28 Nov 2010

மழையே மழையே வா வா …..இல்லை இல்லை போ போ!!!!


கடந்த இரண்டு வாரமாக பயணம் செய்யும் கட்டாயம்.  காலை 6.30 க்கெல்லாம் தேனி செல்லும் பேருந்தை பிடித்து விட்டோம். வழியெல்லாம் முதல் நாள் பெய்து ஓய்ந்த பேய் மழையின்  அடையாளங்கள்.  மயிலுகள் குளிர், மழையால் வழியோரமுள்ள கல்லுகளில் அஸந்து இருந்தது.

 

பொதுவாக காய்ந்து வரட்சியாக காணப்படும் நதி ஆறுகளெல்லாம் நிரம்பி வழிந்து வெள்ளமுடன் காட்சி தந்தது.  குட்டைகள் குளங்களிலும் வெள்ளம் நிறைந்து வழிகின்றது. இவ்வளவு மழை வெள்ளம் பெறப்பெடும் நாமும் கேரளாவிடமும் கர்நாடகாவிடவும் பிச்சையெடுக்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோமே என எண்ணியபோது மனம் கனத்து போகத்தான் செய்தது.  சமீபத்தில் பாலாறுவில் மணல் கொள்ளையிடுவதை ஊர் மக்கள் தடுப்பது போல், மக்கள் இயக்கம் விழித்து கொண்டால் நமது தண்ணீர் வளம் காக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை என மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது!  கேரளா அரசு தமிழக மணலை விலை கொடுத்து வாங்குவது வழியாக அவர்கள் இயற்க்கை சூழல் அழியாதிருக்க எவ்வித விலை கொடுத்தும் காப்பாற்றுகின்றனர் என  தமிழக மக்கள்  புரிந்து கொள்ளுதல் நல்லதே.
பேருந்து சீட் எல்லாம் ஈரமாக இருந்தது.  அதிலும் ஸ்போஞ்சு சீட்டு பயண்படுத்துவதால் காயுவதற்க்கும் இன்னும் பல நாட்களாகலாம்.  நடுத்தனர் வேறு அடியாள் மாதிரி தள்ளி இரும்மா என கூறி ஈரத்தில் உட்கார மிரட்டி பணிய வைக்கின்றார்.  பேருந்து மாடலும் பழைய விதம் போல் இல்லாது மேடை போன்றும், குறுகலுமாக இருப்பதால் நெடு பயணங்களில் காலை நகட்ட கூட முடியாது தண்டனை பயணமாக தான் இருக்கின்றது. பேருந்தினுள்ளும்  குப்பையே.

வீடுகளை சுற்றியுள்ள குட்டை வாய்க்கால் நிலை தான் கண்ணை மூடும் அளவுக்கு இருந்தது.  இதிலும் சில நாய் பிடிப்பவர்கள் நாய்களை கொன்று புதைக்காது தண்ணீர் நிலைகளில் எறிந்துள்ளனர்.  வீட்டு கழிவு நீர் வாய்க்காலுகள் வெயில் காலத்திலும் வெள்ள ஓட்டம் இல்லாது நாற்றம் எடுத்து தான் இருக்கும்.   மழை வந்தவுடன் கழிவு நீர்கள் தெருவுக்கு வந்துவிட்டது . 

 இது தேனி, மதுரை, திருநெல்வேலி என மட்டும் இல்லாது நாகரிகத்திற்க்கு பெயர் கொண்ட நாகர்கோவிலிலும் இதே காட்சி தான்.  பேருந்து நிலையம் சாக்கடையாக தான் உள்ளது.  வாழையை நட்டு விட்டால் அடுத்த மழைக்குள்ளாக காய் காய்த்து விடும் என ஒருவர் தன் கோபத்தை வார்த்தையால் உதிர்த்து விட்டு சென்று கொண்டிருந்தார்.  இந்நிலைகளை காணும் போது நமது கவிஞசர்களை போன்று மழையே மழையே வா வா என அழைக்கவா அல்லது நமது நர்சரி மழலைகளை போல் மழையே மழையே போ போ என சொல்லவா என குழப்பமாக இருந்தது.

நெல்லை நாகர்கோயில் சிறப்பு பேருந்து என்பதால் பயணம் சிறப்பாக இருந்தது. வழியில் எங்கும் நிறுத்தம் இல்லை மேலும் 1.15 மணி நேரத்தில் நமது காரில் வருவது போல் நாகர்கோயில் வந்தடையலாம். (இது போன்று நெல்லை மதுரை பேருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றியது. காரணம் நெல்லை மக்கள் பல பொதுத் தேர்வுகளுக்கு, வேலைப்பதிவுகளுக்கு என மதுரை தான் செல்ல வேண்டியுள்ளது. பட்டி தொட்டி கடந்து மதுரை சென்றடைவதுற்க்குள் நேரம் கடந்து விடும்!!)
நான்கு வழிச் சாலை பயணமே ஒரு அழகு தான்.  ஓட்டுனர் தான் அவ்வபோது அலைபேசியில் பேசி பதைபதைக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் இந்த பேருந்தை பிடிக்கும் முன்பு எங்கள் வீட்டின் அருகிலிருந்து புது பேருந்து நிலையம் வர வேறு ஒரு லோக்கல் பேருந்தில் வர வேண்டியிருந்தது.  ஒரு மழையிலே குண்டும் குழியுமாக உடைந்த ரோட்டில், ரோடு எங்கு வாய்க்கால் எங்கு என சரிவர காண இயலாது குருட்டாம் போக்காக வரும் பேருந்தில் இருந்த மனநிலை பரிதாபமாகவே இருந்தது.


சாதாரண மக்களுக்கு என ஒற்றை அறை குடியிருப்புக்கள், உடைந்த குண்டும் குழியுமான ரோடுகள், ஒழுகும் பேருந்து, இலவசம் என்ற பெயரில் உலகிலே ஆகாத நாற்றம் பிடித்த அரிசி , சுத்திகரிக்க படாத சீனி, (ரேஷன் கடைக்காரனின் ஆக்ரோஷமான திட்டும்தான்) நோய் தாக்கினால் சிகித்சை பெற என சுத்தம் இல்லாத அரசு மருத்துவ மனைகள், பன்றிகள் மேயும் அரசு பள்ளிகள் என மக்களை புழுவென என்னும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எண்ணிகொண்டே பயணித்து வந்தடைந்தேன் நாகர்கோயிலில்……….

4 comments:

  1. சிறப்பான புகைப்படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. hai jose......unga ulla kumural nalla irukku....yathartham ippadi than irukku....al this correct......same time tirunelveli to madurai bye pass rider bus ullathu......its very quick compare ordinary bus.....oru sila city outerla stop undu....but its very quick......then this article very nice........

    ReplyDelete
  3. மிக்க நன்றி டாக்டர் ஐயா! உங்கள் மறுஇடுகைகள் மேலும் சிந்திக்க எழுத தூண்டுகின்றது.

    ReplyDelete