19 Dec 2010

கோயில்களும் மனித நலனும்……



இன்று ஜெய மோகனின் வலைப்பதிவை கடந்து போகும் வாய்ப்பு கிட்டியது. அதில் கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாதிருநகரி போன்ற ஊர் கோயிலுகளை பற்றி கூறியிருந்ததை கண்டு ஒரு ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு என் கணவருடன் பார்வையிட சென்றுள்ளேன். மற்று இரண்டு கோயில்கள் என்னவருக்கு மிக பரிசயமான கோயிலுகள். அவருடைய ஊர் நாசரேத்தாக என்பதாலும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்ததாலும், மேலும் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கோயில், அங்குள்ள ஏரிகள் என சுற்றித் திரிந்துள்ளதாலும் கோயிலுகளுடன் ஒரு உணர்வு பூர்வமான தொடர்புகள் உள்ளது.
நாங்கள் அங்கு சென்ற போது எங்கள் பகுதியிலுள்ள ஒரு ஹிந்து சகோதரரும், அவருடைய அலுவலக நண்பர்கள் மற்றும் மேலதிகாரியுடன் வந்திருந்தார். நாங்கள் அவர்களுடன் சேர்ந்தே நடந்தோம் நாம் அறியாத பல கருத்துக்கள் கிடைக்கும் என்ற ஆர்வமே. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, காரணம் அவர்களும் பல அரிய தகவலுகளுக்காக சுற்று முற்றும் நோக்கினர். ஆனால் ஆலயவளாகத்தில் பெயருக்கு கூட மனித நிழல் இல்லை.
திருச்செந்தூர் செல்லும் பாதை- யாத்திரை பயணிகள் கோயில் முன்புள்ள ரோடு ஓரம், சிலர் கோயில் வளாகத்திலும் படுத்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு என ஒரு வசதியும் செய்து கொடுக்க படவில்லை. கோயில் நிலைகொள்ளும் கிராமம் கூட சுனாமி பாதிக்க பட்ட பிரதேசம் போன்று எந்த ஒரு வளர்ச்சியும் அற்று வெறிச்சோடி காணப்பட்ட்து. கோயிலை சுற்றி குப்பையாக இருந்தது. சிறப்பாக கோயில் உள் பக்கம் குப்பையாக சுத்தம் செய்ய படாது அசுத்தமாக காணபட்டது. கற்பக கிரகத்தில் எண்ணைய் வழிந்தோடிய நிலையிலே இருந்தது.
ஜெயமோகனில் வலைப்பதிவுக்குள் வருகின்றேன். சிற்பங்களை பற்றி விரிவாக விவரித்திருந்தார். ஜெயமோகன் குளிரூட்ட பட்ட அறையில் தூங்கி, வாடகை கார் பிடித்து சென்றதாக கூறியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் அரசியல்வாதிகள் போல் என்ன ஒரு சொகுசு வாழ்க்கை! எழுத்தாளர்கள், சமூகத்தின் பிரதிபலிப்பாளர்கள், சமூகத்தின் கண்ணாடி என கூறுவது உண்டு. ஜெயமோகன் ஒரு வேளை சென்னையிலிருந்து சாதாரண மக்கள் பயணம் செய்யும் பேருந்தில் வந்து நெல்லையில் இருந்து லோக்கல் பேருந்தில் கிருஷ்ணாபுரம் சென்றிருந்தால் கோயில் சென்றடைய பக்தர்கள் மேற்கொள்ளும் சிரமவும் துன்பவும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. கோயிலை சுற்றியுள்ள பிரதேசத்தின் வளர்ச்சியை நோக்கினாலும் நம்மை அதிர்ச்சி கொள்ள செய்யும். மக்களின் சீரான வாழ்க்கையில் கோயிலுகள் பங்களிப்பு கிடையாதா?. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதே இருக்கின்றனர். தமிழக பல அமைச்சர்கள் கனிமொழி சகிதம் இங்கு வருகை தந்துள்ளனர். வாஸ்துப்படி இங்கு வருவது பதவி காக்க சிறந்தது எனவும் ஒரு பத்திரிக்கை செய்தியும் கண்டுள்ளேன்.
அடுத்து ஆழ்வாத்திருநகரி பற்றி குறிப்பிடும் போதும் அழகான சூழல் இதமான காற்று என வர்ணித்துள்ளார். ஒரு வேளை கார் கண்ணாடியை திறக்காது கண்ணாடி வழி பார்த்து கொண்டிருந்திருப்பார் போலும். உண்மையில் ஆழ்வாத்திரு நகரி ரோடு எப்போதும் குண்டும் குழியும் தான். நம்மை வரவேற்ப்பது கூட வீட்டு முன் பக்க வாட்டிலுள்ள கழிவு நீர் கான்கள் தான். எங்கும் துர்கந்தம், பன்றிகளின் விளையாட்டு மைதானமாகவே ஆழ்வாத்திரு நகரி தெருவோரங்கள் காட்சியளிக்கின்றது. கோயில் அழகை மறைக்கும் விதம் அங்கு குப்பை கூளமாக தான் எப்போதும் இருக்கும். பழைய கால அருமையான வீடுகள் இருப்பினும் பாதுகாக்கபடாத சோகநிலையிலே காணப்ப்டுகின்றது.
இனி ஸ்ரீவைகுண்டத்தை பற்றி சொல்லியிருந்தார், ஏதோ தாமிர பரணி வழமையில் இருப்பது போல்? இவர்களை போன்ற எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்றை படிக்க போகும் நம் பின் தலைமுறையும் ஆகா தமிழ்நாடா இப்படியல்லவா இருக்க வேண்டும்! என கொட்டாவி விட்டு கொள்ளலாம். ஆனால் உண்மை நிலைவரம் அதுவல்ல.
மேலும் ஜெயமோகன் எழுத்துக்களில் கிருஸ்தவம் மேல் ஒரு தாக்கு இருந்து கொண்டே இருக்கும். என்னதான் சொன்னாலும் கிருஸ்வர்களும் ஹிந்துக்களும் பிரிக்க முடியாதளவு உறவாலும் உணர்வாலும் ஒன்று சேர்க்க பட்டுள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் ஒரு பாட்டி குடியிருக்கின்றார். பாட்டி கிருஸ்தர் அவருடைய கணவர் ஹிந்து. அவருக்கு 3 மகன்கள் ஒருவர் கிருஸ்தவராக இருக்கும் போது ஒருவர் ஹிந்துவாக இருப்பதையே பெருமையாக எண்ணுகின்றார். மற்றொரு மகனோ கடவுள் உண்டா இல்லையா என தேடி கொண்டிருக்கின்றார்.
எங்கள் தோழிகளில் சிலர் பாதுகாப்பாளரின் வற்புறுத்தல் மற்றும் தண்டனைக்கு பயந்து பல் விளக்காது கூட ஆலயத்திற்க்கு வரும் மத்தியில் என்னுடைய தோழியும் மற்றும் சில எங்கள் தோழிகளும் யாருடைய வற்புறுத்தல்கள் அல்லாது சொந்த மனசாட்சியின் தூண்டுதலாக தினம்(கிருஸ்தவ கோயிலுகளில் தினம் ஆராதனை உண்டு) கோயிலுக்கு செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள்.  வாழ்க்கை என வந்த போது அவர் காதல் கணவர் ஹிந்து என்பதால் அவருடைய விருப்பத்திற்க்கு இணங்கும் சூழலில் வாழவேண்டி வந்ததால் வீட்டில் பூஜை அறை, மணி அடித்து, விபூதியிட்டு, குங்குமம் வைத்து பூச்சூடி மாலை ஜெபம் என வாழ்கின்றார். அவர் பெற்றோர் கிருஸ்தவர்கள் தான்.
ஒரு குடும்பவுவும் முழுவதுமாக இந்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பது அரிதிலும் அரிது! தற்போது மதம் என்ற வேஷம் கலைந்து மக்கள் மக்களை மக்களாக ஏற்று கொள்ளும் கால கட்டத்தில் அவருடைய எழுத்துக்கள் பல போதும் மற்று மதத்தினரை துன்புறுத்தும் நோக்கில் நுட்பமாக ஒரு வார்த்தையாவது எழுதாது இருக்க மாட்டார். அவருடைய எழுத்தில் தற்கால மதம் என்ற பெயரில் மனிதன் கொள்ளும் துவேஷத்தை பற்றி எழுதுகின்றாரா என்றால் இல்லை என்பதை.
மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைவதை விட மதத்தின் பெயரால் நிலைகொள்ளும் ஆலயங்களுக்கு மக்கள் நலனிலுள்ள பங்கைபற்றி எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள கோவிலுகள் அந்த அந்த பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு ஒரு பாதுகாவல் என இருந்தாலே மனிதர் வாழ்வு வளம் பெரும்.
நெல்லையை சுற்றியுள்ள கோயிலுகளை மழை நேரங்களில் சுற்றி வந்தால் தெரியும். தெருவு கழிவு நீர் ஆலய வளாகம் மட்டுமல்ல ஆலயம் உள் புறங்களில் கூட செல்கின்றது. ஹிந்து மதத்தின் காவலர்கள் என காட்டி கொள்ளும் மதவாதிகள் சுத்தமான பரிசுத்தமான சூழலில் மக்கள் கடவுளை வணங்கவும் வழி செய்வதே உகந்தது. தண்ணீர் என்பதிற்க்கு பல உவமைகளால் அதன் பெருமையை போற்றுகின்றனர். சிறப்பாக சிவனின் மனைவி கங்காவின் முடி கெட்டில் இருந்து நதி வருவதாக எடுத்து செல்ல பட்டுள்ளது. மேலும் தண்ணீர் அற்ற ஒரு சடங்கும் இந்து மதத்தில் இருப்பது இல்லை. ஆனால் கோயிலை சுற்றியுள்ள தண்ணீரின் நிலைகளின் நிலைதான் என்ன?
களக்காடு ஊருக்கு ஒரு முறை  மக்களை சந்திக்க சென்றிருந்தோம். களக்காடு மிக அருமையான பகுதி, மேற்க்கு தொடர்ச்சி மலையோடு சேர்ந்து அழகாக காட்சியளிக்கின்றது. மேற்க்கு தொடர்ச்சி மலை தண்ணீரின் ஊற்று என்பதால் எங்கு நோக்கினும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை.
வீட்டு களிவு நீர் நேராக நதிகளில் கலக்கிகின்றனர். இதிலும் அங்குள்ள மருத்துவமனை களிவுகள் கூட நதிக்கரையிலே கொட்ட படுகின்றது.  ஆலய வளாகத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது. அதை மீன் வளர்ப்பதற்க்கு என குத்தகைக்கு கொடுத்துள்ளனர். மீன் வளர்ப்பவர்கள் பன்றி கழிவுகள்இடுவதால் அக்குளம் பாசம் பிடித்து நாற்றம் கொண்டு காணப்படுகின்றது.


அதே போல் நெல்லையிலுள்ள சிவன், மற்றும் நெல்லையப்பர் கோயில்கள் தாமிரைபரணி நதிக்கரயில் தான் உள்ளது. தாமிரைபரணி நதியின் பாதுகாப்பில் கோயிலுக்கும் மிக பெரிய பங்கு உண்டு என அறிய வேண்டும்.
ஆலயத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் இறந்து போகும் நபர்களை நதிக்கரயில் எரிப்பதை விடுத்து மின் அடுப்புகள் பயன்படுத்துவது வழியும் நதி கரைகளை சுத்தமாக பராமரிப்பது வழியாகவே உண்மையான கடவுள் பக்தியை பேண இயலும்.
அல்லது வரும் தலைமுறை நதிகளை ஆசார அனுஷ்டானங்களுக்கு கூட காண இல்லாதாகி விடும். கோயில் நிறுவனங்கள் வெறுமொரு கல்மண் கலவையல்லாது மக்கள் நலனை பேணும் உயிருள்ள இயக்கமாக உருவாக வேண்டும் என்பதை உண்மையான பக்தனினின் வேண்டுதலாக இருக்க முடியும்!!

0 Comments:

Post a Comment