20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!


ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து கொண்டார்கள்.ஆனால் தற்போதோ  அணைஉடைந்தால் எரிமலை வெடிக்கும் என பல உணர்ச்சி வசனங்களுடன் பொய் முகத்தை காட்டி கொண்டு வெளி வந்துள்ளனர். 

தமிழனை அடித்தால் பதிலடி, ஐய்யப்ப பக்தர்கள் தாக்கு, தமிழன் விரட்டி அடிக்கப்பட்டான் என்ற பத்திரிக்கை செய்திகள் வேறு! மலையாள ஊடகமாவது மரியாதையாக நடந்து கொள்ளும்  என்றால் அது ஒரு படி மேலே போய் ஆலங்குளத்தில் மலையாளி மாணவன் தாக்கு, தமிழர்கள் பெரும்வாரியான தங்கள் இடங்களை கையகப்படுத்தியுள்ளனர் என்ற செய்தியுடன் வார்த்தை போர் ஊடகம் நடத்தி கொண்டிருந்தனர். 

இந்த தமிழ மலையாள இன உணர்வால் நேரடியாக பாதிக்கப்படும் குடும்ப நபர் என்ற சூழலில் உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு கிடைத்த செய்திப்படி தனிப்பட்ட வைராக்கியத்தை முல்லைப்பெரியார் என்ற பெயரில் சில வன்மம் பிடித்த மலையாளிகள் தீர்க்க முடிவெடுத்த போது கேரளத்து தமிழர்களுக்கு பெரிய கேடயமாக பாதுகாவலாக அங்குள்ள பெரும்வாரியான மலையாளிகளை   இருந்தனர் என்பதே.  

வண்டிபெரியாரில்http://www.thehindu.com/news/states/kerala/article2674541.ece கடை வைத்துள்ள என் உறவினரை முல்லைப்பெரியார் சம்பவத்துடன் இணைத்து தனிப்பட்ட வைராக்கியத்தில் இருந்த ஒரு மலையாளி தாக்க வர அங்குள்ள வியாபாரி சங்கம் அந்த நபரை கட்டுப்படுத்தியதுடன் சங்கத்தில் இருந்தே வெளியேற்றியது.  ஒரு சில இனவெறி பிடித்த மலையாளி மக்கள் ( கேரளா கிருஸ்தவ காங்கிரஸ், ஹிந்து முன்னனி) கூட்டாக சேர்ந்து தாக்க திட்டம் போட்ட போதும் கம்னீஸ்டு கட்சி, உம்மன்சாண்டி அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை காப்பாற்றியது என்றால் பொய்யாகாது. முண்டக்காயம் என்ற ஊரில் ஒரு தமிழனின் கடை தாக்கப்பட்ட போது மலையாளிகள் எல்லோரும் தங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   அவ்வகையில் தமிழர்களின் உயிர் தமிழகத்தில் விட மலையாள கரையில் பாதுகாக்கப்பட்டது என்பதில் அவர்கள் பெரிமிதம் கொள்ளலாம். கலவரம் என்ற போது ஈழப் போர் தவிர்த்து, எந்த தலைவனும் கொல்லப்பட்ட சரித்திரம் இல்லை. இதில் பலி வாங்கப்படுவது ஏழை எளிய சாதாரண மக்கள் மட்டுமே!

ஆனால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயம் செய்து வந்த மலையாள ஏழை விவசாயின் நிலை தான் பரிதாபம். கூடலூரில் கயிர் தொழில்சாலை நடத்தி வந்த மலையாளி தொழில்சாலை சில திருட்டு தமிழர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மேலும் வண்டிப்பெரியாரில் ஒரே லாறியுடன் தொழில்நடத்தி வந்த மலையாளியின் லாறி கம்பம்மேட்டு எல்லகையில் வரும் போது தாக்கப்படும் என்று அறிந்து தமிழக எண் ஆக மாற்றிய பின்பும் சில வெறிபிடித்த தமிழர்களால் கொளுத்தி எரிக்கப்பட்டது. மேலும் பன்றி வளர்த்து வந்த ஒரு மலையாளியின் பண்ணையில் அக்கிரமாக சென்று ஒரே நாளில் 50 க்கும் மேற்ப்பட்ட பன்றியை கொன்று  எடுத்து சென்றனர். பன்றி மட்டுமல்ல ஆடு வளர்த்தவனின் ஆடு ஒரே நாளில் ஆட்டு கறியாகவும் திராட்சை, வாழைத் தோட்டங்கள் சில காடைய தமிழர்களால் அழிக்கப்பட்டது.

ஆனால் வண்டிப்பெரியாரில் ஒரு தமிழ் ஆசிரியரின் இருசக்கிர வாகனம் கொளுத்தியதும் தனி நபர் சண்டையின் பெயரில் என்று இருந்தாலும் வசதியாக முல்லைப்பெரியார் பிரச்சனைக்குள் கொண்டு வந்தனர். மேலும் பணம் கொடுத்து ஓட்டு இட வைப்பது போல் பணம் கொடுத்து தமிழர்களை பேச வைத்ததாகவும் செய்தி கசிகின்றது. இன்னும் ஒரு படி மேல் போய் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று கேலிக்குரியது மட்டுமல்ல முரட்டுத்தனமானதே.  தமிழக எல்லகையில் குடியிருக்கும் தமிழர்களால் மலையாளிகளின் இளக்காரத்தை கூட பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் தமிழர்களின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சுகின்றனர். நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.

தமிழர் மலையாளி உறவு என்பது நட்பு உறவை கடந்து இரத்த உறவாக மாற்றப்பட்டு இரு தலைமுறை கடந்து விட்டது.  75 வருடம் முன்பு குடியேறிய என் முன்னோர்கள் குடியேறிய அந்த பூமியில் நாங்கள் வாழ்ந்த போது பெற்ற தாய் தமிழ் அன்னை என்றாலும், வளர்த்த தாய் ஆன மலையாளத்திடம் இருக்கும் பாசவும் அளவற்றதே. கேரளாவில் தாக்கப்படும் தமிழனின் செய்தி போலவே  தமிழகத்தில் தாக்கப்படும் மலையாளிகள் செய்தியும் வலி தருகின்றது. ‘பாண்டிகள்’ என்று பல இடங்களில் நாங்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் மலையாளம் எங்களுக்கு தந்த அன்பும் மரியாதையும் தமிழகத்தில் துளியும் கிடைத்ததாக உணர்ந்ததில்லை என்பதே உண்மை.  பூ பறிக்க கோடாலி எடுக்கும் தமிழன் சில பொழுது பல வழிகளில் எங்களை வெட்டி சாய்க்கவே செய்துள்ளான்!

அங்கு வாழும் தமிழர்களும் மலையாளியும் திருமணம் மற்றும் நட்பு உறவால் பின்னி பிணைந்து வாழ்ந்து வரும் சூழலே உணமை!  ஒவ்வொரு தமிழக குடும்பத்திலும் ஒரு மலையாளியாவது குடும்ப உறுப்பினராக இல்லை என்றால் ஆச்சரியமே. மேலும் பல தமிழர்கள் கூட மலையாளம் பேசி மலையாளிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்  ( கோழிக்கானம், ஏலப்பாறை, மூணார் பகுதி மக்கள்)

எம் குடும்பத்தில்  என் சித்தப்பா மனைவி மலையாளியாகவே இன்றும் வாழ்கின்றார். தமிழனை திருமணம் கொண்டேன் என்று சித்தி தமிழ் பேசியதும் கிடையாது அதே போல் சித்தப்பா மலையாளம் பேசியதும் கிடையாது. சமீபத்தில் அவர்கள் வீட்டிற்க்கு சென்ற போது அவர்களுடைய 3 வயது பேத்தி பாட்டியிடம் சுத்த மலையாளத்திலும் தாத்தாவிடம் தூய தமிழிலும் பேசுகின்றார்.

இச் சூழலில் முல்லைப்பெரியார் என்ற டாம் பற்றி நினைத்து கண்ணீர் விட்டு கதை எழுதும் ஊடகமோhttp://www.jacobantony.com/journey-to-mullaperiyar-shocking-facts/ தமிழ் உணர்வாளர்களோ கேரளா தமிழர்களின் பாதுகாப்பையோ உணர்வையோ கொஞ்சம் கூட நினையாது வார்த்தைகளால் போருக்கு துவக்கம் இட்டுள்ளனர். இந்த சூழல் காணும் போது என் ஈழ சகோதர்களில் நிலை தான் கண் முன் வருகின்றது. 30 வருடம் முன்பு மச்சான் என்று அன்புடன் பழகி வந்த சிங்கள-தமிழ் இளைஞர்கள் சூழ்ச்சி இனவெறி அரசியலால்  பிரிக்கப்பட்டு பெரிய விரோதிகள் ஆகி;   அன்னிய நாட்டில் தங்கள் நாட்டு கனவுடன் வாழ தள்ளப்பட்டனர்.  அகதியாய் அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு கிடைத்த மரியாதை வாழ்க்கை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வந்த ஈழ அகதியாய் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அன்னிய நாட்டில் 5 வருடம் வசித்த போது கிடைத்த குடி உரிமை 30 வருடம் தமிழகத்தில் வசித்த போது கிடைக்காது இரண்டாம் தர சமூக சூழலில் தான் ஈழ தமிழர்கள் வசிக்கின்றனர்.
                                                                                                                                                                        தமிழகர்கள் போல் வார்த்தையால் அடுத்தவர்களை வதைக்கும் ஒரு ஜனம் இருக்க வழியில்லை. 'பாண்டி' என்ற ஒரு வார்த்தைக்கு வாடி வதங்கிய எங்களை நோக்கி பல அவதூறான வார்த்தைகள் காத்து கிடைக்கின்றது.  சமீபத்தில் இன உணர்வாளர் என்று பீற்றி கொள்ளும் நபரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கண்ட போது இன உணர்வை விட மனித உணர்வை செம்மையான நிலை என்றே எனக்கு தோன்றியது.
                                                                                                                                                                                        இரு இனத்திற்க்கும் சண்டையை மூட்டி விட்டு அடித்து கொண்டு சாவதை காண ஒரு நரி கூட்டம் எப்போதுமே காத்து கிடக்கின்றது. ஈழ சகோதர்களின் அனுவங்களை  கண்டு உணர்ந்து வரும் காலங்களிலாவது இன உணர்வை விட மனித பண்பு – மனித நேயம் ஓங்கி வளர வேண்டும் என்றே என் மனம் கதைக்கின்றது!!! 

18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!


திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில் சமைத்தாலும் அதன் ருசிக்கும் ஈடு இணை ஏதும் இல்லை.

                                                                                                              ஏழைகளின் உணவாக இருந்த இதன் விலையும் தற்காலம் கிலோ 40 ரூபாய் என ஏறி விட்டது. நான் வளர்ந்த ஊரில் 6 மாதம் தொடர் மழை என்பதால் வேலை அற்ற பல ஏழைகளுக்கு போஷாக்கான உணவு வகைகளில் ஒன்றாக இருந்தது இது.  இதை மலையாளிகள் வறுத்து சிப்ஸாகவும் வேகவைத்து- காயவைத்து வருடம் முழுதும் உணவாக பயன்படுத்துவர். கப்பைகாலன் என்று மலையாளியை திட்டும் தமிழன் கூட கப்பையை ருசித்து சாப்பிடுவர். மலையாளிகளின் வீட்டு தோட்டத்தில், முற்றத்தில் கப்பை செடி அலங்காரமாக நிற்பதை காணலாம். அனைவரும் விரும்பி உண்ணும் கப்பையை என் பாணியில் சமையல் செய்து தருகின்றேன்.

 தேவையான பொருட்கள்

ப்பை – 1கிலோ

தேங்காய்- 1 கப்
தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய்- 1 கரண்டி
ஜீரகம் – சிறு அளவு
வெள்ளைப்பூண்டு- 4 - 5 பல்
இஞ்சி- சிறியதுண்டு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குழையும் அல்லது மசியும் அளவுக்கு நன்றாக கப்பையை வேக வைத்து வடித்து வைத்து விடவும்.
இனி தேங்காய் துருவலுடன்  ஜீரகம், சின்னவெங்காயம் 3, தேங்காய் துருவல் ஜீரகம், வெள்ளைப்பூண்டு (4-5 பல்), சிறியதுண்டு இஞ்சி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
இனி வாய் அகன்ற ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடான பின்பு, சிறிது எண்ணை விட்டு; காய்ந்ததும் கடுகு இட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிய துவங்கியதும் 3-4 சின்ன வெங்காயம் நறுக்கிய துண்டுகள் இட்டு வதக்கிய பின்பு கருவேப்பிலை சேர்க்கவும். இவையுடன் அரைத்த விழுதுவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் மசிந்த கப்பையும் சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தில் எடுத்து பருமாறி விடவும். மீன் குழம்பும் சேர்த்து ஒரு பிடி பிடித்தால் இன்று கொண்டாட்டம் தாங்கோ!!!

30 Nov 2011

முல்லைப்பெரியார்-Mullaiperiyar Dam 999


டாம்999 என்ற பெயரில் சோஹன் ரோய் என்ற கேரளாவை சேர்ந்தவரின் படமே சமீபத்தில் ஊடகத்தில் பெரிதும் சர்ச்சை செய்யப்பட்ட படம்.   இதன் தயாரிப்பு BizTV network குழுமத்தின் மேற்பார்வையிலும் cinematographer ஆக விஜய் வின்சென்ட், பாடல் அவுசப்பச்சன், நடிப்பு விமலா ராமன் என ஒரு சிறந்த குழுவுடன்  வெளிவந்துள்ளது. இதன் விநியோக உரிமத்தை  வார்னர்  பிரதர்ஸ்(Warner brothers) எடுத்துள்ளனர்.  இப்படத்தை தமிழகத்தில் திரையிட கருணாநிதி தன் எதிர்ப்பை முதலாவதாக பதிவு செய்ததுடன் கேரளா - தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஆரம்பித்து விட்டது.  தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வழமையான இண உணர்வை கொண்டு கூரிய அம்புகள் தயாரிக்க மலையாள மந்திரிகள் டெல்லியில் உண்ணாவிரதம், மக்கள் தொடர் கருத்துரையாடல், ஹர்த்தால்/பந்து என்று மட்டுமல்லாது; தமிழர்கள் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என கொக்கரித்து கொண்டு ஜெயலலிதாவின் கோலம் எரிக்க என தமிழகத்தின் மேல் தங்கள் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

டாம் அல்லது அணைக்கட்டு என்பது ஓடும் நதி நீரை ஒரே இடத்தில் செயற்கையாக தேக்கி வைப்பதாகும்.  அவ்வகையில் இயற்கைக்கு மீறிய மனிதனுடைய செயல்பாடுகளில் ஒன்று தான் 'அணைக்கட்டுகள்’ என்பதும்.  அணைக்கட்டுகளை அதன் உருவாக்க நுணுக்கங்கள் பொறுத்து பல வகைகளில் பிரிக்கின்றனர்.  இதில் gravity dam சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.  இருப்பினும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாது பூமியின் காலநிலையில் பெரியதொரு மாற்றத்திற்க்கு காரணமாகின்றது அணைக்கட்டுகள்.  இயற்கையான சூழலில் இருந்து மனிதன் விலங்குகள் பறைவைகள் வன்முறையாக  குடிபெயர நிர்பந்திக்கப்படுகின்றன.  ஒரு பொது நன்மை என காரணம் காட்டி பல லட்சம் மக்களை குடிபெயிர செய்கின்றனர்.  1960 ல் இந்தியாவின் ஹிமாசலில் போங்( Pong Dam) அணைக்கட்டு கட்ட முடிவெடுத்த போது  1 லட்சம் 50 ஆயிரம் மக்களை குடிபெயர செய்ததுடன் வளமையான வாழ்க்கையை அழித்து மக்களை ஏழ்மைக்கு தள்ளினர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த மக்களை அன்றைய உள் துறை அமைச்சராக இருந்த   சர்தார் வல்பாய் பட்டேல் “தண்ணீரால் மூழ்கடித்து கொன்று விடுவோம்” என மிரட்டியதும் செய்தியே!
                                                                                                                                                                                            மின்சாரம் தயாரிப்பதற்க்கு என்று சீனாவில் கட்டப்பட்ட 3 அணைக்கட்டுகளுக்கு என ஒரு மிலியன் மக்கள் குடியிருப்புகளை இடம் பெயரசெய்துள்ளனர். உலக அளவில் நோக்கினாலும் 80  மிலியன் மக்கள் அணைக்கட்டு கட்டுமானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முட்டையில் இருந்து கோழியா அல்லது கோழியில் இருந்து முட்டையா என்பது போன்று அணைக்கட்டு மூலமாக தடுக்கப்படும் தண்ணீரின் அழுத்தால் பூமி அதிற்ச்சி உண்டாகலாம் அல்லது பூமி அதிற்வால் அணைகள் உடையவும் செய்யலாம் என்பதும் அறிவியலே!  கேரளா விஞ்சானிகள் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆபத்தால் பொதியப்பட்டுள்ளது என்று கூறும் போது தமிழக விஞ்சானிகள் அணைக்கட்டு பலமாக உள்ளது என்று சொல்லும்  போதும் உண்மைக்கும், மொழி-ஊடகத்திற்க்கும் தொடர்பு உண்டா அல்லது இது அரசியல் விளையாட்டுகளில் ஒன்றா?, அல்லது உண்மையிலே தங்கள் உயிர் ஊஞ்சலில் தானா ஒன்றும் விளங்கவில்லை பாமரனுக்கு! சண்டே இந்தியன் போன்ற பண்முக மொழிகள் கொண்ட பத்திரிக்கைகள் கூட மலையாளப் பதிப்பில் மலையாளிகளுக்கும் தமிழ் பதிப்பில் தமிழர்களுக்கு சார்ந்து செய்தி வெளியிட்டிருந்தனர்.

சீனாவில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேரில் உயிரை பலி வாங்கிய 1975 ல் நடந்த மாபெரும் பங்கியோ(Banqiao) அணைக்கட்டு விபத்தின் தாக்கம் கொண்டு முல்லைப்பெரியார் அணையை மையமாக வைத்து 2011 ல் எடுக்கப்பட்ட குறும்படத்திற்க்கு (DAM S- The lethal Water Bombs)சிறந்த cinematographer, editing, Visual effect, Documentary short போன்ற விருதுகள் கிடைக்க இதன் தாக்கம் கொண்டு தன் 20 நிமிட குறும்படத்தை 50 கோடி ரூபாய் செலவில் எல்லா தன்மையும் கொண்ட ஒரு திரைப்படமாக இயற்றியுள்ளார்  பொரியாளரான சோஹன் ரோய் என்பவர். இயக்குனரின் கருத்துப்படி உலகிலுள்ள அணைக்கட்டுகளில் 85% மேல் அதாவது 40ஆயிரம் அணைக்கட்டுகள் 2020ல் காலாவதி முடிந்ததாக மாறப்போவதாக குறிப்பிடுகின்றார்.


கேரளாவில் 5 மாவட்ட மக்கள் சிறப்பாக வண்டிபெரியார், குமுளி போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பூமி அதிற்வு, அணை உடையும் பயத்தில் வாழ்கின்றனர். கடந்த 5 வருமாக புது அணைக்கட்டு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்தாலும் சமீபத்தில் 20 க்கு மேற்ப்பட்ட முறை இடுக்கி மாவட்டம் பூமி அதிற்ச்சியால் பாதிக்கப்பட்ட போது  அணைக்கட்டு தங்கள் பிரதேசத்தில் வேண்டாம் என போராட்டம் திசை மாறி உள்ளது.  பல தமிழர் வியாபாரிகளிடம் சில மலையாள காடையர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் அறியும் சூழலில் பெரும் குழப்பத்தில் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை செல்கின்றது என்று மட்டும் விளங்குகின்றது.  ஒரு பக்கம் தமிழகத்தில் இரத்த உறவுகளின் அடாவடி பேச்சு என்றால், அங்கு தமிழர்கள் என்ற பெயரால் தாக்கப்படும் சூழல் வரமோ என்ற பயத்திலும் அணைக்கட்டு ஒருவேளை உடைந்தால் தங்கள் வேருகள் எக்காலத்திற்க்கும் அடையாளம் இல்லாது அழிக்கப்பட்டு விடுமோ என்ற திகிலிலும் நிம்மதியற்ற நாட்களை கடத்துகின்றனர் கேரளா தமிழர்கள்.

இரு மாநில மக்களுக்கு தீராத பகையை உருவாக்கும் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆங்கிலையர்களால் 1895 ல் கட்டப்பட்டது.  தொடர்ந்து 24 வருடம் திருவிதாம்கூர் மன்னனிடம் கோரிக்கை வைக்கப்பட்டு தங்கள் அதிகாரத்தின் துணையுடன்; பல முறை தோல்வி கண்டும் பென்லி ஹுக் என்ற சிறந்த ஆங்கில பொறியாளரால் கட்டப்பட்டதே முல்லைப்பெரியார் அணைக்கட்டு.  இது கடல் மட்டத்தில் இருந்து 2889 அடி உயரத்தில்  8 ஆயிரம் ஏக்கர் இடத்தில்155 அடி நீளத்திலும் 1200 வீதியிலும் கட்டப்பட்டுள்ளது. மேற்க்கு பக்கம் ஓடும் பெரியார் நதியை கிழக்கு பக்கம் திருப்பி வைகை நதியில் சேர்க்கும் பங்கை இந்த அணைக்கட்டு செய்கின்றது.  இதில் இருந்து வரும் தண்ணீரால் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.   மேலும் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது. அணைக்கட்டு உரிமை தமிழகம் பக்கம் இருந்தாலும்  நிலைகொள்ளும் இடம் கேரளா என்பதால் ஏக்கருக்கு 5 ரூபாய் என வருடத்திற்க்கு 40 ஆயிரம் ரூபாய்   தமிழகம் கேரளா அரசுக்கு செலுத்தி உள்ளது.

முல்லைப்பெரியார் தண்ணீர் முழுதும் தமிழகத்திற்க்கு என்று ஆங்கிலையர்கள்  காராரில் இருந்தாலும் சுதந்திர இந்தியாவில் அது செல்லுபடி ஆகாது என்று கூறி கேரளா அரசு 1975 ல்  மாற்றி அமைத்துள்ளது. மேலும் 6 ரிக்டர் அளவு பூமி அதிற்வை தாங்கும் சக்தி டாமுக்கு இல்லை என்பதை  மேற்கோள் காட்டி 142 அடி தண்ணீரை 136 அடிக்குள் சேகரிக்க கேரளா முடிவெடுத்த போது 152 அடி நீர் சேகரித்து வைத்து எங்களுக்கு தண்ணீர் தரும் தார்மீக பொறுப்பு உண்டு என தமிழகம் தன் நிலையை விளக்குகின்றது.  தண்ணீர் கொடுக்க கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல ஆனால் தங்கள் மக்கள் உயிர் காப்பது அவசியம் என்பதால் 116 வருடம் பழக்கமுள்ள முல்லைப்பெரியார் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை மிகவும் தேவை என கேரளாவும் தங்கள் நிலையை தெரிவிக்கன்றனர்.  ஆனா என்னமோ ஏதோ ஒவ்வொரு முறையும் கருணாநிதி ஆட்சியில் ‘காவேரி’ பிரச்சனை வருவது போல் ஜெயலலிதா ஆட்சியில் முல்லைப்பெரியார் உயிர் பெற்று விடுகின்றது. இருப்பினும் முல்லைப்பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டு கொண்டு சேர்த்து மின்சாரம் தயாரிப்பது போல் அணை உடைந்தால்  முல்லை பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டில் ஒன்று சேர அணை உடைய 5 மாவட்ட மக்கள் உயிர் துறப்பர் என்றதும் மலையாளியை தூங்க விடாத துர்கனவாகும்! தமிழகம் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாயி விடும் என்று அழும்போது 30 லட்சம் மக்கள் அழிக்கப்படுவார்கள் என கேரளா கரயுகின்றது.(அழுது)

முல்லைப்பெரியார் அணைக்கட்டின் பராமரிப்பு தமிழக் அரசிடம் இருப்பினும் அணைக்கட்டு நிலைகொள்ளும் இடம்  கேரளா என்பதால் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது தமிழக அரசு.   அணை கட்டுவோம் என்று சொல்லும் கேரளாவுக்கும்  மணல், கட்டக்கூடாது என்று சொல்லும் தமிழக அரசே  வைகை நதிக்கரையில் இருந்து கொடுக்கின்றது. உண்ணாவிரதம் இருக்கும் கேரளா தலைவர்களை, தமிழக தலைவர்கள் கைகாட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் பார்லிமென்றில். ஆனால் பொதுமக்கள் மத்தியில் மலையாளி தமிழன் என்ற வெறியை ஏற்ப்படுத்தி பிரச்சனையை வலுவாக்கவும் துணிகின்றனர்.

http://www.youtube.com/watch?embeddedஇவர்களுடைய கரார் உடன்படிக்கை 999 வருடங்கள் ஆகும்.  1 ¾ மணி நேரம் ஓடும், 3D நுணுக்கத்தில்  இயக்கிய இப்படத்தை,  படத்தின் தலைப்பாக 999 அமைந்திருப்பதை தமிழர்கள் சகிப்பு தன்மையுடன் நோக்கி காட்சி ஒளி ஊடகம் வழியாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றனர் என்று நோக்க தயங்குவது, அரசால் ஊடகம் தடுக்கப்படுவது தகவல் அறியும் உரிமையை தடுப்பது போல் தான் ஆகும். இது பூனை கண்ணை மூடி பால் குடிப்பது போல் தான் உள்ளது. 

19 Nov 2011

நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!



ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாள்.   உலக பெண் தரவும் சொல்லும் செய்தி   தினம் 3 ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர்.  ஐரோப்பியா நாடுகளிலும்   4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்படுகின்றனர்.  பாகிஸ்தானில் 90% என்பது இந்தியாவில் 70%  பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிகின்றது.  பிலிப்பைன் மற்றும் பராக்குவே நாட்டில் மட்டுமே 10 % குறைவான பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிந்துள்ளது. 

ஒவ்வொரு 6 மணி நேரத்தில் ஒரு இளம் பெண் எரித்து அல்லது அடித்து அல்லது தற்கொலை செய்து கொல்லப்படும் அளவிற்கு பெண்கள் மேல் கொள்ளும் வன்முறை இந்தியாவில் பெருகி பலுகி உள்ளது.  இந்த சூழலில் தான் இந்தியாவில் ‘குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்’   இந்திய அரசால் இயற்றப்பட்டது.   சட்டத்தால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசில் நோக்கம்!  ஆனால் உண்மை நிலவரம் என்ன என்றால் பல குடும்பங்கள் அழிந்துள்ளது என்று மட்டுமல்ல பெண்கள் வாழ்க்கையும் ஆண்கள் குடும்பவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

 மை நேஷன்(My Nation) போன்ற அமைப்புகள் இப்போது  ஆண்கள் சார்பாக போர் கொடி பிடித்துள்ளது.  பெண்கள் வடிக்கும் கண்ணீரை கண்டு சட்டம் இயற்றிய இந்திய அரசு, ஆண்களின் வாழும் உரிமையை கண்டு கொள்ளவில்லை என்பதாகும் அவர்களின் குற்றச்சாட்டு! ஆண்களின் கூற்றுப்படி  பொருளாதாரம் 32%,  உளவியல்(22%),  பாலியல்(19.8) என  பல  வழிகளில் பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர், துன்புறுத்துகின்றனர் என்பதாகும்.  திருமணமான ஆண்களின் நிலை இன்னும் கொடியதாகவே உள்ளது.   ஒவ்வொரு 8 நொடிகளிலும் ஒரு ஆண் மரணத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்.  திருமணமான பெண்களை (28%) விட ஆண்களே(52%)  தற்கொலைக்கு இலக்காகுன்றனர் என்பதும் நடுங்க வைக்கும்  உண்மை ஆகும்!  இச் சட்டத்தின் பாதகங்களை கணக்கிலெடுத்து மறு பரிசீலனை செய்ய ஆண்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.  மேலும் இந்த சட்டம் இயற்றும் முன் அரசு தேவையான ஆய்வு மேற் கொள்ளாததும் பெரும் குறையாகவே உள்ளது.  ஓட்டுக்கு என குடும்பம் என்ற கோயில்களை உடைத்து சமூகத்தை ஒரு சாக்கடையாக மாற்ற மட்டுமே இது போன்ற சட்டங்கள் உதவும் என்ற கருத்தும் மேல் ஓங்கி நிற்கின்றது.

இந்திய சமூக பார்வையில் ஆண்கள் தங்கள் துயரை வெளியில் சொல்வதோ, அழுவதோ ஆண்மைக்கு இழுக்காக கருதுவதால், தங்கள் மனக்குறைகளை பகிரவும், சிக்கல்களை தீர்க்கவும் வழியில்லாது தவிக்குகின்றனர்.   கடந்த 2001-2005 காலையளவில் 1 மிலியனுக்கு அதிகமான ஆண்கள் வேலை இழந்ததும்  பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குத்துள்ளது.  பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்கு உணவூ கிடைக்காதும், படுக்கை அறையில் புரக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை விடுதி அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.  கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்பது இந்திய பெண்கள் தானாம்!

இந்தியாவில், இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கேஸ் நெல்லையை சேர்ந்த ஜோசப்- மேரி என்ற தம்பதிகளுடையது என்பதே இன்னும் கூடுதலான தகவல்.  மேரி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வரும் கணவர் ஜோசப், தன்னை கம்பு-குடையால் அடித்தார் என்று கேஸ் பதியப் பட்டது.  வேலை இழந்து, கோர்ட்டு- கேஸ் தொல்லையால் உழன்று ஒரு நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதுடன் கேஸ் முடிந்துள்ளது!!  சமூக நிலையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்கு பெரிய இடம் கொடுக்கும் தமிழ் சமூகம், மேலும் அன்பை பற்றி உலகுக்கு சொல்லிய யேசுநாதரின் பெற்றோர் பெயர் கொண்ட கிருஸ்தவ தம்பதிகள் என்பதும் இன்னும் வருந்த தக்க செய்தி ஆகும்.

குடும்பத்தில் சண்டை வருவது தவிற்க இயலாத விடயம் ஆகி விட்டது.  இரு வேறுபட்ட சமூக சூழலில் இருந்து வந்த இரு நபர்கள், சங்கமித்து ஒரு குடும்பமாக மாறும் போது பல முரண்கள் எழுவது சகஜமே.  ஆனால் அதை கையாள தெரிந்துருப்பது என்பதே அறிவுள்ள மனிதனின்  சிறப்பு.   

சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு  பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.  உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது.  வழக்காளர்களுக்கு வழக்குகளை கொடுக்கலாம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் ஆனால் தம்பதிகளுக்கு மனக் கசப்பு அதிகரிக்குமே தவிற சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. தன் குடும்பத்தை போலிஸிடம் காட்டி கொடுத்த பெண்ணை /ஆணை பின்பு அந்த குடும்பம் மனதால் ஏற்று கொள்வது அரிதான விடயமே.  ஆனால் இதை புரியாது பல பெண்கள் சிறு சண்டைக்கு கூட போலிஸ் உதவி நாடுவது தங்கள் குடும்ப மாண்பை கெடுக்க மட்டுமே உதவும்.

சமூக கட்டமைப்பில் ஆக்கபூர்வமான செயல் ஆக்கத்திற்க்கு பெரிதும் பங்காற்ற வேண்டிய ஊடகம் கூட தன் வருமானம்- விளம்பரம் நோக்கு கொண்டு பல நிகழ்ச்சிகளில் கணவர்-மனைவி உறவை கொச்சைப்படுத்தும்படியான நிகழ்ச்சி நடத்துகின்றனர். நாலு சுவருக்குள், தங்கள் குடும்பத்திற்க்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய பிரச்சனையை கோபி நாத் போன்றவர்களிடம் பகிர்ந்து குரங்கிடம் கிடைத்த பூமாலையாக கணவர் மனைவி உறவை திரித்து காட்டுகின்றனர். அதே போல் பல சீரியல்கள்; கற்று கொடுப்பதே எப்படி அழுவது, கொடூரமாக முகத்தை வைத்து கொண்டு திட்டுவது, கண்ணை உருட்டி பயமுறுத்துவது, வஞ்சமாக திட்டமிடுவது போன்றவை ஆகும். சினிமா, பத்திரிக்கை போன்றவற்றிலும் வரும் காமடிகள்  பலதும் கணவன் மனைவி உறவு அலங்கோலமாக சித்தரிகரிப்பதாகவே உள்ளது. இதனால் குடும்பம் உன்னதமான கணவர்-மனைவி உறவு சார்ந்து மனதில் ஒரு கேலியான கீழ்த்தரமான எண்ண அலைகள் பதியப்படுகின்றது.  இதில் சினிமா, சீரியலில் காண்பது போன்று கற்பனைக்கு இடம் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.  திருமணம் என்பது  உடல் சார்ந்த உறவு என்பதை விட மனம் சார்ந்த உறவு என்று புரிதல் வரும் போது அலுப்பு மாறி வாழ்க்கையுடன் ஒன்றிப்பு வந்து விடுகின்றது.

மேலும் பிரச்சனை கையாள ஆண்களை விட பெண்களிடமே ஆற்றல், வலிமை உள்ளது.  இதில் படிப்பு,  திறமை என்பதை விட பெண்ணின் நேக்கு போக்கான பண்பே கை கொடுக்கும். இன்றைய படித்த பெண்கள் மூளையை விட நாவுக்கே அதிகம் வேலை கொடுக்கின்றனர்.  கணவன் வீட்டில் புகுந்த பெண்கள் தங்கள் உரிமையை பற்றி பேசும் அளவுக்கு கடமையை பற்றி எண்ணுவதில்லை.  

முதல் ஒரு வருடம் தான் சார்ந்திருக்க வேண்டிய குடும்பத்தை ஆழமாக அவதானிப்பதை விடுத்து முதல் ஒரு வருடத்திற்க்குள் அந்த வீட்டிலுள்ள அனைவரிடவும் சண்டை பிடித்து ஒதுங்கி விடுகின்றார்கள்.  ஒரு சமூகத்தின் மூக்கனாம் கயிறு பெண்ணிடமே உள்ளது. அச் சமூகத்தை ஆக்கத்திற்க்கும் அழிவுக்கும் கொண்டு செல்வது தன்னால் மட்டுமே என்று புரிந்து கொள்ளும் போது அச்சமூகம் சிக்கலில் இருந்து விடுபடுகின்றது.

தந்தையாகவும், கணவராகவும், மகனாகவும் பல அவதாரங்களில் நம் உயிரோடு கலந்திருக்கும் ஆண்களில் பாதுகாப்பு  நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!


இன்று நவம்-19 ஆண்கள் தினம்.  அனைத்து  ஆண் உறவுகள், தோழர்கள், ஆண் நண்பர்கள், ஆண் ஆசிரியர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!

14 Nov 2011

குழந்தைகள் தினம்!


எல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர்.   குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முன்னுரிமையையும் உரிமைகளை  நினைவுப் படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் முதல் பிரதமர் ‘ஜவஹர்லால்’ அவர்களின் பிறந்த நாளாம் நவம்- 14 இன்று குழந்தைகள் பேச்சு போட்டி, படம் வரையல் என பள்ளிகளில் கொண்டாடியுள்ளனர்.  குழந்தைகள்  வீட்டின் - நாட்டின் உயிர் நாடியாக, எதிர்காலமாக உள்ளனர் என்பதை நாம் அறிந்ததே.  வீடுகளில் குழந்தைகள் தான் முடி சூட மன்னர்களாக வலம் வருகின்றனர்.  பல பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்கவும் அவர்கள் மனம் கண்டு நடக்கவும் குழந்தைகளுக்காக வாழவும் முன் வருகின்றர். குழந்தைகள் கருவில் உருவாகுவதில் இருந்து அவர்கள் பிறப்பு, 'பிறந்த தினம்' என குழந்தைகள் சார்ந்தே பல கொண்டாட்டங்கள் வீடுகளில் அனுசரிகின்றனர்.

உலக ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கான குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்க  பல சட்டங்கள் வகுத்துள்ளனர்.   வாழுவதற்க்கான உரிமை, மற்றவர்கள் துன்புறுத்தலில் இருந்து மீண்ட வாழ்க்கை, பேச்சுரிமை, எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்ககும் உரிமை,எல்லா நாட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும்.  ஆனால் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் செய்திகள்  கணக்கில் கொள்ளும் போது குழந்தைகள் உரிமைகள் போற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.                                                                                                                                          

கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமையாக இருக்கும் போது பல குழந்தைகளின் குடும்ப சூழல், வறுமை, பெற்றோர்கள் பொறுப்பற்ற நிலை, ஏழ்மை, அறியாமையால் குழந்தைகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுப்படுகின்றது. தமிழகத்தை எடுத்து கொண்டால் பள்ளி செல்லும் 35% குழந்தைகளில், 15 % மட்டுமே உயர்பள்ளிப்படிப்புக்கு செல்கின்றனர். அவர்களிலும் 7% பேர் மட்டுமே பல்கலைகழக படிப்பை பெற முடிகின்றது.  பள்ளி செல்லும் குழந்தைகளும் விரும்பும் பாடம் படிக்க அனுமதிக்காதும்,  தன் ஆற்றலுக்கு மிஞ்சி பாடம் கற்க நிர்பந்திக்கப்பட்டும், துன்புறுத்தப்படுகின்றனர்.  மேலும் சில குழந்தைகள் 6 வயதிற்க்கு முன்பே பெற்றோர்களால் பள்ளிக்கு அனுப்பபட்டு கல்வியை கட்டாயமாக திணிக்கப்படுவது மட்டுமல்லாது டுயூஷன் என்ற பெயரிலும், வீட்டு பாடம், தேர்வு என்றும் உள-மனம் சோர்வாக காரணமாகின்றது.  மேலும் பல குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் கொடிய வார்த்தை செயல்களால் வருந்தப்பட வைத்து தற்கொலை செய்து தன்னை மாய்த்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவின் ஜனத்தொகையின் 40 %(400 மிலியன்)  குழந்தைகளே.   உலக குழந்தைகள் எண்ணிக்கையில் 19% குழந்தைகள் இந்திய குழந்தைகளாகவே உள்ளனர். ஆனால் 50 சதவீதத்திற்க்கும் குறைவான குழந்தைகளை பள்ளி செல்லும் சூழலில் உள்ளனர்.  50% மேலுள்ள குழந்தைகள் தேவையான அளவு போஷாக்கு உள்ள உணவு பற்றாக்குறை உள்ளவர்களாகவே உள்ளனர். பிறக்கும் 12 மிலியன் குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே தன் ‘முதல் பிறந்த நாள்’ காண உயிருடன் உள்ளது.  5-9 இடையிலுள்ள 25% பெண் குழந்தைகள் உறவினர்கள் தெரிந்த, தெரியாத நபர்களால் மோசமான நிகழ்வுக்கு ஆளாக்கப் படுகின்றனர். 

குழந்தை பணியாளர்கள் என்று எடுத்து கொண்டால் இந்தியா குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.  1976ம் ஆண்டு முற்றிலும் ஒழித்திருந்தாலும் பெற்றோர்களின் உந்துதலால் அல்லது குடும்ப சூழலால் 17 மிலியன் குழந்தைகள் தொழிலாளரகளாக உள்ளனர்.  







 குழந்தைகள் சார்ந்த பாலியல் தொழில்; ஆசியா நாடுகளில் அதிகம் என்றிருந்தாலும் உலகளாவியலாக இதே நிலை தான்!.  ஒவ்வொரு நாளும்  2 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே துயரான உண்மை.    5-15  வயதிற்க்கு உள்பட்ட 2 மிலியன் குழந்தைகள் மற்றும் 15-18 வயதில் 3.3 குழந்தைகள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.  இதற்க்கு என்றே மாபியாக்களும் செயல் ஆற்றி வருகின்றது. 1.2 மிலியன் இந்திய க்குழந்தைகள் பாலியல் தொழிலாளர்கலாக உள்ளனர்.  இதில் 80 % குழந்தைகள் இந்தியாவிலுள்ள 5 மெட்ரோ நகரங்களில் வசிக்கின்றனர்.   அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் உள்ளனர்.  குழந்தைகளை மையம் கொண்டே ஏஜென்று வழியாக குழந்தை பாலியல் சுற்றலாவும் கொடிகட்டி பறக்கின்றது.   வெறும் 20 டாலர் பணத்திற்க்கு குழந்தைகள் இந்த கொடிய நிலையில் வசிப்பதை ஒரு பத்திரிக்கையாளர் பதிவு செய்துள்ளார். http://www.youtube.com/watch?v=h7En-A1k1Ac  குழந்தைகளை விலைக்கு கொடுக்க பெற்றவர்களும் தயங்குவது இல்லை. மேலும் குழந்தை திருட்டு, கடத்தல் வழியாகவும் இத்தொழிலை வளமையாக்கி வைத்துள்ளனர்.   பல போது வீட்டு வேலைக்கு எனவும் தத்து எடுப்பது வழியாகவும் , அனாத ஆசிரமம் வழியாகவும் குழந்தை கடத்தல் நடைபெறுகின்றது.  கம்போடியா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுள்ள 98% பெண்குழந்தைகள் தங்கள் குடும்பங்களின் ஒரே வருமான மார்கமாக உள்ளனர்.

குழந்தைகள் அவலம் பெற்றோர் பொறுப்பின்மை,ஊழல் அரசு போன்றவற்றால் மட்டுமல்ல; போர் போன்ற சூழலாலும் இன்னும் மோசமாக மாறுகின்றது.  போரில் தாய் தந்தை கொல்லப்பட்டு அனாதை ஆகுவது மட்டுமல்லாது, போரிலும் குழந்தைகள்  கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.   சமாதானப்படை என்று நாட்டில் குவியும் படை வீரர்களாலும் குழந்தை பாலியல் தொழில் வளர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதற்க்கு ஒரு உதாரணமே அமெரிக்காப் படை புகுந்த பிலிப்பைன்ஸ்(1970),  வியற்னாம், கம்போடியா, மற்றும் போஸ்நியாவியா. சமீபத்தில் இலங்கையில் நடந்த நாலாம் ஈழப் போரிலும் பல அப்பாவி குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டது அறிந்ததே.

குழந்தைகள் மாண்பை கெடுக்காத விதம் ஊடகம் குரல் கொடுக்க வேண்டும்.  தன் குழந்தை போல் அனைத்து குழந்தையும் காண்பது வழியே இத்துயரே விலக்கி குழந்தைகளை நிம்மதியாக வாழ வைக்க இயலும்.

திருநெல்வேலியில் தெருவோரங்களில் 5 வருடமாக  வளராத கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண்ணும்,  குழந்தைகளை கோயில் ஓரம் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோரும், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மகளை தொழு நோயாக்கு விற்ற தாயும்,  தத்து கொடுக்கப்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு செல்லும் அழகான பெண்குழந்தையையும் காணும் போது சட்டம் எப்போது தன் கடமையை செய்து குழந்தைகள் உரிமையை காப்பாற்ற உதவி செய்யும் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகின்றது நமக்கு!

12 Nov 2011

ஊழல்- பாடசாலையில்



ஊழல் ஊழல் எதிலும் ஊழல் எல்லாற்றிலும் ஊழல் என இந்தியா வாழ்க்கை/தமிழக வாழ்க்கை  தாறுமாறாகி விட்டது.   அரசியல் வாதிகள் அதிகாரிகள் என இயன்றவன் எல்லாம் ஊழலில் 2G, 3G , மணல் கொள்ளை என்ற பல பெயர்களில் உல்லாச வாழ்க்கை தான் நடத்தி கொண்டிருக்கின்றனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் திடீர் அவதாரம் எடுத்து ஊழல் ஒழிப்பு என உருவாகும் போது அருந்திதி ராய் போன்றவர்கள் ' இது நாடகம்' என்று படை எடுக்கின்றனர்.  இதிலும் கொடுமை ஊழலுக்கு தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு வளர்க்கும் சோனியா போன்றவர்கள் ஊழலை அழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுவது இன்னும் நம்மை குழம்பி விடுகின்றது!  போனால் போகட்டும் போடா நாம் ஊழலற்று வாழுவோம் என்று முடிவெடுக்கும் போது; நம் குழந்தைகளுக்கு கல்வி நிலையங்களால் ஊழலுக்கு என வகுப்பு நடத்துவது தான் தர்ம சங்கடமான நிலையாக உள்ளது!

நேற்று, என் மகன் பாடசாலையில் நடந்த சம்பவம் இன்னும் என்னை நிலை குலைய செய்து விட்டது.  நெல்லை ரோட்டறி சங்கம் சார்பில் ஒரு பெரியவர் வந்து மாணாக்களுக்கு செடிகளை கொடுத்துள்ளார்.  இவர்களும் கையில் பிடித்து கொண்டு அரைமணி நேரம் ஐயா சொற்பொழிவு ஆற்றுவதை கேட்டு கொண்டு நின்றுள்ளனர்.   தன் இரு கரங்களையும் வீசி, நடந்து தன் சொற்ப்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

"அருமை பள்ளி செல்வங்களை உங்கள் கையிலுள்ள செடியை பாருங்கள் அதை உங்கள் வீட்டில் நட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை , இரு நாளுக்கு ஒரு முறை; அல்லது வாரம் ஒரு முறையாவது தண்ணீர் ஊற்றுங்கள்.  ஒவ்வொரு இலையையும் கூர்ந்து கவனியுங்கள் அதன் அழகை பாருங்கள் இதுவே நீங்கள் இயற்கைக்கு செய்யும் நற் செயல்.   நாளை நான் உங்கள் வீட்டின் அருகில் வரும் போது, சார் பாருங்க நீங்க கொடுத்த செடி வளந்து விட்டது என்று என்னிடம் மகிழ்ச்சியாக காட்ட வேண்டும்……………….” இப்படி அரைமணி நேரம் கதைத்துள்ளார்.  குழந்தைகள் அரைமணி நேரவும் இந்த செடியை தன் கைகளில் ஏந்தி நின்றுள்ளனர்.  பள்ளி ஆசிரியர் இதை காமராவில் படங்களாக எடுத்து கொண்டிருந்துள்ளார்.   

இதன் க்ளைமாக்ஸுதான் என் சிந்தனையை கலைய செய்து விட்டது.   அந்த  ஆசாமி பேசி முடித்ததும் மாணவர்களை… உங்கள் கையிலுள்ள செடியை அப்படியே எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என கொடுத்த செடியை வாங்கியும் விட்டுள்ளார்.  நாளை இச்செய்தி பத்திரிக்கையில் உங்கள் பள்ளி பெயருடன் வரும் என்று கூறி மாணக்களுக்கு விடை கூறி சென்றுள்ளனர்.  


ஊழல் எப்படி புரிவது என்று ரோட்டறி போன்ற கிளப் மூலமாக கற்று கொடுக்கின்றர்களா என்பதே என் கேள்வி. இதற்க்கு உடந்தை பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர்கள்!

இதே போல் இன்னொரு அனுபவம்.   2 வருடம் முன்பு. ரோட்டறி கிளப் சார்பில் நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ஒரு பொது தேற்வு வைத்து பரிசு கொடுத்தனர்.  மாலை 6 மணிக்கு பரிசை வாங்கி செல்ல பணியப்பட்டோம்.  6 மணிக்கு பெற்றோர் குழந்தைகளுடன் குழுமியிருந்தாலும் உறுப்பினர்கள் ஒவ்வொவொருவராக 7 மணி ஆகியும் வந்து சேரவில்லை!  பின்பு மாறி மாறி அவர்களுக்குள் பொன்னாடை போர்த்தி மகழ்கின்றனர்… புகழ்கின்றனர்... பெண் உறுப்பினர் உதட்டு சாயம் சகிதம் இன்னும் ஒரு மணி நேரம் பிந்தி அலங்காரத்துடன் வந்து சேர்ந்தார்.  பின்பு அவருக்கு ஒரே புகழ்ச்சி மாலைகள். கடைசியாக மாணவர்களுக்கு ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது.
                                                                                                                                                                                                      சமூகத்தில் பணத்தாலும் பதவியினாலும் கல்வியாலும் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்கள் என எண்ணப்படும்-நம்பப்படும் சிலரே இதன் உறுப்பினர்கள்.  இவர்களுக்கு சமூகத்தில் ஒரு இடம், அடையாளம் தேவை என பள்ளி மாணாக்களை ஒரு கருவியாக பயண்ப்படுத்துகின்றனர். இந்த பணக்காரர்களுக்கு ஒரு பரிசு கோப்பை என்பது நாய்க்கு எலுப்பு வாங்கி போடும் செலவு மட்டுமே. இதை செய்து விட்டு விளம்பரவும் தேடி கொள்கின்றனர். ஆனால் பிஞ்சு குழந்தைகள் மனதில் அவர்கள் செயலால் நஞ்சை விதைக்கின்றனர்.

நல்ல மனது உடையவர்கள் என்றால் நெல்லை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்து எடுக்கலாம் அல்லது 10 மாணவர்கள் படிப்பு செலவையாவது ஏற்பார்கள். ஆனால் அவர்கள் பகிட்டை பெருமையை தெரியப்படுத்த மாணவர்கள் தான் கிடைத்தார்களா? மாணவப்பருவம் என்பது எதையும் எளிதாக தன்னகப்படுத்தி கொள்ளும் வயது. இந்த மக்களில் ஈனச்செயலை மாணவர்கள் செயல்விளக்கத்தால் கற்க வேண்டுமா? வெளி நாடுகளில்; மனித நேயம்,  பங்களிப்பு, சமூக நீதி,  சேவை என்ற உயிரிய நோக்கம் கொண்டு துவங்கப்பட்ட ரோட்டறி சங்கத்தின் தமிழகப்பதிப்பின் அசிங்கத்தை கண்டு நொந்து விட்டோம். தங்கள் பணக்கார அற்ப்பத் தனத்தை தங்கள்  பணியாளர்களோடு நிறுத்த வேண்டும் அதை பள்ளியில் பிஞ்சு குழைந்தைகளின் மனதில் தினிப்பதில் நியாயமில்லை.

அமெரிக்காவில் ஹேத்தி பூகம்பம் பின் பல வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை போன்றே கறுப்பின குழந்தைகளையும் வளர்க்கின்றார்களாம்.  வாழ்வில் உண்மை மறைக்கப்பட்டு,  பித்தலாட்டம் ஏமாற்று என்பதை கல்வியோடு தினிப்பது கண்டிக்கதக்கது அது யாராக இருந்தாலும்! 

6 Nov 2011

கவலைக்கிடமான நிலையில் மணிமுத்தாறு பூங்கா !!!


நெல்லையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் மின்பழுது வேலை நடப்பதால் இன்று மாலை வரை மின்தடை என்று, 3  நாட்களுக்கு முந்தைய பத்திரிக்கையில் செய்தி வந்து விட்டது.   காலையிலே அவசர அவசர அவசரமாக சமையல், துணி துவைத்து முடித்து  எங்கள் வீட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி விட்டு 47 கி மீ பக்கத்திலுள்ள மணிமுத்தார் அணைக்கட்டு காண  பயணமானோம்.  இரண்டு வருடம் முன்பு போயிருந்தாலும் மழை பெய்து கொண்டு இருப்பதால் தண்ணீர் நிரம்பிய நீர் தேக்க தொட்டியை காணலாம் என்ற ஆசையில் இன்றைய பயணம் இருந்தது

சுற்றுமுற்றும் இருக்கும் 6 கிராமங்களின்  2756 ஏக்கர் நிலங்களில் வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் தரும்  மணிமுத்தாறு அணைக்கட்டு 1955-58 களில் கட்டப்பட்டுள்ளது.  இதன் கொள் அளவு 5511 மிலியன் குபிக் அடி ஆகும்.   62.4 கி.மீ பரப்பளவில், 2.9 கி.மி நீளம் கொண்ட இந்த டாம் நெல்லையின் ஒரு பிரதான சுற்றலா தளமாகும்டாமில் படகு சவாரி வசதியும் உண்டு.  கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் மேற்க்கு தொடர்ச்சி மலையில் இருந்து புறப்பட்டு வரும் மணிமுத்து ஆறே இந்த அணையின் தண்ணீர் ஊற்று!

நாம் பழைய பேட்டை வழியாக பயணத்தை தொடர்ந்தோம்.  மழை பெய்துள்ளதால் வழி எங்கும் நிரம்பி வழியும்; அல்லி பூத்து தவழும் குளமும் ஓடும் நதிகளுமாகவே காட்சி தந்தது.   சேரமா தேவி, கல்லிடைக்குறிச்சி வழியாக சென்ற போது ஒரு பழைமையான ஆலையத்தின் சிறப்பான அமைப்பு ஈர்த்தால்  ஒரு படம் எடுத்த போது கோயில் சுற்று மதில் சுவரில் தொங்கி கொண்டிருக்கும் பாம்பை எங்கள் மகன் காட்டி தந்தார்.  

கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்த போது ஒரு டீ குடிக்கும் கடை அருகே எங்கள் வாகனம் நின்றது.   அதன் அருகில் இறந்த வீட்டு ஒப்பாரியும் கொட்டு சத்தவும் கேட்டு கொண்டிருந்தது.   பெண்கள் ஒரு சருவத்தில் 3 கிலோ அரிசி நல்லெண்ணை ஒரு தேங்காய் என வாங்கி கொண்டிருந்தனர்சில அழுது துவண்ட பெண்கள் கடைக்கு வந்து தேனீரும் பண்னும் வாங்கி சாப்பிட்டு கொண்டு;  ஒரு பூமாலை வாங்க வேண்டும் அவனிடம் கொடுத்தால் 10 ரூபாய்க்கு வாங்கி விட்டு 15 ரூபாய்ன்னு சொல்லிடுவான் நீ வாரீயாஎன கொஞ்சம் புரணியும் அடித்து கொண்டு நின்றனர். ஊழல் நம் அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல, கிராமத்திலும் மலிந்து விட்டதோ  என்று எண்ணி கொண்டு ஒரு தேனீர் 4 ரூபாய், ஒரு  பண் 3 ரூபாய் என வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடியும் பயணம் ஆரம்பித்தோம்.

தமிழ்நாடு கனிமவளத் துறைக்கு சொந்தமான மார்பில் கல் வெட்டும் இடம் கடந்து சென்ற போது ஒரு படம் எடுத்ததை கண்ட காவலாளி இங்கு படம் பிடிக்க கூடாதுஎன கடமை உணர்வோடு தடுத்தார்.  நாமும் சரி என்று கதைத்து கொண்டு அடுத்த பக்கம் சென்று ஒரு படம் எடுத்து கொண்டு மணிமுத்தார்  நோக்கி போய் கொண்டிருந்த போது போலிஸ் பயிற்சி பள்ளிகள், அவர்கள் விடுதிகள், அதிகாரிகளின் குடியிருப்புகள் மிடுக்காக காட்சி அளிக்கின்றது.   எங்கும் போலிஸ் பயிற்சி மாணவிகள், மாணவர்கள் மயமாகவே இருந்தது.   சிரித்த முகம் போலிஸை கண்டாலும் 'போலிஸ்' நமக்கு அறியாத ஒரு பயத்தை தந்து மின்னி மறைகின்றதை உணர முடிந்தது.  வெள்ளை சீருடை அணிந்த போலிஸ் மாணவிகள் தான் இருமாப்பில் மிதி வண்டியில் நடமாடி கொண்டிருந்தனர்.

மணிமுத்தார் நீர்தேக்கம் வந்து விட்டோம்!  தங்க நிறத்திலான காத்திரமில்லாத ஒல்லியான திருவள்ளுவர் நம்மை வரவேற்கின்றார்.   நம் வாகனத்தை டாமின் அடிப் பக்கம் கொண்டு சென்று நிறுத்தினோம்.  எங்களுக்கு முன் ஒரு சிறு குழு சென்று திரும்பி கொண்டிருந்தது.  அதன் பக்கத்தில் படிகெட்டு வழியாக அணைக்கட்டின் மேல் பக்கம் செல்லலாம்.  வீட்டு மாடிக்கே செல்ல மடிக்கும் எனக்கு பெரும் பாடாக  இருந்தது படி ஏற்றம்!  மேல் பக்கம் சென்ற போது அவ்வளவு அழகு!  இயற்கை அழகும் மேற்கு தொடர்ச்சி மலையும், நேர்த்தியாக கட்டியுள்ள அணைக்கட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லாதிருந்தது.   இனிமையான மனதிற்கு இதமான காட்சியின் அணிவகுப்பாக  இருந்தது.  சுற்றி முற்றி எங்கு நோக்கினும் இயற்கையின் நளின நடனமாக இருந்ததுமனதில்லா மனதாக நாங்கள் கீழ் நோக்கி இறங்கிய வர; ஒரு அம்மா 3 குழந்தைகளுடன் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  பூட்டி யிட்ட வெளிக்கதவுக்குள் செல்ல சிறு பையன் முயன்று கொண்டிருந்தான்.  அம்மா சுற்றி முற்றும் நோக்கி விட்டு கீழை வர எத்தனித்து கொண்டிருக்க மேல் நடந்து வரும் மகளை கண்டு “ இங்க ஒன்னும் பார்க்க இல்லை..நீ ஏன் மேலே வாறேஎன்று தன் வெறுப்பை வார்த்தையால் உதிர்க்க மகள்எனக்கு மேல் வந்து பார்க்கனும்”  என்று நாகர்கோயில் தமிழில் கதைத்து கொண்டு விடாபிடியாக மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்

சுற்றலாத் துறையின் ஆழ்ந்த நித்திரையை உணர்த்தியது நீர் தேக்கத்தின் அருகிலுள்ள பூங்கா வனம்.   உள்ளூர் மக்களுக்கு  ஆடு  மாடு மேய்க்கும் வனமாக மாறியுள்ளது அழகிய அமைப்பிலான பூங்கா!. பூங்காவிலுள்ள சிலைகள் உடைந்தும் பொலிவற்றும் காணப்படுகின்றது.  கப்பலோட்டி வா.வொசிதம்பரம் பிள்ளை ஒரு கை ஒடித்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.  கவலையுடன் திரும்பிய போது ஒரு குரங்கு கூட்டம் எங்கள் மகன் கையிலுள்ள தின்பண்டம் பறிக்கும் நோக்குடன்  கூட்டமாக நம்மை நோக்கி படை எடுத்தது.  அணைக்கட்டின் மேல் பக்கம் உள்ள அருவிக்கு செல்ல விருப்பம் கொண்டாலும் திடீர் மழை நம்மை விரட்டி மணிமுத்தார் ஊர் எல்கையில் கொண்டு விட்டது.

மகனுக்கு அருவில் குளிக்க இயலவில்லை என்ற வருத்தம். அவர் மனம் குளிர்விக்க ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டு அருகில் வரும் முன், விரட்டிய மழை நம்மை பிடித்து கொண்டது. வீடு வந்து சேர்ந்த போது, பலத்த மழையால் காலையில்  துவைத்து இட்ட துணிகள் அசையில் மறுபடியும் குளித்து கொண்டிருந்தது!!!