8 Jun 2010

அலுப்பூட்டும் உரையாடல்கள்!

ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்திகொள்ள பேசுதல் பயன்படுகின்றது. எவ்வாறு பேச வேண்டுமென்று சிலருக்கு வரையரை கிடையாது. நாக்குதான் இலவச தொண்டு செய்கின்றதே என சிலர் பேசியே தொடர்பை முறித்து கொள்வார்க்ள்.
எங்க திருநெல்வேலியில் பேச துவங்கும் முன்பே ஒரு தேர்வு வைப்பின்,நீங்க என்னாளு, சொந்த ஊர்  ஏது, அப்புறம் பேசும் பகுதி முழுதும் எங்க ஆளுங்க இப்படி, எங்களிலே இதான் முறை, உங்க ஆளுங்களே இப்படித்தான் இப்படி அப்ப்டி திருநெல்வேலி நா-வாளாலேயை வகுந்துடுவாங்க.
இன்னும் கொஞ்ச வாத்தியார் பெண்டாட்டிக, எங்க வீட்டு சார் சொன்னாங்க ,எங்க சார் வந்தாங்கனு  பச்சபுள்ளயாட்டும் அழுவாங்க.
வேறு சில மனுஷாங்களை பார்த்தாலே நீங்க ஆஸ்பத்திரியில  சேர்ந்தது மாதிரி ஆயிடுவீங்க. என்ன மெலிஞ்ட்டே ,சொகமில்லயா, கறுத்து போயிறே அடையாளமே  தெரியலே, , சே ஏன் இப்படி இருக்கே சாப்பாட்டுக்கே வழியில்லையான்னு மாதிரி கேட்டுடுவாங்க. அவ்வளுவு நேரம்  நன்னா feel  பண்ணுன நம்மளே சோர்ந்திடுவோம்.
சரி சரி கல்வி அறிவு பத்தாத மக்கள்னு வடிவேல் மாதிரி மண்டயில அடிச்சுகிட்டு  சில மெத்தபடிச்ச   மேதைகள் பேசதை பாருங்க.
இவுங்க என்னுடன் MPhil  கற்க்கும் தோழி
ஜோசபின் நமக்கு வேலை கிடைக்குமா?
எனக்கு நம்பிக்கையே இல்லை.
வேலை கிடைகலனா என்ன பண்ணுவது?
வேலை கிடைத்தாலும் ரூ 6500  கிடைக்குமாம்.
இதை வைத்து  என்ன பண்ண்?
நீங்க முயற்ச்சி பண்ணுகின்றீர்களா?
எங்க ஊரில உங்களுக்கு கிடைக்காது!ஏன்ன எங்களுக்கு கொடுத்த பிறகு தான் நீங்க எதிர் பார்க்க முடியும்....
நீங்க முயர்ச்சி  பண்ணின college ல அவளெ எடுத்துட்டாங்களாம்..... அவ இருக்குத கல்லூரியில் நான் போகமாட்டேன்.
நீங்க தேர்வுக்கு படிச்சிட்டீங்களா? என்ன எழுதே?  4 பக்கம் எழுதனுமோ? நான் ஒற்றும் படிக்கலே......என்னத்தை படிச்சு......

சரி போதும் போதும்  என்று எண்ணி முணைவர் மாணவி ஒரு பேராசிரியரின் விடைபெறும் (sentoff)   மீட்டிங்ல பேசுகிறதை கவனித்தால்,  "நம் பேராசிரியர் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்   சிலரை பார்த்தவுடன் சிரித்து பேசுவார், பேசும் நபர் நகர்ந்தவுடன் அவன்கெடக்கான்  என கூறுவார் !"........எப்படியிருக்கு வாழ்த்துரை?
ஒரு இளம் முனைவர் ஆசிரியை  எப்படி பேசுகின்றார் என பாருங்கள், "பேராசிரியருக்கு ஒவ்வொரு செட்ல ஒருத்தரை தான் பிடிக்கும் , என்னைதான் எங்க  செட்ல பிடிக்கும் என்னை செல்லம் தான் கூப்பிடுவாங்க. (நாங்களும் அவருடைய மாணவர்கள் தான் நாங்க மட்டும் என்ன  தொல்லையா?)

0 Comments:

Post a Comment