜமான அம்மாவிடம் கொள்ளும் பக்தியும் கொஞ்சம் ஓவராகவே தெரிகின்றது. மேலும்  கோயில் குளத்தில் பூக்கும் பூ காண்பவர்களின் காதில் பக்தி என்ற பெயரில் நல்ல பூ சுற்றவே பயன்படுகின்றது அதையே படத்தின் தலைப்பாகவும் தேர்ந்துள்ளனர்!!!. சாதி பேய் மலையாளிகளிடமும் இருப்பது ஓர் சில காட்சியில் காணலாம். வண்ணார்களை பயணம் செல்லும் போது விழிக்கல் ஆகாது மேலும் ஏழைகளை எப்படியும் கையாளலாம் என்ற மிதப்பும் நல்கின்றது இப்படம் வழியாக. அதே போல் தன் அம்மா இரண்டாம் திருமணம் முடித்தார் என்ற காரணத்தால் அம்மாவை மகள் வெறுப்பதும்  சகிக்க முடியாது தான் உள்ளது. மலையாள கலாச்சாரம் நம்மைவிட 20 வருடமாவது முந்தியுள்ளது என எண்ணம் கொள்ளும் போது இவ்வகையான படங்கள்  அப்படியல்ல என்று சொல்ல வருகின்றதோ? எப்படியோ படம் நம்மை இருக்கையை விட்டு எழாது பார்க்க தூண்டுகின்றது என்பதில் ஐயமில்லை.
  

20 Jan 2011

மரணம் கொண்டு வந்த சில சிந்தனைகள்!!!


  பிறப்பது எங்கு, எப்போது, யாருக்கு, என்று அறியாதிருப்பது போல் மரணவும் புதிராகவே உள்ளது.

உயிர் இருக்கும் வரை பைபிளும் வெத்தலை பெட்டியுமாக இருந்த பாட்டி இறக்கும் தருவாயில் உயிர் ஊடலாடிய வாயில் பாலை ஊற்றி கொண்டே "அம்மா, உங்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்" என கேட்ட போது அய்யாவிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறி உயிரை விட்டார். அவர் பெற்றோர், சகோதரர்களுக்கு 385 மைலுக்கு அப்பால் ஆனால் பாட்டியோ கேரளாவில் தாத்தாவின் தோட்டத்தின் ஒரு கரையில் அடக்கம் செய்யபட்டார். 

தாத்தா 50 வருடங்களாக கேரளாவில் வாழ்க்கையை திருவிழா போன்று கொண்டாடி வாழ்ந்தவர். நிழலுக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர். சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவர் பிறந்த ஊர் அழகம்பாறையருகில்  தான் உயிரோடு இருக்கும் போதே ஒரு வீடு கட்டி அதன் அருகில் கல்லறையும் கட்டி வைத்திருதார். 50 வருடம் முன்பு கண்ட உறவுகள் அல்ல தற்போது என கண்ட போது மறுபடியும் கேரளா நோக்கியே வந்து விட்டார். தாத்தா யாருக்கும் அன்பால் கூட கட்டுபடாது நானே ராஜா நானே மந்திரி என குடி, கூத்தோடு அவர் 95 வயதிலும் இன்பமாக வாழ்ந்தவர். திடீர் என ஒரு நாள் பக்க வாதத்தால் பாதிக்கபட்டு சரிந்து; அவர் ஆசையாய் நம்பிய மகனும் அவரை பாசமுடன் நோக்கவில்லை, அவர் கேலி பேசி விரட்டிய மகன்களும் கைவெடிந்த நிலையில் ஒரு நாள் இறந்தார். சகல கிருஸ்தவ மரியாதையுடன், பாதிரியாரின் ஜெபத்துடன் அவரை பாட்டியின் பக்கமே அடக்கம் செய்தனர். 

மரணத்தை பற்றி ஒரு போதும் நினையாத, தாத்தாவின் மரணத்தை கேலி பேசிய பெரியப்பாவும் இடி விழுந்து அடுத்த வருடமே கல்லறை சென்றார். பெரியப்பாவுக்கு 5 ஏக்கர் மேல் இடம் இருந்தும் அவர் மகன்கள் தாத்தா, பாட்டி பக்கம் இடம் தர கேட்டனர். அது அவர்களுக்கு ஒரு மான பிரச்சனையாகவும் இருந்தது.  காதல் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக 40 வருடங்களுக்கு மேல் பெரியப்பா கால் படாது தடுத்திருந்த குடும்ப தோட்டத்தில் பெரியப்பாவில் உயிர் இல்லாத உடலையாவது அடக்கம் செய்து விட வேண்டுமென துடித்தனர் மகன்கள். சித்தப்பவோ, இதை சாக்காக வைத்து சொத்து கேட்டு வந்து விடுவார்கள் என கருதி இடம் தர மறுத்து விட்டார்! 

அடுத்த வருடம் மே மாதம் இளைய சித்தப்பா அவர் மகள் திருமணம் முடிந்து 5 வது நாள் தனது 44 வது வயதில் கல்லறையை தேடி போய் விட்டார்.  பணம் சேர்க்க கருத்தாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கு நல்ல நாளாகவே இருந்தது சித்தப்பாவுக்கு.  அன்று மாலை சித்தப்பாவை ஒரு பாயில் கட்டி கொண்டு வந்தார்கள் மருத்துவமனையில் இருந்து. நாங்கள் உறவினர்கள் அழ தெரியாது  நின்ற போது ஊர்காரர்கள் ஒப்பாரியிட்டு அழுது உருண்டனர். சித்தப்பா இறந்த போது அழுது காணப்படாத அப்பாவும், அழுததை அன்று கண்டேன். அத்தைமார்கள் எறிகின்றவன் கையில் ஆண்வர் கல்லை கொடுக்கவில்லையே என ஏங்கி ஏங்கி அழுதனர். இறந்த பின்பு பல நாட்கள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தார் என் கனவில்! 

ரஞ்சனி என்ற ஒரு தோழி எங்களுடன் 8 ம் வகுப்பில் படித்தாள். அவள் வெகுதூரமுள்ள காட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகின்றாள் என்று மட்டும் தெரியும். எப்போதும் சிரித்த வெளிறிய முகத்துடன் காணப்படும் அவள் முடி நூடில்ஸ் போன்று சுருண்டு இருந்தது. அவளுடைய உடை கூட அவளுடைய மெலிந்த தேகத்தை ஒட்டியே இருந்தது. ஒரு நாள் செய்தி வந்தது கரையில்லாத கிணற்றில் தண்ணீர் எடுக்க போன போது கால் வழுதி விழுந்து செத்து விட்டாள் என்று. 
ஜெயா என்ற தோழி எங்களுடன் படித்தாள். அவள்  சுழன்று வரும் ஒரு பெண் ஜாக்கி ஜான் போல் இருந்தாள். அவளை கண்டால் எங்கள் வகுப்பு மாணவர்கள் கூட பயந்து நடுங்கி ஓடுவார்கள். அவளுக்கு 18 வயதுள்ள போது  அவளுடைய இரு அக்காகள் , 10வது வகுப்பில் படிக்கும் ஒரு தங்கை என 4 பேரும் தங்கள் இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் தாவி தற்கொலை செய்துகொண்டனர்.

ஹரிகரன் சார் எங்களுக்கு 7 வது வகுப்பு கணித ஆசிரியராக இருந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். என்னை அவருடைய மகளை போன்றே நேசித்தார். எங்கள் பகுதி குளிர் பிரதேசமாக இருந்ததால் எப்போதும் மழை அல்லது குளிர் இருந்து கொண்டே இருக்கும். நான் குளிருக்கு அணியும் ஸ்வறருடைனே பள்ளிக்கு தினம் செல்வேன். வெயில் அடித்தால் கூட எனக்கு குளிராகவே தெரியும். இப்படி சுகம் கேட்டால் வாழ்கையில் முன்னேற முடியாது என கூறி  பிரம்பால் எனக்கு அடிவிழும். ஒரு முறை என் அம்மாவிடம் உங்கள் மகளை மலையாளிக்கு தான் மணம் முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அந்த வருடம் எங்கள் பள்ளியின் நடந்த மாவட்ட அளவு போட்டியில் மோகினியாட்டம் என்ற நடனத்தில் பங்கு பெற்றிருந்தேன். என் நடன நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி உற்சாகபடுத்தினார். அடுத்த வருடம் 8 வகுப்புக்கு என நாங்கள் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்த போது ஹரிகரன் சார் மஞ்சகாமாலை நோயால் இறந்து விட்டார் அதுவும் என்னுடைய பிறந்த நாளாக இருந்தது. என்னை ஒரு ஆசிரியர் என்பதையும் கடந்து பெற்றோரை விட நேசித்த என் ஆசிரியரின் நினைவு ஒவ்வொரு பிறந்த நாளும் என்னை தேடி வரும். 

இப்படியாக ஒவ்வொரு மரணமும் வேதனை மட்டுமல்ல வாழ்க்கையை பற்றி வேறு சில சிந்தனைகளையும் தந்தது.

 

 

 

18 Jan 2011

கல்லறைகளும் கதைக்கின்றது…………….



 
மரணம் என்பது பிறந்தால் வரும் என்பதால் அதை பற்றி ஒரு போதும் பயம் தோன்றியது கிடையாது. ஆனால் மனிதன் அழுகி புழுவாக மாறி கடைசியில் எலும்பு கூடு ஆவதை நினைத்தே பயம் வருகின்றது. இப்போது கூட அந்த பயம் இல்லாதில்லை. எலும்பு கூடுகளை பல ஆராய்ச்சி கூடங்களில் அந்தரங்கத்தில் தொங்கவிட்டிருப்பார்கள். கண்ணாடியில் ஒவ்வொரு முறை முகத்தை காணும் போது எலும்புகூடு முகம் பயம் முறுத்துகின்றது! வாழ்க்கைக்கு பல அர்த்தங்களை தருகின்றது! 

என்னவரிடம் ஒரு முறை விளையாட்டாக என்பது போல் உண்மையாகவே சொன்னேன் "ஹிந்து சகோதரர்கள் இறந்தால் எரித்து சாம்பலாக்கி கடலில் நதியில் கரைக்கும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என. அவருக்கு கோபமே வந்து விட்டது. ஏன் சாவை பற்றி பேசி கொண்டிருக்கின்றாய் என அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் ஒரு முறை இறந்த மனிதனை எரிக்கும் போது அவ்வழி கடக்க நேரிட்டபோது அதன் புகை நெடி கொடியதாக தான் இருந்தது , மேலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. நதிக்கரைகள் மாசுபடவும் காரணமாகின்றதே என்ற கவலையும் இல்லாதில்லை. மயானங்களில் எரிக்கும் பிணங்கள் எழாதிருக்க கம்பு வைத்து அடிப்பதாக கேள்வி பட்டுள்ளேன். பிரதமர் நேருவை எரித்த போது கூட அவருடைய எலும்பு எழுந்ததாக கதைகள் உண்டு. மின் மயானங்கள் உள்ளதால் நகர்புறங்களிள் வசிக்கும் நபர்களுக்கு இறந்த பின்பும் அடி வாங்கும் கவலை இல்லை! (நொடியில் பொடியாக வந்து விடுவார்களாம்)

நாங்கள் முதல் நிலை பள்ளியில் படிக்கும் போது இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைக்க எங்கள் பள்ளி அருகிலுள்ள வழியில் கொண்டு செல்லும் காட்சியை கண்டுள்ளோம். ஒரு பெரிய பெட்டியில் பச்சை துணியை கொண்டு மூடி " இலாஹிலாஹா இல் அல்லா" என்று பாடிகொண்டே செல்வது மரணத்துக்கு ரொம்ப கனம் உள்ளதாக தோன்றியுள்ளது. 

ஹிந்துக்கள் மரண வீடு தான் பயங்கரமாக இருக்கும். அழாவிட்டால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியாகாது என்பதால் அழுவதை ஒரு சடங்காக வைத்து நடத்துவார்கள். பெரியகுளம் கல்லூரியில் படிக்கும் போது ஒலிபெருக்கி வழியே அழும் ஒப்பாரி பாடல்களில் அர்த்தமுள்ள ரசனையான வரிகள் மற்றும் நல்ல ராகம் உள்ளதையும் காணலாம். 

நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது மரணத்தை கொண்டாடும் ஒரு பொடியன் இருந்தான். அவனை, அவனுடைய பெற்றோர் சிறு வயதில் கேரளாவில் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். சில மோசமான நபர்களால் பாதிப்படைந்ததால் சிந்தனை செயல் ஒத்துபோகல் குறைவுள்ளவனாக இருந்தான். அவன் முகம் குழந்தை போல் இருந்தாலும் மயக்கு மருந்து போன்றவற்றின் பயன்பாட்டால் களையற்றே காணப்பட்டான். ஆனால் யாராவது இறந்து விட்டால் அடுத்த சில நாட்கள் மிகவும் உற்சாகமாக சிரித்தமுகத்துடன் காணப்படுவான். ஆடி பாடி இடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ரொம்ப அழகாக கதைப்பான். மரணத்தை பற்றி நினையும் போது அவன் நினைவுகளும் வந்து செல்வதுண்டு. 

நம்பிக்கை "கடவுள் தந்தார் கடவுள் எடுத்து கொண்டார்" என்ற கிறிஸ்தவ கோட்பாடு உள்ளதால் மரண வீட்டில் அழுகையை யாரும் வரவேற்பதில்லை, இருப்பினும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இறந்த வீட்டில் சட்டத்தையும் மீறி அழுவதை காணலாம். பொதுவாக கிருஸ்தவ மரண வீடுகள், பிரத்தியேக மரண பக்தி பாடல்கள், ஜெபம் பின்புலனில் அன்று பயணிக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள் வீட்டில் சிறிய சத்ததில் ஒலி நாடாவால் பாடலை ஒலிக்க விட்டிருப்பார்கள். ஆலய பாடல் குழுகூட அங்கு குழுமியிருந்து சோக பாடல்கள் பாடி கொண்டிருப்பார்கள்..
கன்னியாஸ்திரிகள் இறந்தால் அடக்கம் செய்யும் வரை பக்கத்தில் எரியும் மொழுகுவத்தி, கமகம எரியும் பத்தியுடன் பிரார்த்தனைகள் தச்சுக்கு என்பது ஒலித்து கொண்டே இருக்கும். இறந்த பின்பு ஆத்துமா 8 மணி நேரம் உணர்வுடன் இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் இறந்தவர்களை மகிழ்வுடன் வழியனுப்பும் வழிதான்!
கேரளாவில் மரண வீட்டையும் விசேஷ வீடு போன்று வீடியோவில் பதிவு செய்வார்கள். பின்பு அதை எந்த மன நிலையில் பார்பார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை பல குடும்பங்களில் வெளி நாடுகளில் உறவினர்கள் உள்ளதால் அனுப்பி கொடுக்க எடுக்கபடலாம்!
கேரளா ஹிந்து மக்கள் அவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்தில் புதைக்கபடுவதையே பெருமையாக கருதுகின்றனர். மலையாளம்
நடிகர் முரளி
தன் கடைசி துகில் கொள்ள என அழகான அமைதியான இடம் தேர்வு செய்து வாங்கி வாழை, தென்னை நட்டு பராமரித்ததாகவும் அங்கே அவரை தகனம் செய்ததாகவும் ஊடகம் வழி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். ஆனால் தமிழர்கள் புதைப்பதற்கென மரண பயம் பற்றி கொள்ளும் இடு காடுகள் தான் தேடுகின்றனர்.
பொதுவாக கிறிஸ்தவர்கள் இறந்தால் அடக்கம் பண்ண படுவது ஆலய வளாகத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் தான். கோவாவிலுள்ள கல்லறை தோட்டத்தின் அழகை கண்ட போது ஒருவருக்கு சாகுவதற்க்கு ஆசையாக இருந்ததாம். ஆனால் திருநெல்வேலி கல்லறை தோட்டத்தை காணும் போது சாகவே பயமாக உள்ளது! ஆலயவளாகத்தில் அல்லாது ஒதுக்குப்புறமாக களையற்று காணப்படுகின்றது.கிறிஸ்தவர்களுக்கு கல்லறை திருநாள் என்ற ஒரு நாள் உண்டு. கத்தோலிக்க சபையாருக்கு ஒரு சில மனிதர்கள், மரித்தவுடன் நேராக சொர்கமோ நரகமோ செல்வதில்லை என்றும் இடைபட்ட உத்திரிகிறிஸ்துஸ்தலம் என்ற இடத்தில் சென்றடையுவதாகவும் இவர்கள் சுத்திகரிக்கபட்ட (ஜெபத்தால்) பின்பே சொர்கம் சேருவதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் வருடத்திற்க்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மரித்தவர்களை நினைத்து பிரார்த்தனை செலுத்துவது உண்டு. மேலும் உறவுகளுடன் உள்ள அன்பை வெளிப்படுத்தவும் இந்நாளை பயன்படுத்துவர். காடு பிடித்து கிடக்கும் கல்லறை மாடங்களில் செடி கொடிகளை வெட்டி வெள்ளையடித்து மெழுகு வத்தி பத்தவைத்து அழுத கண்களுடன் உருகி பிரார்த்தனை செய்வதை கண்டுள்ளேன்.
எனது அம்மாவின் தகப்பனார் மரிய செபாஸ்டியன் அவருடைய 31 வது வயதில் இருதய கோளாரால் திடிர் என இறந்து விட்டார். மயானத்திற்க்கு பெண்கள் செல்லாதிருப்பதால் பாட்டிக்கு எங்கு அடக்கம் செய்தனர் என தெரிந்திருக்க வில்லை. மேலும் பாட்டியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் தாத்தாவின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு பெரிய சம்பவமாக இருக்க வில்லை போலும். பாட்டி 16 வது நாளில் சென்ற போது பக்கத்தில் இன்னொரு கல்லைறையும் இருந்துள்ளது. பின்பு தாத்தாவின் உண்மையான குழி மாடம் ஏது என்பது பாட்டிக்கு தெரியாதே போய் விட்டது. அப்படி தாத்தாவுக்கு சொத்தில் மட்டுமல்ல கடைசியில் துகில் கொள்ளும் கல்லறை கூட சொந்தம் இல்லாதாகி விட்டது!
மலையாளத்து சகோதரர்கள் அவர்கள் முன்னோரை நினைத்து, அவர்கள் உயிரோடு இருக்கும் போது விரும்பி உண்ணும் உணவே நண்பர்களுக்கும் உறவுகாரர்களுக்கும் விருந்தாக தருவார்கள். ஆப்பம்- தாறா(வாத்து)கறி, பொரோட்டா- மாட்டு கறி குழம்பு ருசியாக சாப்பிட்டுள்ளோம். எனது அம்மா அவர்கள் பெரியப்பாவை எண்ணி ஒரு கைலி(லுங்கி), சட்டை, துண்டு, ஆட்டு கொழம்புடன் ஒருவருக்கு ஒரு நேர சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்..

 
1000 திற்க்கு மேற்பட்ட ஜனங்கள் உள்ள ஆலயமாக இருந்தும் எங்களுடைய வண்டிபெரியார் ஆலயத்தில் ஒரு அழகான ஆனால் மிக சிறிய கல்லறை தோட்டமே உள்ளது. கோயிலோடு சேர்ந்த காப்பி தோட்டத்தை பயன் படுத்த கூறியும் பாதிரியார்கள் செவி கொள்ளாது, மழை நேரம் அடித்தோடும் தண்ணிரில் எலும்புகளை குப்பை போன்று தள்ளி விட்டனர் என கூறி கொஞ்சம் மக்கள் வேறு சபை ஆலயம் தேடி சென்று விட்டனர். அதே போல் குழியில் இடம் இல்லாத போது மக்காத உடல்களை கல்லறை பக்கத்திலுள்ள ஒரு பெட்டி போன்ற சிமன்று தொட்டியில் இடுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதை துப்பு எடுக்க 'ஜெயிம்ஸ் பாண்டு 007' எங்கள் ஊரில் இன்னும் பிறக்காததால் தப்பி பிழைத்து போகின்றனர் எங்கள் ஆலய அதிகாரிகள்! கிறிஸ்தவர்கள் தாங்கள் கடைசி துயில் கொள்ளும் அவர்களுக்கு என 6 அடி சொந்த மண்ணுக்கு ஆயுசுக்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது செத்த பிறகும் உறவினர்கள் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த இயலாத மக்கள் பாடு தான் அடித்து செல்லும் தண்ணீரும் சிமன்று பெட்டியுமாக இருக்கலாம்!
குதிரைக்கு கடிவான் என்பது போல் சபையின் மக்கள் மேலுள்ள ஒரு கடிவானமும் கல்லறை தோட்டம் தான். சில கிறுஸ்தவர்கள் கல்லறைக்காகவே கோயிலுக்கு வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று காணிக்கை கொடுத்து வருவார்கள். ரொம்ப கேள்வி கேட்கும், மாற்று கருத்துள்ள, தற்கொலை செய்து கொள்ளும் கிருஸ்தவர்களுக்கு என தெம்மாடி குழியும் (கெட்டவர்கள் குழிமாடம்) உண்டு. கம்னிஸ்டுகள் மற்றும் சில முற்போக்கு கிருஸ்தவர்களின் எதிர்ப்பால் தெம்மாடி குழி என ஒன்று கடைபிடிக்கா விட்டாலும் தற்கொலை செய்தவர்களின் அடக்கம் பாதிரியாரின் தலைமையில் பிரார்த்தனையுடன் நடை பெற சட்டம் அனுமதிப்பது இல்லை.
கல்லறை என்ற பெயரில் வெறும் காங்கிரீட் மேடையுடன் காணப்படுவதை விட ஒரு குழிக்கும் ஒரு மரத்தை வைத்து தோப்பாக மாற்றினால் சுற்றுப் புறம் மட்டுமல்ல காணும் மனங்களுக்கும் ஆறுதலாக இருக்கும். வாழ்வே இடம் இல்லாத சூழலில் மரித்தவர்களுக்கு என இடத்தை பராமரிக்கும் போது சில பொது நன்மைகளையும் மனதில் கொண்டு கல்லறைகளை அழகாக
பேண முன் வர வேண்டும். தற்போது 18, 19. நூற்றாண்டு கல்லைரை போல் அழகுணர்வுடன் கல்லறைகள் கட்டபடுவதும் கிடையாது.
சமீபத்தில், சீர் திருத்த கிருஸ்தவர்கள் குடியயேறிய முதல் ஊரான "முதலூருக்கு" சென்றிருந்தோம். 18 நூற்றாண்டிலுள்ள கல்லறைகள் கலை நயத்துடன் கட்டிபட்டிருந்தது, அவர்களை பற்றிய கதைகள் கல்லறைகள் சொல்லியது. மரிப்பவர் ஒரு பாடகராக இருந்தால் அவர் கல்லறை மேல் பாட்டு உபகரணங்கள் போன்ற சிற்பங்கள் வைக்க பட்டிருக்கும். அவர்கள் காலத்திலுள்ள தமிழ் எழுத்துக்களில் அவர்கள் பிறப்பு இறப்பு அவர்களை பற்றி எழுதியவை எல்லாம் இன்று பராமரிபற்று அழிந்துகொண்டிருக்கின்றது. பல மிஷனரிகளின் குழந்தைகள் கல்லறை (இங்குள்ள இயற்கை சீற்றத்தாலும் மற்றும் தொற்று நோயால் இறந்த போது) சிறிய தேவதைகளின் சிற்பங்களுடன் அழகாக வடிவமைத்திருந்தனர். மேலும் கிருஸ்தவ சபையில் பதவியில் இருந்த நபர்களின் கல்லறைகள் அழகாக பராமரிக்கபடுகின்றது மட்டுமல்ல ஆலயத்திற்க்குள் கூட குடி கொள்கின்றது.
சிலருடைய கல்லைறைகள் அவர்கள் உயிரோடு பெறபட்டதை விட அதிகம் மதிப்பு பெறுவதாகவும் நாம் கண்டுள்ளோம். பல ஆயிரம் மக்கள் 50 சென்றுக்குள் ஒரே அடுக்குமாடியில் குடியிருக்க வேண்டிவரும்போது ஒரு மனிதனின் கல்லறைக்கு என ஏக்கர் கணக்கு இடம் இருப்பதும் சிந்திக்க தான் வைக்கின்றது. கல்லறையிலும் பதவிக்கும் பணத்திற்க்கும் மதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல!!!!
(புகைப்படங்களாக பதிவு செய்தாலும் எனது துறையிலுள்ள கல்லறையின் மேல் கோபமுள்ள ஒருவரால்அழிக்க பட்டதால் மேலும் அவ்விடத்திற்க்கு செல்லும் சூழல் அமையாததாலும் புகைப்படங்களை பகிரை இயலாததில் கவலையாகவே உள்ளேன். கூடி விரைவில் படங்களுடன் வருகின்றேன்.)

15 Jan 2011

விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!


துயரான நாளாகி விட்டது !   எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது.  இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர்.   ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஐயப்பா சாமிமார்  சீசன் மிகவும் மகிழ்ச்சியளிக்கும்  எங்கள் பகுதி மக்களுக்கு. அங்கு வசிக்கும் மக்கள் ஒரு எதிர் பார்ப்புடனே ஒவ்வொரு வருடவும் எதிர்நோக்கி காத்திருப்போம் இச்சீஸனை. ஏன் என்றால்   எங்கள் பகுதி மக்கள் பல விதத்தில் வருமானம் தருவது தான்!  எங்கள் பகுதி மலை பிரதேசம் என்பதால் எப்போதும் ஆள் அரவம் அற்றே இருக்கும். மூணார் போன்று உல்லாச பயணிகளின் சொர்கபுரியாகவும் விளம்பரம் பெற்று  இருந்ததில்லை.   சில வெள்ளகாரர்கள் மட்டுமே எங்கள் பிரதேசத்திற்க்கு வருவர்.  அருகில் இருக்கும் தமிழகம் சேர்ந்த பயணிகள் கூட தேக்கடி வரை வந்து விட்டு திரும்பி விடுவர். 

சபரிமலை பயனம் மேற்கொள்ளும் போது எருமேலி வழியை தேர்வு செய்யாத சாமியார்கள் தான் எங்கள் பகுதியே தேர்வு செய்வர் தங்கள் பயணத்திற்கு என . உணவில் இருந்து தலைக்கு தேய்க்கும் எண்ணை, சோப்பு அவர்கள் விரும்பும் குருமிளகு, தேயிலை, ஏலகாய்  விற்கும் கடைகள் இந்த சீசனில் காளான் செடிபோல் முளைத்து வரும்.  இதிலும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் ஜீப் ஜீப் என கூவி அழைத்து பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகள் சாமிமார் சீஸனில் கொண்டாட்டம் தான். ஒரு ஜீப்புள்ளவன் 2 ஜீப் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். அதுவரை விற்ற பொருட்கள் எல்லாம் பதின் மடங்கு லாபத்தில் விற்பனை நடத்து கொண்டு இருக்கும். , பக்தி என குமியும் தமிழகம், ஆந்திரா, கர்னாடகா சாமிகள் எங்கள் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர்களாகவே தெரிவார்கள் எங்கள் பகுதி மக்களுக்கு!

எல்லா வருடமும் ஒரு சாமியாராவது எங்கள் பெரியார் நதியால் காவு வாங்கபடுவார். அழகான நதியில் குளிக்க இறங்கும் சாமிகள் வெளியூர் என்பதால் தண்ணீரிலுள்ள சுழியை தெரிந்து கொள்ள தவறி விடுவர்.  உள்ளூர் மக்கள் நதியில் முனி இருப்பதாகவும் காலைபிடித்து இழுத்து ஆழத்திற்கு இழுத்து விடுவதாகவும் கதைப்பதை கேட்டுள்ளோம். 

இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.

இன்று விபத்து நடந்த பகுதி மின் விளக்குகள் இல்லாததும், தற்காப்பு வசதியற்ற, சிறப்பாக காவல்துறை உதவி அற்ற பகுதியாகவே இருந்துள்ளது. இதிலும் எடுத்துகொள்ள படவேண்டியது மகர ஜோதிக்கென 2 லட்சம் சாமியார்கள் சங்கமித்திருக்கும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்துள்ள தாம்? பொதுவாக எங்கள் பகுதியின் தரமான மருத்துவ வசதி கூட இல்லை. எப்போதும் 3 மணிநேரம் பயணம் சென்று கோட்டயம் என்ற பட்டணத்தை நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. மேலும் நெளிவும் குறுகலுமான ரோடு வழியுள்ள பயணம் எப்போதும் சவாலானதே!


கடந்த ஒரு மாதமாக கேரளா ஊடகம் ஏஷிய நெட், அமிர்தா தொலைகாட்சிகள் போன்றவை ரோட்டின் நிலைபற்றியும் , சாமியார்களுக்கு செய்து கொடுக்கப்படவேண்டிய வசதிகளின் குறைபாடுகளை பற்றியும் கதறி சொல்லிகொண்டு தான் இருந்தனர். இருந்தும் தேவையான பாதுகாப்பு வசதி கொடுக்காது கேரளா அரசு பல உயிர்களை பறித்து விட்டது. கேரளா அரசு வாய் சவுடாலில் முந்தும் அளவுக்கு செயலில் இல்லை என்பதே இது மறுபடியும் எடுத்து காட்டுகின்றது. 


தேவஸியம் போர்டு என்ற குழு தான் சபரிமலை பயணிகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க அரசால் நிறுவபட்ட சட்டபூர்வமான குழு. இவர்கள் சாமிகளுக்கு விற்கும் நைவேதியத்தில் இருந்தே ஊழலில் முங்கி நீச்சல் அடிப்பதை கடந்த சில நாட்களாக ஊடகம் சொல்லி கொண்டே தான் இருந்தது தமிழக ஊடகம் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் கொண்ட கேரளா ஊடகம், சாமிமார்கள் சிறப்பாக வெளிமாநில பக்தர்கள் எதிர் கொள்ளும் துயரம் பற்றி சொல்லி கொண்டே இருந்தும் அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய விபத்துக்கு தளம்  அமைத்து கொடுத்து விட்டனர் என எண்ணும் போது அரசின் கையாலக தன்மையை எண்ணி சினம் கொள்ளாது   வேறு வழியில்லை.

கேரளாகாரர்கள் அறிவாளிகள் பழக இனிமையானவர்கள் பார்க்க அழகானவர்கள் என பல சிறப்பு இருந்தாலும் அவர்கள் மட்டும் கடவுளின் தேசத்தின் பிள்ளைகள் என்ற ஒரு அகங்காரவும் உண்டு.  மற்றவர்களின் துன்பத்தை கூட ஏதாவது தத்துவம் பேசி மழுப்பி விடுவார்கள்.

பூமி பந்தில் சிறப்பான, ஏன் கடவுள் அருகாமையுள்ள இடமாக சபரிமலை இருக்கலாம். ஒரு சீஸனில் மட்டும் 133 கோடி ரூபாய் லாபம் இட்டும் தலமாக உயர்ந்துள்ளது.  ஆனால் பக்தி என்ற பெயரில் ‘மகரஜோதி’ என்ற பெயரில் செய்யும் தில்லு முல்லு கணக்கில் எடுக்க தவறுகின்றனர் !  நான் பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கு வேளையில் காங்கிரஸ் ஆட்சி நாட்களில் கம்னிஸ்டுகள், ஊடகவியாளர்களையும் அழைத்து சென்று மகர ஜோதி என்ற மகா சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியுருந்தனர். தற்போது கேரளாவின் வருமானத்திற்க்கு பெரும் பங்கு இது சார்ந்த நம்பிக்கை வகிப்பதால் சிலவற்றை "கண்ணை மூடி பூனை பால் குடிப்பதுபோல்" இருந்து கொள்கின்றனர். பொதிகை தொலைகாட்சியில் உயிரைவிடுத்து தற்சமய ஒளிபரப்பில் சிலர் உணர்ச்சி வசபடுவதை காணும் போது அழுவதா சிரிப்பதா நாம் அறியாது நிற்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோம். பக்தி சம்பந்தமான கருத்துக்கள் மற்றோர் மனதை பெரிதும் துன்பப்படுத்திவிடும் என எண்ணும் போது துணிவாக சில சம்பவங்களை சொல்லவும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் நம் பாதுகாப்பு நம் கையில் மட்டும் அல்ல என உணரும் போது சில தற்காப்புக்கள் பக்த பயணம் மேற்கொள்ளுபவர்கள் எடுத்தல் நலமாக இருக்கும்.

மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மேலுள்ள பயணம், உலகில் உயரமான பிரதேசங்களின் மேலுள்ள பயணம் சுத்தமான காற்று, வெள்ளம், வனமத்தியிலுள்ள பயணம் என எல்லா விதத்திலும் ரசிச்சு மேற்கொள்ளும் பயணம் இனிதாகவும் முடிய வேண்டும்.

ஐய்யப்ப ஆலய தலைமை குருக்கள் சினிமா நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து அடித்த கோமாளி கூத்து நாம் தெரிந்தே. இந்த விபத்து சோகம் கூட பலரில் பல விதமாக பிரதிபலிப்பதை நாம் காண உள்ளோம். பழுத்த பக்கதர்கள் என சொல்லி கொள்பவர்கள் ஐய்யப்பா சாமிக்கு பிடிக்காத பெண்கள் வந்தது அல்லது அவருக்கு பிடித்தமான காடுகளை அழித்து சிமின்று கட்டிடம் கட்டியது என சொல்ல போகிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு படி மேலை போய் ஐய்யப்பனிடமே கேள்வி வைப்பார்கள். எதிர் கட்சியோ, ஆளும் கட்சியின் அசட்டுதனம் நாங்க இருந்தா எல்லாம் நல்லபடி சென்றிருக்கும் என கதை விடுவார்கள். பாதிக்க பட்ட குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு தாயும், மனைவியும், பெற்றோரும், குழந்தைகள் கடைசியாக தான் தெரிவார்கள் என்பதே துர்பாக்கியமான உண்மை!!!!

12 Jan 2011

பள்ளிபடிப்புக்கு ஆப்பு வைக்கும் அரசு…..

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209