11 Oct 2010

கன்னியாகுமாரி செல்வோமா?

கன்னியாகுமாரி   எத்தனை முறை சென்றாலும் நம் அலுக்காது வரவேற்கும் அழகிய கடற்கரை.  எனது கணவர் அவருடைய இந்து  நண்பர்களுடன் ச்ல்ன்லெல்ல மிகவும் விரும்பும் இடம் ஆகும். என்னவரின் அப்பா சொந்த ஊர் கன்னியா குமாரி பக்கம் என்பதால் கன்னியாகுமாரி மேல் கொஞ்சம் பாசம் அதிகமே.


 திருவள்ளுவர்  அனுதாபிகள் என்னை அடிக்க வரலாம். ஆனால் என்னை போன்றவர்களின் கடல் காணும் ஆசையை திருவள்ளுவர் சிலையால் தடை செய்து விட்டனர் என்பதே உண்மை. நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் பெரும்   பாறைகள் "குண்டப்பன்" மாதிரி நிற்பதே கவனித்துள்ளேன் . இதை சிற்பியால் கொத்தி வள்ளுவரும், பாரதியாருமாக வடிவமைத்திருக்கலாம். 



இன்று  சிவாஜி என்று கேட்டவுடன் சிவாஜி நினைவு வராது பல வேளைகளில் குச்சி ஸ்ரேயா,  மொட்டை ரஜனி தான் வருகின்றனர்.  திரை உலகில் 'சிவாஜி' என்ற படம் வழியாக சிவாஜி என்ற  மாபெரும் நடிகரின் பெயர், புகழ் எல்லாம் சாயம் பூசப்பட்டது போன்று திருவள்ளுவர் சிலையால் விவேகானந்தப் பாறையில் மவுசு இழந்து உள்ளது.   பிரசித்தி பெற்ற விவேகானந்த தியான மண்டபம்  இப்போழுதோ மலை அருகில் நிற்கும் சிறு மான் போல் காட்சியளிக்கின்றது. இருப்பினும் உலகு  எங்குமுள்ள மக்கள் சூரிய உதயம் காண கன்னியாகுமாரியை நோக்கி படையெடுக்க காரணமாகும் இயற்கையின் தலைவா "சூரியன்" உனக்கு ஒரு நமஸ்க்காரம்!!!

இங்கு விற்கும் பொருட்கள் விலை அதிகமே.  தின் பண்டங்கள் அல்வா போன்றவை வயறு சுத்தம் செய்யும் மருந்து போல் பயண்படுத்தலாம்.
சிப்பிகள் துணி மணிகள் வெளிநாட்டு பயணிகளுக்கு என தனி விலையுடன் விற்க படுகின்றது. இருப்பினும் கைவினை பொருட்கள் அழகுடன் காட்சி தருகின்றதை காணலாம்.

மூன்று கடல்கள்  சங்கமம் ஆகும் பகுதி இருப்பதால் இந்து சகோதரர்கள் மத்தியில் கன்னியாகுமாரி என்றும் கன்னி போல் விளங்குகின்றது. எனது கணவரின் நண்பர்களும் தண்ணீரை தலையில் தளித்து ஜெபித்தாக கூறினார். 

3 comments:

  1. Great! visit all places in TN and write more! link your blog to tamilish.com...tamilmanam.com..you get more visiters!

    ReplyDelete
  2. படங்களும் எழுத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  3. உங்களூர் வந்தால் கட்டாயம் கன்னியாகுமாரி பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் படங்களும் அதை வலியுறுத்துகின்றன.

    ReplyDelete