27 Sept 2010

பார்வை பலவிதம்........

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுத்தம் இல்லை என வெளிநாட்டு பிரநிதிகளின் 
புகாருக்கு பதிலளிக்கும் வகையில் போட்டி ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர்லலித்
 பனோட் அளித்த பேட்டியில் “ தூய்மை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.


 எங்களை பொருத்தவரை சுத்தமாக இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களின்
 பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது என்றார்”. அதிகாரிகளின்  மெத்தனபோக்கு 
 மனநிலைக்கு  மிக துல்லியமான எடுத்து காட்டான வார்த்தையாக இது உள்ளது. 
 நாம்  நம் நீர் நிலைகள் , அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளியின் தூய்மையை பற்றி கதைக்கும் போதும் இவ்விதம் தான் அதிகாரிகளின்  நிலைபாடாக இருக்கும் போலும்.


ரெட்டியார் பட்டி அரசு பள்ளியை கடந்தே எனது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. 
 பள்ளியை சுற்றி சுற்று மதிலுக்கு பதிலாக பற்றிகள் மேயும் சாக்கடையை உள்ளது.  
மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்களும், படிக்கும் புத்தகம் மட்டுமல்ல  ஆரோக்கியமான மனதிற்க்கும் உடல் நலத்திற்க்கும்  காற்றோட்டமான  சுற்று சூழலும் அவசியம் என  பள்ளி அதிகாரிகளோ  ஆசிரியரோ புரிந்து கொள்ளும் நாட்கள் அருகில் இல்லை என்பது மட்டும் தெளிவாகின்றது.


அதே போன்றே அரசு ஆஸ்பத்திரிக்கைகளின் நிலையும். ஆஸ்பத்திரிக்குள்ளும் சுற்றியுள்ள பகுதிகள்   துர்நாற்றம் நிறைந்ததாகவே காணபடுகின்றது. நோயை தீர்க்கும் இடம் என்பதை விட நோயை பெற்று கொள்ளும் இடமாகவே காணபடுகின்றது. சமீபத்தில் என் கணவருக்கு தெரிந்த ஒரு நபர் வாகன விபத்தில் சிக்கி  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளார் என கேள்வி பட்டு காண செல்ல வேண்டியது ஆயிற்று. ஆஸ்பத்திரியில் எந்த அறையில் உள்ளார் என தெரியாததால் ஆஸ்பத்திரியின் பல அறைகளை கடந்து காண செல்ல வேண்டி வந்தது. எந்த ஒரு அறையும் துளியும் சுத்தம் இல்லாது இருந்தது . மூச்சடக்கியே  நாங்கள் காண சென்ற நபரின் அறையின் அருகில் செல்ல முடிந்தது.  வெத்தலை எச்சில், காயித துண்டுகள்,இரத்த கறை என நோயாளிகளின் அறைகள் காண- சொல்ல முடியாத வண்ணம் அசுத்தமாகவும் 
நாற்றம் கொண்டதாகவும் இருந்தது.


திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரரிஐ  கணக்கிடும் போது நாகர்கோயில் அரசு ஆஸ்பத்திரி 
சுத்தத்தில் நல்ல நிலையில் உள்ளது என சிகித்சை மேற்கொண்ட மக்களிடம் இருந்து 
கேள்விபட்டுள்ளேன். திருநெல்வேலி கார்ப்பரேஷன் சேர்ந்த பகுதியுள்ள ‘டவுண்’  பகுதியை கடந்து பேருந்தில் கூட பயணிக்க முடியாத சூழல்.  பெரும் வியாபாரிகள் மற்றும் மக்கள் கூடும் இடமே அது. இருப்பினும் மூக்கை பொத்தாது கடந்து செல்ல இயலாது இயலாத சூழல். அரசின் கடமை வரிகள் வசூலிப்பது மட்டும் தானோ.  ஒருவேளை சுத்ததை பற்றி இவர்களின் பார்வை எப்படி இருக்குமோ. எல்லாம் பராபரனுக்கு மட்டுமே வெளிச்சம்! 

26 Sept 2010

“ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு”.


கடந்த ஓராண்டு காலமாக இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஈழம் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்க்கு சமர்ப்பித்துள்ளேன்.   
                                         பேராசிரியர் முனைவர் கோ. ரவிந்தரன் அவர்களால் மூன்று வருடம் முன்பு அறிமுகமான வலைப்பதிவுகள் எனது வாழ்வில் ஒரு பெரும் வாசிப்பு தளமாக அமைந்தது. தமிழ் ஊடகங்களால்  ஈழ செய்திகள்  தர இயலாத சூழலில் தமிழ்மணம் வழி உண்மையான செய்தி அறியமுடிந்தது என பேராசிரியரின் வலைப்பதிவில் வாசித்திருந்தேன். இந்த மைய்ய கருத்தை தேடும் பணியாகவே இவ் ஆராய்ச்சி  என்னை  இட்டு சென்றது.
வலைப்பதிவுகள் முதல் முதலாக பாட பகுதியின் பாகமாகவே எங்களுக்கு அறிமுகமாகியது.  வகுப்பு-தேற்வுக்கென வாசிப்பாளராகிய நான் பின்பு வலைப்பதிவுகளுக்கு என என் நேரத்தை நிறையவே செலவிட்டேன். சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது நாம் பத்திரிக்கைகளில்  இருந்து பெறும் செய்தியை விட ஆழவும் சாரமுள்ளதாக இருந்தது. மேலும் தனி மனிதர்களின் பார்வை  நம்மை வாசிப்பின்  மற்றொரு தளத்திற்க்கு இட்டு செற்றதை காணமுடிந்தது.                                                                                                                                                                                                           ஈழப்போர் செய்திகளை பத்திரிக்கையின் வாசித்த போது நான் கண்டது  ஈழ செய்தி பத்திரிக்கைக்கு பத்திரிக்கை அதன் அர்த்தம் கொள்ளுதல் மாறுபட்டு கொண்டே  இருந்தது.  அத்தருணத்தில் என்னுடைய பார்வை வலைப்பதிவுகளை நோக்கி சென்றது.  பத்திரிக்கைகள் ஈழத்தை  பற்றி கதைப்பதை தவிர்த்து, வலைப்பதிவர்களான சாதாரண மக்கள், என்ன கூறுகின்றனர் என்ற அறியும் நோக்குடன் ஈழ வலைப்பதிவுகளை தேடி சென்றேன்.  தனி  மனிதர்களின், சிறப்பாக அம்மண்ணின் மக்களான ஈழ மக்களின் கருத்து எண்ணங்கள் ஆசைகள், விருப்பங்கள், அரசியல் பார்வை,  அறிய முடிந்தது.  அவர்களுடைய கலாசாரம், ஆசைகள், உரிமை எவ்வாறு புரக்கணிக்கபடுகின்றது,  அரசியல் மற்றும் அதிகார மோகத்தால் ஒரு இனமக்கள் எவ்வாறு நசுக்க படுகின்றனர் என காண இயன்றது. ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என அறியப்படும் ஊடகங்களால் அரசியல் மற்றும் சில காரணங்களுக்காக உண்மை மறைக்கபட்டு  திரிக்க பட்ட செய்திகள் தரப்படும் சூழலில் தனி மனிதர்களால் எழுதப்படும் வலைப்பதிவின் தேவை, தாக்கம் அதிகமாகின்றது என கண்டுகொண்டேன்.
எனது பாடப்பிரிவும் ஊடகத்துறை சார்ந்து இருந்ததால் இக்கருத்தை தேடும் விதமாகவே எனது ஆராய்ச்சியை அமைத்துகொள்ள முடிவெடுத்தேன். மிகவும் விருவிருப்பான நாட்களாக இருந்தது. எனது   ஆராய்ச்சிக்கு என  6 வலைப்பதிவுகளை தேர்ந்து  எடுத்துள்ளேன்.   இவ்வலைபதிவுகள் தனி மனிதர்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும் மேலும் ஈழசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும்  எச்சரிக்கையாக இருந்தேன்.  உள்ளடக்க பகுந்தாய்வு முறையில் பண்பார்ந்த மற்றும் அளவுசார்ந்த மதிப்பீடுகள் கொண்டு ஆராய்ச்சி முடிவுக்கு எட்டியுள்ளேன்.
தலைப்பை  தேர்ந்தெடுக்கும் உரிமை தந்தது, மேலும் ஆராய்ச்சியை நடத்த வழிகாட்டி  உற்சாகப்படுத்திய   எங்களது துறைத் தலைவர்
பெ. கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  தனி மனித சுதந்திரத்தை என்றும் மதிப்பவர் எங்கள் துறைத்தலைவர்.
இவ்வாராய்ச்சிக்கு என 517 பதிவுகளை மிகவும் ஆழமாக வாசிக்க பட்டாலும் இதன் பொருட்டால்  பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பல ஈழ தமிழர்களின்  வலைத்தளங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன்.  மிகவும் அருமையான  அறிவுசார்ந்த மக்களிடன் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியை தந்தது.  எனது ஆராய்ச்சிக்கென நான் சில விளக்கங்களை இணையம் வழியாக வலைப்பதிவர்களிடம் ஆராயும் போது, எவ்வித தயக்கவும் இன்றி மிக சிறிய கால அளவுக்குள் சில வேளைகளில் 2 அல்லது 3 மணி நேரத்திற்க்குள்ளாக  எனக்கு  பதில் தந்து உதவியுள்ளனர்.  மேலும் சில நல்ல வலைப்பதிவுகளை  எனக்கு அறிமுகபடுத்தியுள்ளனர். அவர்களுடய பண்பார்ந்த எழுத்து,சிந்தனை எனக்கு உற்சாகமூட்டியுள்ளது.  நண்பர்களாகவும் சகோதர்களாகவும் என் வாழ்வில் வந்து சென்ற என் ஈழ சகோதர்களை வணக்குகின்றேன். அவர்களின் சிந்தனை வளம், சுதந்திர தாகம், தனிமனித ஆளுமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. சிறப்பாக நான் தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்களாம் -வலைப்பதிவர்கள் கானா பிரபா, தமிழ் சசி, தீபச்செல்வன், தமிழ் நதி, ரிஷான் ஷாரீப் போன்ற என் இனிய வலைப்பதிவர்களுக்கு என் நன்றிஐ காணிக்கையாக்குகின்றேன்.
மேலும் ஆக்கபூர்வமான சொல்களால் என்னை உற்சாகப்  படுத்திய பேராசிரியர் முனைவர் கோ. ரவீந்திரன், பேராசிரியர் முனைவர் வெ நடராஜன், பேராசிரியர் நடராஜன் பொன்னம்பலம், சவேரியார் கல்லூரி ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ஜேசன் பிர்ஸ்லி ராஜ் நண்பர் ராம்ஜி, தூபாயில் பணிபுரியும் நண்பர் சய்யப்துள்ளா, சஞ்சயன் மாணிக்க ராஜ், முனைவர் மு இளங்கோ,  தோழி கிருஸ்டி சில்வெஸ்டர், போன்ற சான்றோரையும் இத்தருணத்தில் நினைவு கூறுகின்றேன்.
மேலும் எனது எழுத்தை சரிபார்த்து தந்த   சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சேவியர் பெஸ்கி க்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.                                                                                                                                                எனது துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், என் வகுப்பு தோழர்கள், என் பெற்றோர், என் தங்கை, தம்பி, என் கணவரின் சகோதரிகள், கணவரின் நண்பர்கள், இவர்களின் நல் எண்ணமே என்னை முன் நடத்தியது.
இவ்ஆராய்ச்சியின் தாக்கத்தால், பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும் என்பது போல்  நானும் ‘ஜோசபின் கதைக்கிறேன்’  என ஒரு வலைப்பதிவை உருவாக்கி எனது சிந்தனையும் பதிவுசெய்து கொண்டு வருகின்றேன். மேலும் எனது ஆராய்ச்சிக்கு என வலைப்ப்திவர்களை எழுத தூண்டும் காரணிகள் மற்றும் மனமகிழ்ச்சி ஏது என அறிய முற்பட்டேன். மறுஇடுக்கைகள் வழியாக வலைபதிவர்கள் எழுத உந்தபடுவதை என் வலைபதிவுக்கு நான் பெறும் மறு இடுகை வழியாக  அனுபவ பூர்வமாக உணரமுடிந்தது.
மேலும் எனது அன்பு கணவரை நினைத்து பார்க்கின்றேன். அவருடைய இக்கட்டான சூழல் மத்தியிலும்  வெறும் ஆசை என நான் கண்ட கனவை நனைவாக்கியவர்.  முதுகலை பட்ட படிப்பு மேலும் இளம் ஆராய்ச்சி பட்ட படிப்பு ,  என  என்னையும்  இரு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாக நினைத்து படிக்க வைத்தார்.   என்னவரின் அன்புக்கும் தியாகத்திற்க்கும்  எனது ஆரய்ச்சியை சமர்ப்பிக்கின்றேன்.                                        என் குழந்தைகளுக்கும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளேன்.  பல வேளைகளில் அவர்களுடன் விளையாடும் நேரம் வலைப்பதிவுகளில் ஆழ்ந்து அவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளேன்.  பல வேளைகளில் கணிணிக்கென எங்களுக்குள் சமரசம் ஏற்ப்படாது  பெரும் வழக்கிட்டு, என்னவர் வந்து பஞ்சாயத்து செய்து வைக்கும் அளவுக்கு எங்கள் சண்டையை கொண்டுசென்றுள்ளோம். இருப்பினும் என்னை உருவாக்கும் என் சிற்பிகள்-என் குழந்தைகளையும் நினைத்து கொண்டு எனது ஆராய்ச்சி கட்டுரையை முன்னுரை, முன்நிகழ்ந்த புனராய்வு(Review of Literature), ஆராய்ச்சி,  ஆராய்ச்சி முடிவு, முடிவுரை, நான் சென்ற பாதைகள் என பிரித்து பல  பதிவுகளாக பதிந்துள்ளேன். 
தங்களின் கருத்தையும்  அறிய  ஆவலுடன் அன்பு தோழி,
சகோதரி ஜோசபின் பாபா.

19 Sept 2010

சில ஆண்கள்..........

நேற்று   எனது கணவரும் நானும் ஒரு மடிக்கணிணியின் தரத்தை சோதனை செய்து கொண்டிருந்தோம்.  புகைப்படங்கள், காணொளிகள்., பாட்டுக்கள் என கணிணி முழுக்க ஒரே கலவரமாக இருந்தது.  சில ஆலயங்களின் படங்கள் அருமையாக இருந்ததால்  எங்களுக்கு தேவயானவயே சுருட்டி கொண்டிருந்தோம்.  முதல் சில ஆல்பங்களில் அவர் ஆசை மனைவி, குழந்தை என குடும்பபடங்களாக ஓடி கொண்டிருந்தது. நான் சொல்ல வரும் நபர் கோட் சூட்டுடம் மிகவும் பவ்வியமாக  மனைவி,குடும்பத்துடுடன் காட்சி கொடுத்து கொண்டிருந்தார்.  போக  போக சாயம் வெளுப்பது போல அவருடைய பணியிடத்திலுள்ள சில புகைப்படங்கள் அவரே புடமிட்டு காட்டியது.  அப்படியே அம்பியாக காட்சியளித்தவர் ரோமியோ-வாக மாறிகொண்டிருந்தார். 

 அவரும் அவருடைய நண்பருகளும் கப்பலில் வேலை செய்வார்கள் போலும். கப்பலில் உள் அமைப்பை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தவர் அப்படியே சாப்பாடு  ,பிராந்தி பார் என கேமரவே வைத்து சிவதாண்டம் ஆடி கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் பார் பெண்ணெயும் சுத்தி சுத்தி படம் எடுக்க ஆரம்ப்பித்து விட்டனர்.  அப்பெண்ணை  ஒவ்வொரு ஒருவராக சர்க்கசில் போன்று தூக்கி போட்டு விளையாடுகின்றனர்.  என் பார்வை அவர், அவரின் மனைவியுடன் நிற்க்கும் படங்கள் பக்கம் சென்றது.  மனைவி பூச்சூடி நகையணிந்து பட்டு சேலையணிந்து, பார்க்க துடிக்கும் ஆண் மனம் ஏன் அடுத்த பெண்களை இவ்வாறாக காண தோன்றுகின்றது .  இன்னும் வெறு விதமாக நினைக்க தோன்றியது. அவருடைய மனைவியும் கணவர் தான் மிகவும்  தாராளமாக மனதுடன் நடந்து கொள்கின்றாரே  நாமும்  மற்று ஆண்களுடன் தாராளமாக  நடந்து கொள்ளலாம் என எண்ணினால் விட்டு தான் வைப்பார்களா?

சமீபத்தில் ஒரு பெண் அலைபேசியில் அதிக நேரம் கதைத்து கொண்டிருந்தாள் என்ற காரணத்திற்க்காக மிகவும் கொடூரமாக எரித்து கொல்லபட்டார்.  அதிலும் பெரும் சோகம் இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை தர்மமான எழுத்தாகும்.  அப்பெண் அலைபேசியில் பேசுவதை நிற்த்தும்  படி அவளுடைய கணவர் பணிந்ததாகவும் அவள் பணியாததால் தன் குடும்பத்தில் மானம் கப்பல் ஏறிவிடுமோ என நினைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாராம்.  ஒரு வேளை இவருடைய நேரத்தை இன்னும்  அதிகமாக மனைவிக்காக  செலவிட்டிருந்தால் அலைபேசியில் கதைப்பதை குறைத்து குடும்பத்துடன் ஐக்கியமாகி இருப்பாள்.  அதிலும் ஒத்து வரவில்லை என்றால் அவளின் விருப்படி அவளின் வாழ்க்கையை அமைத்து கொடுத்து இவரும் நலமாக வாழ்ந்திருக்கலாம். ஓர் கொலை  ஒரு பிரச்சைனக்கு தீர்வாகுமா. ?அதுவும் இரு குழந்தயின் தாய் அப்பெண்?


அதே போன்று சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு பெரும்  மதிப்பிற்க்குரியவரின் வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அவர் சமீபகாலமாக அவர் வீட்டிற்க்கு  போவதில்லை. விசாரித்தபோது சின்ன அம்மை வந்துவிட்டதாகவும் அவர்கள் வீட்டில் வர வேண்டாம் என சொல்லி விட்டதாகவும் கூறினார். நான் அவரிடம் பணம் உதவி கிடத்திருக்கும் அல்லவா என விசாரித்தேன்.  அந்த நபர் அரை லட்சத்திற்க்கும் மேல் சம்பளம்  வாங்கும் நபர், அப்பெண் ஒரு இளம் விதவை, மேலும் 1,3 வகுப்பில் படிக்கும் குழைந்தைகளும்  உள்ளனர். அக்குழந்தைகளும் சின்னம்மையால் பாதிக்க பட்டிருந்தனர் அச்சமயம். அப்பெண்  கூறிய சில விஷயங்கள் மிகவும் கொடியதாக இருந்தது. அப்பெரியவரின் மனைவிக்கு இவரின் நடைவடிக்கையை கண்காணித்து  கொண்டுயிருப்பதாம் வேலை.  இப்பெண்  தமது எண்ணமாக இருக்கலாம் என வெளிக்காட்டாமல் வேலை பார்த்து வந்தாராம்.  அப்பெரும்  மனிதர் ஒரு நாள் இப்பணிப்பெண்ணை அழைத்து, என் மனைவி  சந்தேகபடுகின்றாள்; உன்னை ஒன்றும் கூறமாட்டாள், நீ போன பின்பு என்னை திட்டுவாள்.  ஆகயால் என்னை கண்டாலும் காணாதது போல் நடந்து கொள் என அறிவுரை கூறினாராம்.  என்ன கொடுமை பாருங்கள்.  தன் தாலி கட்டின மனைவியிடம் உரையாடி தன் நிலையை வெளிப்படுத்த தைரியம் இல்லாது அவ் ஏழை பெண்ணை மேலும் மன உளச்சலுக்குள் உள்ளாக்கியுள்ளார்.  தன் மனைவி செய்வது தப்பு என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி மனைவியிடம் காட்டும் கரிசனை மற்று பெண்கள் என்பதால் இளக்காரமா? மேலும் கணவனை சந்தேக கண்ணோடு பார்க்கும் பெண்களுக்கு தன் வேலைசெய்ய பணிபெண்கள் தான் அமர்த்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.


இவ்விதமாக குடும்ப சூழல், ஏழ்மை என பல காரணங்களுக்காக வீட்டு படி தாண்டி பணிக்கும் வரும் பெண்கள் இவ்விதமான கொடியவர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்ந்தபோதும் இச்சூழலே உணந்தேன். பெண்களை மேலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஆண்கள் படுத்தும் பாடு சொல்லி ஆகாது.  நான் ஒரு போதும் பசி கொடுமை என்ற காரணத்திற்க்காக பணிக்கு செல்லும் சூழல் இல்லாததால் மேலாளகர்களிடம் பல முறை சண்டையிடுள்ளேன்.  மேலாளர்கள் பேச்சு மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும்.  தன் மனைவியிடம் கை கட்டி பணிந்து போகும் பல ஆண்கள், அவர்கள் வேலையிடங்களில் அபலை பெண்களை இவர்கள் அடிமை போன்று நடந்துகின்றனர்.


  வேலையிடங்களில் என்று மட்டுமல்ல கல்வி கற்க்கும் இடங்களில் கூட இச்சூழலே!  ஒரு இளம் விரிவுரையாளர் எங்கள் துறையில் இருந்தார். நான் 10 வருடம் கடந்து கல்வி கற்க்கும் நோக்கத்துடன் சென்றதால் இளம்பேராசிரியர்கள் என்னை விட இளையவர்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் என்னை எங்கு கண்டாலும் கேலி பண்ணுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.  திருமணத்திற்கு  பின்பு உங்களை போன்றோர்  படிப்பதால் எங்கள் பாட ப்பிரிவுக்கை மதிப்பு குறைவு என அலுத்துகொள்வார்.  துறை சார்ந்த மாணவர் கூடுகை நடைபெறும் போதும் என்னை வம்புக்கு இழுக்காது இருப்பது கிடையாது. நம் மத்தியில் இருக்கும் ஜோசபின் நம்மில் வயதில் மூத்தவர் அவரின் அறிவுரையை நாம் கேட்போம்...... என ஆரம்பிப்பார்! ஒரு முறை இச்செயலை பற்றி என் பேராசிரியரிடம் முறையிட்ட போது சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை சகித்து கொள்ள முடியாது ஆகயால் நீ படிப்பு என உன் லட்சியத்தை நோக்கி செல் தேவையற்ற கூட்டத்திற்க்கு பங்கு பெற  வேண்டாம் என கட்டளையிட்டார். அதன் பின் அவ்விளம் விரிவுறையாளரின் பேச்சிலிருந்து தப்பித்து கொண்டோம் என எண்ணிகொண்டேன்.  ஆனால் அந்த ஆசிரியரோ ஒரு நிகழ்ச்சிக்கு பணம் முழுவதுமாக கொடுக்க வில்லை என கூறி எனது தேர்வு சீட்டை வைத்துகொண்டு, தேற்வு எழுதும் கால் மணிநேரத்திற்க்கு முன்பு அந்த ஆள் என்னை என்னவெல்லாம் பேசவேண்டுமென்று நினைத்தாரோ அவ்வாறாக திட்டினார்.  அதில் ஒரு வார்த்தை “நீ என்ன பெரிய இவ்வளோ”,  கேட்டதும் நான் எதிர் பார்க்காதளவு என் பெண்மை சினம் கொண்டு  எழுந்தது.  நானும் பதில் அதே நாணயத்தில் கொடுத்திருந்தும்  ஒரு மாத காலம் மன உளர்ச்சலுக்கு ஆளானேன்.
 இவ்விதம்மாக பெண்கள் பலவிதத்தில் பலரால் சூரையாரைப்படுகின்றனர்.  அவ்விதம் மனபோங்குள்ள  ஆண்களை திருத்தவே முடியாது.  பெண்கள் தான் வளர்க்கும் மகன்களை செம்மையாக, மற்றவர்களை பெண் -ஆண் பேதமின்றி மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்.  அது கூட சாத்தியமா என தெரியவில்லை. தாய்மார்கள் கூட தன் மகன் அடாவடியாய் பேசுவதை ரசிக்கும் சூழல் இன்று காணப்படுகின்றது.  

14 Sept 2010

கேரள கரையில் அல்லோலப்படும் எங்கள் வாழ்க்கை

எங்கள் பகுதி இடுக்கி மாவட்டத்தை சார்ந்ததால் கல்வி, வசதி வேலை வாய்ப்பு என எல்லா விதத்திலும் பின் தங்கியிருந்தோம். கேரளாவில்  மற்ற மாவட்டகாரர்கள் கூட இடுக்கியா என காட்டுவாசி மக்களை பார்ப்பதை போன்று எங்களை நோக்கினர்.  நாங்கள் 10 வகுப்பு பரீட்ச்சையை எதிர் கொள்ளும் விதமே அலாதியானது. மாதிரி தேற்வு ,சோதனை தேற்வு என எல்லாமே எங்களுக்கு பொது பரீட்சை தான்.  எங்கள் பள்ளியில் 40% தான் மிக சிறந்த வெற்றி விகிதம். தேற்வில் முதலாவது வருவது, குத்தகைக்கு என்பது போல் ஆசிரியர் பிள்ளைகளே!  அவர்கள் குழந்தைகளை 7 ம் வகுப்பு வரை தரமுள்ள பள்ளியில் அனுப்பி படிப்பித்து விட்டு, 8 வகுப்பு முதல்  எங்கள் அரசு பள்ளிக்கு கொண்டு வருவின். தேற்வுக்கு என அவர்களுக்கு மட்டும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல்  என மிக சிறந்த  பயிற்ச்சி நடைபெறும். எங்களை போன்ற மாணவர்கள் அனுமதி பெறுவதும் அவ்வளவு எளிது அல்ல.
எங்கள் பள்ளி முதல்வர் கூட ஒரு நாயர் சமுதாயத்தை சேர்ந்த  ஒரு பெண்மணியாவார். அவருக்கு தமிழர்கள் என்றாலே  ஒரு அருவருப்பு, பூச்சி புழு போல நோக்குவார்.  நான் மலையாள  வழி கல்வி கற்பினும் 'அவள் தமிழரா?' என என்னை மட்டம் தட்டாது இருந்தது இல்லை.  எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் களையவும் இயலாமல் நாங்கள் படும் துன்பம் எண்ணிவிடல் ஆகாது.
 அவருடைய தங்கைதான் கணக்கு  பாடம் எடுத்தார்.  அவர் ஒரு நோட்டு புத்தகத்தில்  விடைகளை செய்து வைத்திருப்பார்.  அப்படியே அதை பார்த்து பலகையில்  எழுதியிடுவார்.   எனக்கு கணக்கு விருப்ப பாடம்!    7ஆம் வகுப்பில் ஹரிகரன் என்ற ஆசிரியர் சரியான  வழிமுறையுடன் கணக்கு நடத்தியிருந்தார்.    மேலும் டூஷன் செல்வதால் கணக்கு அத்து படியாக இருந்த்து.   அதனால் பலமுறை கரும்பலைகயில் நான்  கணக்கு பாடம் செய்துள்ளேன்.   என்னை பாராட்டுவதை கூட “தமிழச்சி கூட நன்றாக கணக்கு செய்கின்றாள் உனக்கு முடியாதா என என் மலையாளி தோழிகளை கிண்டல் செய்வார்”.   எனக்கு மிகவும் அவமானமாக தோன்றும்.   என் தோழிகளும் தமிழர் என்றாலே  முட்டாள் எனவும்   உன்  வழி சொந்தம் மலையாளிகளோ என்ற தோரணையில் வினவுவர்.  ,  ராமானுஜர்   தமிழ் மேதை தானை என பல அறிஞர்களை என் இன துணைக்கு  தேட வேண்டி வரும்.   3 வருடப்படிப்பும் எனக்கு மிகவும் கொடியதாக இருந்த்து.   விளையாட்டாக மலையாள வழி கல்வியை தேர்ந்து எடுத்ததின் பலனை அனுபவித்து  கொண்டிருந்தேன்.   பல வேளைகளில்  ஒரு சில ஆசிரியைகளால் தனிமையாக்கபட்டேன்.   ஆலிஸ் என்ற ஆசிரியைக்கு என்னிடம் குற்றம் கண்டு பிடிக்க முடிய வில்லை என்பதால் என் தம்பியை குறை கூறி என்னை மட்டம் தட்டுவார்.  எனது ஆளுமையை வளர்க்க  வேண்டிய வயதில் ஒரு வித பய-காழ்ப்புணற்ச்சியால் எனக்குள் ஒளிந்துகொள்ள பழகி கொண்டேன்.   சில விளையாட்டான பேச்சு கூட இன மொழி வெறியாக மாறுவதை கண்டு தோழிகளிடம் பேசுவதை தவிர்த்து எனக்குள்  பேசிகொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு  மிகவும் பிடித்த  மோன்சி என்ற  ஒரு தோழி இருந்தாள் . அவளுடைய அப்பா  எங்களுக்கு கணக்கு பாடம் நடத்துவார்.  மோன்சி மற்று எல்லா பாடத்திலும் முதலாவது வந்து விடுவாள்.  ஒவ்வொரு பாடவும் பாடலாக படித்து வைத்திருப்பாள்.  ஆனால் கணக்கு மட்டும் மக்கப் செய்ய இயலாததால்  மிகவும் கஷ்டபடுவாள் .  அவளுடைய அப்பா வரிசையாக கேள்வி கேட்டு கொண்டே வருவார், நான் சொல்லி அவள் சொல்லாவிடில் கை மொழியில் அடிப்பார், கடுமையான வார்த்தைகளால்  அவளை திட்டுவார்.  போக போக இச்செயல் என்னிடம் பொறாமை கொள்ளும் சூழலுக்கு அவளை தள்ளியது.   பின்பு எனக்கு மிகவும் பெரும் எதிரியாக மாறினாள்.   அவளுடைய அப்பா கம்னியீஸ்டு  என்பதால்  தர்க்கம் பேசுவதயே மூலதனமாக வைத்து என்னை மடக்குவதில் குறியாக இருந்தாள்.    ஒரு முறை அவளுடைய அம்மா ,என் அம்மாவிடம்  உங்க மகளை வகுப்பு தலைவியாக இருக்க அனுமதிக்காதீர்கள்.    என் மகளுக்கு மன உளச்சலை கொடுக்கின்றது என கூறியுள்ளார்.    எனது அம்மாவும்   "தலைவி ஆகி மலையாளிகள் கிட்டை வம்பு இழுக்காதே பேசாம பாடத்தை  மட்டும் படித்துவிட்டு வா" என  எனக்கு அறிவுரை கூறினார்.   இது என்னை மன அளவில் பெரும் ஊனம் ஆக்கியது.  இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் மாணவனுக்கும் ஒரு கதையிருக்கும்.
எனது  பெரியப்பா மகன்,அவன் மட்டும்  10 வகுப்பு வரை படித்து வந்திருந்தான்.  அவனுடைய இரு அண்ணாக்களும் 5 வகுப்பிற்க்கு மேல் மழைக்கு கூட பள்ளி வாசல் செல்ல தயங்கினர்.   அவன் சூழல் மிகவும் மோசமானதாக இருந்தது.   அவன் 10 வகுப்புக்கு வருவதென்றால்  அது ஒரு பெரும் சாதனையே.  எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.  மிக சொற்பமான  வருமானம், நிறைய பிள்ளைகள். 
தேயிலை தோட்டங்களில்  வேலை நேரம் காலை  7  மணி என்பதால் பிள்ளைகள் துயில் எழுவதற்க்குள் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவர்.  பிள்ளைகள் முதல் நாள் மாலையிலுள்ள சாப்பாட்டை எடுத்து கொண்டு 8 மணிக்கு நடக்க ஆரம்பித்து விடுவர்.   பள்ளி வந்து சேரும் போது 9.30 மணி.  பள்ளி முடிந்தவுடன் நடக்க ஆரம்பித்தால் இருட்டும் முன் வீடு சேருவார்கள்.   6 மாதம் மழை, பெரும்வாரியான நாட்களில்  மின்சாரம் இருப்பதில்லை, சாப்பாடு கூட!   விடுமுறை நாட்களில் சிலர் வேலைக்கு செல்வர் சிலர்  விறகு  பெறுக்குவார்கள் அந்த வாரம் முழுவதும் பயண்படுத்த.  இப்படியான சூழலிலும் எனது சகோதரன் பள்ளிக்கு வந்தான்.    எங்களுடைய அரசியல் பள்ளியில் ஆரம்பித்துவிடும்.   அவன்  கம்முனிச்ஸ்ட் இயக்கத்தை சேர்ந்த SFI ல் இருந்தான்.   நான் நேரு ரசிகை என்பதால்  கை பக்கம்!(இப்போழுது எந்த பக்கவுமில்லை).   மேலும் கம்மினிஸ்ட் கூட்டத்தில் நிறைய கெட்ட பேச்சுக்களாகவே இருக்கும்.   அப்போழுது கேரளா மாநில கவர்னராக ராம் துலாரி என்ற பெண் இருந்தார். அவர் கையில்லாத சட்டை அணிந்தார் என கூட்டம் போடுவார்கள்.
என்னுடைய பெரியப்பா மகன் அரசியல் நன்றாக கதைப்பான்.   ஒரு முறை எங்கள் பள்ளி முதல்வரை கண்டபோது வேட்டியை மடக்கி கெட்டியிருந்தான் என்ற காரணத்தை கூறி 10 வகுப்பு தேற்வு எழுத விடாது தடுத்துவிட்டார்கள். அவனுடைய வாழ்க்கையும் திசை மாறி மாறி எப்படியோ ஆகிவிட்டான்.
பள்ளியில் என மட்டுமல்ல  கல்லைறைகளில் கூட சில பாரபட்சம் காணலாம். எங்கள் ஆலையங்களில்  ஜெபம் தமிழ், மலையாளம் என இரு மொழியில் நடைபெரும் . சில பாதிரியார்கள் தமிழில் ஜெபம் செய்தால் நான் மோட்சம் சேர மாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.   இன்னும் சிலரோ தமிழில் ஜெபிக்கின்றேன் என வார்த்தைகளை தப்பு தப்பாக கதைத்து மலையாளமே போதும் சாமி என சொல்ல வைத்து விடுவார்கள்.   சில மான ரோஷமுள்ள தமிழ் பக்தர்கள் நீ மலையாளத்தில் ஜெபி நான் தமிழில் தான் பாட்டு பாடுவேன் என்று அடம் பிடிக்கும் போது உங்க வால் குமளிக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.   ஒரு முறை எங்கள் ஆலயதிற்க்கு  ஒரு தமிழ் பாதிரியாரை நியமித்தனர். அவரோ உப்பும்சப்பும் அத்த பிரச்சனைக்கெல்லாம் ஜாதியை தூக்கி போட்டு இருந்த கொஞ்சம் தமிழர்களையும் பல பிரிவாக்கினார். 
6 மாதம் முன்பு எனது அம்மாவுடன் எனது ஊரிலுள்ள வங்கிக்கு சென்றபோது வங்கி அதிகாரி ,’மங்கி’ மாதிரி  மூக்கு கண்ணாடியூடை நோக்கினார்.  எனது அம்மா கொஞ்சம்  பணத்தை சேமிப்பு நிதியில் செலுத்த சென்றிருந்தார்.   வங்கி அதிகாரியோ நாளை வா….. என கத்திகொண்டிருந்தார். எனக்கு வீட்டிற்க்கு போக வேண்டாமா   ங்,ங்கி.,ங்ஊ என  திட்டுகின்றார்.   அம்மா கூறுகின்றார் 3 வது தடவையாக வருகின்றார்களாம்.   என் சிந்தனை எங்கள்  பல்கலைகழக வங்கிக்கு  சென்றது………..
மேலாளரின் அரியணையை நோக்கினேன்.   அவரோ   மலையாளி சேச்சிமாரிடம் சிரித்து சிரித்து கதைத்து கொண்டிருந்தார்.  ஒரு தமிழ் அம்மா அவர் மகன் ,மருமகள் மேல்அதிகாரியை காண கருணைவிழிகளுடன்  காத்து நின்று கொண்டிருந்தனர். அதிகாரி சேச்சிமாரை வழியனுப்பி விட்டு  கைய்யாலே  நாளை வா என உத்தரவிட்டான்.  அந்த இளம் பெண் பாரதி கண்ட புதுமை பெண் போல் அறை கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்று வாகனம் வாங்க  வங்கி கடம்  வேண்டுமென்று பணிந்தாள் .  அதிகாரியோ  அவருடைய அலுவலக கோப்புகளில் நின்று கண் எடுக்காது ஏதோ பதில் கூறி கொண்டிருந்தார்.   அப்பெண் அறைக்கு வெளியில் வந்து அவரை(னை) திட்டுவது கேட்டது.   காலம் மாறினாலும் கோலம் மாறாததை கண்டு  என் மனம் கலங்கியது.