28 Nov 2010

மழையே மழையே வா வா …..இல்லை இல்லை போ போ!!!!


கடந்த இரண்டு வாரமாக பயணம் செய்யும் கட்டாயம்.  காலை 6.30 க்கெல்லாம் தேனி செல்லும் பேருந்தை பிடித்து விட்டோம். வழியெல்லாம் முதல் நாள் பெய்து ஓய்ந்த பேய் மழையின்  அடையாளங்கள்.  மயிலுகள் குளிர், மழையால் வழியோரமுள்ள கல்லுகளில் அஸந்து இருந்தது.

 

பொதுவாக காய்ந்து வரட்சியாக காணப்படும் நதி ஆறுகளெல்லாம் நிரம்பி வழிந்து வெள்ளமுடன் காட்சி தந்தது.  குட்டைகள் குளங்களிலும் வெள்ளம் நிறைந்து வழிகின்றது. இவ்வளவு மழை வெள்ளம் பெறப்பெடும் நாமும் கேரளாவிடமும் கர்நாடகாவிடவும் பிச்சையெடுக்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோமே என எண்ணியபோது மனம் கனத்து போகத்தான் செய்தது.  சமீபத்தில் பாலாறுவில் மணல் கொள்ளையிடுவதை ஊர் மக்கள் தடுப்பது போல், மக்கள் இயக்கம் விழித்து கொண்டால் நமது தண்ணீர் வளம் காக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை என மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது!  கேரளா அரசு தமிழக மணலை விலை கொடுத்து வாங்குவது வழியாக அவர்கள் இயற்க்கை சூழல் அழியாதிருக்க எவ்வித விலை கொடுத்தும் காப்பாற்றுகின்றனர் என  தமிழக மக்கள்  புரிந்து கொள்ளுதல் நல்லதே.
பேருந்து சீட் எல்லாம் ஈரமாக இருந்தது.  அதிலும் ஸ்போஞ்சு சீட்டு பயண்படுத்துவதால் காயுவதற்க்கும் இன்னும் பல நாட்களாகலாம்.  நடுத்தனர் வேறு அடியாள் மாதிரி தள்ளி இரும்மா என கூறி ஈரத்தில் உட்கார மிரட்டி பணிய வைக்கின்றார்.  பேருந்து மாடலும் பழைய விதம் போல் இல்லாது மேடை போன்றும், குறுகலுமாக இருப்பதால் நெடு பயணங்களில் காலை நகட்ட கூட முடியாது தண்டனை பயணமாக தான் இருக்கின்றது. பேருந்தினுள்ளும்  குப்பையே.

வீடுகளை சுற்றியுள்ள குட்டை வாய்க்கால் நிலை தான் கண்ணை மூடும் அளவுக்கு இருந்தது.  இதிலும் சில நாய் பிடிப்பவர்கள் நாய்களை கொன்று புதைக்காது தண்ணீர் நிலைகளில் எறிந்துள்ளனர்.  வீட்டு கழிவு நீர் வாய்க்காலுகள் வெயில் காலத்திலும் வெள்ள ஓட்டம் இல்லாது நாற்றம் எடுத்து தான் இருக்கும்.   மழை வந்தவுடன் கழிவு நீர்கள் தெருவுக்கு வந்துவிட்டது . 

 இது தேனி, மதுரை, திருநெல்வேலி என மட்டும் இல்லாது நாகரிகத்திற்க்கு பெயர் கொண்ட நாகர்கோவிலிலும் இதே காட்சி தான்.  பேருந்து நிலையம் சாக்கடையாக தான் உள்ளது.  வாழையை நட்டு விட்டால் அடுத்த மழைக்குள்ளாக காய் காய்த்து விடும் என ஒருவர் தன் கோபத்தை வார்த்தையால் உதிர்த்து விட்டு சென்று கொண்டிருந்தார்.  இந்நிலைகளை காணும் போது நமது கவிஞசர்களை போன்று மழையே மழையே வா வா என அழைக்கவா அல்லது நமது நர்சரி மழலைகளை போல் மழையே மழையே போ போ என சொல்லவா என குழப்பமாக இருந்தது.

நெல்லை நாகர்கோயில் சிறப்பு பேருந்து என்பதால் பயணம் சிறப்பாக இருந்தது. வழியில் எங்கும் நிறுத்தம் இல்லை மேலும் 1.15 மணி நேரத்தில் நமது காரில் வருவது போல் நாகர்கோயில் வந்தடையலாம். (இது போன்று நெல்லை மதுரை பேருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றியது. காரணம் நெல்லை மக்கள் பல பொதுத் தேர்வுகளுக்கு, வேலைப்பதிவுகளுக்கு என மதுரை தான் செல்ல வேண்டியுள்ளது. பட்டி தொட்டி கடந்து மதுரை சென்றடைவதுற்க்குள் நேரம் கடந்து விடும்!!)
நான்கு வழிச் சாலை பயணமே ஒரு அழகு தான்.  ஓட்டுனர் தான் அவ்வபோது அலைபேசியில் பேசி பதைபதைக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் இந்த பேருந்தை பிடிக்கும் முன்பு எங்கள் வீட்டின் அருகிலிருந்து புது பேருந்து நிலையம் வர வேறு ஒரு லோக்கல் பேருந்தில் வர வேண்டியிருந்தது.  ஒரு மழையிலே குண்டும் குழியுமாக உடைந்த ரோட்டில், ரோடு எங்கு வாய்க்கால் எங்கு என சரிவர காண இயலாது குருட்டாம் போக்காக வரும் பேருந்தில் இருந்த மனநிலை பரிதாபமாகவே இருந்தது.


சாதாரண மக்களுக்கு என ஒற்றை அறை குடியிருப்புக்கள், உடைந்த குண்டும் குழியுமான ரோடுகள், ஒழுகும் பேருந்து, இலவசம் என்ற பெயரில் உலகிலே ஆகாத நாற்றம் பிடித்த அரிசி , சுத்திகரிக்க படாத சீனி, (ரேஷன் கடைக்காரனின் ஆக்ரோஷமான திட்டும்தான்) நோய் தாக்கினால் சிகித்சை பெற என சுத்தம் இல்லாத அரசு மருத்துவ மனைகள், பன்றிகள் மேயும் அரசு பள்ளிகள் என மக்களை புழுவென என்னும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எண்ணிகொண்டே பயணித்து வந்தடைந்தேன் நாகர்கோயிலில்……….

16 Nov 2010

மனித பூச்சி கொல்லி மருந்து-என்டோன் சல்ஃபோன்



கேரளா அரசியல் தளத்தை சமீப நாட்களாக ஆட்டம் கொள்ள  வைக்கும் பிரச்சனையே என்டோன் சல்ஃபோன் பூச்சி கொல்லி மருந்து!! இது பூச்சிகளை மட்டும் அல்ல மனிதர்களையும் கொல்கின்றது என்பதே இப்போதுள்ள பிரச்சனை.



வேளாண்மை அமைச்சர் ரமேஷ் தன் பங்கு கருத்தை இப்படியாக கூறியுள்ளார் இதை அரசியல் பண்ணாதீர்கள், மனித துயரமே இது என!. ஆனால் இத்துயரம் அரசியல் லாப முதலைகளால்  மக்கள் தலையில் நிர்பந்தமாக கட்டி வைக்கபட்டதே என்று மறுக்க இயலுமா?

 என்டோன் சல்ஃபோன் என்பது அமெரிக்கர்களால்  1950  ல் தயாரித்த  பூச்சி கொல்லி மருந்தாகும். அமெரிக்க அரசால் அங்கிகரிக்க பட்டு பல நாடுகளுக்கு விற்க்கவும் பட்டது. 2002 ல் இதனால் வரும்  பாதிப்பை பற்றி அறிந்து  அமெரிக்கா மீன் மற்றும் இயற்கைவளத் துறையும் சேர்ந்து இதன் பயண்பாட்டை தடை செய்ய கூறியுள்ளது.  உலகலாவியலாக 2002 துவங்கி இதன் தீமையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டானர். 2010 ல் தான்  ஆஸ்த்த்ரேலியா,அமெரிக்க, நியூஸ்லண்டு, கனடா போன்ற நாடுகளில் தடை செய்ய பட்ட்து. கனடா ஒரு படி மேலை போய் பயண்படுத்துவதை தடை செய்துள்ளது,  மற்று நாடுகளுக்கு விற்பதற்க்கு அல்ல!

இந்தியா இதன் மிக பெரிய வாடிக்கையாளராகும்.  4500 டண் உள் நாட்டு பயண்பாட்டுக்கும் 4000 டண் ஏற்றுமதி செய்யவும் தயாரிக்க படுவதாக கணக்கிடபட்டுள்ளது. சிறப்பாக கேரளாவில் பின் தங்கிய  பகுதியான காஸர்கோடு என்ற  பகுதியில் 1976 துவங்கி 4700 ஏக்கர் முந்திரி பருப்பு தோட்டத்திற்க்கு  ஹெலிகாப்டர் வழி பயண்படுத்தியுள்ளனர். 

இதுவரை 12 கிராமத்தை சேர்ந்த 9000 மக்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர்.  486 மக்கள் நோயால் பாதிப்பைடைந்தனர்,   1000 க்கு மேற்பட்ட மக்கள்  மரணமடைதனர்.  பாதிக்க பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட 
ஈடாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவு ஆகியுள்ளது. இதிலும் கிடைக்க வேண்டியவர்கள் கிடைக்காமலும் ஏமாற்ற பட்டதும் தெரிய வந்துள்ளது.  அங்குள்ள நீர் நிலைகள் பாதிப்படைந்ததாகவும் சிறப்பாக ஆண்களில் பருவ முதிற்சி அடைவது பாதிப்படைந்தாகவும், குழந்தைகளுக்கு அசாதாரணமான நோய்களால் தாக்க பட்டதாகவும், பெண்கள் மாற்பக புற்று நோயால்
பாதிப்பு அடைந்ததும்   கண்டு பிடிக்கபட்டுள்ளது.

கேரளாவில் தடைசெய்ய பட்டதாக அறிவித்திருந்தாலும் தமிழக எல்லையில் இருந்து தடை இல்லாது வாங்கி, தற்போதும் பயண்படுத்துகின்றனர். காஸர்கோடு பற்றி தான் செய்தி வந்துள்ளது.  ஆனால் அங்குள்ள தேயிலை மற்றும் ஏல கட்டிலும் இதே மருந்து தான் தெளிக்க படுகின்றது. அச்செய்திகள் பத்திரிக்கை செய்தியாக வர வாய்ப்பு இல்லை. காரணம் அங்குள்ள மக்கள் ஏழை தமிழ் தொழிலாளர்களாகும்.

ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும்  ஆராய்ச்சி என ஒரு குழுவை நியமித்து தப்பித்து கொள்கின்றார்கள் அரசியல்வாதிகள்.  மக்களை வரிசையில் நிற்க வைத்து எலிகளை போன்று ஆராய்ச்சி ஆராய்ச்சி என துண்புறுத்தவும் செய்கின்றனர்.  மக்கள் விலை மிக குறைவானதால் சாதாரணமான(50 ஆயிரம்) விலை கொடுத்து தப்பித்து கொள்கின்றனர்.


புறக்கணிக்க பட்டவர்களின், பாட்டாளிகளின், ஏழைகளின் கட்சியான கம்ணிஸ்டு கட்சி கட்டியாளும் கேரளாவுக்கே இந்த கதி என்றால் என்ன சொல்ல?

15 Nov 2010

அனுபந்தம்


 .

அங்கு மம்முட்டி ,மோகன்லால் ,சீமா, சோபனா நடித்த 1985 ல் வெளிவந்த "அனுபந்தம்" என்ற படம் போய் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் இருந்து, மம்மூட்டியும் சீமாவும் காதலித்திருப்பார்கள் ஆனால் விதிவசமாக சீமா மற்றொருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். ஆனால் தற்போது தனது 7 வயது மகனுடன் மம்மூட்டி ஆசிரியராக வேலை பார்க்கும் ஊருக்கு விதவையாக தஞ்சம் புகுந்திருப்பார். காதலியை 7 வயதுடைய மகனுடன் விதவையாக கண்டவுடன் நொந்து போன மம்மூட்டி ஒரு பள்ளி துவங்க உதவுவார். மேலும் அவளை தன்னுடைய மனைவியாக திருமணம் செய்ய தயாராக இருப்பதாக கூறுவார். நம்பிக்கயற்றிருந்த சீமாவுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் வர துவங்குகின்றது. அவளும் மறுமணம் செய்யலாம் என இருக்கும் போது தன்னுடைய 7 வயதில் மகனின் அனுமதியை பெற விரும்புகின்றார். மகனோ மாஸ்டராக ஏற்று கொண்டாலும் அம்மாவின் கணவராக ஏற்று கொள்ள முன் வரவில்லை. காதலனுக்கோ பெரும் ஏமாற்றமாக போய்விட்டது அச்சிறுவனை தன் பக்கம் கொண்டு வர இயலாது என எண்ணி மனம் உடைந்து சீமாவிடம் விடைபெறுகின்றார்.
மகனின் விருப்பம் இல்லாது இன்னொருவரின் மனைவியாக அம்மா என்ற இடத்தில் இருக்கும் சீமாவுக்கு மனம் வரவில்லை. மனசை கல்லாக்கி கொண்டு காதலருக்குமான உறவை துறக்க முடிவெடுக்கின்றார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன்லால் ஒரு வங்கி மேலாளராக பணிபுரிகின்றார். அவருடைய மனைவிக்கும் அவருக்கும் ஒத்து போக இயலாமல் வாழ்க்கை ஓடுகின்றது.  சீமாவின் 7 வயது மகனால் பள்ளியில் நடந்த ஒரு விபத்தில் அவர்களுடைய 4 வயது மகன் இறந்து விடுகின்றான். வாழ்க்கையில் நடந்த இழப்பால் மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மேலும் அவர்கள் நல்ல மனமொத்த தம்பதிகளாக வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். ஆனால் சோபாவின் மகன் தான்தான் பக்கத்து வீட்டு பையனின் மரணத்திற்க்கு காரணம் ஆகி விட்டோம் என மன உளச்சலால் பாதிக்கப்படைகின்றான். மம்மூட்டி அவனுக்கு தைரியம் கொடுத்து பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வருகிறார். மம்மூட்டி விடைபெறும் நேரம் வரும் போது அக்குழந்தை என்னை விட்டு போக வேண்டாம் என கெஞ்சி அழுது , அப்பாவாக ஏற்று கொண்டு தனது அம்மாவிடம் கூட்டி வருகின்றான்.
படத்தின் சிறப்பை ஒரு ஒருவர் மற்றவர்களை மன்னிக்க முன் வருகின்றனர், ஒருவருடைய விருப்பத்தை மற்றவர்கள் மதிக்கின்றார்கள் சிறப்பாக 7 வயது குழந்தையின் உணர்வை அம்மா மதிக்கின்றாள், காதலியின் சூழலை வேதனையோடு என்றாலும் காதலனும் ஏற்று கொள்கின்றார். இவ்வாறாக அழகான மனித உறவுகளை அழகாக சொல்லியிருந்தார்கள். பெரியவர்களுடைய விருப்பம், வாழ்க்கை எல்லாம் குழந்தகளின் விருப்பம்,வாழ்வை பொறுத்து அமைகின்றது என சிறப்பாக காண முடிகின்றது.


அடுத்த நாள், கருப்பு வெள்ளை படமான "ஃபார்யமாரை சூஷிக்குக"-(மனைவிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என தமிழில் அர்த்தம் கொள்ளும் படம். பழைய மலையாளம்  'நித்திய நாயகர்':ever green hero என பேர் கொண்ட ப்ரேம் நசீருடன் கனவு கன்னி ஷீலா, உம்மர், பாசி,சங்கராடி போன்றோர் நடித்த படம். மனைவியுடன் உள்ள கசப்பான உறவுகளால் புதிய உறவை தேடிய ஒரு பாடகனின் முடிவை பற்றியுள்ள படமாக இருந்தது. தற்போதுள்ள சூப்பர் ஸ்டார்கள் ஸ்கீர்னிலும் சாதாரண மனிதனை பிரதிபலிக்க விரும்பாது எல்லா சமயங்களிலும் புனிதர்களாகவும் நல்லவர்களாகவுமே இருக்க விரும்புவதை போல் அல்லாது உண்மையான சில பலவீனமான மனிதர்களாக வாழ்ந்து தங்கள் நடிப்பு திறமையை நிருபித்துள்ளனர். கதை விரு விருப்பாக சென்றது. எவ்விடத்திலும் முடிவு எவ்விதமாக இருக்கும் என நாம் கண்டுகொள்ளா விதம் ஒரு வித பரபரப்புடன் சென்றது.
ஷீல ஒரு டாக்டரின் காதல் மனைவியாக  பணக்கார குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அவருடைய கணவர் 6 மாத காலம் சிறப்பு படிப்புக்கு என வெளிநாடு செல்ல நேரிடுகின்றது. அப்போது பிரபல பாடகர் பிரேம் நசீரின் அறிமுகம் கிடைக்கின்றது. பாடகருடைய மனைவியோ உண்மையான அன்பிருந்தும் செயலில் அன்பை வெளிப்படுத்தாது கண்டிப்புள்ள மனைவியாக கணவரே சந்தேகித்து நச்சரித்து கொண்டே இருக்கின்றார். பாடகருக்கு டாக்டரின் மனைவியின் பாசவும் பரிவுவும் கண்டு அவரை தன் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என வேட்கையால், காமம் கொண்டு நோக்க ஆரம்பிக்கின்றார். டாக்டரின் மனைவியும் பாசம் என்பதையும் தாண்டி பாடகருக்காக எதையும் துறக்க துணிகின்றாள். இருவரும் மணவிலக்கு பெற்று சட்டப்படி கணவன் மனைவியாக வேண்டும் என முடிவு எடுக்கின்றனர். ஆனால் திருமண விடுதலை பற்றி அறிந்த பாடகரின் மனைவி தற்கொலை செய்து கொள்கின்றார். பாடகர் மனைவியை கொலை செய்திருப்பாரோ என எண்ணி கலக்கம் கொண்டு பாடகருடன் செல்ல பயப்படுகின்றாள் டாக்டரின் மனைவி. வெளிநாடு திரும்பிய டாக்டர், மனைவி மற்றொருவனிடம் கள்ள காதல் கொண்டாள் என்று அறிந்தவுடன் அவனுடனே சென்று விடு என வீட்டை விட்டு துரத்தி விடுகின்றார். பாடகரின் வீட்டிற்க்கு செல்கின்றார் நாயகி! பாடகரோ நான் அழைத்த போது நீ வரவில்லை இனி உண்னை தேவையில்லை என கூறி நடு வழியில் விட்டு விட்டு ஒரு லாட்ஜில் தங்கி இருக்கின்றான். நடு வழியில் மாட்டி கொண்ட அவளை ஒரு கும்பல் கெடுத்து விடுகின்றது. மனம் நொறுங்கிய டாக்டரின் மனைவி பாடகனை குத்தி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்கின்றாள்.
இயக்குனர் மனிதனின் தவறிய புதிய உறவுகளுக்கான ஆசைகள், தற்போது இருக்கும் உன்னதமான உறவுகளை எவ்விதம் அழிக்கின்றது என்பதையும், மனிதர்களுடைய உறவுகள் வரம்பை தாண்டும் போது உறவில் நேசவும் பாசவும் போய் கசப்பும் வெறுப்பும் எவ்வளவு விரைவாக வருகின்றது என அழகாக சித்திரிகரித்துள்ளார். மேலும் பாடகரின் மனைவி கொஞ்சம் தன் கணவரை புரிந்து நடந்திருந்தால் பாடகரும் வழி தப்பியிருக்க மாடார். அதே போல் டாக்டர் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி மனைவியை மன்னித்து ஏற்று கொண்டிருந்தால் அவள் ஜெயிலுக்கும் சென்றிருக்க மாட்டாள். படத்தில் தலைப்பு போலவே பெண்களை பல இடங்களில் புண்படுத்தும் உரையாடல் வைத்திருப்பது மறுக்க இயலாது. ஒரு இடத்தில் டாக்டர் தன் அப்பாவிடம் இப்படி கதைப்பார், பெண்களையும் கலைஞனுகளையும் நம்ப கூடாது , நீங்கதான் அவளுக்கு தேவையற்றவர்களை எல்லாம் அறிமுக படுத்தி வழி தவறி செல்ல காரணமாகி விட்டீர்கள் என . அப்பெண் பாடகரிடம் மட்டும் தான் ஏமாந்துள்ளாள்!
எது எப்படியோ ஷீலாவின் தனி திறமையான நடிப்பை காண முடிந்தது. இந்த மாதிரியுள்ள மோசமான கதாபத்திரங்களையும் தங்கள் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கதாநாயக நாயகிகளை பாராட்டாது இருக்க இயலாது. தன்னுடைய வாழ்க்கையில் வரும் துண்பங்கள், சோகங்களுக்கு தாங்களை காரணமாகின்றனர். ஆகயால் அவர்களிடன் பரிவு கொள்ள முடியாவிட்டாலும் மனத்திரையில் மறையாது இருக்கின்றனர்.
வால் செய்தி: ஷீல மலையாள திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர். மலையாளத்தில் செம்மீன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்.  133 படங்களுக்கு மேல் பிரேம் நசீருடம்  கதாநாயகியாக நடித்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.  ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மகன் திரை உலகுக்கு வந்தாலும் பிராகசித்தது போல் தெரிய வில்லை. ஷீலா தற்போது மலையாளம் சின்ன திரை நிகழ்ச்சிகளில் தீர்ப்பாளராக வலம் வருவதை காண முடிகின்றது. இப்போழுதும் ஷீல ரொம்ப அழகாக உள்ளார்!!!

13 Nov 2010

தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு



திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள்  வழி காட்டுதலில் ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு என்னால் மேற்கொள்ள பட்டது.  வாய் மொழி தேற்வு (vivavoce) முடிந்த நிலையில் எனது ஆய்வு முடிவுகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் அறியவும் ஆவலுடன் உள்ளேன்.


நாலாவது ஈழபோர் சூழலில் வெகுசன ஊடகங்களால் செய்திகள் இருட்டடிக்கபட்ட போது ஈழ வலைப்பூக்கள்(வலைப்பதிவுகள்) ஈழ மக்களின் கலந்துரையாடல், மற்றும் ஈழ மக்கள் என அடையாளம் கொள்வதற்க்கும் , தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும் ஆக்க பூர்வமான ஒரு பங்கு அளித்துள்ளது என கண்டு பிடிக்க பட்டுள்ளது.



வலைப்பதிவுகள்(Weblogs)



வலைப்பதிவுகள் என்பது இணையதளத்தின் ஒரு பகுதியான நவீன ஊடகம் ஆகும். இவை நம் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை எழுத்து படம், படக்காட்சிகள், மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. ஆண்டனி மே பீல்டு (Antony Mayfield, What is Social Media?) சமூக ஊடகம் என்றால் என்ன ? என்ற தனது புத்தகத்தில் வலைப்பூக்கள் என்பது ஊடகத்தின் மற்றொரு உருவம் என குறிப்பிட்டுள்ளார். வலைப்பூக்கள் பயன்படுத்துவோரை விரைவில் இணைப்பதும் ஒன்றுகொன்று தொடர்புபடுத்துவதும், படைப்பாளிகளால் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை எளிதில் வெளியிட தகுந்தாகவும் இருக்கின்றது என ஹேறிங்,ஸ்கேடிப், போனஸ், நைட்;2005. (Herring,Schedt, Bonus&Write 2005) கூறியுள்ளார். சேத் காடின்(Seth Godin) என்ற புத்தக ஆசிரியர் தனது புத்தகத்தில் தனி மனிதனின் ஆழ்ந்த மற்றும் தீவிரமான கருத்துக்களை இணையதளம் வழியே பலநபர்களிடம் குறுகிய நேரத்துக்குள் சென்றுசேர்க்க முடிகின்றது என்பதால் வலைப்பதிவுகளை ஒரு திரும்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.


வலைப்பதிவு 1991 ஆண்டு அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்த பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் 2000 ஆண்டு அறிமுகமான ஓர்  இணைய ஊடக கருவி ஆகும்.  1999 ல் வெறும் 23 வலைப்பதிவுகள் ஆக துவங்கிய வலைப்பதிவுகள் தற்போது 133 மிலியன் வலைப்பதிவுகள் கொண்டதாக மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.   66 உலகநாடுகளை சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக உள்ளனர்.  ஒரு கணிணியும் இணைய வசதியும் உள்ள யாராலும் வலைப்பதிவராகலாம் என்பதே இதன் சிறப்பு.




வலைப்பதிவுகள் அதன் உள்ளடக்கம், எழுதுபவர்களின் சிறப்பு சார்ந்து பலவிதமாக வகைப்படுத்தலாம்.  இருப்பினும் ரெபேக்கா பிளட்டு என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப் படி தனி நபர்அல்லது நாட்குறிப்பேடு(personal journal) , தேற்தெடுக்க (filter)பட்ட வகை, புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.  நாட்குறிப்பேடு வகையில்  வலைப்பதிவரின் தன் நிலை விளக்கங்கள் அவருடைய எண்ணம்,கருத்துக்கள்  சார்ந்ததாக இருக்கும் போது தேற்தெடுக்க (filter)பட்ட வகையில் தான் சாராத மிகவும் சமூகம் சார்ந்த அல்லது ஆழமான சில கோட்பாடுகள், கருத்துக்கள்  உள்பட்ட சில குறிப்பிட்ட நோக்கங்கள் கொண்ட பதிவுகளாக இருக்கும்.  ஆனால் மேல் கூறிய இரண்டுவகையும் கலந்த  வகை வலைப்பதிவுகளே புத்தக வகையில்  அடங்குவது.



வலைப்பதிவுகள் சிறப்பு
 அரசியல், முதலீடு, விளம்பரம், ஊடக நெறி என அச்சுறுத்தல் அற்று மக்களுக்கு தரமான செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது பின்னூட்டம்(comment) வழி பொது விவாதம், கலந்துரையாடலுக்கும் வழி செய்கின்றது வலைப்பதிவுகள்.



ஆராய்ச்சியின் நோக்கம்
இன்றுள்ள ஊடகச்சூழலில் உண்மையான செய்தி வெகுசன ஊடகம் வழி பெறுவது என்பது இயலாத காரியம் என  வரும்போது சாதாரண மக்களால் எழுதப்ப்டும் வலைப்பதிவின் சிறப்பை உற்று நோக்குவதே இவ் ஆராய்ச்சியின் நோக்கம் ஆகும். பொதுவாக ஊடகம் என்பது மக்களின் எண்ணம், கலாச்சாரம், வாழ்க்கை , அரசியல் போன்றவயை பிரதிபலிப்பவையாக இருப்பினும் போர் மற்றும் இக்கட்டான சூழலில் அதிகார வர்கத்தின் ஊது குழலாகவே நிலை கொள்கின்றது. ஊடகத்தின் தரம் ஒரு தலையான விறுப்பு வெறுப்பு போன்றவையால் 
மூழ்கடிக்கபடுகின்றது.




ஸ்ரீ லங்கா 1948-ல் ஆங்கிலயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் இன மக்கள் பெரும் வாரியான சிங்கள அரசால் பல சட்டதிருத்தங்களால் ( அரசியல் மொழி சட்டம், குடியுரிமை சட்டம்) வேலை வாய்ப்பு, கல்லூரி அனுமதி என பல விதமாக பாகுபடுத்தபட்டு ஒடுக்க பட்டனர்.  1977 கலவரம், 1983 ல் கருப்பு ஜூலை எனும் இனகலவரம் போன்றவற்றால் 10 லட்சத்திற்க்கும் மேற் பட்ட மக்கள் தங்கள் உடமைகளை இழந்து 16 உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 26 வருடங்களில் 1 லட்சம் மக்கள் கலவரம் போர் போன்றவற்றால்  மாண்டுபோயுள்ளனர். தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்தால் ஒழிய தன்மானத்துடன் வாழ இயலாது என முடிவெடுத்து ஆரம்பிக்க பட்ட ஈழம் என்ற தேசம் ஸ்ரீ லங்கா வின் வட கிழக்கில்  பிரபாகரன் தலைமையில் ஆட்சி நடந்தது என புகழ் மிக்க பெண் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார். நோம் சாம்ஸ்கி போன்ற அமெரிக்கா சமூகவியாளர்களும் ஒத்து போக இயலாத வித்தியாச சமூக கலாச்சார அமைப்பை கொண்ட இரு இனங்கள் இரு நாடாக இருப்பதே சிறந்தது என கூறியுள்ளனர்.
4 வது ஈழப்போர் 2006 ஆண்டு தொடங்கபட்டது. ஆனால் 2005 ஆண்டு துவங்கியே ஆளும் வர்கத்தால் பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு தடை விதிக்க பட்டது. மீறும் பத்திரிக்கையாளர்களை அரசின் அடியாட்களால் கொல்லபட்டனர் அல்லது விரட்டி அடிக்க பட்டனர். பல வேளைகளிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளே தரபட்டது. Reporters without borders index ன் கூற்றுப்படி ஸ்ரீ லங்காவின் தரவரிசை 173 நாடுகளின் வரிசையில் 165 வது இடத்தில் நிலைகொள்கின்றது. களப்பணியில் உலக பத்திரிக்கையாளர்களையோ மனித நேய பணியாளர்களை கூட அனுமதிக்காது, 4 வது ஈழப் போர் இலங்கை அரசால் நடத்த பட்டது. இத்தருணத்தில் தனிநபர்களால் கைய்யாளப்படும் ஈழ வலைப்பதிவுகளின் சிறப்பு மேல் ஓங்குகின்றது.   23 உலகநாடுகளுடைய சிறப்பாக இந்தியா, சீன போன்ற நாடுகளின் துணையுடன் போர் புரிந்து ஈழ நாட்டை வென்றதாக இலங்கை அரசு எக்காளம் இட்டபோதும் ஈழ மண்ணின் மக்களின் கருத்து அவர்களின் ஆசை கனவுகள் எவ்வாறு மறைக்க பட்டது என ஈழ வலைப்பதிவுகள் வழியே நாம் அறிய இயலும்.



ஈழ வலைப்பதிவுகள்


தமிழ் வலைப்பூக்களில் ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் முக்கிய பங்கு பெருகின்றது. இன பிரச்சனையால் உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கவும், ஒரே இனம் என அடையாளப்படுத்திக்கொள்வதற்க்கும் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்க்கும், தங்கள் அனுபவங்கள், கனவுகள் மற்றும் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும், தகுந்த தளமாக வலைப்பூக்களை பயன்படுத்துகின்றனர் . தமிழ் சசி என்ற இந்திய தமிழர், இக்கட்டான சூழலின் வலைப்பூக்கள் கருத்துக்கள் மற்றும் ஈழ செய்திகள் பரிமாறிகொள்வதற்க்கு நம்பகதன்மையான மாற்று ஊடகமாக இருந்தது என கூறுகின்றார். தமிழக ஊடகங்களால் அரசியல் காரணங்கள் கொண்டு ஈழ செய்திகள் தர மறுக்கபட்ட போது தமிழ்மணம் போன்ற வலைபதிவு திரட்டிகள் வழியாக உண்மை செய்திகள் மக்களிடம் வந்து சேர்ந்தது . தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்தில் 6929 வலைப்பூக்கள் உள்ளன. ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் 400 க்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


இவ் ஆராய்ச்சிக்கு தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்திலுள்ள வெகுசனங்களால் கவரபட்ட ஈழ செய்திகள் கொண்ட தனி நபர் சார்ந்த 5 வலைப்பதிவுகள், மற்றும் 1குழு வலைப்பதிவு எடுக்கபட்டுள்ளது. ஏப்ரல் 2008 துவங்கி ஏப்ரல் 2010 எழுதபட்ட தேற்தெடுக்கபட்ட வலைப்பூக்களை மாதிரிகளாக (cases) கணக்கில் கொண்டு உள்ளடக்க பிரிந்தாய்வு முறையில்(content analysis) பண்பார்ந்த, மற்றும் அளவு சார்ந்த மதிப்பீடுகளை கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளபட்டுள்ளது. செய்தி பெற மாற்று ஊடகமான வலைப்பதிவு வழியே பெறப்பட்ட செய்தியின் தேவை, சிறப்பு, வலைப்பதிவரின் வாழ்க்கை வரலாறு(profile), வலைப்பதிவின் கட்டமைப்பு, வலைப்பூவின் உள்ளடக்கம் இவை சமூகசூழலுக்கு தகுந்து எவ்வாறு உருமாறுகின்றது என்பதும் மேலும் இலங்கை போர் சூழலில் மக்கள் மத்தியில் ஈழச் செய்தி பெற வலைப்பதிவுகளின் தாக்கம் எவ்வாறு இருந்தது என ஆராயபட்டுள்ளது.




முன் நிகழ்ந்த ஆராய்ச்சிகள்(Review of Literatures)



வலைப்பதிவுகளை பற்றியுள்ள பல ஆராய்ச்சியாளர்களின்  கட்டுரைகள் ஆராயபட்டிருந்தாலும் பாலிஷ் மொழி வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் சார்ந்து ஆராயபட்ட டிராமலின் (Trammel)கட்டுரை, கே ஜாண்சனின் (Kay Johnson) அரசியல் வலைப்பதிவுகளின் நம்பக தன்மை பற்றியுள்ள கட்டுரை, சூசன் ஹேரிங்கின்(Susan Herrings) வலைப்பதிவுகளின் உள்ளடக்கம், ச்ஷீமிடிட்ன் (Schmidt.J) பகுந்தாய்வு முறையில் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட கட்டுரைகள் இவ் ஆராய்ச்சிக்கு பின்புலனாக எடுக்கப்பட்டுள்ளது.


அடிப்படை கோட்ப்பாடு.(Theoretic Perspective.)பயன்பாடு மற்றும் மனமகிழ்ச்சி கோட்பாடு: (பிளாமர் மற்றும் காட்ஜ்;1974. (Uses & Gratification Theory: Blumler & Katz  1974)
ஊடகத்தை தங்கள் மனமகிழ்ச்சிகாக எவ்வாறு பயன்படுத்துகின்றனர் ஊடகத்தை பயன்படுத்த தூண்டும் காரணிகள் ஏது ஊடகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏது என்று அறிவதை இந்த கோட்பாட்டின் அடிப்படை ஆகும். மக்கள் ஊடகத்தை பயன்படுத்துவது; குறிப்பட்ட இலக்கு உள்ளடக்கம் மற்றும் திருப்தியை சார்ந்து அமைகின்றது என கண்டுள்ளனர்.




ஆராய்ச்சி 6 கேள்விகளும் அதன் விடை பெறுவதுமாக செல்கின்றது .


ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் கட்டமைப்பு என்ன?
ஈழ ப்பதிவர்கள் பெறும் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி யாவை?
ஈழ வலைப்பதிவர்களை பற்றி ஓர் ஆய்வு, ஈழப்பதிவுகள் ஈழ மக்களின் தொடர்பாடலுக்கு உதவியதா? மேலும்
தொடர்பாடலுக்கு வலைப்பதிவுகள் சிறந்த கருவியா?
ஈழப்போர் வேளைகளிலும் அதன் பின்பும் வலைப்பதிவுகளில் உள்ளடம் பண்பு மாறியுள்ளதா?
ஈழ போர் வேளையில் வெகுசன ஊடகங்கள் மவுனித்த போது அரசியல் மற்றும் செய்தி பெற வலைப்பதிவுகளீன் பங்கு யாவை ?
என அறியும் எண்ணத்துடன் இவ் ஆராய்ச்சி மேற்கொள்ள  பட்டுள்ளது.
மாதிரிகள் தேற்வு செய்ய குறிகோள் உடைய சில நுட்பங்கள்(Purposive Sampling Method)  வழி காட்டி பேராசிரியரின் துணை கொண்டு கைய்யாண்டுள்ளேன்.



வலைப்பதிவுகள் 2008 ஏப்ரல்-2010 ஏப்ரல் காலளவில் எழுதபட்டதாக இருக்க வேண்டும், தற்போதும் தொடர்ந்து எழுத படுதல் வேண்டும். சமூக அரசியல் கலாச்சாரம் அடங்கிய ஈழப் பதிவுகள் ஆக இருக்க வேண்டும். வலைப்பதிவர்களே கைய்யாளும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். வலைப்பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவு வைத்திருப்பார் என்றால் அதிகம் பதிவுகள் உள்ள வலைப்பதிவாக எடுத்து கொள்ளுதல். மேலும் வலைப்பதிவு அறிஞ்சர்கள் ரெபேக்கா பிளட், ஹேரிங்,ஷீடிட் கருதும் அமைப்பு கொண்ட வலைப்பதிவுகளாக இருக்க வேண்டும். இவ்வாறாக பெறபட்ட மாதிரிகள் 517 பதிவுகள் கொண்ட 6 வலைப்பதிவுகள் இவ் ஆராய்ச்சிக்கு பயண்படுத்த பட்டுள்ளது.



ஆராய்ச்சி முடிவு


1.ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம்
ஈழ வலைப்பதிவுகள் பொதுவாக புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம். ஈழ மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் எண்ணம் மட்டுமல்லாது ஈழ அரசியல் வெளிநாடுகளில் வசிப்பதால் அயல் நாட்டு மக்களின் சிறப்பு, காணும் திரைப்படம் என அவர்கள் வாழ்க்கையோடு பின்னியிணைந்த எல்லாவற்றையும் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
தனி நபர்களின் வலைப்பதிவுகளை பற்றி எடுத்து கொண்டால் ஈழத்தை பற்றியுள்ள அவர்களின் கருத்தும் எண்ணவுமே முன் நிற்கின்றது. ஆனால் குழு வலைப்பதிவை எடுத்து கொண்டால் அவர்களின் கலாசாரம், வாழ்க்கை சார்ந்த வலைப்பதிவுகள் பிரதானமாக வருகின்றது.
2.ஈழ வலைப்பதிவுகளின் கட்டமைப்பு
ஈழ வலைப்பதிவுகள் வெறும் எழுத்து மட்டுமல்லாது புகைப்படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள், ஓவியங்கள், நிலப்படம், இணைப்புக்கள் என முழுவீச்சில் தொடர்பாடலை பேணுகின்றது.
ஈழ வலைப்பதிவர்களின் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி கலந்துரையாடல் சார்ந்தும் வலைப்பதிவை மாற்று ஊடகமாக காண்பதே ஆகும். கலந்துரையாடலுக்கென வலைப்பதிவு கருவிகளை முழுவதுமாக பயண்படுத்தி மிக வேகமான கருந்துரையாடல், தொடர்பாடல் கொள்கின்றனர்.
வலைப்பதிவர்களின் சரித்திரம்(profile) பரிசோதித்தால் 78 சதவீதம் பேர் வயது வெளியிட விரும்பவில்லை, தொழில் போன்றவயும் 55 சதவீதம் பேர் வெளியிடவில்லை. இருப்பினும் பெரும் வாரியான வலைப்பதிவர்கள் இளஞ்ராகவும் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆகவும் உள்ளனர். 72% பேர் ஆண் வலைப்பதிவர்களே, வலைபதிவர்களில் 28% பேர் ஸ்ரீ லங்கா விலும் 15% பேர் கானடா, 5% பேர் ஆஸ்திரேலியாவிலும் குடியிருக்கின்றனர். தங்களது புகைப்படங்களை 17% பேர் மட்டுமே பயண்படுத்துகின்றனர். பெரும் வாரியானோர் சுவரோவியத்தையே பயண்படுத்துகின்றனர்.
வலைப்பதிவுகளின் உருமாற்றத்தை பற்றி எண்ணும் போது பொதுவாக ஒரு கருத்தாக்கம் கொள்ளல் ஆகாது. குழு வலைப்பதிவு 'ஈழத்து முற்றம்' போரின் கடைசி நாட்களில் உருவாக்க பட்டதே. ஈழம் என்ற தேசத்தை அழித்தாலும் அவர்களுடைய கலாச்சாரம், வாழ்வை அழியா வண்ணம் இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்குடனும் ஈழ மக்கள் ஒருவருக்கொருவர் உரைவாடி கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் கானா பிரபா அவர்களின் தலைமையில்  32 பேரால் தொடங்க பட்டது.
தனி நபர்கள் வலைப்பதிவை எடுத்து கொண்டால் கானடா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பெண் வலைப்பதிவர் தமிழ் நதி ஈழ தேசத்தின் மேலுள்ள உளைவியல் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் ஆயுதப்போராட்டத்தின் அவசியத்தை தனது எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்திய அரசிடம் தங்களது சகோதர உணர்வை நினைவுப்படுத்தும் படியாகவே அவரின் எழுத்து அமைந்தது. ஆனால் மே 2009 க்கு பின்பு அவரின் எழுத்து இன்னும் ஒரு படி அதிகமான ஈழ தாக்கத்தை கொண்டு இருந்தது. இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் கொள்கையை முற்றும் சவால் விடும் அளவுக்கு அவர் எழுத்து உருமாறியது. இப்போது ஈழம் என தேசம் அழிக்க பட்டாலும் மலரும் என்ற உணர்வுடன் எழுதிகொண்டிருக்கின்றார்
ஆஸ்த்ரேலியா வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சி
தயாரிப்பாளராக இருக்கும் கானா பிராபாவின் எழுத்துக்கள் பெரிய
மாற்றம் என காணாவிடிலும் ஈழ தேசம் என்ற கொள்கை, தேவையை
எடுத்து கூறும் விதமாக பல பதிவுகள் வந்தன. இருப்பினும்
ஈழ மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை, மக்கள்,
ஈழப் போராளிகள் என போரால் அழிக்க
பட்ட பல பொக்கிஷங்களை வலைப்பதிவுகளால்
பதிந்து கொள்ளவே விரும்புகின்றார்.



அமெரிக்கா நியூ-ஜெர்ஸீயை சேர்ந்த இந்திய தமிழரான தமிழ் சசி மே 2009 முன்பு அவருடைய வலைப்பதிவுகள் ஈழம் சார்ந்தே இருந்தது, ஈழப்போர் பின்பு மிகவும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்க பட்ட நபர் இவரே. வலைப்பதிவு எழுதுவதயே தவிர்த்த தமிழ் சசி பின்பு ஏப்ரல் 2010 துவங்கியே எழுத ஆரம்பிக்கின்றார். பின்பு ஈழ செய்திகளை விட மற்று அரசியல் செய்தி எழுதவே விரும்புகின்றார்.
தீபச் செல்வன் தனக்குரிய கவிதை எழுத்துக்களால் அங்குள்ள நிலவரத்தை அப்படியே பதிவு செய்து கொண்டுவருகின்றார். அவருடைய பார்வை என்பதைவிட அங்குள்ள மக்களுடைய உணர்வுகள், ஆதங்கம், கவலைகள் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே அவருடைய வலைப்பதிவுகள் உள்ளது. போருக்கு பின்பு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பதே குறிப்பிடதக்க மாற்றம்.
எம்.ரிஷான் ஷெரிஃப் ஈழபோருக்கு பின்பு ஈழ செய்திகளை பல பகிர்ந்து கொண்டு வருகின்றார். அவர் பத்திரிக்கையாளர் என்பதால் அவருடைய கருத்தை நுட்பமாக  எழுத்தால் பகிர்ந்து வருகின்றார். அவருடைய எழுத்து கலந்துரையாடல் என்ற இலக்கை நோக்கியே உள்ளது.
ஈழ போர் 3 கட்டமாக முன்னேறி மே 18 2009 முடிவு பெற்றதாக இலங்கை அரசால் அறிவிக்க பட்டது.  7000 பொதுமக்கள் கொல்லபட்டதாகவும் 2 65,300 மக்கள் முள்கம்பிக்குள் முடக்க பட்டதாகவும் கணக்கிடபட்டுள்ளது.தமிழர்களின் பகுதிக்குள் செல்லும் போது ஒரு அலைபேசிக்கூட எடுத்து செல்ல இயலாது என உலகலாவிய சேவை நிறுவன உறுப்பினர் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மிக சாதுரியமாக அடையாளம் காணபட்டு தடுத்து வைக்க படுகின்றனர். அனுமதி பெரும் பத்திரிக்கையாளர்களும் ராணுவ வாகனத்தில் மக்களை சந்திக்க இடம் நல்குகின்றனர். ஊடகத்தினர் பெறுவதும் அரசின் மக்கள் தொடர்பு செய்தி மட்டுமே. மேலும் வெகுசன ஊடகவும் களச்செய்தியல்லாது மற்று இணைய செய்திகள், அல்லது வலைப்பதிவுகளில் இருந்து பெறும் செய்தியே தனது செய்தி போல் தருகின்றனர். பத்திரிக்கைக்கு பத்திரிக்கை மாறு பட்ட கருத்து கொண்ட செய்தியாகவே உள்ளது. இத்தருணத்தில் லாப இச்சையற்று தங்கள் கருத்தை பகிர வேண்டும் அல்லது தங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் தளமாகவும் கண்டுள்ளனர். வலைப்பதிவுகள் ஊடாக பெறப்படும் செய்தி உண்மைதன்மை வெகுசன பத்திரிக்கையை விட நாம் கண்டு உணர இயலும்.
முடிவுரை
இவ் ஆராய்ச்சி சரித்திர முக்கியம் வாய்ந்த காலயளவில்(4 வது ஈழ ப்போர் நடைபெற்ற போதும் முடிந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில்) சமர்ப்பிக்க பட்டுள்ளது.ஆராய்ச்சி தொடங்கபட்டபோது குழு வலைப்பதிவில் 32 என்றது தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழர்கள் ஸ்ரீலங்கா அரசு ராணுவத்தால் அராஜகமாக அடக்கபட்டு ஆட்சிஐ கைபற்றிய போதும் ஐக்கிய நாட்டு சபையில் முறையிட்டும் நீதி கிடைக்க ரஷியா சீனா போன்றா நாடுகளால் தாமதிக்கபடும் போது வலைப்பதிவுகள் மட்டுமே இயல்பான கவலைகளையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் உபாதியாக நிலை கொள்கின்றது. வெகுசன ஊடகங்களால் கொண்டு வர இயலாத மற்றும் மழுங்கலடிக்க பட்ட செய்திகள் வலைப்பதிவு வழியே பெற முடிகின்றது.  இந்த ஆராய்ச்சியில் பின்புலன் மொழி சார்ந்த ஒரு குழுவே அதாவது ஈழ தமிழர்கள், அவர்களின் தாய் மொழி –தமிழ் ஒரு மிக முக்கியமான பொருளாக பார்க்க பட்டுள்ளது. தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழ தமிழர்கள் மத்தியில் நடைபெறும் தொடர்பாடல் ஆராய்ச்சிக்கு மைய கருத்தாக உள்ளது


.
மாதிரிகளை தேற்வு செய்வதில் ஒரு பெரும் கருதல் வேண்டியிருந்தது. தமிழ்மணம் திரட்டி எடுக்கும் வலைப்பதிவுகள் என கட்டுக்குள் கொண்டுவரபட்டுள்ளது.வலைப்பதிவுகளை பற்றியுள்ள நம்பகதன்மை சார்ந்தும், வலைப்பதிவர்கள் அடையும் மன மகிழ்ச்சியின் வேறுபாடையும் வரும் ஆராய்ச்சியில் பின் தொடரலாம்.
photoes from blogs .






10 Nov 2010

என்கவுண்டர் சிலருக்கு மட்டும் தானா?

 என்கவுண்டர் என்று கேள்விபட்டுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது.  இது ஒரு பாடமாக இருக்கும் என தோன்றியது. இந்த வருடம் மட்டுமே எவ்வளவு குழந்தைகள் கடத்தல், கொலை,  கற்பழிப்பு!!
நேற்றுள்ள பத்திரிக்கையிலும் ஒரு 10 வயது சிறுமி அடித்து கொல்ல பட்டதாக செய்தி இருந்தது.  இருப்பினும்  மோகன கிருஷனன் என்ற கேரளா, பாலகாட்டை சேர்ந்தவன் மட்டுமே எதிர்கொண்டுள்ளான் என்கவுண்டரை?

பல சிறுமிகள் சாவை எதிர்கொள்ளாவிட்டாலும் அதன் பக்கத்திலே போய் வ்ரும் சூழலுக்கு தள்ள படுகின்றனர். கும்பகோணத்தில் 94 குழந்தைகளை கொன்ற பள்ளி நிறுவாகத்திற்க்கு எப்போழுது என்கவுண்டர், மேலும் 3 கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்து கொன்றவர்களுக்கு  என்கவுண்டர் உண்டா? காம காதலுக்கென இரண்டு வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு எப்போழுது என்கவுண்டர்? கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில்  நடமாடும்  கொலைகாரர்களுக்கு  எப்போது என்கவுண்டர்? புதுமண பெண்ணை கொடூரமாய் கொன்றவனுக்கு என்கவுண்டர்  எப்போது?

ஒரு அயோக்கியனை கொன்றவுடனையோ, புகைப்பட கருவிகளை  பள்ளிகளில் பொருத்தியது கொண்டோ, பள்ளி வாசலில் போலிஸ் அதிகாரிகளே நிறுத்தியது கொண்டோ இவ்விதம் நடவாது தடுக்க இயலுமா?

சுய ஒழுக்கம் என்ற நெறியை வறியவனில் இருந்து வலியவன் வரை, என்று தன்னகமாக்கி கொள்கின்றானோ அன்றே இவ்விதமான கொடிய செயல் முடிவுக்கு கொண்டுவர இயலும்!

பேருந்துக்களில் பகல் நேரங்களில் கூட பயணிப்பது சிக்கலாகின்றது.  சில குடிமகனுகள் காப்பி குடிப்பது போல் பேருந்து நிறுத்தங்களில் குடித்து விட்டு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  பாலியல் தொழிலும் ரகசியமாக செய்ய பட்டது இன்று வெளிச்சத்தில் செய்யபடுகின்றது .  வெட்கம், நாணம் அற்ற ஒரு சமூகம் உருவாகி கொண்டிருக்கின்றது.

 கொத்தனார்கள்-வேலையிடங்களில் கேட்க்கபடும் கேளிக்கை பேச்சுக்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் அது போலவே  கொச்சயாகவே ஒலிக்கின்றது.
பொதுவாக, அயோக்கியனை கண்டு ஒதுங்கி பயந்து  போகும் சூழலே  தற்போதுள்ள  சமூகத்தில் நிலவுகின்றது.

நியாயம் தர்மம் கடைபிடிப்பவர்கள் வாழதெரியாத முட்டாளாகவும், எவ்விதமாகிலும் பணம் சம்பாதிப்பவன்- ஏமாற்றுகாரனுகள் புத்திசாலியும் வாழத்தெரிந்தவனாகவும் தெரிவதும் இச் சமூக நடப்பாகி விட்டது!

திரைப்படம் என்ற பெயரில் நடிகர்கள் பேச்சும், களியாட்டவும் என்று மறையில்லாது திரையிடப்பட்டதோ அன்றே  ஆரம்பித்தது சமூக சீரழிவும்.
விஜய் போன்ற நடிகர்கள் கெட்ட வார்த்தைகள்  பேசினால் அது ஹீரோயிசமாகவும், வைரமுத்து எழுதும் மகா கெட்டவார்த்தை பாடல்கள் எல்லாம் கவிதையாகும் எண்ணும் போது அந்த பாட்டின் வரிகளில்  பின்பற்றுபவர்களுக்கு மட்டும் என்கவுண்டர் கொடுத்தால் நியாயம் ஆகுமா?

7 Nov 2010

ஒபாமா வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்க!

ஒபாமா  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிளம்ப ஹெலிகாப்ரரை நோக்கி நடக்க துவங்கியதில் இருந்து ஆங்கிலம் ஹிந்தி ஊடகங்கள் ஒபாமாவின் வருகையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டனர்.  ஒபாமா இந்தியா வருவதில்  என்ன லாபம் எதற்க்கு வருகிறார் அவர் கையெழுத்து இடும் திட்டங்கள் ஏது என  அலசி கொண்டிருந்தனர்.  மலையாள சேனல் கொஞ்சம் முன் சென்று அவர் வருவது வியாபர நோக்கத்திற்க்கே எனவும்,  மேலும் 3000 தொழில் வல்லுனர்கள் மற்றும் 30 கார் அணிவகுப்பு, மக்லேனின் கூற்று என பின்னி விலாசி கொண்டிருந்தனர்.   நம் தமிழ் சேனலில் செய்தியுடன் முடித்து கொண்டனர்.  அங்குள்ள சேனலில்  ஒபாமாவின் வருகையை பற்றி காரசாரமான விவாதம் நடை பெறும் போது நம் ஆட்கள் சரவெடி சரவணனுடன்  விவாதித்து  கொண்டிருந்தனர் இப்படியாக அவர் அவ்ருடைய ஆசிரியரை எந்த பட்ட பெயர் வைத்து அழைத்தார், பள்ளிக்கு மட்டம் போட்டாரா என!

ஒபாமா வரும் போது    தரப்படும் பரபரப்பான செய்தியின் போக்கு நமது அரசு தலைவர்கள் வெளிநாடு செல்லும் போது  "இவர் இந்த தேசத்திற்க்கு சென்றுள்ளார், திரும்ப இன்று வருகின்றார்  என்றதுடன் முடித்து கொள்கின்றனர்.  நமது தலைவர்கள் இதே போன்று ஒரு திட்டத்துடன்  அன்னிய நாட்டுக்கு சென்று வந்தார்களா எனவும் தெரியவில்லை.
பிரதிமா பாட்டில் கணவர், உறைவினர்கள், படைத் தளபதிகளுடன் கோயிலுகளுக்கு சென்று வந்த செய்தி தான் சித்திரத்துடன் பார்வையில் அடிபட்டது.  பிரதமர் சென்ற போது கூட மகள் மருமகன் மனைவியுடன் சென்று வந்ததை காண முடிந்தது.  மேலும் மேற்கு அயிரோப்பிய நாடுகளுக்கு பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதியை அனுப்புவதாகவும் தெரிகின்றது. எம் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர சென்றுள்ளேன் என யாரும் சூளுரைத்து சென்றதாக ஒரு போதும் கண்டிருக்க வில்லை.

 எது எப்படியோ எனக்கு  ஒபாமா மற்றும் அவருடைய மனைவி ஹெலிகாப்ரில் ஏறுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். கைகளை வீசி கொண்டு இரண்டு பெயரும் அழகாக தாவி ஏறி  கொண்டிருந்தனர். மனம் விட்டு சிரிக்கின்றனர் பேசுகின்றனர் நம் தலைவர்களின் பிளாஸ்டிக் சிரிப்பு, கீழ் விழி பார்வை போன்று அல்லாது; ஒரு வேளை தள்ளு வண்டி, ரோபோ போன்ற தலைவர்களை கண்ட கழைப்பாக இருக்குமோ எனவும் தெரியவில்லை!
 மகாராஷ்டா அமைச்சர்கள் வரவேற்ப்பை அழகாக பெற்று கொண்ட அவர்கள் அவர்கள் நாட்டு அதிகாரிகளே கண்டுடன் அவர்கள் கலாச்சாரப் படி கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டு  அதிக நேரம் பேசி கொண்டிருந்தனர்.  இத்தருணத்தில் நமது தலைவர்கள் இலங்கை சென்று நம் சகோதரர்களே கண்டு சென்று வந்த  காட்சிகள் உங்கள் மன கண்ணில் கொண்டு வர வேண்டுகின்றேன்.

பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்களே சந்திக்கின்றார். பெரிய அரசியல் செய்திகள் மும்பை சவேரியார் கல்லூரி மாணவர்களிடம் பேசி உள்ளார். அதிலும் ஒரு மாணவி வடிவேலு அண்ணே கேட்பது போல் ஒரு கேழ்வியும் கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை ஏன் தீவிரவாத நாடு என அறிவிக்க வில்லை என?  அதை தீவிரவாத நாடாக ஆக்குவதே நம் இந்தியாவும் அமெரிக்காவும் தான்  என தெரியாதோ,  என்னவோ? எல்லாம் பள்ளிப் பாட  அரசியல் தான். பாப்பாவுக்கு   போபால் பற்றியெல்லாம் ஏன் சொல்லி கொடுக்கவில்லை என தெரிய வில்லை?  மேலும் ஹெட்லி விஷயத்தை  மறைந்து விட்டாரே, அமைச்சர் சிதம்பரத்திற்க்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும்!  அமெரிக்கா நாட்டு அதிபரிடம் கேழ்வி கேட்க ஊடகவியாளர்கள், சமூக ஆவலர்கள் என யாரையும் நம்பாது  மும்பை மாணவிகளிடம் பணியை கொடுத்து விட்டார்கள் அதன் மர்மவும் தெரியவில்லை.

  நான் இந்தியாவின் கலாச்சாரத்தை, இயற்கை அழகை காண செல்கின்றேன், என பொய் சொல்லாது,  போத்திகீஸ்காரர்கள், கிழக்கி இந்திய ஈஸ்ட்டு இந்தியன் கம்பனி போல இந்தியா நாட்டிற்க்கு  வியாபார நோக்கத்திற்க்காவே வந்திருக்கின்றேன்  என தைரியமாக சொல்லி வந்திருக்கும் ஒபாமா அவர்களே  வருக வருக!!! உங்களே போன்ற உண்மை பேசும் தலைவர்களே எங்களுக்கும் தேவை.

இன்னும் ஒரு செய்தி, அவுட் சோர்சிங் (வெளி நாட்டு பணி -BPO) என்பது நம்மவர்களே கொண்டு இங்கிருந்தே குறைந்த ஊதியத்தில்  அங்குள்ள வேலையை செய்ய வைப்பதே.  நமது அமைச்சர்களின் பணியையும் இம்முறையில் அமெரிக்கர்களால் அவுட் சோர்சிங் என்ற முறையில்  எடுத்து கொண்டால் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாமோ? அவர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்!

4 Nov 2010

ஒரு கொடூர கொலையும் அதை தொடந்த சில சிந்தனைகளும்!!!



கடந்த மூன்று- நாலு நாட்களாக மனதை உலுக்கிய சம்பவமே கோவை பள்ளி குழந்தைகள் கொடூர கொலை!  நாளுக்கு நாள் வரும் செய்தி இது மனித உலகமா என எண்ணம் கொள்ளும் அளவுக்கு சிந்தனை கொள்ள செய்தது.  இதே போன்றே டெல்லியே சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி கொல்லபட்டபோதும், ஒரு கட்டத்தில் போலிஸ் தந்தையே மகளை கொன்றது போல் மாயதோற்றம் உருவாக்கி பின்பு மீடியா வழியாக ஒரு விவாதமே நிகழ்த்த பட்டு கடைசியாக வேலைக்காரர்களால் கொல்ல பட்டதாக கண்பிடிக்க பட்டது. பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவதுடன் போலிஸ் தன் வேலையை முடித்து கொள்கின்றது. கோவையில் பாட்டியிடம் விடை பெற்று வாகனத்தில் சென்ற குழந்தைகளே கொல்லபட்டதும்!
கொலைகாரன் கொலையை நடத்திய விதம் காணும் போது பணம் பறிப்பது அல்ல நோக்கம் எனவும் தற்செயல் அல்லாது திட்டமிடபட்டு நிகழ்த்தபடுத்த பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.  யாருடைய தூண்டுதலோ, அல்லது தொழில் போட்டி, வேறு சில காரணங்களும் உண்டா எனவும் ஆராயபடவேண்டியுள்ளது.  காரணம் கொலைகாரன் ஒரு தடவை கூட பெற்றோரை பணத்திற்கென தொடர்பு கொண்டது போல் தெரியவில்லை. கயிரு, பிளாஸ்டிக் பை,சாணப்பொடி, பால் இவைகள் கருதி வைத்திருந்தது தெரிந்திருக்கின்றது.  கொலையாளியை பாட்டி பார்த்துள்ளதால் கண்டிப்பாக பிடிபடுவோம் என அவனுக்கும் தெரிந்திருக்கும்.  கூட்டாளியை தப்பிக்க வைக்க முயன்று அவன் மட்டும் போலிஸ் கைய்யில் சீக்கிரமாகவே மாட்டியுள்ளான்.  பத்திரிக்கை செய்தி பார்ப்பினும்  நாளுக்கு நாள் புது புதியதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றது.
பத்திரிக்கை செய்தி கூட கண்டிக்க தக்க விதமாகவே உள்ளது. கொடூரன் கூறியதை எல்லாம் வெளியிட தேவையில்லாததே.  வேறு சில காடனுகளுக்கும் பாடம் நடத்தவா?.  வாசிக்கும் பெற்றோரின் மனம் மேலும் நிலை குலைய செய்யவே இது உதவும் என ஊடகவியிளார்களுக்கு தெரியாதா!!
இதில் சிலவற்றை நாம் வசதியாக மறந்து போகின்றோம். கொலையாளியே உடனே கொலை செய்ய வேண்டும் எனதோன்றினாலும் அவனின் பின் புலன் பெற்றோர், வாழ்ந்த சூழல் ஆராயபட்டால் மேலும் இவ்விதமான காடையனுகளைஅடையாளம் காண வசதியாக இருக்கும். இக்கொலையில் கூட குழந்தை கொல்லபட்ட விதத்தை ஆராய்ந்து செய்திக்கு மேல் செய்தி வெளியிட்டு பெற்றோரின் மனநிலையை குலைக்கும் ஊடகம் கூட ஆக்க பூர்வமான கருத்தையோ செய்தியோ வெளியிட வில்லை.
சாதாரணமான ஒருவனால் இவ்விதம் செய்யவே இயலாது. அவன் பெற்றோர்களால் துண்புறுத்தபட்டு வளரபட்டிருக்க வேண்டும் அல்லது அவனுடைய தாயின் தகாத வாழ்க்கையை கண்டு வளரபட்டவனாக இருக்க வேண்டும் அல்லது குடிகார தந்தையிடம் வளர்ந்தவனாக இருக்க வேண்டும்.  சமீபத்தில் ஒரு அனாதை ஆசிரம் சென்ற போது பெரும் வாரியான குழந்தைகள் பெற்றோர்களின் காமக் களியாட்டத்தால் அனாதர்களாக மாற்றபட்டவர்களே, அல்லது இரண்டு பெரும் வேறு யாருடனும் ஓடிபோனவுடன் இக்குழந்தைகள் அனாதை ஆசிரமத்துக்கு வரப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் பிறந்தது முதல் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சூழல் வளர்ந்த பின்பு தான் பெறபட்டதே சமூகத்திடம் திருப்பி தரும்போது நம்மை போன்ற சாதாரண மக்களால் எதிர்கொள்ள முடியாமல் போகின்றது.  நியூட்டன் தியரியை பொருத்தி பார்க்க தோன்றுகின்றது.

 
முதலில் கள்ள காதலர்களே தண்டிக்கும் வழியாக மனித விஷங்கள் பூமியில் வருவதயே தடுக்க இயலும். மேலும் குழந்தைளை அனாதர்களாக்கும் பெற்றோரை சட்டத்தால் தண்டிக்காது இது போன்ற கொடூர நிகழ்ச்சிகள் வருவதை தடுக்க இயலாது.
இந்தியாவின் சமூகச் சூழலும் இதற்க்கு காரணம் ஆகின்றது. ஒரு பக்கம் பெரிய மனிதர்கள் என எண்ணும் அதிகாரம் படைத்த வர்கம் மக்களின் இரத்ததை ஊழல் என உறிச்சி குடிக்க படும் போது இதே பார்த்தே பழக்க பட்ட கீழ் எண்ணம் கொண்ட சில மனித மிருகங்கள் தன்னுடைய கொடூரத்தை இவ்விதம் நிகழ்த்துகின்றது.

 
ஒரு பக்கம் பணக்காரர்கள், படித்தவர்கள் ,கலாச்சாரம் முள்ள மக்கள் பெருகுவது போலவே மறுபக்கம் ஒரு பெரும் கூட்டம் மக்கள் மனிதனின் மான்பற்று வாழ்கின்றனர்,வாழதள்ளபடுகின்றனர்.  சமீபத்தில் 'இரக்கம்', 'சமூக நீதி' என்ற பெயரில் திரைப்படங்கள் வழியே பணக்காரர்கள் என்றால் கொடூரமானவர்கள் எனவும் ஏழைகள் பரம சாதுவாகவும், அல்லது அவ்ர்களின் அடாவடித்தனங்களுக்கு நியாயம் கொள்வது போலவும் பல திரைப்படங்களில் காட்டி மோசமான கலாச்சாரத்தை வளர்க்கின்றனர். விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை பலவிதமாக சித்திரிகரிச்சு இவ்விதமான செயல்களே திரைகளில் காட்டி காட்டி எவ்விதமான கொடூரமன செயலையும் மக்களின் மனதில் ஒன்றுமில்லாததுபோல் பதியவைக்கின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி தற்போது இல்லை என்பதும் ஒரு பெரும் குறையே. கல்லூரி மாணவர்களுக்கு என அரசு பேருந்துகளே இயங்கும் போது தினம் தினம் பேருந்து பின்னால் ஓடியே களைத்து போய் தங்கள் பள்ளி படிப்பை தொடருகின்றனர். திருநெல்வேலியில் கூட சாப்டர் பள்ளி, சாரா தக்கர் பள்ளி அருகில் இருந்து பள்ளி குழந்தைகள் எவ்விதம் பேருந்து பயணம் செய்கின்றனர் என காணலாம்.
முதலில் எப்போழுதும் எங்கு வேண்டுமானாலும் சாராயம் வாங்கலாம் விற்க்கலாம் என்ற நிலை மாறினாலே நமது சமூகத்தின் பெரிய கலாச் சார சீரளிவை தடுக்கலாம். நெல்லையில் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலே டாஸ்க்கு மார்க்கு கடை உள்ளதை என்ன என சொல்ல!
பலபோதும் குழந்தைகள் கொல்லப்படும்போது கொள்ளும் பரபரப்பு அவர்கள் அரை உயிருடன் தாக்க பட்டு தப்பிக்கும் போது காணபடுவது இல்லை. சமீபத்தில் நெல்லை வண்ணார் பேட்டையில் ஒரு 8 வயது சிறுமி எதிர்  வீட்டு கொடியவனால் சீரளிக்க பட்டாள்.

சட்டங்களையும் கடுமைப்படுத்த வேண்டும். சிறுவர்களிடன் கொடுமையாக நடத்துபவர்களே ஒரு கை, கால் என வெட்டி எடுத்து விட்டால் இவ்விதமான கொடூரமானவர்களே அடையாளம் காணப்படவும் குறைந்த பட்சம் குழைந்தைகளுக்கு எளிதாக தப்பிக்கயாவது இயலும்.

 
என்னுடைய பள்ளித் தோழி 2 வகுப்பு படிக்கும் போது இவ்விதம்மாக ஒருவனால் தாக்க பட்டு தேயிலை தோட்டத்தில் குழிக்குள் உயிருடன் புதைக்க பட்டாள். அவளுடைய உயிரை காப்பாற்ற முடிந்தாலும் 8 வகுப்பு படிக்கும் போதும் அவளுடைய சரீரத்திலுள்ள மனதிலுள்ள தழும்புகள் மறையபடவில்லை. யாருடனும் பேச திராணியற்றவளாக , பதறும் மனதுள்ளவளாக ,பயம் கொண்ட கண்ணுடையளாகவே அவளுடைய வாழ்க்கை இருந்தது.

 
அரசும் காவல் துறையும் மக்களுக்கு தரும் உபதேசத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என தெரிய வில்லை. பெற்றோரை பள்ளியில் கொண்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். இரண்டு பெயரும் வேலைக்கு செல்லும் சூழலில் பல வீடுகளில் பெற்றோர்கள் அதிகாலையில் பஸ்ஸை பிடித்து ஓடுகின்றனர். பல வாகன ஓட்டுனர்கள் பல பொழுதும் மிகவும் பொறுப்பாகவே குழந்தைகளே பள்ளிக்கு கொண்டு சென்று கூட்டி வரும் மகத்தான பணியை சிறப்பாகவும் செய்கின்றனர்.

 
மேலும் ராபகலாக மக்களை கண் விழித்து பாது காக்கும் காவல் துறைக்கு இந்த கொலைக்கு காரணமான பொறுப்பு எந்த அளவு உள்ளது எனவும் ஆராய வேண்டியுள்ளது!!!!

1 Nov 2010

அருந்ததிராய் உங்களுக்கு என் வந்தனம்!


சமீபத்தில் இணையம் மற்றும் வெகுசன ஊடகம் வழியாக மிகவும் புகழபட்டவர், அலச பட்டவர் மட்டுமல்ல கடுமையாக குற்றம் சாட்டபட்டவரும் அருந்ததிராயே!  இந்தியாவின் ஒற்றுமைக்கு அருந்ததியால் பெரும் பாதிப்பு வருவது போல் மாய தோற்றம் உருவாக்குகின்றனர். சமீபத்தில் ஒருவர் விமர்சிக்கயில் அருந்ததிராய் அறிவாற்றலுள்ளவர் அல்ல என்றும் மேலும் இவர் ஒரு மேல் தட்டு கிருஸ்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 
என்னுடைய ஆதங்கம் அவர் எந்த அளவு கோல் கொண்டு அருந்ததியின் அறிவாற்றலை அளந்தார் என்பதே; அல்லது பெண் என்றவுடன் இவ்வாறு கூறுகின்றாரா எனவும் தெரியவில்லை.   அருந்ததியின் அம்மா மேரி ராய்http://en.wikipedia.org/wiki/Mary_Roy கேரளா பெண் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர்.  அவர் மிகச்சிறந்த பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகின்றார் கோட்டயம் என்ற இடத்தில். கோட்டயம் http://en.wikipedia.org/wiki/Kottayam
கேரளாவில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் கொண்ட இடம். கலாச்சாரமான மக்கள் அடைங்கிய பகுதியே இது. கேரளா, தலைநகரம் (திருவனந்தபுரம்) மக்களை விட பண்பாக பழக தெரிந்தவர்கள், அழகான மலையாளம் பேசுபவர்கள், மற்று மாநிலத்தவர்கள், சிறப்பாக தமிழர்களை மதிக்கும் பண்பு கொண்ட மக்கள் வசிக்கும் இடம்.  அருந்ததியின் அம்மா சிறியன் கத்தோலிக்கர் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள்.  கேரளாவின் கல்வி, சமூக, அரசியல் மற்றும்  ஊடக மாற்றங்களுக்கு பெரும் அளவு பங்களித்தவர்கள்  இச்சமூகத்தில் உள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Saint_Thomas_Christians
அவருடைய அம்மா அறுபதுகளிலே பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் செய்தவர்!  அவர் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உள்ளது என உச்ச நீதி மன்றம் வரை சென்று  போராடி வெற்றி பெற்று தந்தவர்.

அருந்ததியும் தன் வாழ்க்கையில் அசாதாரணமான சூழலில் கடந்து சென்றவர்.  உடன் படித்த தோழனை மணம் முடித்து சாப்பாடுக்கு வழியின்றி வீடற்று தெருவில் வசித்து, பின்பு விவாகரத்து பெற்று தற்போது கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை மணம் செய்து வாழ்ந்து வருபவர்.  தனது முதல் நாவலுக்கே புக்கர் பரிசு பெற்றவர்.http://en.wikipedia.org/wiki/The_God_of_Small_Things.அவர் எழுதும் செய்தி கூட வீட்டிலிருந்தோ குளிரூட்ட பட்ட அலுவலங்களிலோ இருந்து எழுதாது மக்களின் மக்களாக அவர்களில் ஒருவராக அவர்களுடன் தங்கி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்தே எழுதியுள்ளார். ஒரு பெண்ணிடம் இதை விட என்ன அறிவாற்றல் துணிவு எதிர்  பார்க்க இயலும். தற்போதுள்ள பல பெண் ஊவியாளர்களில் இருந்தும் வித்தியாசமான பல கருத்துக்களை அவரின் கட்டுரையில் காணலாம். மக்களின் இதய துடிப்பை தனது எழுத்தால் கொண்டுவரும் அருந்ததியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது பணத்திற்க்காக அன்னிய நாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு நமது காட்டின் கனிம வளங்களை விற்க்க துடிக்கும் அதிகார வர்கத்தால் நாட்டுக்கு கேடா?
மேலும் அருந்ததி கிருஸ்தவர் என அறிக்கையிடுவது வழியாக இந்தியா நாடு மேல் இந்துக்களுக்கு மட்டுமே அக்கரையுள்ளது போல் காட்டி கொள்கின்றனர். சுதந்திரம் காந்தியின் கொழ்கையான சத்தியாகிரகத்தாலே கிடைத்தது என பரைசாற்றியது வழியாக மற்று மதஸ்தரின் பங்கை சுதந்திர போராட்டத்தில் இருந்து வசதியாக மறைத்து கொண்டனர். மேலும் ஆயுத போராட்டமான சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுடைய பங்கை கூட காந்தி என்ற பெரிய போர்வயால் மறைத்து விட்டனர் என்பதே உண்மை. காந்தியின் பக்கமிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் பெரும் மதவாதிவளாக இருந்துள்ளனர். மேலும் நேருவே வளர்ச்சி என்ற பெயரில் 'ஊழல்' என்ற பேய்க்கு முதல் அனுமதி சீட்டு கொடுத்துள்ளார். அருந்ததி கிருஸ்தவர் என நிலை நாட்டி கொள்ள விரும்பியிருந்தால் கிருஸ்தவரை திருமணம் செய்து ஊர் ஊராக போதனை செய்து கொண்டிருந்திருப்பார், அல்லாது பழங்குடியினருடன் தங்கியிருந்து செய்தி சேகரித்து கொண்டிருந்திருக்க மாட்டார். மேலும் கிருஸ்தவர்களும் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்டவர்களா?  அவர்களும் இந்திய மண்ணின் மைந்தர்களாக இருந்து தங்களுக்கான உரிமைகள் மதம் என்ற பெயரில் மறுக்க பட்ட போது ஒரு மதத்தை களைந்து தங்களை மதிக்கும் மதங்களை தாவி சென்றவர்களே.

 
மேலும் பெண்கள் என்றாலே பொதுத்தளத்தில் கூடஇளக்காரமாக பேச தயங்குவதில்லை என்பதையே காட்டுகின்றது இப்பிரச்சனை. காஷ்மீர் என்பது இந்தியாவுடையது என்பது அரை உண்மையே என அரசியில் எழுத்தாளர் கிருஷ்ணா ஆனந்த் இந்த வாரம் ஞாயிரு செய்திமலர் 31-10-10 P- 5 ல் கூறியுள்ளார்.  அரை பொய்யை பற்றி அருந்ததி போன்றோர் கூறும்போது மட்டும் ஏன் கோபம் வருகின்றது
இதே போன்று ஈழப்போருக்கு அவர் குரல் கொடுப்பதையும், புலிகள் செய்த கொடுமையை பற்றி ஏன் கூற வில்லை என எதிர் கேள்வி  கேட்டு கொண்டு வருகின்றனர்.  புலிகளை பற்றியும் அனிதா பிரதாப் என்ற பெண் பத்திரிக்கையாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அவரையும் இவ்விதமாகவே எதிர் கொண்டனர். களத்தில் சென்று செய்தி சேகரிக்க தொடைநடுங்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இது போன்ற பெண் பத்திரிக்கையாளர்களின் பணி மெச்ச கூடியதே போற்றா விட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாம்!